வியாழன், 27 பிப்ரவரி, 2020

மாயத்தேவர்



கே. மாயத்தேவர் (K. Maya Thevar) (பிறப்பு: 15.10.1934) எம் ஜி ஆர் புதிதாக துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.

கே. மாயத்தேவர் (K. Maya Thevar) (பிறப்பு: 15.10.1934) எம் ஜி ஆர் புதிதாக துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.


1973-ல் திண்டுக்கல் திமுக எம்பியாக இருந்த கூடலூர் பாப்பாபட்டி ஐயா. இராஜாங்கம் தேவர் மரணம் அடைந்தார்.

இதனால் 1973-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி இடைத் தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்று எம்ஜிஆர் நினைத்தார்.

அப்போது திண்டுக்கல் அருகே உள்ள சின்னாள பட்டியை சேர்ந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் மாயத்தேவரை (கள்ளர்) வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி உறுதி என்று அனைவரும் வலியுறுத்தினர். இதனால் மாயத்தேவரை எம்ஜிஆர் வேட்பாளராக நிறுத்தினார்.

அப்போது அதிமுக நிரந்தர சின்னம் இல்லாத சுயேட்சை கட்சியாகும். எனவே எம்ஜிஆர் "தீபம் சின்னத்தை" தேர்ந்தெடுக்க மாயத் தேவரிடம் கூறினார்.

ஆனால் மாயத்தேவரோ "இரட்டை இலையை" தேர்ந்து எடுத்தார். சென்னையில் இருந்த எம்ஜிஆரிடம் போனில் தொடர்பு கொண்டு கீழ் கண்டவாறு கூறினார்.

இரட்டை இலை சுவற்றில் வரைய எளிதாக இருக்கும். இரண்டு விரலை காட்டி ஓட்டு கேட்கலாம். விக்டரி என்னும் வெற்றி வார்த்தை இரண்டு விரலை குறிக்கும். மேலும் சூரியன் வெப்பத்தில் இருந்து இலை உங்களுக்கு நிழல் கொடுத்து காக்கும் என்று பிரச்சாரம் செய்யலாம் என்று கூறினார். எம்ஜிஆரும் சரி என்று ஏற்றுக் கொண்டார்.

மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்த உடனே வெற்றி உறுதியாகி விட்டது. இதனால் கடும்கோபம் அடைந்த திமுக குண்டர்கள் வத்தலகுண்டு எம்ஜிஆர் மன்ற தலைவர் ஆறுமுக கள்ளரை கொலை செய்தார்கள்.

எம்ஜிஆர் புகழ், மாயத்தேவரின் குணம், இரட்டை இலை சின்னம் இவற்றுடன் ஆறுமுக கொலையும் அனுதாப அலையாக மாறி அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது.

திமுக மூன்றாவது இனத்திற்கு தள்ளப் பட்டது.


ஐந்தாவது மக்களவைக்கு, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக வென்றவர் . பின்னர் ஆறாவது மக்களவைக்கு 1997-ஆம் ஆண்டில் மீண்டும் அதே தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நின்று வென்றவர்.





ஐயா மாயத்தேவர் கூறுவது 

அப்போதெல்லாம் மதுரையில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அங்குதான் சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பயன்படக் கூடிய சின்னமாக இரட்டை இலை இருக்க வேண்டும் என்பதற்காக அதை தேர்ந்தெடுத்தார். அதை எம்ஜிஆரிடம் தெரிவித்த போது, திமுக உதயசூரியன் சின்னம் வைத்திருக்கும் போது இரட்டை இலை கருகிப் போய்விடுமே என விமர்சிப்பார்கள் என்றார். ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் இரட்டை விரலை காண்பித்து நிரந்தர வெற்றியை பெற்றார் தலைவரரே.. தாய்மார்களுக்கும் இரட்டை இலை சின்னம் பிடிக்கும் என சமாதானம் கூறப்பட்டது. இந்த விளக்கங்களை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டார்.



வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்