வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

பூணூல் - சோழர் பாண்டியர் - தேவர்









பூணூல் அணியாத மாமன்னர் ராஜராஜ சோழதேவர் 


கள்ளர்கள், மறவர்கள் பூணூல் அணிவதில்லை, அதனால் இவர்கள் சத்திரியர்களில்லை என்று பல கதைகள் எழுதிவருகிறார்கள். அதை எழுதியது, யார் என்று பார்த்தால் சூத்திரர்கள் என்று குறிக்கப்பட்ட, கடந்த 500 ஆண்டுகளாக தெளிவான வரலாற்று குறிப்புகள் உள்ளன. அதில் எந்த போரும் செய்யாத, இந்த நூற்றாண்டில் தங்களை சத்திரியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் சாதிகளாகவே இருக்கின்றன. ந்த பூணூல் பற்றி ஆய்வோமானால்    

பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது வேட்கோவரான குயவர். பானை குயவ பூணூலை பயன்படுத்தினார்கள். பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது கம்மாளர். நகை, பாத்திரம், மரக்கலம், சிற்பம் கட்டிடம், போர் கருவிகள் உருவாக்க பூணூலை பயன்படுத்தினார்கள். பூணூலை விற்கள் தாங்கிக்குள் விட்டு முதுகோடு இணைத்து அணிந்து பயன்படுத்தியது வேடரும் போர் காவல் வீரரும். வேட்டையாட போரிட காவல்காக்க பூணூலை பயன்படுத்தினார்கள்.

சிற்பங்களில் பூணூல்

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களில் பலவகைப் பூணூல்களைப் பார்க்கலாம். இவை நூலால் செய்யப்பட்டவை, துணியால் செய்யப்பட்டவை, ருத்ராக்‌ஷ மாலையால் ஆனவை என மூன்று வகை. சிலர் அணிந்துள்ள பூணூல் உபவீதம் என்ற வகையில் இடது தோள் மேலிருந்து வலது இடுப்பில், கைக்குக் கீழாகச் செல்லும். பிறர் அணிந்துள்ள பூணூல் நிவீதம் என்ற வகையில், இடது தோள் மேலிருந்து வலது கைக்கு மேலாக இருக்குமாறு இருக்கும். சிலர் சன்னவீரம் என்ற வகையில் இரு பூணூல்களை இரண்டு தோளிலிருந்தும் மாறு கையை நோக்கிச் செல்லுமாறு அணிந்திருப்பார்கள்.

தேவர்கள், அசுரர்கள், கடவுள்கள், ராஜாக்கள் என அனைத்து ஆண்களும் பூணூல் அணிந்துள்ளனர். சில மனிதர்களுக்குப் பூணூல் இல்லை என்பதையும் இந்தச் சிற்பங்களில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.


'அர்ஜுனன் தபசு’ என்று சொல்லப்படும் பெருந்தவ வெளிப்புற சிற்பத் தொகுதியில் காணப்படும் சிவனின் சிற்பம். இவர் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். உபவீதமாக அணிந்துள்ளார். அருகில் உள்ள பூதகணங்கள் பூணூல் அணியவில்லை.


அசுரர்  மகிஷாசுரனை எடுத்துக்கொள்வோம். தேவியுடன் போரிடும் மகிஷனின் சிற்பத்தை வலப்புறம் பார்க்கலாம். மகிஷனும் கனமான துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளான். மகிஷனுக்குமேல் உள்ள ஓர் அசுரனும் வஸ்திரத்தால் ஆன பூணூலை அணிந்திருப்பதை  காணமுடிகிறது.


ஆக, கடவுள்களுக்கு உண்டு; அசுரர்களுக்கு உண்டு. தேவகணங்களுக்கு இல்லையா என்றால் பூணூல் அணிந்த கணங்களும் உண்டு, அணியாத கணங்களும் உண்டு.


பூணூல் அணிந்துள்ள கணம் ஒன்றின் படத்தை வலப்பக்கத்தில் காணலாம். வராக மண்டபத்தில் துர்கையின் அருகில் காணப்படும் இந்த கணம், துணியால் ஆன பூணூலை அணிந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.


கோவர்தன சிற்பத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் ஓர் இடையனைக் கட்டி அணைத்து பயத்தைப் போக்குவிக்கும் நிலையில் உள்ள பலராமன் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். அருகே, ஒரு கையால் மலையைத் தூக்கிக்கொண்டு நிற்கும் கிருஷ்ணன் அணிந்திருப்பது இரண்டு பூணூல்கள். இரண்டுமே துணியால் ஆனவை. ஆனால், பலராமன் அணைத்துக்கொண்டு நிற்கும் இடையன் பூணூல் அணிவதில்லை. 



திரிமூர்த்தி மண்டபத்தில் பிரம்ம சாஸ்தாவாக நிற்கும் சுப்ரமணியர் அணிந்திருக்கும் பூணூலை இடப்பக்கம் காணலாம். இந்தப் பூணூல் ருத்ராக்‌ஷ மணிகளால் ஆனது. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று செல்லுமாறு அணியப்பட்டுள்ளது. 




இங்கே படுத்திருக்கும் விஷ்ணு அணிந்திருப்பது நிவீதமாக துணியால் ஆன பூணூல். கீழே இருக்கும் ஆயுத புருஷர்களில் வலப்பக்கம் தெரிபவர் நூலால் ஆன பூணூலை அணிந்துள்ளார் - நிவீதம். கீழே இடப்பக்கம் உள்ளவர் ருத்ராக்‌ஷத்தால் ஆன பூணூலை நிவீதமாக அணிந்துள்ளார். மேலே உள்ள கணங்களில் இடப்பக்கம் உள்ள கணம் துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளது. அருகில் உள்ள பெண் போன்ற உருவம் பூணூல் ஏதும் அணிந்தாற்போலத் தெரியவில்லை. மது, கைடபன் இருவரில் ஒருவர் முதுகில் பூணூல் ஓடுவதைப் பார்க்கலாம். எனவே மற்றவரும் பூணூல் அணிந்திருக்கத்தான் வேண்டும் என்பதை யூகிக்கலாம். 


சோழர்களின் முற்காலச் சிற்பங்கள் பல்லவர் சிற்பங்களின் கூறுகளைப் பின்பற்றியனவாகவே இருந்தன. உயரமான மகுடம். மெல்லிய உடலமைப்பு, தடித்த பூணூல் அமைப்பு ஆகியவை இடம்பெற்றன. பின்னர்ப் பல புரிகளைக் கொண்ட பூணூல் அமைப்பு, சிம்ம முகத்துடன் கூடிய அரைக் கச்சை, கண்ட மாலை ஆகியன அமைக்கப் பெற்றன.

பிற்காலச் சோழர் சிற்பங்களில் அணிகலன்களும் அலங்காரங்களும் முற்காலச் சோழர் சிற்பங்களைவிடச் சற்று அதிக அளவில் இடம்பெற்றன. சிற்பங்களின் முகம் வட்டமான அமைப்பினை உடையதாயும், இலேசான சதைப் பற்றுடனும் காணப்பட்டது. உடலமைப்பு குறுகிக் காணப்பட்டது. 


ஸ்ரீ உடையார் ராஜராஜசோழத்தேவர்  சிற்பத்தில் பூணூல் இல்லாமலும் உள்ளது. திருவலஞ்சுழியில், நின்ற நிலை, பூணூல் இல்லை, வணங்கிய நிலை.


கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில்,  சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீச்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் இராசேந்திரன் என்றும் கருதுகின்றனர். அடியாருக்கு (இராசேந்திரன்/சண்டீச்வரர்) பூணூல் இல்லை


கடவர்யார் சிலை பூணூல் இல்லை



கிருஷ்ணதேவராயர் பூணூல் இல்லை


 விஸ்வநாதநாயக்கர் பூணூல் இல்லை




Madurai Thirumalai Nayakar with his Queen.in Azhagar Kol Temple.



சிவந்தெழுந்த பல்லவராயன் பூணூல் இல்லை



அறந்தாங்கி தொண்டைமான் பூணூல் இல்லை





சிற்பங்களில் மூவேந்தர் ஆட்சி முடிவதற்கு முன்பும், அதற்கு பிறகு முற்றிலும்  பூணூல் இல்லாமல் மன்னர் , சிற்றரசர்கள் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ன.


தமிழ் மண்ணில்  பூணூலின் பழமையை அறிவோமானால்  

தமிழ் மண்ணில் நான்கு வர்ண முறை கடைபிடிக்க வில்லை, ஆனாலும் தமிழ் புலவர்கள் தமிழ் மண்ணில் தொழில்கள் அடிப்படையில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்துள்ளனர். இவர்களில் யார் பூணூல் அணிகிறார்கள். முப்புரி நூல் ந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு குலத்தவருக்குமே உரியது. 

வாரியார் அவர்கள் தரும் விளக்கம் 

புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது. புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் ", இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது. அந்த காலத்தில் வேத வியாசம் பண்ணுபவர்கள் - ஆட்சி புரிபவர்கள் - மேலை நாடு சென்று தொழில் புரிபவர்கள் மட்டுமே படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே அந்தணர்கள் - பாடம் சொல்லி தர விரும்பியவர்கள் , க்ஷத்ரியர்கள் - அரசாள விரும்பியவர்கள் , வைசியர்கள் - வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமே குருகுலம் சென்று படித்தனர். அவர்கள் மட்டுமே இதனை அணிந்தனர். முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர். காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும், குடுமபஸ்தான் - இரு புரியும், சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தனர் என்று விளக்கம் தருகிறார்.



பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது வேட்கோவரான குயவர். பானை குயவ பூணூலை பயன்படுத்தினார்கள். பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது கம்மாளர். நகை, பாத்திரம், மரக்கலம், சிற்பம் கட்டிடம், போர் கருவிகள் உருவாக்க பூணூலை பயன்படுத்தினார்கள். பூணூலை விற்கள் தாங்கிக்குள் விட்டு முதுகோடு இணைத்து அணிந்து பயன்படுத்தியது வேடரும் போர் காவல் வீரரும். வேட்டையாட போரிட காவல்காக்க பூணூலை பயன்படுத்தினார்கள்.

சூத்திர குலத்தவர் என்று குறிப்பிடப்படும் நாயன்மாரில் ஒருவர் சிறுத் தொண்ட நாயனார், இவர்  மாமாத்திரர் குலம் (வழிவழி மருத்துவன் றொழில் செய்யும் ஓர் மரபு), இவரை பற்றிய பாடல்  "முந் நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர்" ((சிறுத் தொண்டர் வரலாறு / பாடல் எண் 23 ~ ”) என்று குறிப்பிடுகிறது.

மறை ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் சிவாகமக் கருத்துக்களைத் தொகுத்து 727 குறட்பாக்களாக அருளியுள்ளார். இதனைப் பதிப்பித்து உரையும் கண்டவர் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். நூல் பெயர் "சைவ சமய நெறி" ( உட் தலைப்பு -ஆசாரியார்)

அந்தணர் ஏழு நூல் தரிக்கக் கடவர் என உணர்த்துகிறார் (பாடல் எண் -49 -ல்), மன்னர்கள் மூன்று , வைசியர்கள் இரண்டும் ஏனைய சூத்திர குலத்தவர் முதலானோர்க்கு ஒரு பூணூலும் தரிக்கக் கடவர் என ஆகம விதியை உணர்த்துகிறார் (பாடல் எண் 50). தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலும் தரிக்க / விற் பயிலும் சூத்திரர் (பாடல் எண் 52 ). தர்ப்பண காலத்திலும், அர்ச்சனை செய்யும் போதும், அக்னி காரிய காலத்திலும் இப் பூணூலைத் சூத்திரர் தரிக்கக் கடவர். சூத்திரர்களுள் எக் காலத்திலும், பூணூல் தரிக்க உரிமை உடையோர் (பாடல் எண் 53 )

ஆகமங்களில் விதிக்கப் பட்டவாறு நால் வகை வருணத்தாரும், முப்புரி நூல் தரித்தற்கு உரியர் என சிவ பெருமான் வகுத்த, ஆகம நூல் அனுமதித்துள்ளது. 53-ஆம் பாடலில் வகுத்த விதி, ஏனைய குலத்தவருக்கும் விலக்கு அன்று என ஊகித்து அறிக. 


மனுச்சட்ட ஆட்சி முறை தமிழ்நாட்டில் முயலப்பட்ட போது சொத்து வைத்திருக்கும் உரிமை, என பல உரிமைகள் தடுக்கப்பட்டன. அதனை எதிர்த்து உருவான போராட்டம் வலங்கை-இடங்கைப் போராட்டத்தின் பகுதியாக உருவெடுத்தது. இப்போராட்டம் மக்களை வாட்டியெடுத்த வரிச் சுமையிலிருந்து மீள்வதற்காக உருவாகிய இப்போராட்டம் பூணூல் அணிதல், பட்டம் கட்டுதல், திருமணம், சாவு ஆகியவற்றின் போது சங்கூதுதல், குடைபிடித்தல் போன்ற விருதுகளை நிலைநிறுத்தும் போராட்டமாகத் திசை திருப்பப்பட்டது. விருதுகள் பெரும்பாலும் புற அணிகளே. குடைபிடித்தல், செருப்பணிதல், தலைப்பாகை கட்டல், வாள் வைத்திருத்தல், விளக்கு கொண்டு செல்லல், சிவிகையில் செல்லல், சாமரம் வீசுதல் போன்ற 72 விருதுகள் மன்னர்களால் தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளுக்காக மக்கள் வலங்கை 98 சாதியினர், இடங்கை 98 சாதியினர் என்று பிரிந்து நின்று தம்முள் ஓயாத சண்டை இட்டுக் கொண்டனர். அரசும் பார்ப்பனர்களும் ஒரு புறத்தாருக்கு மட்டும் புதுப்புது விருதுகளை வழங்கி இச்சண்டையை முடுக்கிவிட்டனர்.

பூணூல் அணிவது பற்றி நம் நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் இயக்கங்களும் கணக்கற்றவை. வலங்கை இடங்கைப் போராட்டங்கள் தவிர இராமனுசரின் இயக்கமும் குறிப்பிடத்தக்கது. அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூட பூணூலணிவித்து வைணவர்களாக்கினார். ஆனால் வேதாந்த தேசிகர் தலைமையில் இதற்கெதிராகத் தோன்றிய வடகலை இயக்கம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. எனவே தென்கலையினர் வடகலையினரை விட இழிந்தவர்கள் என்ற நிலை இன்றும் கூட நிலவுகிறது.

அரசர்கள் கோயில் வழக்குகளையும், யாருக்குக் கோயிலில் முதல் மரியாதை யாருக்கு இரண்டாம் மரியாதை, யார் யார் எந்தெந்த வாகனத்தில் செல்லலாம், யார் யார் பூணூல் அணியலாம் என்பன போன்ற வழக்குகளையும் விசாரித்துத் தீர்ப்புக் கூறியுள்ளனர். மங்கம்மாள் சௌராஷ்டிரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறியுள்ளாள்.

பூணூலுக்கும் குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் சம்பந்தம் இல்லை, எல்லா சாதியினரும் அணியும் ஒன்றே. அந்தணர்கள், மற்றும் சில குடிகள், அந்த வழக்கத்தை விடவில்லை. மற்றையவர்களின் வாழ்வில் பழக்கம் குறைந்துவிட்டது. ஆனால் கருமாதி செய்யும் போது பூணல் அணியும் பழக்கம் எல்லா சாதியினரிடமும் இன்றும் உண்டு. முக்குலத்தோர், பறையர்கள் என்று எல்லா தமிழ் சாதிகளுக்கும் உள்ளன.

பார்ப்பனர்களுக்குதான் பூணூலா? எத்தனை பார்ப்பனர்கள் இன்று பூணூல் அணிகிறார்கள் என்பது வேறு விஷயம். 

இன்றும் பார்ப்பனர் தவிர எப்போதும் பூணூல் அணிந்து கொள்ளும் சாதியினர் 

1 ) பூநூல் அணிந்த வேளார் அல்லது குலாலர்
2 ) விஸ்வகர்மா (கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார், கம்மாளர், பத்தர், ஆசாரி, ஆச்சாரி என்றும் கூறுவர்)
3 ) செட்டியார் (நாட்டுக்கோட்டை செட்டியார் , தேவாங்க செட்டியார்) 



ஒரு சிற்பி எவ்வாறு இருக்கவேண்டும் என்று ஒரு சிற்பநூல் இலக்கணம் வகுத்துள்ளது..

" ஸ்தபதீநாம் சதுர்வேத தஸ; கர்மா விதியதே| ஸிகாயஜ் ஞோபவீ தஞ்ச ஜபமாலா கமண்டலும் || கூர்மபீட: ஸிரச்சக்கரம் யோக வேஷ்டிர லங்கர் தம்| பீதவஸ்த்ரஸித ப்ரஷ்டம் விபூதிர்க் கந்தலேபநம் || ஸிவிவமந்த்ரம் ஸிவத்யாநம் ஸிவபூஜா விதீயதே | ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸாநாம் ஹ்ருத யேத்யாந ஸில்பிநாம்."

எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும் ; மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும் ; இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும் ; தலையிற்ற் சிகையை உடையவனாயும் ; பூணூலைத் தரித்தவனாயும் ; பீதாம்பரம் அணிந்தவனயும் ; விபூதியையும் வாசனைச் சக்தனத்தையும் அணிந்தவனாயும் மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய், பிரம்ம விஷ்ணு மகேசுரரை இருதயத்தில் தியானிப்பவனாய் இருக்கின்றானோ அவனே சிற்பியாவான் என்பது இதன் பொருளாகும்.

அதாவது இவர்கள் கூற்றுப்படி சூத்திரனான அந்த சிற்பி.. அப்போ நான்கு வேதங்கள் கற்று, தலை முடி கிராப் வெட்டி, பூணூல் அணிந்து பட்டு பீதாம்பரம் கொண்டு சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்துள்ளாதான் 



விஸ்வகர்மா தங்களை அக்னி குலம் என்று கூறிக்கொள்கின்றனர். திருமணத்தில் அணியும் பூணூலைக் கழற்றாமல் தொடர்ந்து அணிந்து வருகின்றனர். ஐந்தொழிற் கொல்லர்களாகிய விசுவகர்மர்கள் குறித்த இன்னொரு செய்தியும் உண்டு. ஆச்சாரியர் என்ற பட்டம் சூட்டிக்கொள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; கொல்லர்கள் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றதாகவும் அதன் முடிவில் அவர்களும் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசாரியன் என்றால் ஆசிரியன் என்று பொருள் கூறுவர். ஆசாரி என்பது கொல்லர், தச்சர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள குலப்பெயர். ஆசு எனப்படும் அச்சு அல்லது சட்டத்தை அரிகிறவன் என்று இதற்கு விரித்துப் பொருள் கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்துச் சைவர்களிடம் பூணூல் அணியும் வழக்கமும் சிவதீட்சை பெறும் வழக்கமும் இருந்ததததாக குறிப்பிடுகிறார், Rev. James Cartman, OBE, M.A., B.D., M.Th. தன்னுடைய Hinduism in Ceylon என்ற நூலில்.

பெண்களும் பூணூல் அணிந்த காலம் உண்டு. சந்நியாசிகளில் சிலர் பூணூல் அணிவதில்லை. சங்கராச்சாரியார்கள் அணிவதில்லை. 

சுப காரியங்கள் செய்யும்போது இடது தோளிலிருந்து குறுக்காகவும், அசுபங்கள் போது மாற்றியும், தாம்பத்திய உறவில் ஈடு படும்போது நேராக மாலையாகவும் அணிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகும் முன் மூன்று நூல். திருமணம் ஆனால் ஆறு நூல். தந்தை உயிர் தவறினால் ஒன்பது நூல். தாய் உயிர் தவறினால் 12 நூல். என்றும், பூண் + நூல் = பூணும் நூல் , அதாவது அணியக் கூடிய நூல் என்று சிலர் கூறுகின்றனர்.

பிராமணர்கள் பூணூல் அணிந்து கொள்வதற்கான காரணம் பற்றி அவர்கள் கூறும் கூற்று ஒன்றாக இருந்தாலும் தமிழறிஞர்களின் கூற்று வேறுவிதமாக இருக்கிறது. போர்வீரர்கள் மரபினர் தொடர்ந்து போர்செய்து வந்ததால் அவர்கள் எப்போதும் அம்பு கூடுகளை வாருடன் இணைத்துத் தமது மார்பின் குறுக்கே அணிந்திருந்ததால் மார்பின் குறுக்கே வெள்ளைத் தழும்பு நிரந்தரமாகியது . அதைப் பார்த்த பிராமணர்கள் அந்த வெள்ளைத் தழும்புக்கு மாற்றாகப் பூணூல் அணிந்ததாகத் தமிழறிஞர்கள் உரைக்கின்றார்கள்.


வரி நவில் கொள்கை மறை நூல் வழுக்கத்து
புரிநூல் மார்பர் உறைபதி சேர்ந்து [ சிலம்பு : மதுரைக்காண்டம். புறஞ்சேரி இறுத்த காதை]

வேதநூல்களின் நெறியிலிருந்து வழுவி வரிப்பாடல்களைப் பாடும் கொள்கை கொண்டவர்களான முப்புரிநூல் அணிந்த பிராமணர்கள் வாழும் ஊரை அடைந்தார்கள்.வரிப்பாடல் என்பது காதலையும் காமத்தையும் பாடும் பாடல். கோவலன் அங்கே இருந்தவர்களுடன் யாழில் இசைப்பாடல்களை வாசித்து மகிழ்ந்து களிக்கிறான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.  கொற்றவையின் கோலத்தை வருணித்துப் பாடிக்கொண்டிருந்தார்கள். ( கொற்றவை வணங்கியவர்கள் கள்ளர் , மறவர் . இன்று கள்ளர் கோவில்களில் வேளாளர், பறையர் கோவில் பூசாரிகளாக இருப்பதை பொருத்திப்பார்க்கவேண்டும்)  

கள்ளர் நாட்டில் கள்ளர் பெரியபூசாரிகள் தங்க பூணூல் அணிவது பரம்பரியமாக இருக்கின்றது.

பூணூல் தகராறு.

மங்கம்மாள் ஆட்சியின் இறுதிக் காலமான 1705ல் மதுரை ஆளுநராக இருந்த ஜொஸ்யம் வெங்கடரங்க ஐயர் சௌராஷ்டிரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமையும் பார்ப்பன ஆசாரங்களும் இல்லை என்று கூறி,18 சௌராஷ்டிரர்களைப் பிடித்து திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பி சிறையில் அடைக்கும்படி செய்தார். இதன் பின்னர் ராணி மங்கம்மாளால் சௌராஷ்டிரரும் பூணூல் அணியலாம் எனும் உரிமையைப் பனை ஓலைச் சுவடியில் எழுதி அரசு முத்திரையுடன் தரப்பட்டது. 

தமிழ்நாடு சாலியர்-பட்டாரியர் சமுதாய வரலாறு (பக்: 36)


இப்படி எல்லா சாதிக்கும் பொதுவான பூணூல், இன்று நாகரிகம் வளர்ச்சியில் பெரும்பாலான சாதிகளிடம் மறைந்துவிட்டது. கள்ளர்களின் ஆண்கள் மற்றும் பெண்கள் காது வளர்த்தல் இன்று முழுவதுமாக மறைந்து கள்ளர் பூசரிகளிடம் மட்டுமே காதில் வளையமாக உள்ளது. இன்று கள்ளர்கள், பூணூலை இறப்பில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வளரி என்ற கள்ளர்கள் ஆயுதமும், இன்று மறைந்தே போய்விட்டது.



இப்படியாக பூணூல் நாண்கு வருணத்திற்க்கும் (தமிழர் ஆதி பண்பாட்டிற்க்கு பொருந்தாத) பொதுவாக இருக்கையில், சிலர் நாங்கள் தான் பிராமணர், சத்திரியர், அது எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நவீன காலத்தில் கூட கனவுலகத்தில் வாழ்கின்றார்கள்.


நன்றி : பத்ரி சேஷாத்திரி (சிற்பங்களில் பூணூல்)

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்