வியாழன், 16 ஜனவரி, 2020

இந்திய ராணுவ கர்னல் சுபாஷ் தேவர்



கள்ளர் சமூகம் மட்டுமல்ல அனைத்து கிராமத்து மாணவர்களும் அரசுப்பணியில் சேரவேண்டும் என்பதே எனது லட்சிய இலக்கு :

இந்திய ராணுவ கர்னல் சுபாஷ் தேவர் பெருமிதம் 


மதுரை மாவட்டம் செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் தேவர் இவர் பிரமலைக்கள்ளர்சமூகத்தில் பிறந்தவர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி கர்னல் அந்தஸ்தை பெற்றவர் .

இவரது மனைவி வணிக வரித்துறை இணை ஆணையர் திருமதி ராஜி சுபாஷ் இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2014 ம் ஆண்டு வீல்ஸ் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர் .

தற்போது அறக்கட்டளையின் மூலமாக இலவச வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில் அரசு சீருடைப்பணிகளுக்கான தேர்வுகள் குறித்த இலவச ஆலோசனை மற்றும் சேவை மையத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதனை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர் ,

கிராமப்புற பகுதியை சார்ந்த மாணவ மாணவிகள் காவல்துறை ,ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல தேர்வுகளுக்கு தயாராகிற வகையிலும் மற்ற அரசு தேர்வுகள் குறித்த விபரங்களை அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்தும் அவற்றிற்கு பதிவு செய்வதற்கான ஆன் லைன் வசதியும் செய்து தரப்பட்டுளள்து மேலும் பிரத்யேக பயிற்சி வகுப்புகள் துறை வல்லுநர்களால் அளிக்கப்பட உள்ளது.

பிரமலைக்கள்ளர் சமூகம் மட்டுமல்ல அனைத்து கிராமத்து மாணவர்களும் அரசுப்பணியில் சேரவேண்டும் என்பதே எனது லட்சிய இலக்கு என உரையாற்றினார்.

நன்றி
கள்ளர் முரசு

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்