ஞாயிறு, 19 ஜனவரி, 2020

"சொல்வேந்தன்" கம்பம் செல்வேந்திரன் தேவர்



தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கம்பம் செல்வேந்திரன். பிரமலை கள்ளரில் பூசலபுரம் கோயில் கும்பிடுபவர்.

1984-ல் அதிமுக சார்பாக போட்டியிட்டு பெரியகுளம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சியிலும் "மாநில கொள்கை பரப்பு செயலாளராக" இருந்தவர். திமுகவில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தவர்.

தன்னை அதிமுகவில் இருந்து விலக்க காரணமாக இருந்த "சேடபட்டி முத்தையா" அரசியல் அனாதையாக இருந்த போது கலைஞரிடம் முறையிட்டு திமுகவில் சேர்த்த நல் உள்ளம் கொண்டவர்.

"நீட் தேர்வு" பிரச்சனையால் அனிதா இறந்த போது பாஜ தமிழிசை சௌந்திரராஜன் +2வில் வெறும் 800 மார்க் தான் எடுத்தார். கலைஞர் அவர்கள் முதல்வர் கோட்டாவில் தமிழிசைக்கு மருத்துவ சீட் கொடுத்தார் என்ற உண்மையை உடைத்தார்.

அரசியல் உலகம் செல்லாமல் திரை உலகம் சென்று இருந்தால் "வைரமுத்துவிற்கு" இணையாக உயரும் அளவிற்கு இலக்கிய அறிவு கொண்டவர்.

2006-ல் தேர்தலில் கலைஞர் மற்றும் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது இவர் வென்றால் "கல்வி அமைச்சர்" என்று வெளிப்படையாகவே கூறினார்கள்.

ஆனால் சாதி சார்பற்ற இவரை 1986-ல் கள்ளர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் நடந்த கலவரத்தை மையபடுத்தி இவரை 1800 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்தார்கள்.

ஒரு வேளை அன்று இவர் வெற்றி பெற்று இருந்தால் எங்கள் ஏரியாவில் புதிய பள்ளி மற்றும் கல்லூரி தோன்றி இருக்கும்.

அப்படி இருந்தும் 2006-ல் கிடைத்த "டெல்லி சிறப்பு பிரதிநிதியை" வைத்து எங்கள் ஏரியாவில் சாதி பார்க்காமல் பல நல்ல காரியங்கள் செய்தார்.

தற்போது திமுகவில் உயர் மட்ட குழு உறுப்பினராக உள்ளார்.

அடுத்த ராஜ்யசபா தேர்தலில் இவருக்கு திமுக ராஜ்யசபா எம்பி வழங்கினால் பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் சிறந்த குரல் ஒன்று ஒலிக்கும்.

அன்புடன்: கூடலூர் செந்தில் தேவர்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்