ஞாயிறு, 12 ஜனவரி, 2020

விசங்கிநாட்டு தென்கொண்டார் எழுப்பிய கோயில்



மலையடிப்பட்டி பெருமாள் கோயிலில் உள்ள புதுக்கோட்டை கல்வெட்டு எண்:943, கூறும் செய்தியின்படி 5-16 ஆம் நூற்றாண்டில் தெம்மாவூரில் இருக்கும் அரையன் தென்கொண்டான் என்பவன் நாச்சியார்க்கு கோயில் கட்டியதாக குறிப்பிடுகிறது.


கல்வெட்டு:-

" தெம்மாவூரிலிருக்கும் அரைய
ர்களில் செல்ல பொக்கன் புத்தி
ரன் மங்கான் தென்கொண்டான்
நாச்சியார்ரும் கொவிலும் உண்டா
க்கினார் புண்ணியம் தென்கொண்டான்"

தெம்மாவூர் அரையன் தென்கொண்டான் நாச்சியாருக்கு சிலை அமைத்து கோயில் கட்டியதாக கல்வெட்டு விளக்குகிறது. 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோயிலுக்கு அருகில் கமலவல்லி நாச்சியார் எனும் கோயில் இன்றும் பொலிவுடன் விளங்குகிறது.




தென்கொண்டான் பவம்சாவளி கள்ளர்கள் இன்றும் இந்த கோயிலில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள விசங்கி நாட்டின் உள்நாடான கீழ செங்கிளி நாட்டில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(Manual of pudukkottai state vol 1 page 111)


வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மீசெங்கிளி நாட்டு புலியூர் ( விசங்கி நாட்டு விசலூர் சிவன் கோயில் கல்வெட்டு) 




தெம்மாவூர்  பூர்வீகமாக கொண்ட கோவிந்தராஜன்  தென்கொண்டார்  





அறிஞர் அண்ணாதுரை தென்னமநாட்டில் வானொலி பெட்டி (Radio) திறந்து வைத்து சுமார் இரண்டு மணி நேரம் உரை நிகழ்த்தினார். துரையுண்டார் தெருவிற்கும் சொசைட்டிக்கும் இடையில் தான் இந்த போட்டோ எடுக்கப்பட்ட இடம். தேதி 10.06.1960. அறிஞர் அண்ணாதுரையுடன்   கோவிந்தராஜன்  தென்கொண்டார்  





ஶ்ரீ கண் நிறைந்த பெருமாள் சன்னதி






விசங்கிநாட்டின் சிதறல் நாடான செங்கிலிநாட்டு கள்ளர்களின் நாட்டுக்கூட்டம் விசலூரில் நடைபெறும்:-



களவு, காவல் என திட்டமிட செங்கிலி நாட்டுக்கள்ளர்கள் கூடுமிடம் விசலூர். செங்கிலிநாட்டு கள்ளர்தலைவர், கள்ளரின முன்னோர்கள் (Chiefs,Clans) அனுமதிபெற்றபிறகே அனைத்தும் முடிவு செய்யப்படும்!

வெள்ளாளர் கிராமமாக திகழ்ந்த விசலூர் அருகே உள்ள கிராமத்தை சார்ந்த கள்ளன் ஒருவன் விசலூர் வெள்ளாளர் வீட்டு பெண்ணை காதலித்து,பெண்கேட்டு செல்ல அப்பெண்ணின் தந்தை மறுத்துவிட்டார். அதன்பிறகு விசலூர் வெள்ளாளர்கள் அனைவரும் வேறொரு கிராமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

விசலூர் நடனமங்கையோடு ஈர்ப்பு கொண்டிருந்த வெள்ளாளர் ஒருவரையும், அப்பெண்ணையும் கொன்றுவிட்டனர். இவ்விருவரும் பட்டவர்களாக இன்று உள்ளனர்.மலையாள தேசத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் விசலூர் வந்த ஒரு பக்தர் ஒருவர் பட்டவராக, கருப்பனாக வணங்கப்படுகிறார்.

விசங்கிநாட்டு விசலூர்!



பச்சையாக உள்ளது செங்கிலிநாடு என குறிக்கப்பட்ட கல்வெட்டு


விசிங்கிநாடு




ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

நன்றி : பரத் இராமகிருஷ்ணன் கூழாக்கியார்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்