வியாழன், 9 ஜனவரி, 2020

இசை நாடகத் திலகம் இரா.வெ.உடையப்பத்தேவர்

Udaiyappa-Anitcha Malar 1981-2


உடையப்பா என்ற இரா.வெ.உடையப்பத்தேவர் 

பாலாபிஷேகம், 
கண்ணாமூச்சி, 
குறத்தி மகன், 
புது வெள்ளம், 
தசாவதாரம், 
மிருதங்கச் சக்கரவர்த்தி,
 ”தாய் வீட்டு சீதனம்’ 
முத்தான முத்தல்லவோ [1976], 
அனிச்ச மலர் [1981], 
நவக்கிரஹ நாயகி [1985], 
மணி மகுடம் [1968]

உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ளவர். 

ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இசை நாடகத் திலகம் என்ற பட்டம் பெற்றவர். 

மதுரை தேவர் நாடக மன்றம் என்ற நாடகக் குழுவைச் சொந்தமாக நடத்தி வந்தார். இந்நாடகக் குழுவிலுள்ள நடிகர்கள் அனைவருக்கும் 1981-ஆம் ஆண்டு தான் தயாரித்த “அனிச்ச மலர்” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். இப்படத்தில் மதுரை, சுரேந்திரன், எல்.ஆர்.அஞ்சலியுடன் இணைந்து “ஹரிச்சந்திரா” நாடகத்தில் சொந்தமாக பாடவும் செய்துள்ளார். இப்படத்தில் சத்யசித்ரா, ஜெய்பாபூ, பபூன் பக்கிரிசாமி ஆகியோரை அறிமுகம் செய்தார். 

உடையப்பத்தேவர் நாடக உலகில் பிரபலமாக இருந்து, 'அனிச்சமலர்' என்ற பெயரில் படம் தயாரித்து வந்தார். பாடல்களை மேத்தா எழுதவேண்டும் என்பது உடையப்பத்தேவரின் விருப்பமாக இருந்தது.

பாடல் எழுதுவதற்காக ஏவி.எம் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்தார் மேத்தா. ஆஜானுபாகுவான உடையப்பத்தேவர் ஆளுயர மாலையை இவருக்கு அணிவித்து, 'இவர்தான் எங்கள் கவிஞர்' என்று இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மெட்டு கொடுக்கப்பட்டது. புதியவரான மேத்தாவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. 'அந்த ட்யூனை எனது தமிழால் தடவிப் பார்த்தேன்' என்று பின்னாட்களில் குறிப்பிடுகிறார். '

காத்து வீசுது புதுக்காத்து  வீசுது...' என்று இவர் எழுதிய வரிகள் பாராட்டப்பட்டன. 


உடையப்பத்தேவர் 1988-ஆம் ஆண்டு காலமானார்.


Image

Image

1976-இல் வெளி வந்த தசாவதாரம் படத்தில் பரமசிவனாக பிரகலாதன் வேடத்தில் நடித்த பேபி ராணியுடன் உடையப்பா

Image

Image

வி.கோபாலகிருஷ்ணனுடன் தசாவதாரம் படத்தில் உடையப்பா

Image
”தாய் வீட்டு சீதனம்’ [1975] படத்தில் மேஜர் சுந்தரராஜனுடன் உடையப்பா

Udayappa Devar-Thaai Veetu Sidhanam 1975-
“முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் உடையப்பத்தேவர்

Udayappa Devar-Muthaana Muthallavo 1976-1Udayappa Devar-Muthaana Muthallavo 1976-2
“முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் செந்தாமரையுடன் உடையப்பத்தேவர்

Senthamarai-Udayappa Devar- Muthaana Muthallavo 1976-Senthamarai-Udayappa Devar- Muthaana Muthallavo 1976-1
“முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் எம்.ஆர்.கே, முத்துராமன், செந்தாமரையுடன் உடையப்பத்தேவர்

Udayappa Devar- MRK-Senthamarai-Muthuraman-Muthaana Muthallavo 1976-1Udayappa Devar- MRK-Senthamarai-Muthuraman-Muthaana Muthallavo 1976-2Udayappa Devar- Senthamarai-Muthuraman-Muthaana Muthallavo 1976-
“நவக்கிரக நாயகி” [1985] படத்தில் உடையப்பத்தேவர் 


Udayappa Devar as Kaalavar-Navagraha Nayagi 1985-Udayappa Devar as Kaalavar-Navagraha Nayagi 1985-1Udayappa Devar-Navagraha Nayagi 1985-1Udayappa Devar-Navagraha Nayagi 1985-Udayappa Devar as Kaalavar-Navagraha Nayagi 1985-2
Udayappa Devar-Cho-Navagraha Nayagi 1985-
“அனிச்ச மலர்” 1981 படத்தில் இரா.வெ.உடையப்பத்தேவர் 


Udaiyappa-Anitcha Malar 1981-Udaiyappa-Anitcha Malar 1981-1Udaiyappa-Anitcha Malar 1981-4Udaiyappa-Anitcha Malar 1981-5Udaiyappa-Anitcha Malar 1981-6
”மணி மகுடம்” 1968 படத்தில் உடையப்பாவுடன் எம்.என்.நம்பியார்Udaiyappa-Mani Makudam 1968-Udaiyappa-MN.Nambiar-Mani Makudam 1968-

நன்றி : antrukandamugam.wordpress.com 

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்