திங்கள், 13 ஜனவரி, 2020

கள்ளர் வாழ்வியல் பொங்கல்





பொங்கல் திருநாள் முதுகுடி கள்ளர் பெருமக்களுக்கு பண்பாட்டு அடியாளமாக காலங்காலமாக திகழ்கிறது.



கள்ளர் சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பொங்கல் திருநாளில் மட்டுமே மகிழ்ச்சி நிறைந்த பண்பாட்டு அடையாளமாக உள்ளது.

இதனை அவர்களின் திருமண பந்தம் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். ஆம் காலங்காலமாக அனைத்து கள்ளர் நாட்டிலும் திருமணமான ஆணுக்கு தலைப் பொங்கல் தினத்தன்று பெண் வீட்டின் சார்பாக மைத்துனரால் மாப்பிள்ளைக்கு விருந்து வைத்து அவருக்கு பொங்கல் முறையாக கொடுக்க வேண்டிய பொருட்கள் :-

5  மரக்கால் அரிசி
5  மண்பானைகள்
5  உலோகப்பானைகள்
5  கொத்து வாழைப்பழங்கள்
5  தேங்காய்கள்
5  மண்டை வெல்லங்கள்

முதலான பொருட்களுடன் பெண் வீட்டாரின் மனப்பூர்வமான ஆசிர்வாதத்துடன் மணமகனுக்கு முறை செய்யப்படுகிறது.

இதில் நாட்டார் கள்ளராகிய கிளைவழி கள்ளர்கள் மட்டும் தலைப் பொங்கலுக்கு மணமகனுக்கு, பெண் வீட்டார். 

கிடாய் அரிசி என்ற முறை கொடுக்கப்படுகிறது.

ஒரு கிடாய்
ஒரு சேவல்
முட்டையிடா கோழி
5 மரக்கால் அரிசி
5 மண்பானைகள்
5 உலோகப்பானைகள்
5 கொத்து வாழைப்பழங்கள்
5 தேங்காய்கள்
5 மண்டை வெல்லங்கள்

மற்றும் அப்பெண் இறக்கும் வரை புது துணி அப்பெண்ணின் சகோதரர் வாங்கி கொடுக்க வேண்டும். இம்முறைக்கு பெயர் கிடாய் அரிசி என்பதாகும்.

ஒவ்வொரு தமிழர் பண்டிகையிலும் அத்தமிழரின் முதுகுடி கள்ளர் பெருங்குடிகளின் வாழ்வியல், தனித்துவத்துடன் பிரதிபலிப்பது மட்டற்ற மகிழ்ச்சியே.

கீழே இனைக்கப்பட்டுள்ள புகைப்படம்:-


பெருமைமிகு பட்டுக்கோட்டை பண்ணைவயல் சேர்வைக்காரர் குடும்பத்தார் கிடாஅரிசி கொண்டு செல்லல்....!

தஞ்சையில் பல கிராமங்களில் கள்ளர்கள் தீபாவளி அன்று புது துணிகள் எடுப்பது இல்லை. பொங்கல் மட்டும் புதுத்துணிகள் எடுத்து சிறப்புடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறார்கள்.


நன்றி
Caste and tribes of south India

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்