வீரபாண்டிய கட்டபொம்மனை “கொள்ளைக்காரன்” என்று பழி சுமத்துகிறார்கள்”, என வேதனைப்படுகிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம் என்று பிபிசி தமிழ் செய்தித்தாளில் (16 அக்டோபர் 2023) வந்துள்ளது.
தமிழ்வாணன் செட்டியார் எழுதியது கட்டபொம்மன் என்னும் கொள்ளைக்காரன் நூல், இது எதற்க்காக எழுதினார் என்று அதில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் இப்பொழுது சாதாரணமாக பொதுவெளியில் கிடைக்கின்றன. இது நீதிமன்றத்தின் மூலமாக அல்லது தமிழக அரசோ தடை செய்ததாக தெரியவில்லை.
கட்டபொம்மன் தப்பியதை அறிந்த பானர்மேன், அவரை மிக பெரிய தேசத் துரோகியாக சித்தரித்து எல்லா பாளையக்காரர்களுக்கும், 'கட்டபொம்மன் உடன் உள்ள ஊமத்துரை, தானாதிபதி மற்றும் அவனிடம் உள்ளவர்களுக்கு அடைக்கலமோ, உதவியோ கொடுக்க கூடாது. மேலும் கட்டபொம்மனை பிடிக்க பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்ய வேண்டும். அதற்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மீறினால் அடைக்கலம் கொடுத்த பாளையக்காரரும், அவர் பாளையமும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகும்,' என்று எழுதினான்.
எட்டப்பன் செயலும் தப்பிய கட்டபொம்மனும், மற்றவர்களும், கோல்வார்பட்டியில் உள்ள அரண்மனையில் தங்கியுள்ளனர் என்ற செய்தியை அறிந்த எட்டப்பன், பானர்மேனிடம் தனக்கு சில ஆங்கிலேய சிப்பாய்களின் உதவியை வேண்டினார். பானர்மேனும் எட்டப்பனுடன் சிப்பாய்களை அனுப்பினார்.
அவர்கள் துணையுடன் கோல்வார்பட்டி கோட்டையை எட்டப்பன் தாக்க, தானாதிபதி மட்டும் பிடிபட மற்றவர்கள் தப்பி சென்றனர். தானாதிபதி கைதை எட்டப்பன் பானர்மேனுக்கு தெரிவிக்க, பானர்மேன் விருப்பப்படி நாகலாபுரம் கடை வீதிக்கு தெற்கில் உள்ள கணேசர் கோவில் அருகில் உள்ள ஒரு வேப்பமரத்தில் துாக்கிலிட்டான். தானாதிபதியின் தலையை துண்டித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் மக்கள் பார்வை படும்படி எட்டப்பன் வைத்தார்.
தொண்டைமானின் முன்னோர்கள், கட்டபொம்மனின் முன்னோர்களுக்கும் ஆங்கிலயேர்களுக்கும் பலமுறை மத்தியஸ்தர்களாக இருந்து பிரச்னையை தீர்த்து வைத்துள்ளதாக பல வரலாற்று தரவுகள் உள்ளது. அந்த அடிப்படையில் பயமின்றி திருக்களம்பூர் காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும், ஆனால் அவர் துரோகம் செய்துவிட்டதாகவும் ஊமைத்துரை சரபோஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் பிரிட்டீஸாருக்கு தொண்டைமான் எழுதிய கடிதத்தில், கஷ்டப்பட்டு தேடிக்கண்டு பிடித்ததாகவே சொல்கிறார்.
தொண்டைமான் ஆங்கிலேயருக்கு நண்பனாக இர்ருந்தார். அந்த ஆங்கிலேயரில் WILLIAM HOWARD RUSSELL என்ற ஒருவன் தொண்டைமான் பற்றி இழிவாக எழுதியும், கட்டபொம்மனை உயர்வாக எழுதியுள்ளதாக குறிப்பு உள்ளது. எட்வர்டு டைரி குறிப்பை வைத்து WILLIAM HOWARD RUSSELL தனது சொந்த கற்பனையில் எழுதியது. போர் பற்றிய தனது கட்டுரையில், பொய் கதைகள் எழுதி, அவரது கதையை மேம்படுத்த முயற்சிப்பதற்காக , WILLIAM HOWARD RUSSELL மீது குற்றச்சாட்டு உள்ளது.
அந்த புத்தகத்தில் பல ஆய்வாளர்கள் பெயர் குறிப்பிட்டு, அவர்கள் எழுதியதை குறிப்பு கொண்டு எழுதியுள்ளார். கள்ளர்கள் பற்றி அவர் ((called “ Colleries" by Orme). போன்றவர்கள் எழுதியதை எல்லாம் படித்து எழுதிய ஒரு கதை.






















































































































