புதன், 29 ஜனவரி, 2020

இரட்டைமலை ஒண்டி கருப்பண்ணசாமி / கருப்பசாமி



திருச்சி கோரையாற்றின் கரையில் உள்ள இரட்டை மலையில் ஒண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. மலையின் மேல் பகுதியை குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைக்குள் செல்ல ஒன்றரை அடி நீளம், அகலத்தில் சிறிய நுழைவு வாயில் உள்ளது. இந்த வழியாக படுத்து ஊர்ந்தபடி 6 அடி தூரம் சென்றால், மற்றொரு அறை இருக்கும். கோயில் திருவிழாவின்போது பயன்படுத்தப்படும் ஐம்பொன், இட்டாலியம் மற்றும் உலோகங்களால் ஆன சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் இந்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆடி திருவிழாவின்போது, சாமியிடம் உத்தரவு கேட்டு இவை வெளியே எடுக்கப்படும். உத்தரவு கிடைக்காமல் 3, 4 ஆண்டுகள்கூட இவற்றை எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த பொருட்களை நாகப்பாம்பு ஒன்று காவல் காப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி நாளை மறுநாள் கிடா வெட்டு, பொங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. குகைக்குள் இருந்த சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வெளியே எடுப்பதற்காக நேற்று முன்தினம் குகைக்கு வெளியே பால், முட்டை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். மலைக்காளி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின், மருளாளிகள் தண்டபாணி, ஒண்டிமுத்து, பூசாரிகள் நாகராஜன், முத்து ஆகியோர் குகை வாசலில் சூடம் ஏற்றி வழிபட்டனர். பின்னர், குகை கதவை திறந்து படுத்தபடி ஒருவர் பின் ஒருவராக 4 பேர் உள்ளே சென்றனர். உள்ளே கிடந்த முட்டை ஓடுகள், பால் பாக்கெட்களை எடுத்து போட்டனர். குகைக்குள் விளக்கேற்றி வழிட்டனர். பின்னர் அங்கிருந்த சாமி சிலைகள் மற்றும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே கொண்டு வந்தனர். குகைக்குள் இருந்து நாகப்பாம்பு வெளியே வரலாம் என்று பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால் வராததால் ஏமாற்றமடைந்தனர்.

மருளாளி தண்டபாணி கூறுகையில், ‘‘நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த காரைகாச்சி (கள்ளரில் காரையாட்சி / காரைக்காச்சி பட்டம் உடையவர்கள் ) கரையினர் மட்டுமே ஆடி துவக்கத்தில் இருந்து விரதமிருந்து, குகைக்குள் சென்று, சிலைகள் மற்றும் பொருட்களை எடுத்து வர முடியும். குகைக்குள் சென்றதும், சூடம் ஏற்றி வழிபடுவோம். அந்த வெளிச்சத்தில் நாகப்பாம்பு உள்ளதா என்பதை பார்த்துக் கொள்வோம்’’ என்றார்.

மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் காரையாட்சி / காரைக்காச்சி என்ற  பட்டங்களை பெற்றனர் என்று தனது ஆய்வில் கிருபாகரன் ராசகண்டியர், இன்டர்நேஷனல் கள்ளர் பேரவை தலைவர் குறிப்பிடுகிறார்.

வேட்டை கருப்பர்

இரட்டமலையில் உள்ளது இந்நடுகல்சிலை. இந்நடுகல் வேட்டைக்கருப்பு என அழைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். இந்நடுகல் இரண்டு அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்தொகுதியில் வெட்டரிவாள், மழு, அம்பு, கொடுவாள், கத்தி, குத்தீட்டி என காட்டப்பட்டுள்ளது. கீழ்தொகுதியில் வீரன் ஒருவன் குதிரையை இழுத்து வரும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். அவன் அருகே பெரிதாக வெட்டரிவாள் காட்டப்பட்டுள்ளது. "பனையூர் வாழ்க்கை" எனும் இடத்தில் (இவ்வூர் பராந்தகன் கால திருச்செந்துறை கல்வெட்டிலும் வருகிறது) கன்றாப்பில் எனும் ஊரைச்சேர்ந்த, "வேட்டன் மதிரை" என்பவர் காவு(உயிர்ப்பலி) கொடுக்கிறார். அதனை காப்பாற்றுவோரின் பாதம் என் தலைமேல் என்கிறார்.என்ன காரணத்தினால் இதைசெய்தார் என குறிப்பில்லை. இதனை "காலமுக்கியங்குழு" என்ற குழுவின் ஆணைக்கிணங்க செயல்படுத்துகின்றனர். அநேகமாய் அவர்கள் பலியிட்டது குதிரையாய் இருக்கலாம். இவ்வாறு குதிரையை பலியிடும் முறை எங்கேயும் இல்லை.  எனவே அரிதாய் பலியிட்டதனால் இக்குதிரைக்கு "நினைவுக்கல்" எடுப்பித்திருக்கலாம்.






அன்று குதிரையை காவு கொடுத்த 'வேட்டன் மதிரை' என்று வேட்டைக்கருப்பாக வணங்கப்படுகிறார். இன்றும் இக்கோவிலில் நிறைய பலிகள் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதுபோன்ற போர்க்கருவிகள் சூழ குதிரையுடன் கூடிய நடுகல் தமிழகத்தில் எங்கும் இல்லை. தகவல் : திரு. பார்த்தி கத்திக்காரர் 


கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்