புதன், 22 ஜனவரி, 2020

112 வயது வரை வாழ்ந்த வெங்கடாசலம் சிட்டாட்சியார்

பாபநாசம் அருகே 112 வயது வெங்கடாசலம் சிட்டாட்சியார் 18 மார்ச் 2015 ல் காலமானார்.

110 வயதுக்கும் மேல் வாழ்பவர்களைத்தான் Supercentenarians என அழைப்பார்கள். இவர்கள்குறித்தும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் UK ஆகிய நான்கு நாடுகளின் தகவல்களை இதற்காக எடுத்துக்கொண்டனர். 1968 முதல் 2006-ம் ஆண்டுக்கு இடையே வாழ்ந்த Supercentenarian-களை பட்டியலிட்டனர்.

1997-ம் ஆண்டில் 122 ஆண்டுகள் வரை வாழ்ந்த பிரெஞ்ச் பெண்ணான ஜீன் கால்மென்ட் என்பவர்தான் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறார். நோய்த்தொற்றுகள் மற்றும் உடல்நலக்குறைபாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன்மூலம் முதியவர்களின் வாழ்நாளும் சராசரி வாழ்நாளை விடவும் அதிகமாகும். குறிப்பாக, வயதாகும் காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்க, தீர்வுகளைக் கண்டுபிடித்தால் முதியவர்களின் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த சாதனையில் கள்ளர் குடியில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே 112 வயது வெங்கடாசலம் சிட்டாட்சியார் ஒருவர்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் சூழியகோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் அப்பாவு சிட்டாச்சியார், இவரது மகன் வெங்கடாசலம் சிட்டாட்சியார்(112), இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து தனது 23 வது வயதில் ரூ.18 டிக்கெட் கட்டணத்தில் கப்பலில் சிங்கப்பூர் சென்று அங்கு 7 ஆண்டுகள் தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து தனது 30வது வயதில் சொந்த ஊருக்கு வந்து சொந்த ஊரில் வாழ்ந்து வந்த தனது மூத்த சகோதரியின் மகள் அலமேலு (90) என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் வழியில் 3 பேரன், 2 பேத்திகளும், அவர்கள் வழியில் 4 கொள்ளுப் பேரன் 2 கொள்ளுப் பேத்திகளும் உள்ளனர். இவர் தனது இளமை காலத்தில் சுபாஷ்சந்திரபோஸ் கொள்கைகையில் பற்று கொண்டவராக வாழ்ந்து வந்தார்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்