செவ்வாய், 22 அக்டோபர், 2019

எம்.ஏ.பி. பிச்சை பாண்டுரார்


சஞ்சய் சரவணன் பாண்டுரார். சொந்த ஊர் திருச்சி. அப்பா, எம்.ஏ.பி.சரவணன் பாண்டுரார். அம்மா, லட்சுமி.  எனக்கு ரோல் மாடல் என்னோட தாத்தா எம்.ஏ.பி. பிச்சை பாண்டுரார். அவர் சுதந்திர போராட்டத்திலே கலந்துக்கிட்டவரு. 1932ம் வருஷத்திலே எங்க சொந்த இடத்திலே நாடக சபா ஒண்ணு தொடங்கி நடத்தினார். அந்த காலத்திலே இருந்த ஊமைப் படங்கள்ல அவர் நடிச்சு இருக்காரு. ”பக்த துருவன்”, ”சத்தியவான் சாவித்திரி”, ”சந்தனதேவன்” படங்கள்ல நடிச்சு இருக்காரு. அதை பட்சிராஜா பிலிம்ஸ் தயாரிச்சாங்க.


என் தாத்தாவோட போட்டோக்கள், விருதுகள், அவர் பயன்படுத்திய வீணை என பல நினைவு சின்னங்கள் என்னோட வீட்ல இருக்கு. அவரால சினிமாவிலே பெருசா சாதிக்கமுடியலே. அவர் பண்ண நினைச்சதை பேரனா இருந்து நான் எப்படியாச்சும் சாதிக்கணும்னு நினைக்கிறேன் .

இரண்டாம் உலகம்” ,”கவுரவம்” , ”பூலோகம்”, ”மீகாமன்”, இரும்புத்திரை, ”கவன்” நடிச்சிருக்கேன். “மடை திறந்தே 1945” ன்னு ஒரு படத்திலே இப்போ நடிச்சிருக்கேன். இந்த படம் தமிழ், தெலுங்குன்னு 2 மொழிலையும் எடுத்திருக்காங்க. ”ராபின்ஹுட்” படத்திலே நான் முக்கிய ரோல்ல நடிச்சிருக்கேன். இந்த படத்திலே மொட்டை ராஜேந்திரன் ஒரு முக்கிய ரோல்ல நடிச்சிருக்காரு. இதுவும் ஒரு வரலாற்று படம்தான். 

சினிமாவிலே நுழைஞ்சிருக்கிற நான், எல்லா ரோல்லையும் நடிக்கிற அளவுக்கு சிறந்த நடிகரா ஆகணும்னு எனக்கு ஆசை. அதுதான் என்னோட கோல். எந்தவொரு ரோல்லையும் நடிக்க நான் தயங்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்கு தேவையான எல்லா பயிற்சிகளையும் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வர்றேன். ரொம்ப சீக்கிரமா அந்த இலக்கை அடைஞ்சிடுவேன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்