வெள்ளி, 18 அக்டோபர், 2019

விஞ்சிராயர்



விண்னையும் மண்னையும் விஞ்சியவர்கள் என்பது இவர்களின் சிறப்பு. விஞ்சிராயர் என்ற கள்ளர் மரபினர் இன்றும் சோழமண்டலத்தில் சிறப்பாக வாழ்கின்றனர்.


விச்சியர் குடியில் வந்தோன், விச்சிமலையைத் தன்னகத்தே கொண்ட நாட்டு அரசன் மூவேந்தரையும் வென்று தம் தலைநகரான குறும்பூரில் வெற்றி விழாக் கொண்டாடினர் விச்சியர் எனப் பரணர் பாராட்டி யுள்ளார். விச்சியரை, சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறை வெற்றி கொண்டான் எனப் பதிற்றுப் பத்துப்பதிகம் கூறுகிறது.



விச்சிக்கோ வேந்தரை எதிர்த்துப் போரிட்டான். அது புலியை எதிர்த்துச் சிறுவன் ஒருவன் போரிடுவது போல இருந்ததாகக் குறும்பூர் மக்கள் பேசிக்கொண்டனர். (குறுந்தொகை 328)

வாட்போரில் வல்லவன் விச்சிக்கோ. அவனுடைய இளவல், இளவிச்சிக்க்கோ என அழைக்கப்பட்டான். கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய கண்டீரக்கோப் பெருநள்ளியின் தம்பி இளங்கண்டீரக்கோவின் இனை பிரியா நண்பனாக விளங்கியவன்.

குணத்தாலும், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்து விளங்கியவன் விச்சிக்கோ. பாரி இறந்தானாக அவன் மகளிர்க்கு மணஞ் செய்து வைக்கும் பொறுப்பை யேற்ற கபிலர் அம் மகளிரை அழைத்துக் கொண்டு விச்சிக்கோன் அவைக்கு வந்தார். பாரி மகளிரை மணந்து கொள்ளும் மாண்புடையான் அவன் என்று எண்ணினார் கபிலர். ஆனால், மூவேந்தர்க்கும் பகை வனாய பாரியின் மகளிரை மணந்தால். அப் பேரரசர் பகைப்பர் என அஞ்சி விச்சிக்கோன் அம் மகளிரை மணக்க ஒப்பவில்லை.


ச், ஞ் என்னும் இரண்டும் நாக்கின் நடு மேல்வாயின் நடுவைப் பொருந்த உருவாவதால் ச், ஞ் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.

விஞ்சைப்பதி விஞ்சை வேந்தர் (சீவக. 816)


ஏடு எடுத்து தந்த ஏந்தல், முத்தமிழ் வளர்த்த வள்ளல் கோபாலசாமி இரகுநாத ராசாளியார் தனது இளமை காலத்தில், பச்சைக்கோட்டையில் விஞ்சிராயர் என்பவரிடம் 8 ஆண்டுகள் குருகுலவாசம் இருந்து பயின்றார். வள்ளல் ராசாளியாரின் 99ம் ஆண்டு புகழ்அஞ்சலி நிகழ்ச்சியில் (06.04.2019 ) நீலலோசனி இதழ் ஆசிரியர் சதாசிவ விஞ்சிராயர் ராசாளியாரை இவ்வாறு புகழ்கிறார்.

நிலந்தனிலே ராசாளி, நிதிதனந்தினலே ராசாளி;
குலம் தனிலே ராசாளி கோபாலசாமி ரகுநாத ராசாளி




பேராசிரியர் சந்திரமோகன் விஞ்சிராயர் வீட்டில் விருந்தோம்பல்

பேராசிரியர் சந்திரமோகன் விஞ்சிராயருடன் கணேசன் கருப்பூண்டார், சோமசுந்தர தேவர், கிருபாகரண் இராசகண்டியர், கோபூ வல்லுண்டார் மற்றும் மதன்மோகன் விஞ்சிராயர்

கள்ளர் சமுதாய பணி செய்துவரும் சு.தட்சிணாமூர்த்தி விஞ்சிராயர்,    தெற்குத் தெரு, பூண்டி. பாபனாசம் தாலுக்கா.    தஞ்சாவூர்  பகுதியில் வாழ்கின்றார். சொந்த ஊர் பூண்டி, தந்தை பெயர் சுந்தரம் விஞ்சிராயர். பணி :விவசாயம், கட்டிட கட்டுமானம் மற்றும் சினிமா திரைப்பட துறை.


கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்