வெள்ளி, 18 அக்டோபர், 2019

மன்னார்குடி மிசா கு.பாலகிருஷ்ணன் ஆர்சுத்தியார்



அரசு பணியை துறந்து பொதுவாழ்வில் ஈடுபட்ட மிசா கு. பா, 1948ல் திராவிட இளைஞர் குழுவில் தொடங்கியது பொது வாழ்வு பயணம். 1950ல் மாணவர் தி.மு.க. 1954 - 1959 கழகத்தின் மன்னை நகர கழக செயலாளர், தொடர்ந்து 1969வரை வட்ட செயலாளராக நம் பகுதி கழக வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பத்து ஆண்டுகள் வட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் கிராமங்கள் தோறும் சைக்கிளில் சென்று கிளை கழகங்களை உருவாக்கி பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பாராட்டையும் பெற்றவர்.

1964ல் மன்னை நகர்மன்ற முதல் ஒரே திமுக உறுப்பினராக வெற்றி பெற்றவர். 1969 தொடங்கி 1983 வரை பொதுக்குழு உறுப்பினர். 1970 - 1978 வரை கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். மன்னை சட்டமன்றத்தின் முதல் திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1976 வரை சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். ஒருங்கிணைந்த தஞ்சையின் மாவட்ட திமுக பொருளாளர். ஆரூர் மாவட்ட கழக அவைத் தலைவராக பணியாற்றியவர். 1962 ல் விலைவாசி உயர்வு போராட்டத்திற்காக மூன்று மாதங்கள் கடுங்காவல், 1969 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காகவும் சிறை.

1976ல் மிசா சட்டத்தில் ஓராண்டு சிறை.

இயக்கம் வளர்த்த தீரர் ஆகஸ்ட் 05, 2013, தனது 80 வது வயதில் காலமானார். 



















கு. பா . தமிழழகன்



கு.பா. பாபு


கு. பா. தமிழ் அழகரசன்



கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்