திங்கள், 7 அக்டோபர், 2019

வல்லத்தரையர்


தஞ்சை இன்று அதிகம் போற்றப்பட்டாலும் வல்லம் பழமை மிக்க ஊர் என்பது தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகளின் முடிவில் தெரியவருகிறது. 1989-93 ஆம் ஆண்டுகளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துத் தொல்லியல் வல்லுநர்கள் வல்லத்தில் நிகழ்த்திய அகழாய்வுப் பணிகளால் கீ.மு.170, கி.பி .610, கி.பி.830 ஆகிய ஆண்டுகளுக்குரிய வரலாற்றுத் தடையங்கள் பலவற்றை வெளிக்கொண்டுள்ளார். அவற்றில் தொல்பழங்காலத்து எழுத்துக்கள் பொறிக்கப்பெற்ற கருப்பு, சிகப்பு வண்ண பானை ஓடுகளும் அடங்கும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால அரசர்களின் கோட்டைகளின் மதில், அரண், அகழி ஆகியவை பற்றி ஆராய முற்படும்போது, தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே அவற்றின் எச்சங்கள் இன்றளவும் காணப்பெறுகின்றன. 


புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கள்ளர் குடியின் காங்கேயரின் பொப்பண்ணக்கோட்டை, வட்ட மதிலரண், அகழி ஆகியவற்றுடன் திகழ்கின்றது. அடுத்து தஞ்சாவூருக்கு அருதேயுள்ள வல்லத்தில் மட்டுமே நீள்வட்ட வடிவில் திகழும் பழைய அகழியின் எச்சங்களைக் காணலாம்.

அந்த கோட்டைக்குள் ஒரு பழமையான சிவாலயமும், பிற்காலத்திய விக்கிரம சோழ விண்ணகரம் எனும் திருமால் ஆலயமும், கோட்டைக்கு வடக்கே வடவாயிற்செல்வியான கரிகாற்சோழ மாகாளி என்ற திருநாமமுடைய தேவியின் திருக்கோயிலும் இன்றளவும் பழமைச் சுவடுகளைச் சுமந்தவண்ணம் திகழ்கின்றன.


ஆலயத்தில் தொடரும் கள்ளர் மரபினரின் வல்லத்தரசுகளின் அறப்பணி:-




கள்ளர் மரபினரின் வல்லத்தரசு மற்றும் வல்லத்தரையர்களின் கோட்டை கொத்தளங்கள் இருந்த இடம் மண்மேடாக !!!!



(வல்லம்,தஞ்சை)














தமிழகத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய பேரூர்களின் குறிப்பிடத்தக்க பெருமைகள் வாய்ந்த பேரூர் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வல்லமாகும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடைச் சங்க காலத்தில் நிகழ்ந்த சோழ நாட்டுக் கோநகரங்களான பூம்புகார், உறையூர், ஆரூர், ஆவூர், ஆற்காடு, குடவாயில் எனும் நகரங்களின் வரிசையில் வல்லமும் ஒன்று என்பதனைச் சங்கப் பாடல்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.


வல்லபன் என்ற சோழ அரசன் ஆட்சிக்கு வந்தபிறகு இப்பகுதி வல்லம் என்று பெயர் பெற்றதாகவும், ஏரிகளும் குளங்களும் மிகுந்த இவ்வூரை 'ஏரியூர் நாட்டுக் கருவுகுல வல்லம்' என்றும் 'பாண்டிய குலாசனி வள நாடு' என்றும் சோழர் காலத்தில் அழைத்தனர்.


கங்கைக்கொண்ட ராஜேந்திர சோழனின் செப்பேட்டுச் சாசனத்தில், ராஜேந்திர சோழனின் முன்னோர்களைப் பற்றி கூறும் இடத்தில் கரிகாற்சோழனுக்கு முன்னவனாக வல்லப சோழன் என்பான் வல்லபபுரி எனும் வல்லம் நகரத்தைத் தோற்றுவித்து அங்கிருந்தவாறு அரசு மேற்கொண்டான் என்று கூறப்பெற்றுள்ளது.


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற சங்கத்தமிழ் நூல்களில் தஞ்சை பற்றிய குறிப்புக்கள் கிடையாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல்தான் தஞ்சாவூர் நகருக்கு வரலாறு தொடங்குகின்றது. ஆனால் 2200ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வல்லத்தின் பெருமை பேசப்பெறுகின்றது.

அகநாநூற்றின் பாடல் எண்.356 பரணர் எனும் புலவரால் பாடப் பெற்றதாகும். அப்பாடலில்,

"....... நற்றேர்க்
கடும்பகட்டி யானைச் சோழர் மருக
னெடுங் கதிர் நெல்லின் வல்லங்கிழவோ
னல்லடி யுள்ளனாவும் ....."  

என்று குறிப்பிட்டுள்ளார். 

இவ்வடிகள் வாயிலாக நல்ல தேரையும், கொடிய வலிமையுடைய ஆண் யானையையும் உடைய நல்லடி என்பானின் ஊராகிய வல்லம் நல்ல தெற்கதிர்கள் விளையும் ஊராக விளங்கியது என்பதை அறியமுடிகிறது.

வல்லம் எனும் ஊர் வல்லம் கிழவன் நல்லடி போன்ற சோழ மரபியல் ஆளபபெற்ற ஊர் என்பது அது கோநகரமாக விளங்கியதால் பாதுகாப்புமிக்க காவற்காடுகளைப் பெற்றுத் திகழ்ந்தது என்பதும் உறுதி பெறுகின்றது.

தொல்காப்பியம் எனும் சங்க காலத்தமிழ் இலக்கண நூலுக்கு உரை ஏழுதிய நச்சினார்க்கினார் அகத்திணை இயல் 30 ஆம் சூத்திரத்தின் உரையில், 

"சோழ நாட்டுப் பிடவூரும், அழுத்தூரும், நாங்கூரும், கலன்சேரியும் "
பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும் முதலிய பதியிற் தோன்றி ......"

என்று குறிப்பிடுவதை நோக்கும் போது வல்லம் என்ற ஊரின் பெருமையினையும் முக்கியத்துவத்தையும் உணரமுடிகின்றது.


வல்லம் என்னும் கோட்டை கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது. வல்லத்தில் இருந்து ஆட்சி செய்தவர்களின் மரபினர் வல்லமாண்டார், வல்லத்தரையர் என்றும் வல்லத்தரசு என்றும் அழைக்கப்பட்டனர். இன்றும் வல்லத்தரசு, வல்லத்தரசர், வல்லத்தரையர், வல்லாண்டார், வல்லக்கோன் வல்லங்கொண்டார், வல்லுண்டார் பட்டமுடைய மரபினர் வல்லத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பாச்சிள்வேள் நம்பன் தான் பாடிய பாடலொன்றில் பெரும்பிடுகு முத்தரையனாயின சுவரன்மாறனை "வல்லக்கோன்" என்கிறார்.


வல்லத்தரசு (வல்லத்து+அரசர்) பொருள்படும்.  வல்லாண்டான்பட்டி முழுவதும் வல்லாண்டார் பட்டமுடைய  கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்.


கள்ளர்நாடுகளில் விசங்கிநாட்டின் உள்நாடான வடமலைநாடு கொப்பம்பட்டி. கள்ளர்களின் வல்லத்தரசு மரபினரே ஊர் அம்பலக்காரர்களாக உள்ளனர்.

புதுக்கோட்டை, விசங்க நாடு கொப்பம்பட்டி அம்பலகாரர்
















ஶ்ரீ ஆண்டியப்ப ஐயனார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வலம்வரும் திருவிழா இங்கு நடைப்பெறும். 


புரட்சியாளர் வ.முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் கொப்பம்பட்டி வடமலைநாட்டை சேர்ந்தவர். கொப்பம்பட்டி வல்லத்தரசு மரபினருக்கு சந்திவீரன் குலதெய்வமாக உள்ளார்.



ஊராட்சி தலைவர் கண்டியப்ப வல்லத்தரசு 



தஞ்சை நரிய பட்டியின் இரண்டாம் கரைக்கு உரியவர்கள்  வல்லத்தரசு மரபினர் ஆவார்கள்.  


நரிய பட்டி ஊருக்கு மிகப்பெரிய வழி காட்டியாக இருந்தவர்  மிராஸ்தாரர் சுப்பிரமணியண் வல்லத்தரசு.




அருள்மிகு ஸ்ரீ ஏகௌரியம்மன் திருக்கோவில்,  வல்லம்


ஊர்: வல்லம், மகாகாளிவனம்
மூலவர்: ஏகௌரியம்மன்/வல்லத்துக்காளி-8கரங்கள்
பிறசன்னதிகள்: மதுரைவீரன், கருப்புசாமி, முருகன்










கி.பி.850 இல் விஜயாலய சோழன் தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டே பிற்காலச் சோழப் பேரரசை நிறுவினான். கி.பி.1279 வரை தொடர்ந்த சோழராட்சிக் காலம் முழுவதும் வல்லம் அவர்களது கோநகரமாகவே விளங்கியது. முதற்பாரந்தகச் சோழனின் நாற்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.947 இல்) அப்பேரரசனின் அலுவலகர்களில் ஒருவனான அனந்தன்காரி எனும் பராந்தக முத்தரையன் வல்லதுப் பட்டராகிக்கு (ஏகௌரி அம்மனுக்கு) வழங்கிய கொடை பற்றிய ஏகௌரி அம்மன் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று எடுத்துக் கூறுகிறான். ஏகௌரி அம்மன் கோவில் பண்டு "கரிகாற்சோழ மாகாளி கோவில்" எனவும் விஷ்ணு கோவில் "விக்கிரம சோழ விண்ணகரம்" எனவும் அழைக்கப் பெற்றதை அதிருக்கோவில்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.



வல்லப சோழன் காலத்தில் வழிபடப்பட்டு, கரிகாற் சோழ மன்னனால் கரிகாற் சோழ மாகாளி என்றும், பராந்தக சோழனால் வல்லத்துப் பட்டாரகி என்றும், இராஜ ராஜ சோழனால் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என்றும் அழைக்கப்பட்டு வந்தவள். சோழ மன்னர்கள் அரசு சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், வெற்றி வாகை சூட போர்க்களம் செல்லும் போதும் இந்த தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கம்.








தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்களில், அம்மன்னன் திருவிளக்கு தானாங்களுக்காக வல்லத்தில் இருந்து இடையர்களிடம் கால்நடைச் செல்வங்களை வழங்கி இருந்தான் என்ற செய்தி கூறப் பெற்றுள்ளது. இதுபோன்றே வல்லம் ஏகௌரி அம்மன் கோயிலுள்ள முதலாம் இராஜ ராஜசோழனின் ஆறாவது ஆண்டு (கி.பி.991) கல்வெட்டில் விண்ணனேரி கைத்தலைப்பூசல் நங்கைக்கு அளித்த நிலக்கொடை பற்றி கூறுகிறது. அப்பேரரசன் காலத்தில் "கைத்தலைப் பூசல் நங்கை " என அழைக்கப் பெற்றவளே தற்போதைய ஏகௌரி (ஏகவீ ரி) அம்மன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


வல்லம் மற்றும் ஆலக்குடி வாழ் கள்ளர்களுக்கும் இக்கோவிலில் மரியாதை வழங்கப்படுகிறது.



குலசேகர தேவரின் கல்வெட்டில் முன்பு இவ்வூரில் நிகழாத ஒரு விழாவினை ஆடி மாதந்தோறும் பெருந்திருவிழாவாகக் கொண்டாடவும், இறைவனின் திருவுருவத்தை வீதி உலா கொண்டு வருவதற்கும், மற்ற செலவுகளுக்குமாக அளிக்கப்பட்ட அதற்கொடைப்பற்றி விவரிக்கின்றது. வல்லத்து சிவாலயத்தின் பெயர் குலசேகரமுடைய நயினார் கோவில் என்று கூறப்பெற்றுள்ளது. இப்பெயர் முன்பு இருந்த கோயிலின் பெயரான கரிகாற் சோழீஸ்வரமுடையார் என்பதை மாற்றிவிட்டு பாண்டிய மன்னன் பெயரில் குலசேகரமுடைய நயினார் கோவில் என்ற புதிய பெயர் சுட்டப்பெற்றிருக்க வேண்டும் எனக் கருதமுடிகிறது.


முதல் பராந்தக சோழனின் நாற்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி. 947ல்) அப்பேரரசனின் அலுவலர்களில் ஒருவனான அனந்தன்காரி எனும் பராந்தக முத்தரையன் வல்லத்து பட்டாரிகைக்கு வழங்கிய கொடை பற்றி கூறப்பெற்றுள்ளது.


செவ்வப்ப நாயக்கர் கி.பி.1535 தஞ்சைக்கு அரசரானார். இவர் அரசாளும் போது இவரது மகன் அச்சுதப்ப நாயக்கரும் இளவரசராக இணைந்து அரசுச் செலுத்தினர். இவர்களுக்குப் பிறகு அச்சுதப்ப நாயக்கரின் மகனான இரகுநாத நாயக்கரும் தொடர்ந்து அவரது மகனான விஜயராகவ நாயக்கரும் கி.பி.1675 வரை ஆட்சி செய்தனர்.


இவர்கள் ஆட்சி முழுவதும் வல்லம் நகரம் மிகப் சிறந்த முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது. இவர்களது முக்கிய கோட்டை கருவூலம் மாளிகைகள் ஆகியவை அகழி சூழ்ந்த வல்லம் கோட்டைக்குள்ளேயே இருந்தன. பிஜப்பூர் தளபதிகளான மராத்தியர் சாகஜி, மற்றும் முகம்மதுகான் என்கிற முல்லாவும் தஞ்சையை சூரையாடுகிறார்கள். அப்போது ஆண்ட விஜயராகவ நாயக்கர் காட்டில் சென்று மறைந்து கொள்கிறார்.

அப்போது வல்லம் கோட்டையிலிருந்த கருவூலத்தை கள்ளர்கள் காட்டுப்பகுதியில் வைத்து காக்கின்றனர். இதனால் முல்லாவுக்கு பெருத்த ஏமாற்றம்‌. இவர்கள் சென்ற பிறகு கருவூலத்தை மீண்டும் வல்லம் கோட்டையில் விஜயராகவ நாயக்க மன்னரிடம் அளித்தனர் கள்ளர்கள். (La Mission de Madura c.Vol.3.Pg:119).







தஞ்சை வந்த முகலாய பெரும் படைக்கு அப்போது தஞ்சை ஆண்ட நாயக்கர் படையை விட கள்ளர் படைப்பற்றை பார்த்து அஞ்சி நிலைகுலைந்து போகிறார்கள்.



விசங்கி நாடு புதுக்கோட்டையின் வடக்கில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் இருந்து 10 மைல் வடக்கில் தொடங்கி வடக்கில் வல்லம் மற்றும் செங்கிப்பட்டி வரை நீண்டுள்ளது. விசங்கி நாடு பல உள் நாடுகளை கொண்டது.


ஜல்லிக்கட்டு வல்லத்து மாடுகள் " பசுக்கிடைமாடு" என அழைக்கப்பட்டுள்ளது.








'வல்லத்துக் கோட்டை விழுந்தால் தஞ்சாவூர்க் கோட்டை தானே விழும்' என்று பழமொழிக்கு எற்ப இருக் கோட்டைகளும் ஒருவர் ஆட்சியிலேயே இருந்துள்ளது. சங்க காலம் தொடங்கி இன்று வரை பல வகையில் சிறப்பாக விளங்கியுள்ளது வல்லம். ஆனால் வல்லம் கோட்டையை பற்றி வரைபடங்களோ அல்லது மற்ற குறிப்போ தொல்லியல் தடயங்களாக கிடைக்காதது ஓர் குறையே. வல்லத்துக் கோட்டையை பற்றி ஆங்கிலேயர்கள் 1906ல் எழுதிய குறிப்பின் படி 780 கெஜம் [714 மீட்டர்] நீளமாகமும் 520 கெஜம் [475மீட்டர்] அகலாகமாகவும் கோட்டை முட்டை வடிவில் இருந்ததாகவும், வடகிழக்கில் சிறிய மதில் இருப்பதாகவும் மற்ற இடங்களில் மதில்கள் இல்லை என்றும், அகழி பல இடங்களில் நன்றாக இருப்பதாகவும் தெரிகிறது. கோட்டையிருந்து அழிந்த பகுதியில் தற்போது பெரியார் கல்விக்கூடமுள்ளது.












பழங்கால முருகன் கோவில், இங்கிருந்து வல்லம்கோட்டைக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கூறுகிறார்கள்.

சுரங்கத்தினுள்ளே இருந்த முருகன் திருவுருவ சிலையை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்து வருகிறார்கள்.
சுரங்கத்தையும், சிலையின் வடிவமைப்பையும் காண்கையிலே இதன் பழைமை புலப்படுகிறது.

இடம்:- தச்சன்குறிச்சி,செங்கிப்பட்டி (கொற்கைநாடு







































கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்