செவ்வாய், 1 அக்டோபர், 2019

தஞ்சிராயர் / தஞ்சைராயர் வரலாறு

தஞ்சை + அரையர் - தஞ்சையரையர் - தஞ்சைராயர் - தஞ்சிராயர். 

செந்தலையில் வாழ்ந்தவரும், பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசர்களாய் அவர்களுக்குத் துணையாய்ப் பாண்டியர்களோடு போரிட்டு, வந்தவரும் ஆகிய முத்தரையர்ளன்பார், 'தஞ்சைக்கோன்’ தஞ்சை நற்புகழாளன்’ 'தஞ்சைராயர்' என்று பட்டப் பெயர்களை மேற்கொண் டிருந்தனர். அதனால், செந்தலையைத் தம் தலைநகராகக் கொண்டிருப்பினும், முத்தரையர் தஞ்சையையும் கைப்பற்றி ஆண்டு வந்தனர்.

செந்தலை தூன் கல்வெட்டில் வல்லகோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர் என்று பொறிக்கபட்டுள்ளது. வல்லத்தரையர், தஞ்சைராயர், முத்தரையர், செம்பியமுத்தரையர் என்ற கள்ளர் குடியினர், இன்றும் தஞ்சை வல்லம், செந்தலை, தஞ்சை பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.


தஞ்சாவூர் காசவளநாடு என்ற கள்ளர் நாட்டில் வரும் சூரியம்பட்டி முழுவதும்,  சிங்கவளநாடு என்ற கள்ளர் நாட்டில் வரும் தளவாபாளையம் பகுதியிலும்,     தஞ்சிராயர் பட்டம் உள்ளவர்களே உள்ளனர். மகாதேவப்பட்டிணம் ஊரில்   தஞ்சிராயர் தெரு பகுதியிலும், மேலும் சோழ மண்டலத்தில் பல பகுதியில் வாழ்கின்றனர்.



கூடலூர் மிராசுதார் து. முத்துக்குமாரசாமித் தஞ்சைராயர் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வளர்ச்சிக்கு துணைநின்றவர்.




தஞ்சை பூக்காரத்தெருவில் அமைந்துள்ள கணேசா வித்யா சாலா பள்ளி இராசராசன்பெருமன்றதிற்க்கு நன்கொடையளித்து திறந்துவைத்தவர்கள் ஒருவர் தங்கவேல் தஞ்சிராயர்.




பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர்கள் பல்லவராய சுதந்திர போராட்ட வீரர்கள்  பல்லவராயர் கள்ளர் சாதி  ( தமிழக அரசு) தமிழக வரலாறு [பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுக...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்