புதன், 19 பிப்ரவரி, 2025

மன்னான் சின்னாண்டி கதைப்பாடல்




வெள்ளலூர் நாட்டு அரசனான முதற்சோனை எனப் படுபவன் சிறுகுடி நாட்டு அரசர்களான மூளிநல்லவீரப்பன் , முனையாளி அம்பலம் , முளிச்ச குட்டி அம்பலம் , மூளி குட்டி அம்பலம் , மூத்தண்ண வாகனம் , பெரியட வாகனம் , சின்னட வாகனம் என்னும் எழுவரோடு பிறந்த எழுவக்கா நாச்சியா என்பவளை மணம் செய்து கொண்டான் . திருமணச் சீராகத் தங்களுடைய தங்கைக்கு அந்த ஏழு அண்ணன்மார்களும் சிறிது நிலத்தினைத் தந்தனர் . பின்னர் அத்தம்பதியினர் காராள புறந்த கருத்தவனம் என்ற பெண் குழந்தையையும் பேப்பெருமாள் , சின்னாண்டி என்ற இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர் . அத்தகு சூழ்நிலையில் தன் மைத்துனர்கள் தன் மனைவிக்குச் சீதனமாக அளித்த நிலத்தினை உழுது பயிர் செய்ய மன்னவன் முதற் சோனை சென்றான் . எழுவரின் மனைவியரும் அதனை மறுத்துக் கணவன்மாரைத் தூண்டிவிட்டனர் . இளைய மைத்துனனால் முதற்சோனை கொலை செய்யப்பட்டான் , அதனையறிந்த எழுவக்கா நாச்சியாளும் கணவனோடு உயிர் விட்டாள் . காராளபுறந்த கருத்தவனத்தின் தலையில் குடும்பச் சுமை முழுவதும் விழுந்தது . அவள் தன்னுடைய உடன்பிறந்த தம்பியர் இருவரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள் . தங்கள் குடும்பம் அழிவதற்குக் காரணமாயிருந்த தங்கள் மாமன் குடும்பத்தோடு சின்னாண்டி பல்வேறு சூழல்களில் போரிட்டு வென்று வந்தான் . இறுதியாக நடந்த போரில் அவனும் அவனுடைய அக்காள் காராள புறந்த கருத்தவனமும் அழகர் கோவில் மலையில் கல்லாகச் சமைந்தனர் . சின்னாண்டி நடத்திய இறுதிப் போரில் சிறுகுடி நாட்டு அரசர்களான எழுவரும் கட்டபொம்மன் , ஊமைத்துரை ஆகியோரின் துணையுடன் சின்னாண்டியுடன் மோதியதாகத் தெரிகிறது. கதையின் இறுதிக் கட்டமாகப் பேப்பெருமாள் தன்னுடைய மாமன் குடும்பத்தை அழித்துத் தன் உடன் பிறந்தவர்களின் அருகிலேயே கல்லாகச் சமைந்ததாகக் கதைப்பாடல் காட்டுகின்ற கதைப்பாடல் பிற விவரங்கள்

இந்தக் கதைப்பாடல் இராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் எனும் ஊரைச் சேர்ந்த ஆடு, மாடு மேய்த்து வாழும் திரு . சண்முகம் என்பவரால் வாய்மொழி வழக்கில் பாடக் கேட்டுப் பதிப்பானதாகத் தெரிகிறது . இக்கதை உண்மையாக நடந்த நிகழ்வெனவும் கதையைப் பாடியவர் கருத்துத் தெரிவித்ததும் நூலில் கூறப்பட்டுள்ளது . அதற்குச் சான்றாக அழகர்மலையில் காராளபுறந்த கருத்தவனம் , பேப்பெருமாள் , சின்னாண்டி ஆகியோர் சமைந்த இடத்திலுள்ள கல்லிற்கு இன்றும் வழிபாடு நடப்பது சுட்டப்பட்டுள்ளது .

கதை நிகழ்ச்சியுடன் கட்டபொம்மன் , ஊமைத்துரை ஆகியோர் இணைத்துப் பேசப்படுவதால் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல் இக்கதையானது முழுவடிவம் பெற்று மக்களிடையே வழங்கப்பெற்றிருத்தல் வேண்டும் எனத் தெரிகின்றது .

‘மன்னவன் முதற் சோண கதை என்பது கதைப்பாடலைப் பாடியவர் கூறிய தலைப்பு என அறிய வருகின்றது . மன்னான் சின்னாண்டியினால் இக்கதையின் பெரும்பகுதி இயங்கு வதால் தஞ்சை மாவட்டத்தின் சில இடங்களில் மன்னான் சின்னாண்டி கதை என்றும் பெயர் வழங்குவதும் தெரிகின்றது . மன்னான் என்பது மன்னன் என்பதன் நீட்டிய பேச்சு வழக்கு வடிவாகலாம் . இக்கதைப்பாடல் காட்டும் கட்டுப்பாட்டு மீறல்

இக்கதைப்பாடலின் கதைக்கருவானது அக்காலகட்டச் சமுதாயத்தில் இருந்த பெண்களின் சொத்துரிமையை மையமாகக் கொண்டுள்ளது . சமுதாயத்தில் பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லாத நிலை இருந்த போதிலும் அப் பெண்ணின் உடன்பிறந்தோர் எழுவரும் தங்கள் சொத்தில் ஒரு சிறுபங்கைத் தங்கள் தங்கைக்கு மனமுவந்து அளித்தனர் . ஆனால் அதனை அந்தக் காலகட்டப்பெண் சமுதாயமே ஏற்கவில்லை, என்பதை அத்தங்கையின் அண்ணிமார்களின் எதிர்ப்பு வெளிப்படுத்துகின்றது. மனைவிக்கு அளிக்கப்பட்ட சொத்துத் தகராறில் கணவன் உயிரே பலிவாங்கப்பட்டது . கணவனாகிய மன்னவன் முதற் சோனையைக் கொலை செய்வதுடன் பெண் சொத்துரிமைப் போராட்டம் நின்று விடவில்லை . அதற்கொடுக்கும் வகையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த காராள புறந்த கருத்தவனத்தின் மூலம் போராட்டம் தொடர்கிறது . இத்தகு சொத்துரிமைப் போராட்டத்தில் எவருக்கும் வெற்றி கிட்டாமல் இரு குடும்பங்களும் அழிந்துவிடுகின்றன . ஆக இவ்வாறாகச் சொத்துரிமைப் போராட்டம்

முடிவு காணப்பெறாத ஒரு தொடர் போராட்டமாக அமைவதைக் கதைப்பாடல் தெளிவுபடுத்துகின்றது .

அண்ணன்மார்கள் தங்கள் தங்கைக்கு நிலம் எழுதி வைக்க வேண்டும் என்று திட்டம் செய்ததைக் கதைப்பாடல் கீழ்க்காணுமாறு கூறுகின்றது .

எல்லாத்துக்கும் இளையவன் சொல்லுவானே அண்ணன்ணேன் நம்ம தங்கச்சிக்கு ஆடுகுடுத்தா அழிஞ்சு போகும் மாடு குடுத்தா அழிஞ்சு

போகும் கனத்த பணங்காசி நகய்கள் குடுத்தா அழிஞ்சுபோகும் - நம் வாணி கருப்பணசுவாமி வல்லடியான் ஈஸ்வரன் கோவிலுக்குத் தென்பாங்கு கூட்டப்புளி ஊரணிக்கு

மேல்பாங்கு அருகுவெத்திப் பிஞ்சையங்கே அம்பது மாகாணி

குறுக்கமும் நம்பதங்கச்சிக்கு செப்புப்பட்டயம் எழுதிக்குடுப்பமுன்னு

(ப . 23)

செப்புப் பட்டயம் எழுதிக் கொடுப்பதாகச் சொன்னது போல் எழுதியும் கொடுத்ததைக் கதைப்பாடல் காட்டுகின்றது .

வாணி கருப்பணசுவாமி வல்லடியான் ஈஸ்வரன் கோவிலுக்குத் தென்பாங்கு கூட்டப்புளி ஊரணிக்கு

மேல்பாங்கு அருகுவெத்தி பிஞ்சையங்கே அந்த அம்பது மாகாணி

குறுக்கமும் அப்ப செப்புப்பட்டயம் எழுதிலங்கே குடுத்தொடனே முதச்சோன வாங்கிகிட்டு வந்திலங்கே வெள்ளலூரு நாடு திலும் பிதான் வந்திலங்கே அதயுந்தானும் இருப்புப் பொட்டி கீழ பூட்டிமுக

வைத்துவிட்டு ( ப . 24


இவ்வாறு நில உரிமையைச் செப்புப்பட்டயத்தில் எழுதிக் கொடுத்தபின்னும் சொத்துரிமை இல்லை என மறுத்துப் பேசும் நிலை இருந்தது . முதற் சோனை தனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை உழுது அதில் எள்ளும் பருத்தியும் விதைத்துக் கொண்டிருப்பதைத் தண்ணீர் எடுக்க வந்த ஏழு அண்ணன் மாரின் மனைவியரும் பார்த்து அதைத் தடுக்குமாறு அண்ணன் மாரை ஏவிவிட்டனர் .


அப்போது சொல்லுவாளே ஏழுநல்ல பேர்களும் போயி உங்களாலே முடியலன்னு சொல்லுங்க நாங்க உடுத்தும் சீலய நீங்க உடுத்தி நாங்க புடிக்கும் அகப்பய நீங்க புடிங்க நாங்கபோயி முதச்சோனய அடிச்சி விரட்டி வாறம் இல்லையின்னு சொன்னாக்கா அவன அடிச்சி விரட்டி


வாங்கன்னு ( ப . 28 ) கணவன்மாரைத் தூண்டிவிட்டனர் என்பது கதைப்பாடல் வரிகளாகும் .


உழுது விதைக்கும் இடத்திற்கு வந்த அண்ணன்மாரின் வஞ்சகத்தை அறியாமல் வெற்றிலை போடுமாறு வேண்டிக் கொள்கிறார் முதற்சோனை .

வெள்ளலூரு வெள்ளப்பாக்க விதம்போல அள்ளிவச்சி கீழூரு வெத்திலய கிழிச்சி மடிச்சிலங்கே

மேலூரு சுண்ணாம்ப மெதுவாலே தான்தடவி ( ப . 29 ) அனைவரும் வெற்றிலையைத் தின்று கொண்டு இருக்கும்போது முதற் சோனையின் அருகே உட்காரச் சொல்லியும் உட்காராமல் நின்று கொண்டிருந்த இளைய மைத்துனன் முதற் சோனையின் தலையை அறுத்துக் கொன்றான் .

சொத்துரிமையை அளித்தவர்களே அவ்வுரிமையை அடைய முடியாமல் தடுத்துக் கொலை செய்தது தெரிய வருகின்றது . இந்த உரிமைப் போராட்டம் அடுத்த தலை முறையிலும் தொடர்கிறது . முதற் சோனையின் கூற்றின் வழி இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது .

எத்தனை காலமடா என்னுடைய தலய அறுக்க வேணுமுன்னு நினச்சி இருந்தியெ என்னுடையதல ஒருதல போயிருச்சினு கொஞ்சம்

நெஞ்சத்திலே எண்ணாதீர் காணிக்குப் புறந்திருக்கு மாணிக்கக் கன்டுகடா என்று மங்கே சொல்லிலங்கே முதச்சோனக்கிப் பிராணன்

அடங்கிச்சங்கே ( ப . 29 )

மாணிக்கக் கன்றுகள் என்று தன் மகன்களான பேப் பெருமாள் , சின்னாண்டியைக் குறிப்பிட்டான் முதற்சோனை தன் தந்தை கொலைக்குப் பழிவாங்கவும் தங்கள் தாய்க்குத் தரப்பட்ட நில உரிமையைத் திரும்பப்பெறவும் பேப்பெருமாளும் சின்னாண்டியும் மாமன்மாருடன் தொடர்ந்து போராட்டம் நடத்தினர் . மாமன்மார் கயத்தாறு சென்று கட்டபொம்மன் , ஊமைத்துரையிடம் படை உதவி கேட்டனர் .

அப்ப ஏழுதலமக்காரனும் புறப்பட்டானே அப்போதும் கட்டபொம்மன் ஊமத்தொர எடத்திலே கவுத்தாத்துக்குத் தெக்கேயங்கே அப்போது வந்துதானும் ஊமத்தொர எடம் வந்துதானும் எட்டோட எட்டுநாளா காலுலயும் விழுந்துதானும் எங்கள சின்னாண்டி தானுமங்கே வாழவிட மாட்டேன்குறான் எங்களத் தானும் அவன் இருக்க வேணும் இல்லையினா நாங்க இருக்க வேணும் என்றுமங்கே சொல்லிலங்கே இங்கே எட்டுநாளா காலுல விழுந்துமுக கிடந்திலங்கே எட்டாவது நாளுத்தானும் கட்டபொம்மன் ஊமத்தொர

தானும் அப்ப அவுகளுடைய பட்டாளத்த அனுப்பிச்சி வச்சிலங்கே

( ப. 75-76)

என உள்ளது . கட்டபொம்மன் படையுடன் சின்னாண்டி நேருக்கு நேர் மோதாமல் வாணி கருப்பணசுவாமி வல்லடியான் ஈஸ்வரனை வேண்டிக் கொண்டு தங்களுடைய வெள்ளலூரு அரண்மனை இடிந்து தகர்ந்து போகவும் , தான் கல்லாகச் சமையவும் வேண்டிக் கொள்ள அவ்வாறே நடந்ததாகக் கதை அமைந்துள்ளது ( ப . 77 ) . பேப்பெருமாள் மாமன்மார் குடும்பத்தைக் கொலை செய்து பழிதீர்த்துக் கொண்டு தானும் கல்லாகச் சமைந்தார் ( ப . 79 ) .

பெண்ணுக்குச் சொத்துரிமை அளிக்கப்பட்டாலும் அதை அந்தத் தலைமுறையிலேயே அனுபவிக்கவிடாமல் அளித்தவர்களே தடுத்ததும் , அடுத்த தலைமுறையிலும் இப்போராட்டம் தொடர்ந்ததும் இதனால் இரு குடும்பங்களுமே அழிந்ததும் இக்கதைப்பாடலில் காட்டப்பட்டுள்ளன . தன் தாய்க்கு அளிக்கப்பட்ட சொத்துரிமை பறிக்கப்பட்டதுடன் தனால் தன் தந்தை கொலை செய்யப்பட்டதையும் சிறுவர்களான தன் தம்பிகளுக்கு எடுத்துக்கூறி மீண்டும் அச்சொத்துரிமையைப் பெறுவதற்கு அக்கா காராள புறந்த கருத்தவனம் போராடினாள் ( ப . 41) . பெண்ணிய வழியிலான கட்டுப்பாட்டு மீறலை நிகழ்த்தியவளாக இவள் காணப்படு கின்றாள் . தான் நேரடியாகக் களத்தில் இறங்காவிட்டாலும் தன் தம்பிகளைக் கொண்டு பெண்வழிச் சொத்தை அடையப் பாடுபட்டாள் . தன் முயற்சியில் தோல்வியையே அடைந்தாள் எனினும் பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வு ஏற்பட இவளுடைய வரலாற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது .

காராள புறந்த கருத்தவனம் என்ற இவளது பெயரில் உள்ள கருத்தவனம் ” என்பது இயற்பெயராக இருத்தல் வேண்டும் . காராள புறந்த என்பது

இயற்பெயரின் முன் வந்த அடைமொழியாகத் தெரிகின்றது . காராளப் பிறந்த என்பதன் பேச்சு வழக்குச் சொல்லாக இது இருத்தல் வேண்டும் . கார் ஆள்வதற்குப் பிறந்த என்பது இதன் சொற்பிரிப்பாகும் . கார் என்பதற்குக் கார் நெல் , பசுமை எனப் பொருள் கூறுகிறது தமிழகராதி . இவ்வாறு விளை தானியம் மற்றும் வளமையுட தொடர்புடைய இவளது பெயரின் முன் வரும் அடைமொழி இவள் இழந்த நிலத்தை மீட்டும் பெறப் பிறந்தவள் அல்லது போராடியவள் என்பதால் பெற்ற பெயராக இருக்கலாம் . எவ்வாறோ தங்களுக்கென உரிமையாக்கப்பட்ட சொத்தைப் பெற ஒரு பெண் போராடியதை மையக் கருத்தாகக் கொண்டு இக்கதைப்பாடல் திகழ்கிறது என்பது சிறப்பாகக் குறிக்கத்தக்க தாகும் . மன்னான் சின்னாண்டித் தேவர் கதைப்பாடலில் கட்டுப்பாட்டு மீறல்

இந்தக் கதைப்பாடலிலும் பெண் வழியிலான சொத்துரிமையை அடைவதில் நடக்கும் தொடர் போராட்டம் சிறப்புற எடுத்துக்காட்டப்பட்டுள்ளது . தன் அக்காள் அழகம்மாள் வீட்டிற்குச் சென்றிருந்த மன்னான் சின்னாண்டியையு தாய் கருப்பாயம்மாவையும் அக்காள் அழகம்மாள் அவமானப் படுத்தி அனுப்பினாள் . இதற்கு என்ன காரணம் என்பதைக் கதைப்பாடல் தெளிவாக எடுத்துக் கூறவில்லை . இருகாரணங்கள் இருக்கலாம் .


ஒன்று : மன்னான் சின்னாண்டியை இறக்குந் தறுவாயி லிருந்த அவன் தகப்பனார் அழைத்துப் பன்னிரண்டு சீரும் அக்கா அழகம்மாளுக்குப் பாங்குடன் தரவேண்டும் ( ப. 16 ) என்று கூறினார் . இந்தச் சூழலிலிருந்துதான் கதை தொடங்குகிறது . ஆனால் அப்போது ஏழு வயதுச் சிறுவனாக இருந்த மன்னான் சின்னாண்டி தந்தானா ? என்பது பற்றிக் கதைப்பாடலில் குறிப்பு இல்லை . ஒருவேளை தனக்கு உரிய சீரைத் ( சீதனம் ) தன் பெற்றவர்கள் தரவில்லை என்ற கோபம் அழகம்மாளுக்கு இருந்ததால் அவள் தன் வீடு வந்த தாய் , தம்பியை அவமானப்படுத்தியிருக்கலாம் .


இரண்டாவது : தனக்குரிய சீரைப்பெற்று வர மன்னான் சின்னாண்டி தன் அக்கா , மாமா வீடு வந்ததாகக் கதை குறிப்பிடுகிறது . அது என்ன சீர் என்பது தெரியவில்லை. அது ஒருவேளை தன் தாய் வீட்டுச் சீதனமாக இருக்கக்கூடும் . மன்னான் சின்னாண்டியின் மாமன்மார் அவனுடைய தாயின் உடன் பிறந்தாராகலாம் . இக்கருத்தே மன்னான் சின்னாண்டி கதைப் பாடலில் காணப்படுவதால் அதனை இங்கு ஒப்பு நோக்கலாம் . தாய்வீட்டுச் சீதனம் பெற வந்தவனுக்கு அதைத்தர மறுத்து இது தான் உன்சீர் என்று அவர்கள் கொடுத்ததாகக் கதைப்பாடல் கூறுவதாவது : மன்னாஞ் சின்னாண்டி தான்வந்து நம்ம வீட்டுல


ஒக்காந்திருக்கான் அவனுடைய சீரத்தான குடுத்து விடுங்கன்டு சொல்லும்போது என்ன சீரண்டு தன்னுடைய பொண்டாட்டி கேக்கும்போது பன்னிரண்டு வருஷ காலத்துக்கு முன்னவௌஞ்ச பட்ட கேப்பயில் ஒருபடியும் குலுக்கக் கடியில் இருக்கிற குண்டாங் கல்லுல ஒருகல்லும் ஓட்டத் திருகையில் ஒரு


திருகையும் ஓட்ட ஒலமுட்டியில ஒரு ஒல முட்டியும் பச்ச வாழத்தண்டும் பட்டமிளகாயும் குடுத்தா ஓட்டத் திருகையில போட்டு ஒன்னு ரெண்டாக கேப்பயத் திரிச்சு கூழக்காச்சிக் குடிச்சிட்டு அவன் போகட்டுமம்மா போகட்டுமம்மா ( ப . 22-23)
















சனி, 11 ஜனவரி, 2025

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - 2


அத்திரியன்  



சாமந்தர் 

சாமந்தர் என்றால்  அமைச்சர், படைத்தலைவர், அரச தலைவர்.



தோளர் பட்டம் :

வத்தனாக்கோட்டை பகுதியில் தோளர் என்று பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர். சங்க இலக்கிய பாடல்களில் 

" நெற்றியிற் கண்ணர் காற்பெருக் தோளர் - நீறணி மேனியர் அனேகர்"  பெரிய தோளர்- தோள்களைக் கொண்டவர்களுக்கும்.

"மைகொள் கண்டர்எண் தோளர்" கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும்  


தமிழ் வீர மறவர்கள் கல்லெனத் திரண்ட தோளர்; கட்டம்மைந்த மேனியர்; முறுக்கு மீசையர்; தருக்கு மொழியினர்; வறிய நடையினர்; சறிய விழியினர் என்று வீரர்கள் போற்றப்படுகின்றனர்.

தோளர் என்பது வலிமையான தோள்களை உடையவர் என்ற பொருளில் அமைந்த பட்டம் ஆகும்.



கீருடையார் - பட்டம் :


உடையான் என்றால் உடையவன் என்று பொருள். கீர் உடையான் என்றால்

கீரம் என்பதற்குச் சொல் ' என்பது பொருள் மேலும் சீரம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பால் என்பது பொருள். அச்சொல் தமிழில் கீரம்" என்று கூறப்படும். பால் வளம் உடையவர் அல்லது சொல் வளம் உடையவர் என்ற பொருளை தருவது கீருடையான்.

தமிழ் காத்த புலவரே நக்கீரர் என்பவர். . நக்கீரம் என்ப தற்கு நல்ல சொல் என்பது பொருள். இவர் நல்ல சொற்களை அமைத்துப் பாட்டு இயற்று வதில் வல்லவர். ஆதலின் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர்.  நக்கீரம் என்பதற்கு இனிய பால் என்பது பொருள். நக்கீரர் இனிய பாலைப் போன்ற சுவையான பாட்டுக்களை இயற்றும் புலவர். ஆதலால் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர். 

கீரனூர், கீரமங்கலம், கீரன்குடி, எனப் பெயர் கொண்டு பல ஊர்கள் சிறந்து இன்றும் விளங்குகின்றன


மன்னசிங்காரியர் அல்லது மன்னசிங்காரி : 

மன்னசிங்கரி யர் (எ) மன்னசிங்காரியர்

மன்னசிங்கரி = மன்ன (மன்னன்) + சிங்கரி ( சிங்கம்)

"மன்ன எம்பிரான் வருக என்எனைமாலும் நான்முகத் தொருவன்"

மன்ன - மன்னனே, எம்பிரான் - எம் தலைவனே, எனை வருக என் - என்னை வருக என்பாய்; மாலும் நான்முகத்து ஒருவனும் - திருமாலும் நான்கு திருமுகங்களுடைய ஒப்பற்றவனாகிய பிரமனும்.

மிகப்பிரபலமான நரசிம்மர் தலம் சிங்கரி கோவில், வைணவ மடத்தின் முதல் ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. நரசிம்மர் மற்றோரு பெயர் சிங்கரி.


மன்னசிங்காரியர் - மன்னரில் சிங்கம் போன்றவர்கள் என்று பொருள்

அரையர்களில் சிங்கமங்கலத்தை அரசாக கொண்டு பல கள்ளர் அரையர்கள் வாழ்ந்துள்ளனர். மழவராயன், சிவலோகமுடையானான தெற்கிலரையன், ஆயிரவனான அயிலாளயன், வடக்கிலரையன் தேவன் சாந்தன் போன்றோர் கிபி13ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளனர். சோழர் வீழ்ச்சிக்கு பின்பு முறையே பாண்டிய பேரரசின் கட்டுப்பாடில் இருந்துள்ளனர்.

பட்டங்கட்டியார் :




பட்டஞ்சூடிய அதிகாரி, தலைவருக்குரிய பட்டம்.




மாவெட்டியார் :



மதயானைகளைத் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய் அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவி பயன்பட்டது. அந்த மத யானைகளை அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய மாவீரர்களுக்கு உடைய  பட்டம்  " மாவெட்டி " . அம்மாபேட்டை, அரசிவபுரம் கிராமத்தில் மாவெட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

கவிராயர் :


கவிராயர் என்ற பட்டம், அதற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால், கவிபாடுவதில் வல்லவர் என்பர். கல்வெட்டை கொஞ்சம் அலசியதில் அவர் வீட்டுக்கு அருகேயுள் நாடு பெயர் கவிர்நாடு, கவிர்நாட்ரயர் மருவி கவிராயராக மாறிவிட்டது - ஆய்வு . திரு. யாஊயாகே பார்த்தி

அச்சுதபண்டாரம் :

கள்ளர்களின் அச்சுதபண்டாரம் என்ற பட்டம் அரிசி கிடங்கின் பாதுகாவலர்களின் பட்டம் ஆகும். பண்டைய காலங்களில் கருவூலம் காப்பவர்களின் பட்டமாக பண்டாரத்தார் பட்டம்  இருந்தன.

பண்டு என்றால் பொருள். தஞ்சை சோழர்கால சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர்.


அச்சுதக் களப்பாளன், அச்சுத விக்கிரந்தன், அச்சுத ராயன் என்ற பெயருடைய மன்னர்கள் வாழ்த்திருந்தாலும் கள்ளர்களின் பட்டமான அச்சுதம் என்பது அரிசினை குறிப்பதற்காக அமைகிறது.


மங்கல அச்சுதம் - மங்கலமாகிய அறுகும் அரிசி யும்


பண்டாரம் என்பதற்கு அகராதி தரும் விளக்கம்


1. பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம்வழங்குகின்றான் (திருவாச. 36, 5). 


2. பொக்கிஷசாலை பண்டாரங்காமன் படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123).


3. Granary; களஞ்சியம் Cm. 


4. இராசாங்கம் பண்டாரத்தோட்டம்.


5. இனிய தின்பண்டம் (W.) 


6. பல்பண்டம். (சூடா.)


7. பூசாரிகள்பிரசாதமாகக்கொடுக்கும் மஞ்சள்நிறப்பொடி. (W.)  


8. பரதேசி 


9. சைவமடத்தைச் சார்ந்த துறவி 


10. பூக்கட்டி விற்கும் ஒருவகைச் சாதியார். 


சேனாதிபதி / சேனைவரையர் / சேனையாண்டார்


பன்னிரு சேனைகொண்ட பிரிவுக்குத் தலைமை தாங்கும் தலைவர்களை சேனைவரையர், சேனையாண்டார் என்பர். எதிரி நாட்டு சேனைகளை வென்றவர்கள் சேனைக்கொண்டார் என்ற பட்டத்தினை பெற்றனர். போர்ப்படைகளுக்குத் தலைமை தாங்கியவன் சேனாதிபதி என்ற பட்டம் பெற்றான்.

முதலாம் இராசேந்திரசோழன் சீனத்தரையன், சேனாதி, சேனாதிபதி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்

தனக்குக்கீழ் இருக்கும் சேனைகளுக்குத் தேவையான ஆயுதங்களை ஆயுதவாரியிடமிருந்து பெற்றுத்தரும் பொறுப்பு சேனைவரையரைச் சார்ந்தது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மூர்க்க விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி மறைந்த கோபால்சாமி சேனைக்கொண்டார் .


நேதாஜி சேனைக்கொண்டார்

இவரது மகன் தினத்தந்தியின் மூத்த பத்திரிகையாளருமான ஜி. நேதாஜி சேனைக்கொண்டார் ஆவார். . நேதாஜி சேனைக்கொண்டார் திருமணம் செய்து கொள்ளவில்லை.


ஆம்பல் அ. பழனியப்பன் சேனாதிபதி ( துணை ஆட்சியர் )


கள்ளர் இனபற்றாளர் சகோதரர் குமணன் சேனாதிபதியார் அவர்களின் அண்ணன் மகன் பிறப்பு சான்றிதழ் 



உஞ்சனை நாடு இன்றும் கள்ளர் நாட்டு பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாத்தூரான வீரபாண்டிய புரத்தில் வாழ்ந்த, காத்தான் நகர சேனாதிபதி என்பவன் உஞ்சனை கோயிலுக்கு நிலத்தை கொடையாக அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தின் ஒர் எல்லையாக தொண்டைமான் புன்செய் குறிக்கப்பட்டுள்ளது.



களத்தில்வென்றார் :






கள்ளர்களின் களத்தில்வென்றார் என்ற பட்டம் பற்றி நாம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை. இது எளியோருக்கும் புரியும்.





தஞ்சை திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள களத்தில்வென்றார் பேட்டை , கள்ளர்களின் களத்தில்வென்றார் வாழும் பகுதியாகும். பஞ்சாட்சர மும்மாலை அந்தாதி எழுதியவர் குழந்தைக் களத்தில்வென்றார். ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மற்றும்  தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் இலவச படிப்பகம் மற்றும் நூல் நிலையத்தின் மேற்பார்வையாளர் பொன்னண்ணா களத்தில்வென்றார், இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் தலைவர் ஏ.ஆர்.சாந்தமோகன் களத்தில்வென்றார் போன்றவர்கள், களத்தில்வென்றார் மரபினரில்  சிறப்புபெற்றவர்கள்.


மாவலியார் 



திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் கள்ளர்களின்    மாவலியார் மரபினர் வாழும் மாவலியார் தெரு உள்ளது.  மாவலியார் மரபினர்  தஞ்சையின் பலப்பகுதியில் செறிந்து வாழ்கின்றனர். தஞ்சை மாவட்ட விவசாய பிரிவுத் தலைவர் கணபதி மாவலியார், திருவையாறு தமிழிசை மன்றத் தலைவர் ம. வேலு மாவலியார் போன்ற  மாவலியார் மார்பினார்கள் இன்று சிறப்புடன் விளங்குகின்றனர்.

வரலாறில் மாவலியார் விளக்கமாக அமைவது 

மாவலான் : குதிரையேற்றத்தில் வல்லவன் , குதிரைப்பாகன், யானைப்பாகன்

மாவலி மன்னன் : மாவலி என்னும் மன்னன் உலகினைத் தூக்கும் ஆண்பன்றி போன்ற வலிமை படைத்தவன்

மாவலிபுரம் : மாமல்லபுரம், பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர்.

மாவலி வாணன் : மாவலி வாணர் என்னும் வாணர்குலத்து அரசர்கள். ஒரு காலத்தே தமிழ்நாட்டுச் சிற்றரசர்களாகச் சிறப்புற்று விளங்கினர், விசயநகர வேந்தர்கள் காலத்தில் இவர்களின் சிறப்பு, சில சமயங்களில் பாண்டியரைக் காட்டினும் கூடியிருந்ததும் உண்டு. புகழ்பெற்ற பாண்டியவரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன் என்ற விருதையும் சூடிக்கொண்டனர்   "வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம் அரசரணா மாவலிவா னா! (211) இதன்பாற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர்.

களுத்திரையார்




இலங்கையில் உஉறுகுணை இராச்சியத்தின் எல்லைகளாக வடக்கில் மகாவலி  ஆறும் வடமேற்கில் களு ஆறும் உள்ளன.  இராஜேந்திர சோழன் காலத்தில் இந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியை கைப்பற்றிய வீரமரபினர் களுத்திரையார் இன்று அழைக்கப்பட்டனர். புதுக்கோட்டை பகுதியில் களுத்திரையார் மரபினர் வாழ்ந்துவருகின்றனர். 

மாமுனைக்காரன் / மாமுனைக்காரர்



மாமுனைக்காரன் என்றால் (முனையில் நின்று தோற்கடிப்பவன்) இராசேந்திரன் சோழனால் வழங்கப்பட்ட பட்டம்.

தஞ்சை கள்ளர் நாடான தந்தி நாடு நத்தமாங்குடி நடுக்காட்டு அய்யன்கோவில், மதுரைவீரன், வீரராகவப்பெருமாள் தெய்வங்களை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் வாழ்ந்துவரும் மாரிமுத்து மாமனைக்காரர் பேரனும், லெட்சுமணன் மாமனைக்காரர் பேரனும் TVS.தாமு.தாமோதரன் (திமுகஇளைஞர்அணி)  குடும்பத்தார்கள்.




குங்கிலயர் 

குங்கிலயர்  பட்டம் உடைய கள்ளர்கள் சோழமண்டலத்தில் வாழ்கின்றனர். திருச்சி திருவெறும்பூர் பகுதியில் வாழ்கின்றனர்.




குங்கிலியக்கலய நாயனார் என்பவர், சைவ சமயத்தவர்கள் நாயன்மார்கள் எனப் போற்றும் 63 சிவ பக்தர்களுள் ஒருவர்.அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.


திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப்பண்ண முயன்றனன். இறைவர் நேர் நிற்கவில்லை. இதனைக் கேள்வியுற்ற கலயநாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் சேர்ந்தனர்.இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார். 



உலகளந்தான் / உலங்கத்தார்







உலங்கத்தார் என்ற கள்ளர் பட்டம் உலகளந்தான் என்பது மருவி வந்தது. மின்னாத்தூர், புதுக்கோட்டை பகுதியில் என்றும் வாழ்கின்றனர்.


உலகளந்தான் கோல் என்பது சோழர் காலத்திய ஓர் நில அளவைக்கான ஒரு கருவியாகும். நிலத்தை அளந்து நிலவரி விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது. சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குறவர் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணியாகும்.


உலகளந்தான் கோல் மூலம் அறியப்படும் சில அளவு விவரங்கள்


24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு

25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்

33”அங்குலம்(இஞ்ச்)ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.



இரும்பர் : 



"இரும்பனை வெண்தோடு மலைந்தோன் - சேரன். "





வாரைவளர் வாராப்பூர் நாட்டு இரும்பர் வகையரா: ( பாலடிகருப்பர் கோயில்: வாராப்பூர்) 





இரும்பாடி, சின்ன இரும்பாடி, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். கள்ளர்கள் வாழும் ஊராகும்.


தேட்டாளர் :


தேட்டாளர் என்பதற்கு செல்வ வசதியுடையவர் என்று பொருள்


வஞ்சித் தாழிசை : குறளடி (இரு சீர் அடி), நான்கு கொண்ட செய்யுள்கள் மூன்று ஒரு பொருள்மேல் அடுக்கி வருவது.

பாட்டாளர் நலம்பேணாத்
தேட்டாள ராய்வாழ்வார்
மாட்டாத மரமென்ன
நாட்டாரால் நகையுண்பர் 

(பாட்டாளர் = உழைப்பாளி; தேட்டாளர் = செல்வ வசதியர்; எனப் புலவர் குழந்தை இதற்குச் சான்று காட்டுகின்றார்.


வள்ளையார்

ஒரத்தநாடு கண்ணுகுடி மையம் பகுதியில் வள்ளையர் பட்டம் உடையவர்கள் வாழ்கின்றனர்.


காஞ்சிபுரம் திருப்போரூர் முருகப்பெருமானின் கோயிலுக்கு முன்னே இன்றும் வள்ளையர் ஓடை, சரவணப் பொய்கை எனும் பெயரில் வற்றாத தீர்த்தமாக உள்ளது.


வள்ளையார் பட்டம் வள்ளைக்கொடியோடு தொடர்புடையதாக இருக்கலாம். வள்ளைக்கொடி மிக விரைவாகவும், எளிதாகவும் வளர்கின்ற காரணத்தால் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மட்டுமல்லாது, உணவு தட்டுப்பாடு ஏற்படும் போர்காலத்தில்கூட  வள்ளைக்கீரை பயன்படுத்தப்பட்டுள்ளது. 



நாடாவி

கள்ளர்களில் நாடாள்வான், நாடன் என்ற பட்டங்களை போல் நாடாவி பட்டம் உடைய மரபினரும் உள்ளனர்.

‛நாடாவி‛ உற்சவத்திற்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் கிராமத்தில் விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட, பழமையான, புகழ்பெற்ற சஞ்சீவராயர் கோவில் இந்த பகுதியில் அமைந்துள்ளது; அதே போல், கைலாசநாதர் கோவிலும் உள்ளது. அதை தவிர, நடவாவி கிணறு என்று அழைக்கப்படும் பாதாள கிணறு இந்த பகுதியில் உள்ளதால் இந்த ஊர் மேலும் சிறப்பு பெற்று விளங்குகிறது. சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் இங்குள்ள ஆஞ்சனேயர் கோவில் மற்றும் நடவாவி கிணற்றுக்கு எழுந்தருள்வார்.நடவாவி திருவிழாவின் போது, இந்த பகுதி மக்களும் மற்றும் சுற்றுப்புற மக்களும் ஆயிரக்கணக்கில் அந்த கிராமத்தில் கூடுவர். 


பத்தாளன்

பத்தாளன்கோட்டை, பத்தாள பேட்டை, பத்தாளன்பட்டி என்னும் ஊர்களில் இன்றும் வாழ்கின்றனர். 




ஈழத்து வாழ்வும் வளமும் - K. Ganapathy Pillai - 1962 ல் எழுதிய நூலில், ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு சீவற்காரன் இருப்பான். அவனைப் 'பத்தாளன்” என்றழைப்பார் .
அவனே, அக்காணிக்குள் வரும் வருமானம் யாவற்றையும் எடுக்க அக்காணிக்காரனுக்கு உதவி செய் பவன் என்கிறார்.
    




மேலும் பல்லவராச்சியம் என்ற நூலில் கி.பி. 1344ல் இலங்கை வந்தார் இபின் பதுரதா, அவர் குறிப்பிலிருந்து கடற்பயணத்தில் ஒன்பதாம் நாளில் இலங்கைத் தீவின் பத்தளாகரையை அடைந்தோம். ஆரியச்சக்கரவர்த்தி என்னை வரும்படி ஆளனுப்பினான். நான் அவனது தலைநகரான பத்தளத்தில் அவனிடம் சென்றேன். இதில் பத்தளம் என்பது இபின் பதுரதா காலத்தில் ஆரியச்சக்கரவர்த்தி மன்னன் மார்த்தாண்ட சிங்கையாரியன் ஆட்சி செய்த புத்தாளம் ஆகும். ஆரியச்சக்கரவர்த்தி விருதுப்பெயர்கள் சிங்கையாரியன், சேதுக்காவலன், கங்கையாரியர், கூழங்கைச் சக்கரவர்த்தி, கோன் ஆகும்.





இன்று கள்ளரில் காணப்படும் பத்தாளர், கங்கைராயர், சிங்காரியர், சிங்காரிக்கர், கூழாக்கியார், கோன்றி என்ற பட்டங்கள் இவற்றுடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.



சாமுத்திரியர் :



சாமுத்திரியர் என்ற பட்டம் சேரநாட்டு போர் வெற்றியோடு தொடர்பு உடையதாக அமைகிறது. துளசி மகாநாடு துவாக்குடியில் சாமுத்திரியர் பட்டமுடைய கள்ளர் மரபினர் வாழ்ந்துவருகின்றனர்.


அரேபியாவில் உள்ள கடற்கரை நகரான ஜாபரில் அப்துல் ரஹ்மான் சாமுரி என்பவரின் கல்லறை உள்ளது. மலபாரைச் சேர்ந்த இஸ்லாமியராக மாறிய ஒரு இந்து அரசனின் கல்லறை அது என்று கூறப்படுகிறது. இக்கல்லறை உள்ளூர் மக்களால் மிகவும் மதிக்கப்படுகிறது. சாமுரி என்பது சாமுத்ரி என்பதன் திரிபாகும். சாமுத்ரி என்பது கேரள அரசர்களுக்கு வழங்கப்படும் பெயர் என்று மாப்பிள்ளாக்கள் கூறுகிறார்கள் என்கிறார் லோகான். (மலபார் மேனுவல் பக்கம் 196)



கோழிக்கோட்டை ஆண்டுவந்த சாமுத்திரியர், போர்த்துகீசியர்களுடனான போர் 16-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது

நாயக்கர்:
கள்ளரில் நாயக்கர் பட்டமுடையவர்கள் அரியலூர் நாயக்கர் பாளையம் ஜமீன் அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்கள். மேலும் தஞ்சாவூர் பகுதியில் பல ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

வில்லவராயர்



செயங்கொண்டார், சயங்கொண்டார் , ஜெயங்கொண்டப்பிரியர்




சாமுந்தர் 


சாமுந்தர்‌ என்றால்‌ (இந்தியில்‌) கடல்‌ என்றும்‌ பாரசீக மொழியில்‌ புராணங்களில்‌ வரும்‌ தவளை இனம்‌ என்றும்‌ பொருள்படும்‌. இச்சொல்‌ பாரசீகத்தில்‌ பிர்‌ என்று எழுதப்பட்டுள்ளது; இதற்கு கேணி என்று பொருள்‌.
வீரவல்லாளன்‌, வீரபாண்டியன்‌ ஆகிய இருவரையும்‌ பிர்‌ என்ற சொல்லினால்‌ குறிக்கும்‌ குஸ்ரு பின்னர்‌ பிர்துல்‌ என்பதை வீரபாண்டியனின்‌ தலைநகர்‌ எனக்‌ குறிப்பிடுகிறார்‌. 

செம்பொன்கொண்டார் 



அலங்காரப்பிரியர்





👇👇👇👇👇👇👇👇👇

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - 1


கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்