திங்கள், 16 ஆகஸ்ட், 2021

அரசு காவக்காரர்

 



கிபி பதினேழாம் நூற்றாண்டில் பீஜப்பூர்்சுல்தான்கள் தமிழ் நாடு மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் மதுரையை தாக்க முற்பட்டனர் இதனை அறிந்த திருமலை நாயக்கர் படை உதவிக்காக அவ்விடத்திய ராஜாக்கள்,  ராமநாதபுர மன்னர்,  சிவகங்கை பகுதியை சேர்ந்த ஒரு ஆட்சியாளர் மற்றும் பாளையக்காரர்களின் உதவியை நாடினார்.

இவர்கள் தவிர தன்னரசு நாடு, மேல் நாடு(பிறமலை கள்ளர் நாடு), கீழ் நாடு , வெள்ளூர் நாடு மற்றும் நாலுக்கோட்டை நாட்டு கள்ளர்களின் உதவியையும் நாடினார். இந்த கள்ளர்கள் "மதுரை அரசிற்கு காவக்காரர் என்று பெயர்" என குறிப்பிடப்பட்டுள்ளது

அதே போல் கிபி 1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலேய படை சிவகங்கையை தாக்கியது. இந்த போரில் மன்னர் முத்துவடுகநாதர் வஞ்சகமாக கொல்லப்பட்டார். முத்துவடுகநாதருக்காக படை உதவி அளித்த கள்ளர் நாடுகளை பற்றி குறிப்பிடும் போது "கள்ளற் சிலகுடியுங் காவலவ ராரும்" என கள்ளர் இனத்தை காவல்காரர்களாக குறிப்பிட்டுள்ளனர்.






ஆதாரம்:
1)கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம் புத்தகம் பக்கம் எண் 33

2) சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும் புத்தகம் பக்கம் எண் 122

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்