திங்கள், 16 ஆகஸ்ட், 2021

புலியை கொன்ற ஆண்டித் தேவர்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் திருமலை நாயக்கர் செப்பேடு.

மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் வேட்டை மார்க்கமாக நாகமலை புதுக்கோட்டை காட்டு பகுதியில் இருந்த போது, தொட்டியப்பட்டி சனத்தில் ஐந்து பேரை புலி கொன்று விடுகிறது.




அந்த புலியை அடக்க திருமலை நாயக்கர் சீமையெல்லாம் ஓலை அனுப்பினார். விக்கிரமங்கலம் கள்ளர் மரபை சேர்ந்த ஆண்டித் தேவர் அந்த புலியை கொன்றார்.

அதனால் அவருக்கு பரிசாக 6 கிராமங்களும், பொன் காசுகளும் தந்தார் என்கிறது செப்பேடு.




6.12.2020 ஆண்டித்தேவர் வம்சத்தினரின் இளைஞர் குழு சார்பாக விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சீருடை காவலர் பயிற்சி வகுப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

இவ்விழாவினை திரு. கதிரவன் தேவர் தலைமை ஏற்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி DSP திரு.P. ராஜன், செல்லம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் MVP.ராஜா மற்றும் விக்கிரமங்கலம் எட்டு ஊர் கிராம கமிட்டி சார்பாகவும் மற்றும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர்கள் புதுக்கோட்டை மாவட்டம்   குளத்தூர், திருமயம்,   பெருங்களூர்  மற்றும்  வைத்தூர்  ஆகிய ஊர்களை தலைமையாக கொண்டு புதுக்கோட்டையின...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்