வியாழன், 27 பிப்ரவரி, 2020

மாயத்தேவர்



கே. மாயத்தேவர் (K. Maya Thevar) (பிறப்பு: 15.10.1934) எம் ஜி ஆர் புதிதாக துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.

கே. மாயத்தேவர் (K. Maya Thevar) (பிறப்பு: 15.10.1934) எம் ஜி ஆர் புதிதாக துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.


1973-ல் திண்டுக்கல் திமுக எம்பியாக இருந்த கூடலூர் பாப்பாபட்டி ஐயா. இராஜாங்கம் தேவர் மரணம் அடைந்தார்.

இதனால் 1973-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி இடைத் தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்று எம்ஜிஆர் நினைத்தார்.

அப்போது திண்டுக்கல் அருகே உள்ள சின்னாள பட்டியை சேர்ந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் மாயத்தேவரை (கள்ளர்) வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி உறுதி என்று அனைவரும் வலியுறுத்தினர். இதனால் மாயத்தேவரை எம்ஜிஆர் வேட்பாளராக நிறுத்தினார்.

அப்போது அதிமுக நிரந்தர சின்னம் இல்லாத சுயேட்சை கட்சியாகும். எனவே எம்ஜிஆர் "தீபம் சின்னத்தை" தேர்ந்தெடுக்க மாயத் தேவரிடம் கூறினார்.

ஆனால் மாயத்தேவரோ "இரட்டை இலையை" தேர்ந்து எடுத்தார். சென்னையில் இருந்த எம்ஜிஆரிடம் போனில் தொடர்பு கொண்டு கீழ் கண்டவாறு கூறினார்.

இரட்டை இலை சுவற்றில் வரைய எளிதாக இருக்கும். இரண்டு விரலை காட்டி ஓட்டு கேட்கலாம். விக்டரி என்னும் வெற்றி வார்த்தை இரண்டு விரலை குறிக்கும். மேலும் சூரியன் வெப்பத்தில் இருந்து இலை உங்களுக்கு நிழல் கொடுத்து காக்கும் என்று பிரச்சாரம் செய்யலாம் என்று கூறினார். எம்ஜிஆரும் சரி என்று ஏற்றுக் கொண்டார்.

மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்த உடனே வெற்றி உறுதியாகி விட்டது. இதனால் கடும்கோபம் அடைந்த திமுக குண்டர்கள் வத்தலகுண்டு எம்ஜிஆர் மன்ற தலைவர் ஆறுமுக கள்ளரை கொலை செய்தார்கள்.

எம்ஜிஆர் புகழ், மாயத்தேவரின் குணம், இரட்டை இலை சின்னம் இவற்றுடன் ஆறுமுக கொலையும் அனுதாப அலையாக மாறி அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது.

திமுக மூன்றாவது இனத்திற்கு தள்ளப் பட்டது.


ஐந்தாவது மக்களவைக்கு, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக வென்றவர் . பின்னர் ஆறாவது மக்களவைக்கு 1997-ஆம் ஆண்டில் மீண்டும் அதே தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நின்று வென்றவர்.





ஐயா மாயத்தேவர் கூறுவது 

அப்போதெல்லாம் மதுரையில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அங்குதான் சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பயன்படக் கூடிய சின்னமாக இரட்டை இலை இருக்க வேண்டும் என்பதற்காக அதை தேர்ந்தெடுத்தார். அதை எம்ஜிஆரிடம் தெரிவித்த போது, திமுக உதயசூரியன் சின்னம் வைத்திருக்கும் போது இரட்டை இலை கருகிப் போய்விடுமே என விமர்சிப்பார்கள் என்றார். ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் இரட்டை விரலை காண்பித்து நிரந்தர வெற்றியை பெற்றார் தலைவரரே.. தாய்மார்களுக்கும் இரட்டை இலை சின்னம் பிடிக்கும் என சமாதானம் கூறப்பட்டது. இந்த விளக்கங்களை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டார்.



வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

மண்ண வேளார் மரபினர்

மண்ணவேளார் மரபினர்


வைத்தூர் திருப்பனங்காட்டு உடையார் கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

முதல் மரியாதை: இக்கோயிலில் முதல் மரியாதை பெறுபவர் கள்ளர் குடியின் மண்ண வேளார் குடும்பத்தினர். செம்பட்டி எனும் ஊரில் வாழ்கின்றனர். சித்திரை திருவிழாவில் குதிரை மேல் அமர்ந்து மண்ண வேளார் முதல் மரியாதை பெறுவது வழக்கம். மண்ண வேளார் குடும்ப முன்னோர்கள் தொண்டைமான் படையில் தளபதிகளாக இருந்துள்ளனர். பெருங்களூர் பல்லவராயர்களோடு மண உறவில் இணைந்தவர்கள். கல்வெட்டுகளில் புதுக்கோட்டை பல்லவராயர்கள் பெருங்களூர் அரசு மற்றும் வைத்தூர் அரசு என குறிக்கப்பட்டுள்ளனர்.

மண்ணவேளார்கள் அம்பு நாட்டை சேர்ந்த கள்ளர்கள், தொண்டைமான் படையில் முக்கிய ரெஜிமண்ட் மண்ணவேளாருடையது. இவர்கள் தொண்டைமான்களுடன் தொடர்ச்சியான திருமண உறவில் இணைந்திருந்தனர்.

ஆண்டப்பன் ஊரணி. குடுமியான்மலை புதுக்கோட்டை சாலையில் ஊரை ஒட்டி. ஒருபர்லாங் தூரத்தில் சாலைக்கு வடக்காக ஒரு பழைய் இடி. பாடுற்ற தெப்பக்குளம் உள்ளது. தொண்டைமான்கள் காலத் தில் ஆண்டக்குளம் ஆண்டப்ப மன்னவேளார் என்று ஒருவர் இருந்துள்ளார். இவர் பெயரில் ஆண்டப்ப மன்ன வேளார். குறவஞ்சியும் உள்ளது. ஒருவேளை இவராலோ அல்லது. இவர்காலத்தில் கட்டியதாலோ இப்பெயர் ஏற்பட்டது. குளத்தின் மைய மண்டபத்தில் இரண்டு நாயக்கர் தலைவர். ( குடுமியான் மலை கல்வெட்டு பகுதில் உள்ளது )

வைத்தூர் திருப்பனங்காட்டு உடையார் கோயில் பல்லவராயர் சிற்பம்: : 






செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

அங்கராயர் என்னும் கள்ளர் மரபினர்



இராசேந்திரசோழன் காலத்தில் கங்கை வங்காளவிரிகுடாவில் சங்கமிக்கும் இடமாகிய அங்கதேசத்தை வெற்றிகொண்டவர்கள் அங்கராயர் என்றழைக்கப்பட்டார்கள்.

அங்கராயர் பட்டமுடைய  கள்ளர்கள் வாழும் புதுக்கோட்டை வத்தனாக்கோட்டை அங்குராப்பட்டி




அகராதி



கல்வெட்டு


Kunnandarkoyil, Kulattur Taluk, Pudukkottai District.

அங்கராயர்‌ குடிக்காட்டுக்கும்‌





கிளியூருடையான் தொங்கலாண்டான் நம்பியாழ்வானை அங்கராயர் திருவிளக்கு



திருக்களர் மு.சுவாமிநாத மத்தவராயர் ஊரில் உள்ள கல்வெட்டில்  அங்கராயர்‌ எழுத்து



மதுரை மேலூர் 







நேமம், ஒண்டி பிலி அங்கராயர் வகையறா





திருக்காட்டுப்பள்ளி பெரியசாமி அங்கராயர்‌




திருஒற்றியூர்க் கோவில் கல்வெட்டுகளினல் :

படம்பக்கநாதர் கோவில் வீர ராஜேந்திரளுல் கட்டப்பட்டது. இங்கு வியாகரண மண்டபம் ஒன்று இருந்து இலக்கணப் பாடம் நடத்தப்பட்டது. இதனுல் இவ்வூர் இறைவர் வியாக்கர்ணதானப் பெருமான் எனனும் பெயரையும் பெற்றனர். குலோத்துங்கன் இங்கு நடந்த ஆனி விழாவைத் தரிசித்துள்ளான். அவன் இராசராசன் மண்டபத்தில் தங்கி இருந்தனன். இவ்வூர்த் தியாகர் கருணை விடங்கள் என்னும் பெயரையும் பெற்றிருந்தனர்.

அங்கராயன் மடம் ஒன்று இருந்ததாகவும் அறிதிருேம். கோயிலின் வெளிப் பிராகாரத்து மதிலக் கட்டியவர் சேதிராய தேவர்.இங்கு அளக்கும் கருவியின் பெயர் அருமொழித் தேவன் நாழி எனப்பட்டது. இதுகொண்டு நெய், நெல் முதலியன அளக்கப்பட்டன.

சிதம்பரம் திருக்கோயிலைக் கண்காணித்தவர்களாக அங்கராயன்  என்பவர்கள் குறிக்கப்படுகிறார்கள்.







திருமண பத்திரிகை 




மக்கள் தொகை கணக்கெடுப்பில்




அங்கராயர்கள்






மரண பத்திரிகை 






தொழிலதிபர் S. ராமச்சந்திரன் நட்டானிவன்னியர்

புதுக்கோட்டையில் ராணியார் ரமாதேவி, விஜயகுமார் தொண்டைமான் மற்றும் தொழிலதிபர்  S. ராமச்சந்திரன் நட்டானிவன்னியர்


ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

பாலாண்டார் வீட்டு தென்னை மர திருமணம்!




திருமண நாள் என்பது மகிழ்ச்சியான, மறக்க முடியாத நாளாக ஒருத்தருடைய வாழ்நாளில் இருந்து வருகிறது. அந்த திருமணத்துக்கு சொந்தங்களையும், நண்பர்களையும் அழைக்க, அழைப்பிதழ்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.

சொல்லப்போனால் நம்முடைய அந்தஸ்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவும் அழைப்பிதழ்கள் இருந்து வருகின்றன. பெரும்பாலும் அழைப்பிதழ்களில் சாமி படங்கள், மலர்கள், கட்சித் தலைவர்கள், அன்பை வெளிப்படுத்தும் கார்ட்டூன்கள்தான் இருக்கும்.


ஆனால், நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் ஒன்றை, திருமண அழைப்பிதழில் பிரசுரித்து அங்கீகரிப்பது அரிதிலும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம். இத்தகைய சூழலில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டரில் உலாவும் இன்றைய இளம் தலைமுறையினரை, வித்தியாசமாக செய்யும் திருமணங்கள் அதிகளவில் ஈர்த்து வருகின்றன. அப்படியொரு வித்தியாசமான திருமண அழைப்பிதழை அச்சிட்டு திருமணத்தை நடத்தியுள்ளனர், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செல்லியம்பட்டி் சுப்பையா பாலாண்டார் குடும்பத்தினர்.

திருமண அழைப்பிதழின் முன்பக்கத்தில் 'தென்னை மரத்தை' இடம்பெறச்செய்து, தென்னைமேல் வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தி, திருமணத்தை நடத்தியுள்ளனர்.

இத்திருமணம் குறித்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி  பாலாண்டார் பேசும்போது, "எங்க குடும்பத்துல அண்ணன், தம்பிகள் மூணு பேரு. நான் இரண்டாவது பையன். எங்க அப்பாதான் ஏ.சி.சுப்பையா பாலாண்டார். எங்களுக்கு தென்னை விவசாயம்தான் முக்கியத் தொழில். இத 65 வருஷமாக செஞ்சிட்டு வர்றோம். எங்களுக்கு இன்னைய நாள் வரை சோறு போடுறது தென்னை விவசாயம்தான். தென்னையை  நாங்க வளர்த்தோம். அது எங்கள வளர்த்து விட்டிருக்கு.


தென்னை விவசாயத்தோடு தேங்காய் நார் மில்லும், குடோனும் வெச்சிருக்கோம். எங்க அண்ணனும், தம்பியும் தென்னை விவசாயம் செஞ்சிட்டு வர்றாங்க. தென்னை விவசாயத்தால எங்க குடும்பம் பெரியளவுல வளர்ந்திருக்கு. அதுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், எங்க அண்ணன் மகன் கல்யாணத்துல, குலை தள்ளிய தேங்காயுடன் இருக்கிற தென்னை மர படத்தை முன்பக்கத்திலப் போட்டு, நன்றியை வெளிப்படுத்தியுள்ளோம்.

எங்க அண்ணன் மகன் அருள்மணி பாலாண்டார் எம்.பி.ஏ. முடிச்சிருக்கிறாரு. பொண்ணு எம்.சி.ஏ முடிச்சிருக்காங்க. இரண்டு பேருமே, எங்க வாழ்க்கைக்கு ஆதாரமா இருந்த தென்னை மர போட்டோவ பத்திரிகையில போடுறதுக்கு சம்மதிச்சாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு எங்க தோப்புல விளைஞ்ச, தேங்காயைத்தான் அன்பளிப்பா கொடுத்தோம். சொல்லப்போனா, தென்னை மரம் இல்லாம, இந்தக் குடும்பம் இல்லீங்க" என நன்றிப் பெருக்குடன் சென்னார்.

தென்னை மரத்தால் உங்கள் குடும்பமும் வளர்ந்தது போல, மணமக்களின் வாழ்வும் தென்னையை போல் வளர்ந்து எல்லோருக்கும் பயனளிக்கட்டும்.

வாழ்த்துக்கள்...!

-ம.மாரிமுத்து

படங்கள்: சே.சின்னத்துரை
(மாணவ பத்திரிகையாளர்கள்)

சோமாசியார் மரபினர்



வரலாற்றில் சோமாசியார் என்ற பெயர் பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோமாசியார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் சிறப்புடன் சோழமண்டலத்தில், தஞ்சாவூரில் உள்ள அதிராப்பட்டணம், மன்னார்குடி பகுதியில் வாழ்கின்றனர். 


தஞ்சையில் புகழ்பெற்ற மருத்துவர் 

டாக்டர் குணசேகரன் சோமாசியார்







வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். வரகுண குலசேகரப் பாண்டியன் என்ற சிறப்புப்பெயரினையும் வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் வரகுணராம குலசேகர பாண்டியன் , குலசேகர சோமாசியார் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான்.





சோமன் என்றால் சந்திரன்  சோமாசியார்கள் என்பதற்கு சோழட்ச்சியார் என்றும், சந்திர (சோமா) ஆட்சியர் அதாவது பாண்டிய ஆட்சியர் என்றும், நாயன்மார்களில் சோமாசி மாற நாயனார் என்று ஒருவர் இருக்கிறார் அவர் சோம யாகத்தை வாரம் தவராமல் செய்த சிறப்புடையவர். அந்த வகையில்  சோம யாகத் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இதற்கான தரவுகள் ஏதும் இல்லை.


கல்வெட்டில்  சோமாசியார்

தஞ்சாவூர்



திருக்கோயில் - செங்கல்பட்டு வல்லம் - இரண்டாவது குடைவரைக் கோயில்

இடம் - முகப்பு உத்திரம்

காலம் - முதலாம் மகேந்திரவர்மர் (கி.பி. 590 - 630)

கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - வரலாறு இதழ் 1

கல்வெட்டுப் பாடம்

1 லக்க சோமாசியார் மகள்
2 தேவகுலம்



செல்லியம்மன் கோவில் கல்வெட்டு 


தமிழகத்தில் முதல் கோவில் கட்டியதற்கான கல்வெட்டு, திருவள்ளூர் மாவட்டம், சிற்றம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்லவர் காலத்தில் தான், மண், மரம், சுதை இல்லாமல், கல்லால், குடைவரை கோவில்கள் அமைக்கும் பழக்கம் துவங்கியது. பின், கற்கோவில்கள் எழுப்பப்பட்டாலும், தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் கோவிலுக்கான சான்றுகள் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில், தற்போது, கி.பி., 7ம் நுாற்றாண்டை சேர்ந்த கோவில் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது.

கல்வெட்டை கண்டுபிடித்த, 'ஆலயம் கண்டேன்' அமைப்பின் நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான, பத்மபிரியா பாஸ்கரன் கூறியதாவது:

தென்கரணை என, அழைக்கப்பட்ட சிற்றம்பாக்கத்தில் உள்ள, பல்லவர் கால கும்பேஸ்வரர் கோவில், சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. அதன் அருகில் தான், சிறிய செல்லியம்மன் கோவில் உள்ளது. அங்கு, மிக பழமையான, பல்லவர் கால தமிழ் கல்வெட்டு, கவனிப்பாரின்றி, கோவிலின் படிக்கல்லாக பயன்படுத்தப்படுகிறது.


பல்லவர் காலத்தில், பல்லவர் கிரந்தம், சமஸ்கிருத எழுத்துகள் தான் அதிகம் வெட்டப்பட்டன. ஆனால், வல்லம் குகையில் உள்ள, முதலாம் மகேந்திர வர்மன் கல்வெட்டு, திருக்கழுக்குன்றத்தில் உள்ள, முதலாம் நரசிம்மவர்மன் கல்வெட்டுகள், தமிழில் உள்ளன. சிற்றம்பாக்கம் செல்லியம்மன் கோவில் கல்வெட்டும், தமிழில் உள்ளது சிறப்பு.

முதல் குடைவரை கோவிலுக்கான சான்றாக, கி.பி., 630ம் ஆண்டை சேர்ந்த, மகேந்திரவர்மன் கல்வெட்டு உள்ளது. நற்றம்பள்ளி கல்வெட்டின் காலம், முதலாம் பரமேஸ்வர வர்மனின், முதலாம் ஆட்சி ஆண்டான, கி.பி.,670. இக்கல்வெட்டு, 29 அங்குல நீளமும், 28.5 அங்குல அகலமும் உடையது.


கல்வெட்டில், இரண்டு வட்டங்கள் உள்ளன. அவற்றின் இடையே, மலரின் இதழ்கள் போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதைச்சுற்றி, ஆறு வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. செல்லியம்மன் கோவில் பெரிதாக இருந்த காலத்தில், அதன் சுவரில், இக்கல்வெட்டு இருந்திருக்கலாம்.




கல்வெட்டு வரிகளில் இருந்து, ஆலவாயிலை சேர்ந்த, சோமாசியார் மருமகன் குமரன் என்பவர் உருவாக்கிய கோவில் என, அறிய முடிகிறது. மதுரையை போல, தென்கரணைக்கும், ஆலவாயில் என்ற பெயர் இருந்திருக்கலாம். அங்கு, மேலும் ஆய்வு செய்தால், தொடர்புடைய கூடுதல், சான்றுகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


டம்பூர்  சிவன் கோவில் 


சிவன் கோவிலில், 500 ஆண்டு பழமை வாய்ந்த, விஜய நகர மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மறைமலை நகர் அடுத்த கடம்பூர் கிராமத்தில், ஒரு சிவன் கோவில் உள்ளது. இதை புதுப்பிக்கும் பணி நடந்தது. கோவிலை சுத்தம் செய்யும் பொருட்டு, சுற்றி இருந்த முட்புதர்களையும், செடி, கொடிகளையும் வெட்டினர். பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கு கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கல்வெட்டு குறித்து, அரியலூர் அரசு கலை கல்லூரி பேராசிரியர் தியாகராஜன் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: கோவில் கருவறை தெற்கு சுவரில், விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் (1509-1530) கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. எட்டு வரிகளில் தமிழ் ஆங்கீரச வருடம் எழுதப்பட்ட இக்கல்வெட்டின் காலம், கி.பி., 1512. இதிலிருந்து கல்வெட்டு, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறிய முடிகிறது. கல்வெட்டு, இவ்வூர் பெயரை கடம்பூர் என்றும், இது நந்திபுரம் சீர்மையில் அமைந்த கிராமம் என்றும், சிவன் கோவிலை, உடையார் கயிலாயமுடையார் கோவில் என்றும் குறிப்பிடுகிறது.


கடம்பூர் கீழைத் தெருவில், மடைவிளாகமும், நஞ்சை பற்றில் கோவிலை புதுப்பித்துக் கட்ட, 2,000 குழி நிலமும் இறையிலியாக கொடுக்கப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. மடைவிளாகம் என்பது கோவிலை சுற்றி பிராமணர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் வசிப்பதற்கு உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி. இந்நில கொடையை, கிருஷ்ண தேவ மகாராயரின் வாசல் அதிகாரியாக பணியாற்றிய, நாகண்ணநாகம நாயக்கரின் தம்பி கொடுத்துள்ளார். இது தவிர, நாகம நாயக்கர் மகன் லிங்கப்ப நாயக்கர், கொண்டம நாயக்கர், கப்பு நாயக்கர் ஆகியோருக்கும், இவர்களின் கோத்திரத்துக்கும் புண்ணியம் ஏற்பட வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, இக்கோவிலில் ஐப்பசி, தை மாத அமாவாசை நாட்களிலும், சோமவாரத்திலும் பூஜை வழிபாடு நடத்த தேவதானமாக, நாட்டேரி புதுக்குளம் என்ற கிராமமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

கிராமத்தில், ஏற்கனவே ஒச்சிலமத்தான் எல்லய சோமாசியார் என்பவருக்கு நிலம் கொடுக்கப் பட்டிருந்தது. அந்த நிலம் நீங்கலாக, மீதியுள்ள நிலங்கள் இக்கோவில் பூஜை வழிபாட்டுக்கு கொடுக்கப்பட்டது என, கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வாறு கொடுக்கப்பட்ட நிலங்களுக்கும், ஊருக்கும் கூடுதலாக வரி வசூலிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிப்பகுதியில், இந்து தர்மத்துக்கு அகிதம் (தீங்கு) பண்ணினவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவர் என கூறப்பட்டுள்ளது.

கடம்பூரின் அருகில் காயரம்பேடு என்ற கிராமம் உள்ளது. சோழர் காலத்தில், இவ்வூர் காசிரம்மேடு நாடு என்ற நாட்டுப்பிரிவின் தலைநகரமாக இருந்துள்ளது. கடம்பூர் சிவன் கோவிலில், பல்லவர் காலத்து கலை பாணியில் வடிக்கப்பட்ட ஜேஷ்டா தேவியின் சிற்பம் உள்ளது. பல்லவர் காலத்திலேயே இவ்வூரும், கோவிலும் இருந்துள்ளது என்பது புலனாகிறது. 


பாதிரிப்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்) கடலூர் மாவட்டம் கல்வெட்டு

அருள்மிகு பெரிய நாயகி அம்மை உடனுறை தோன்றாத்துணைநாதர் , இந்தக்கோயிலில் 21 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன, கோயில் புதுப்பிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டுச் சிதறிக்கிடக்கின்றன. கல்வெட்டுக்கள் இரண்டைத் தவிர மற்றவை யெல்லாம் சோழர்களுடையனவே. இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையில் வெட்டுவிக்கப்பட்டவையாம். கோப்பரகேசரிவர்மன் காலத்தில் கி.பி. 969இல் சோமாசியார் 5 பிராமணர்களுக்குக் குடியிருக்க நிலம் தந்ததும், கி.பி.923இல் தாமோதக்கன் ஒற்றியூரான் ஒரு கமுகந்தோட்டம் கொடுத்ததும், நாராயணன் சேந்தன் திருவமிர்தத்திற்காக வேண்டும் முதல் கொடுத்ததும் கண்டிருக்கின்றன.பி றகு இராசகேசரி காலத்தில் (கி.பி.959) ஒரு நந்தா விளக்கிற்காக 96 ஆடுகள் கொடுக்கப்பட்டன. வீரராசேந்திரன் காலத்தில் (கி.பி.1057) மும்முடிச்சோழப் பேரியான் நுந்தாவிளக்கு வைத்ததும், காடன்தேவன் 80 கலம் நெல் தந்ததும் காண்கின்றன. குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1076-ல் இராமேச்சுர முடையான் நுந்தா விளக்கிற்காக 20 காசு தந்ததும் இதில் கண்டிருக் கிறது. விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 1118, 1124,25) மூவேந்த வேளான் ஒரு விளக்கிற்காக 18 காசும் உலகளந்த மூவேந்த வேளான் 18 காசும் கொடுத்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1213) காலத்தில் தேவதானத்தில் எல்லை குறிக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களுள் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜராஜ ராஜகேசரிவர்மன் (முதலாம் இராஜராஜசோழன்), இராஜகேசரிவர்மனாகிய உடையார் வீர ராஜேந்திர தேவன், இராஜகேசரிவர்மனாகிய உடையார் இராஜ மகேந்திர தேவன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழதேவன் இவர்கள் காலங்களிலும், பாண்டியர்களில் பெருமாள் விக்கிரம பாண்டியன் காலத்திலும், விஜயநகரப் பரம்பரையினரில் வீரவிருப் பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

ஆனைமலை முருகன் கோயில் குடைவரைச் சிற்பங்கள்

ஒத்தக் கடை (ஒற்றைக் கடை) மதுரைக்கருகே அமைந்துள்ள ஊர் ஆகும். அவ்வூரின் அருகே உள்ள ஆனை மலையில் இரு குடைவரைகள் உள்ளன. ஒன்று நரசிங்கப் பெருமாள் கோயில். மற்றொன்று லாடன் கோயில் எனப்படும் முருகன் கோயில்.

மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஒத்தக்கடை. இங்குள்ள யானைமலையின் ஒரு பகுதியில் குடைவரையாகத் திகழ்கிறது லாடன் முருகன் கோயில். கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில், தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. லாட தேசத்திலிருந்து வந்த லாடன் சித்தர் தங்கியிருந்து வழிபட்ட தலமாதலால் அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இன்றைய குஜராத் பகுதியே அன்றைய லாட தேசமெனவும் குறிப்பிடுகின்றனர்.

மதுரையை ஆண்ட பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பிரான் பட்டர் சோமாசியார் செய்வித்த குடைவரைக் கோயில் இது என கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. மேலும், இந்த யானை மலையில் சமண முனிவர்களின் கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.




இந்த லாடன் கோயில் கருவறையில் தெய்வானை மட்டுமே உடனிருக்க, அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் முருகப்பெருமான். முருகனுக்கான பிரத்யேக குடைவரைக் கோயில் இது மட்டுமே என்கிறார்கள் பக்தர்கள். இங்கு முருகப்பெருமான் முப்புரி நூலும், போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன வீரம் எனும் அணிகலனும் அணிந்துள்ளார். ஆக, சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானையை மணமுடித்த பிறகான கோலத்தில் அருள்கிறார் எனலாம். தெய்வானை கையில் மலர்ச் செண்டு தாங்கி வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தில் சேவற் கொடியும், மயில் வாகனமும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. அதன் அருகிலேயே நம்பிரான் பட்டர் சோமாசியார் சிலையும், பாண்டிய மன்னர் சிலையும் காணப்படுகின்றன.


புடைப்புச்சிற்பங்களுக்கு உரிய வழிபாட்டு முறைகள் வித்தியாசமானவை. இவ்வகையான சிற்பங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. இவ்வகையான கோயில்களில் உற்சவ மூர்த்திகளுக்கே அபிஷேக ஆராதனைகளைச் செய்வர். இந்த லாடன் கோயிலில் உற்சவ மூர்த்திகள் இல்லாத காரணத்தால், இங்கு பூஜை, திருவிழாக்கள் இல்லை. பக்தர்கள் கோயிலின் வெளி மண்டபத்தில் நெய் விளக்கு ஏற்றியும், கோயில் வாயிற்கதவுக்கு பூமாலை அணிவித்தும் வழிபடுகின்றனர்.


நன்றி : சோழபாண்டியன்

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்