செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

வீரர் R. பஞ்சநாதன் நாட்டார்



வீரர் R. பஞ்சநாதன் நாட்டார், இந்திய கப்பல் படையில் படைவீரர் எண் 24003 ஆக authority 104/43 ஆக 2.11.43 Khanjar NEC பணியில் சேர்ந்தார்.


Dal/warship ல் 12.4.45 வரை able சீட் man ஆக பணியில் இருந்தவர் நேதாஜி உத்தரவுபடி படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு  பணி செய்ய மறுத்ததை காரணம் காட்டி பலுசிஸ்தான் மாற்றப்பட்ட்டார்.
அங்கும் போராடியதால் 14.4.45 ல் "unsuitable " பணிக்கு தகுதியற்றவர் என விடுவிக்க பட்டார்.

சுதந்திரத்துக்கு பின்னும் நேதாஜியுடன் இவர் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இவருக்கு சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான பணிக்கொடையை காங்கிரஸ் அரசு வழங்க மறுத்தது.

26.1.1981 ஆம் ஆண்டு குடியரசு நாளில்  என் தந்தை இறந்த பிறகு என் தாயாருக்கு தமிழக அரசு பணிக்கொடை வழங்கியது.

இந்த மண்ணில் என் தந்தை வாழ்விழந்து இந்தியா சுதந்திர பறவை பறக்க ஒரு இறகாய் இருந்தார்.

வாழ்க சுதந்திரம், வாழ்க நேதாஜி புகழ்.



எனது தாயார் விடுதலை போராட்ட தியாகி லட்சுமி பஞ்சாநாதன் அம்மாள்

அன்புடன் சுந்தர் நாட்டார்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்