வியாழன், 9 ஜூலை, 2020

பி.என்.வல்லரசு தேவர்



பி.என்.வல்லரசு  தேவர் 1989 மற்றும் 1996ல் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவா். பி. என். வல்லராசு, தனகராஜ் என்றும் அழைக்கப்படுகிறார்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஒட்டு மொத்த விவசாயிகளின் நீண்டகால கனவான 58 கிராம கால்வாய்ப்பணி 1989-ல் பி.என்.வல்லரசு அவர்கள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இந்த திட்டத்திற்காக 34 கோடி நிதி ஒதுக்கீடு பெற்று கொடுத்தார். பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ.வாக இருந்த பி.என்.வல்லரசு காலத்தில் 4-12-1999 அன்று ஆரம்பிக்கப்பட்டது.



வல்லரசு 1984 தேர்தலில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அந்த நேரத்தில் அவர் திமுக மற்றும் ஃபார்வர்ட் பிளாக் (FB) வேட்பாளர் என பல்வேறு விதமாக விவரிக்கப்பட்டுள்ளார்.  எம். ஜி. ராமச்சந்திரனை எதிர்கொண்டார். வல்லரசு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.ஜி.ஆரை எதிர்த்து தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.என்.வல்லரசு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனு பரிசீலனையின்போது, எம்.ஜி.ஆரின் மனுவுக்கு வல்லரசு சில ஆட்சேபனைகளை தெரிவித்தார். எம்.ஜி.ஆர். வேட்பு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறினார். முடிவில் அந்த ஆட்சேபனைகளை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். "எம்.ஜி.ஆர். வேட்பு மனு, முறைப்படி உள்ளது" என்று கூறி எம்.ஜி.ஆர் மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.

பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு நமக்காக மூன்று கல்லூரிகளை அமைத்துக்கொடுத்தார்.

உசிலம்பட்டி தேவர் கல்லூரி கள்ளர் கல்வி கழகத்தின் சொத்துமதிப்பினை வைத்து அமைக்கப்பட்டது. உசிலம்பட்டி தேவர் கல்லூரியின் தலைவராக பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் இருந்தார். அதன்பின் அரசு வசமாக்கப்பட்ட கல்லூரியை பார்வர்டுபிளாக்கின் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.என்.வல்லரசு அவர்கள் அரசிடமிருந்து மீட்டு மீண்டும் கள்ளர் கல்வி கழத்திடம் ஒப்படைத்தார்.

கல்லூரி தற்போது கள்ளர் கல்வி கழகம் வசம் உள்ளது. கள்ளர் பள்ளிகளில் முறையான ஆசிரியர் ஒதுக்கீட்டினை பெற்றுக்கொடுத்தவர் .


2000 -07- 09  ல் மதுரை கரிமேடு சண்முகம் பிள்ளை காளியம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் கூட்டத்தில்  பி.என்.வல்லரசு அவர்களுக்கு மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. கரிமேடு ஆ.பெ.அரசு. மீனாம்பாள்புரம்  ஆர்.ஏ.எம்.மணிகண்டன்‌, எஸ்‌.பி‌மகாராஜன்‌, வீ.எஸ்.நவமணி, உசிலை வக்கீல் சுகுமாறன், கீரிபட்டி அன்னக்கொடித்தேவர்.

இவர் 21 அக்டோபர் 2000 அன்று விண்ணுலகம் அடைந்தார். அந்த ஆண்டு பிப்ரவரியில் ஃபார்வர்ட் பிளாக் இன் தொழிற்சங்க பிரிவின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்