வெள்ளி, 17 ஜூலை, 2020

மருது சகோதரர்களும் ஆங்கிலேயரும்

இந்த பதிவு வீரம் நிறைந்த மருது சகோதரர்களை இழிவு படுத்தும் பதிவு இல்லை என்பதனை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.  

ஆனாலும் தொண்டைமான் மன்னர்களை இழிவுபடுத்தும் சில ஈனர்களுக்கான  விளக்கமாக, இதை குறிப்பிடுகிறோம்.

தொண்டைமான் மன்னர்கள் தான் மருது சகோதரர்களை பிடித்து தந்தாக, வெள்ளையரோடு சேர்ந்து துரோகம் செய்ததாக எழுதி வருகிறார்கள். முதலில் வரலாற்றை அன்றைய சூழ்நிலையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இன்றைய நவீன காலத்துடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. (மருது சகோதரர்களை காட்டி கொடுத்தது வலையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது வரலாற்று பதிவு)


The history of Kattabomman and the Maruthu brothers has been written by many scholars in Tamils generally catering for the common people, who have drunk deep in the desire for freedom and who are eager to find their heroes in these men. But most of these works are not based soundly on available records as detailed above. It was once said in the Madras Legislative Assembly by Mr. C. Subramaniam, the then Minister for Education, that a history of Kattabomman as that of a hero does not arise from the records, not because the records are few but because they are many.






மருது சகோதரர்கள் தொடக்கத்தில் ஆங்கிலேயருடன் மிகவும் நட்புடனே இருந்தனர். ஆங்கிலேயருடன் வேட்டைக்குச் செல்லும் அளவிற்கு நட்புடனே இருந்தார்கள். ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

ஆங்கிலேயருக்கு ஆதரவாக போரிட்ட மருது சகோதரர்கள்:

கிபி 1797 ல், இராமநாதபுர மன்னரை (ரிபெல் சேதுபதி)விடுவிக்க மறவர்கள் ஆங்கிலையரை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். அச்சமயம் மறவர்களை ஓடுக்க மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக படை அனுப்பி வெள்ளையரை எதிர்த்த மறவர்களை கொன்று ஆங்கிலைய கொடி பறக்க உதவினர். இதனால் மகிழ்ந்த ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியரை அழைத்து விழா எடுத்தனர். மருதுபாண்டியரும் " தாங்கள் எப்பொழுதும் வெள்ளையர் அரசுக்கு அடிபணிந்து , இருப்போம் என நன்றியுடன் தெரிவித்தனர். மருதுபாண்டியர்கள் மிக வலிமையான படையை கொண்டிருந்ததும், இராமநாதபுர மறவர்கள் ஒடுக்கி போரில் வீரதீரம் காட்டியதும் அவர்களின் போர் வன்மைக்கு ஒர் சான்றாகும் --( Madurai district records! - மாவீரர் மருதுபாண்டியர் SM கமால்! !)

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்
by கமால், எஸ். எம். எழுதிய நூலில் மருது சகோதரர்களை பற்றி கூறியவை 

பக்கம் 52 இல் 

அரண்‌ மனையில்‌ அடிமைப்‌ பணிபுரியும்‌ பெரிய மருது, அரசியாரை தமது கட்டுப்பாட்டிற்குள்‌ வைத்தது மறவர்‌ இன மக்களிடம்‌ மனக்‌ கொதிப்பை ஏற்படுத்தியது, அண்டை நாடான பெரிய மறவர்‌ சீமையின்‌ சேதுபதி மன்னருக்கு மருது சகோரர்களது. நடவடிக்கைகள்‌ அதிர்ச்சியை அளித்தன.


எல்லைப்பகுதி ஒன்றிலே உள்ள புஞ்சைக்‌ காட்டின்‌ விளைச்சலை அறுவடை செய்து எடுத்துவரும்‌ பொழுது சிவகங்கையார்‌ அந்த நிலம்‌ தங்களது சீமையைச்‌ சேர்ந்தது என உரிமை கொண்டாடி அறுவடை மகசூலை பறித்துச்‌ சென்றனர்‌. துணிகரமான முறையில்‌ நடந்து கொண்ட இந்த தீய நடவடிக்கைக்கு மாற்று நடவடிக்கை யாக இராமனாதபுரம்‌ ஆட்கள்‌ அன்று இரவே அந்தக்‌ கிராமத்தைச்‌ சூறையாடினர்‌. அங்கு வந்த மருது சகோதரர்‌ களின்‌ மக்கள்‌ இராமனாதபுரம்‌ மறவர்களில்‌ சிலரைக்‌ கொன்று எஞ்சியவர்களை தங்களது எல்லையினின்றும்‌ துரத்தி அடித்‌ தனர்‌. 

பக்கம் 57 இல் 


கிளர்ச்சிக்காரர்கள்‌ கை ஓங்கிமிருந்தது. இதனைச்‌ சமாளிக்க சிவகெங்கையிலிருந்து மருது சகோதரர்களின்‌ வீரர்‌ களை வரவழைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில்‌ கலெக்டர்‌ பயன்படுத்தினார்‌.



ந்தப்‌ போரில்‌ கும்பெனியாருக்கு பக்கபலமாக பெரிய மருது வின்‌ மகன்‌ தலைமையில்‌ போரிட்ட சிவகங்கை அணியை கும்பெனியார்‌ பிறகு பாராட்டி தங்கப்பதக்கம்‌ வழங்கினர்




மருது சகோதரர்களை ஒடுக்கும்படி நவாப்புகளிடம் முறையிட்ட வேலுநாச்சியார்:- 

நவாப்புகளுக்கு கிஸ்திப்பணமாக ஒரு லட்சம் தந்த மருது சகோதரர்கள்;

ஆங்கிலேயருக்கு ஆதரவாக திருமயத்தில் பெரும்படையை நிறுத்திய தொண்டைமான்கள்.

ஆதாரம்:- இந்தப்புத்தகம் தமிழ்நாடு அரசின் அருங்காட்சியக்துறையால் முறையான ஆதாரங்களோடு எழுதப்பட்டது.


தொண்டைமான்களுக்கு எதிராக மருது சகோதரர்கள் பல முறை செய்லபட்டனர்.  இதனை வேலுநாச்சியார் பல முறை தடுத்துள்ளார். 



தொண்டைமான் மன்னர்களுக்கும் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசின் உதவியுடன், தன்னுடைய பக்கத்து நாட்டில் வளர்வதும் பிடிக்கவில்லை. (இது சாதிய அடிப்படையில் அல்ல, அவர்களுடைய நாட்டின் எல்லையை சேர்ந்தது)

ஜம்பூ தீவப் பிரகடனம்” 

துருக்கிய-மங்கோலிய தைமூரியத் தலைவனான அவுரங்காசீப் வழிவந்தவரகள் ஆற்காடு நவாப்புகள் ஆவர். ஜம்பூ தீவப் பிரகடனம், அந்நியரான ஆங்கிலேயன் என்ற கொள்ளையனை விரட்டி அங்கே, அந்நியரான நவாப் என்ற கொள்ளையனை அமரவைக்க வேண்டும் என்று கூறுகின்றன. மருது சகோதரர்கள் "'ஜம்பூ தீவப் பிரகடனம்” த்தில் ஆங்கிலேய ஆதரவாக இருந்த மராட்டியர், தொண்டைமானை விரட்டி அங்கே நாயக்கனை அமர வைக்கவேண்டும் எனவும் கூறப்படுகிறது. 

""மேன்மை தங்கிய நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடம் கொடுத்து விதவை போலாகிவிட்டார்.""

""மேன்மை தங்கிய நவாபிற்கு ஆற்காட்டு சுபாவும் மற்றும் விசயமணத் திருமலை நாயக்கருக்கு கர்நாடகமும் தஞ்சாவூரும் முதல் கட்டமாகவும், மற்றவர்களுக்கு மற்ற சீமைகள் அடுத்த கட்டமாகவும், அந்தந்த நாட்டு வளமைகளையும் நெறிகளையும் மீறாமல் திரும்ப அளிக்கப்படும்.""

"இனி வருங்காலத்தில் ஒவ்வொருவரும் அவரவர் பரம்பரைப் பாத்தியதையே அடையலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பியர் தம் பிழைப்புக்கு மட்டும் நவாப்பின் கீழ் பணிபுரிந்து, இடையீடற்ற உண்மையான மகிழ்ச்சி கொள்ளலாம். ஐரோப்பியர் ஆதிக்கம் ஒழிந்துவிடுமாதலால் இனி (ஐரோப்பியர்) தலையீடற்ற நவாபின் ஆட்சியில் கண்ணீர் சிந்தாத இன்ப வாழ்வு வாழலாம். "

இந்த பிரகடன அறிவிப்பு மூலம் தொண்டைமான், மராட்டியர் எதிர்ப்பை பெறுகிறார்கள் மருது சகோதரர்கள்.

மாவீரர் மருதுபாண்டியர் புத்தகத்தில் ஆங்கிலேயருக்கான கடிதம்



அன்று மருது சகோதரர்கள் நடத்திய போரில் நட்புடன் பாண்டிய நாட்டு கள்ளர்கள், மருது சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்தனர். தொண்டைமான் என்ற கள்ளருக்கு ஆதரவு அளிக்கவில்லை.  

சேதுபதி மன்னர்கள், திருவாங்கூர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், பாஞ்சாலங்குறிச்சி (கட்டபொம்மன்) போன்ற மன்னர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்தனர். சில முரண்பாடு காரணமாக அல்லது பிரஞ்சு நட்பு என பல காரணங்களால் மட்டுமே ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்டனரே தவிர, எள்ளலவும் இந்திய சுதந்திர போர் அல்ல.

சேதுபதி மன்னர்களுக்கும் ஆங்கிலேய நட்பும்.




கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேய நட்பும்

கட்டபொம்மன் தாத்தா ஆங்கிலேயனின் நெருங்கிய நட்பு
கிபி 1755, மார்ச் 4 அன்று கர்னல் ஹரான் தலைமையிலான படை திருநெல்வேலி நோக்கி சென்று நத்தக்கோட்டையை தாக்கி அழித்தனர் . பிரிட்டீஷ் படை வருவதை அறிந்த பொல்லாப்பாண்டிய கட்டபொம்மன்( இவர் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தாத்தா) ,ஆங்கிலேயருக்கு சமாதான தூது அனுப்பினார்.தான் கப்பத்தை கட்டிவிடுவதாகவும், ஆனால் தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். முழு தவணையை கட்டும் வரை கட்டபொம்மன் சார்பாக சில பிணையாட்களை வெள்ளையரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவிதாங்கூர் வசம் இருந்த களக்காடு கோட்டை மற்றும் நத்தக்கோட்டை ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. மீதம் இருந்த சிறு பாளையங்களும் அடிபணிந்தன.
(Tinnevelly gazetter 1917 pg 376/387) 



மராட்டியர் ஆங்கிலேய நட்பு





திருவாங்கூர் ஆங்கிலேய நட்பு



திருவாங்கூர் படையில் மறவர்களும் இருந்தனர். 

பூலிதேவருக்கும் பிரஞ்சு நட்பும்






அன்றைய போர்கள் என்பது தங்களுடைய பகுதிகளுக்கான போரே தவிர, அது இந்திய நாட்டிற்காக அல்ல. அன்று இந்தியா என்ற ஒருங்கிணைந்த நாடும் இல்லை. 


டெல்டாவில் பெரும்பான்மையாக வசிக்கும் அகமுடையார்களை, அவர்களைவிட குறைந்த எண்ணிக்கையில் வாழும் கள்ளர்கள் அரசியலில் ஏமாற்றிவிட்டதாக பொய்களை கூறி குழப்பம் விளைவிக்கின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் 1921 ல்( தஞ்சை/ திருவாரூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை) மாவட்டங்கள் உள்ளடக்கியிருந்தது. இவற்றில் தஞ்சை/ திருவாரூர் பகுதிகளில் கள்ளர் அடர்த்தியாகவும் மற்ற இரு மாவட்டங்களில் கணிசமாக உள்ளனர். 1921 காலகட்ட சென்சஸ் அறிக்கையின்படி டெல்டாவில் யாரும் யாரையும் வஞ்சிக்கவில்லை, மக்கள் அடர்த்தியின்படியே தேர்தல் வாய்ப்புகள் அமையப்பெற்றதை அறியலாம்!

கள்ளர் இன்றும் சாதிய கட்சியை ஆதரிப்பது இல்லை. அகமுடையார், மறவர், வலையர் நின்றாலும் கட்சியை பார்த்தே வாக்கு அளிக்கின்றனர். கள்ளர்கள் அரசியலில் இன்று வெற்ற பெறுவதற்கு காரணமாக இருப்பது எல்லா சமூகங்களையும் அரவணைத்துச் செல்வதே தவிர சாதியின் அடிப்படையில் அல்ல.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்