வியாழன், 9 ஜூலை, 2020

ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவர் பழனிச்சாமி ஒச்சாத்தேவர்


கள்ளர் மரபில் பிறந்த கருமத்தூர் கோவிலை வணங்கி வரும் பழனிச்சாமி ஒச்சாத்தேவர் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் முதல் தமிழர்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்து வரும் பழனிச்சாமி ஒச்சாத்தேவர், அவரை அரசு அதிகாரியாகவும் இந்தியா மற்றும் தமிழ் சமூகங்களின் முக்கிய தலைவராக பணிபுரிந்து வருகிறார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தலைநகர் பிரிஸ்பேன் நகரில் 31- 10 -2020 பாராளுமன்றத் தேர்தலில் ஆஸ்திரேலியாவில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான ஆளும்கட்சி லேபர் கட்சியின் தொகுதியின் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் பழனிசாமி ஒச்சாத்தேவர். அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர்.தற்போது ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் தமிழர் என்ற பெருமையையும் சேர்த்துள்ளார். அவர் வெற்றி பெற்றால் நமது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமையாகும்.

இவரைப்பற்றி முழுவிவரங்கள் அறிய http://www.palanithevar.com/Palani/About_Me.html



 பழனிச்சாமி ஒச்சாத்தேவர் தயார் : முத்துப்பிள்ளையம்மாள் 

பிரத்தான  ,  பழனிச்சாமி ஒச்சாத்தேவர் , பிரியா , தேவி  & காவியா 


கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்