ஞாயிறு, 27 ஜனவரி, 2019

மூக்கறுப்புப் போர்



கி.பி. 1656 ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் 50,000 படைவீரர்களை அனுப்பி மதுரையை பிடிக்க மைசூர் மன்னன் காந்திரவ நரசராயன் மதுரை நாட்டிற்கு  கம்பையா என்பவனை  மைசூர்படைக்கு தலைமை ஏற்று அனுப்பினான்.

இலக்குவன் சூர்ப்பநகை மூக்கறுப்பு

மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனப்பி வைத்தான். 

அதோடு நிறுத்தாமல் கொள்ளையும், வெட்டிக் கொலைகளும் செய்தான். இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மன்னர் சேதுபதியின் மறவர் படை மதுரை வர தாமதமானதால், மதுரை மேற்கில் இருந்த கள்ளர் தன்னரசு படை விரைவில் வந்தது. கள்ளர் படை உரப்பனுர் திருமலை பின்னத்தேவர் தலைமையில் மைசூர் படையுடன் போரிட்டது.

இராமநாதபுர சேதுபதி மன்னர் இரகுநாததேவர் 35000 படை வீரர்களுடன், திருமலை நாய்க்கர் 50000 படைவீரர்களையும் இணைத்து மதுரையை சுற்றி வளைத்து மைசூர் படையை தாக்கி 10000 வீரர்களுக்கு மேல் கொன்றனர்.



கள்ளர் படைகள், கண்ணிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கும் "மூக்குப்பரி" என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு "திருமலை சேதுபதி" என்ற பட்டமும் "ராணி சொல் காத்தான்" என்ற பெயரும் வழங்கினார்.

பேளூர் கல்வெட்டு வாசகம்

பேளூர் கல்வெட்டில் நாயக்க மன்னர்களின் பெயர்களோடு 'மீசையுடனே மூக்கறுப்பிச்சார்' என்கிற வாசகமும் வருவது குறிப்பிடத்தக்கது.


உரப்பனூர் கள்ளர்களில் பின்னதேவர் வாரிசுகள் மூக்குப்பரி என்ற பட்டத்தை தன் பெயருக்கு பின் இட்டுக்கொள்வது வழக்கம்.



வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்