கி.பி. 1656 ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் 50,000 படைவீரர்களை அனுப்பி மதுரையை பிடிக்க மைசூர் மன்னன் காந்திரவ நரசராயன் மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவனை மைசூர்படைக்கு தலைமை ஏற்று அனுப்பினான்.
இலக்குவன் சூர்ப்பநகை மூக்கறுப்பு
மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனப்பி வைத்தான்.
அதோடு நிறுத்தாமல் கொள்ளையும், வெட்டிக் கொலைகளும் செய்தான். இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மன்னர் சேதுபதியின் மறவர் படை மதுரை வர தாமதமானதால், மதுரை மேற்கில் இருந்த கள்ளர் தன்னரசு படை விரைவில் வந்தது. கள்ளர் படை உரப்பனுர் திருமலை பின்னத்தேவர் தலைமையில் மைசூர் படையுடன் போரிட்டது.
இராமநாதபுர சேதுபதி மன்னர் இரகுநாததேவர் 35000 படை வீரர்களுடன், திருமலை நாய்க்கர் 50000 படைவீரர்களையும் இணைத்து மதுரையை சுற்றி வளைத்து மைசூர் படையை தாக்கி 10000 வீரர்களுக்கு மேல் கொன்றனர்.
கள்ளர் படைகள், கண்ணிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கும் "மூக்குப்பரி" என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு "திருமலை சேதுபதி" என்ற பட்டமும் "ராணி சொல் காத்தான்" என்ற பெயரும் வழங்கினார்.
பேளூர் கல்வெட்டு வாசகம்
பேளூர் கல்வெட்டில் நாயக்க மன்னர்களின் பெயர்களோடு 'மீசையுடனே மூக்கறுப்பிச்சார்' என்கிற வாசகமும் வருவது குறிப்பிடத்தக்கது.