வியாழன், 23 செப்டம்பர், 2021

உலக சாதனை படைத்த 2 வயது கவின் தேவர்


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் உரந்தைராயன்குடிக்காட்டை சேர்ந்த தம்பதி வசந்தகுமார் தேவர் -கவிமொழி. இவர்களது 2 வயது மகன் கவின்.

பிறந்து 22 மாதங்களில் விளையாட்டு தனமாக இருந்தபோது, அவரது தாய் பல்வேறு நாடுகளை சேர்ந்த கொடிகள் மற்றும் பழங்களின் பெயர் சொல்லி கொடுத்துள்ளார்.

இதில் ஆர்வமாக இருந்த குழந்தை கவின் நாளடைவில் அந்தந்த நாட்டின் கொடிகள் பெயர்கள் மற்றும் பழங்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள் சொல்லி கொடுத்துள்ளார்.

பின்னர் அவனது தாய் கொடிகள் பெயர், தலைவர்கள் பெயரை கூறும்போது, அதற்கான புகைப்படத்தை எடுத்து தனது தாயிடம் கொடுத்துள்ளான்.

தனது மகனின் அபார திறமையை பார்த்த தாய் கவிமொழி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு அனுப்பியுள்ளார்.

இதில், காணொலிக் காட்சி மூலம் பங்கு பெற்ற சி.றுவன் கவின், 197 நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் சொல்லி, ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது இவரின் மூன்றாவது சாதனையாகும். சிறுவன் கவின் தனது ஒன்றே முக்கால் வயதில் “இந்தியா புக்  ஆப் ரெக்காட்ஸ்” சாதனையாளர் புத்தகத்திலும், “கலாம்  உலக சாதனையாளர்” புத்தகத்திலும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சி.றுவனின் இந்த அபார அறிவுத் திறனைப் பார்த்து  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்