வியாழன், 23 செப்டம்பர், 2021

கரூர் கள்ளர் தேச காவல்


கரூர் மாவட்டம் கரூர் தாலுக்காவின் தேச காவல் உரிமை ஆங்கிலேயர் காலத்தில் #கள்ளர் சமூகத்தினரிடம் இருந்துள்ளது.காவல் தொழிலிலே மிக உயர்ந்த காவல் முறையாக தேச காவல் அன்று விளங்கியது.தேச காவல் புரிபவர்களை இன்றைய மாவட்ட காவல் கண்காணிப்பாளரோடு (Superintendent of Police) ஒப்பிடலாம்.

• கரூரின் தென்மேற்கு பகுதியில் குறவர் பழங்குடிகள் காவல் செய்து வந்தனர்.ஆனால் அதே பகுதியில் காளை மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு மட்டும் கள்ளர்களே காவலர்களாக இருந்தனர்.

• கரூர் மாவட்டத்தில் , ஒவ்வொரு கள்ளர் நாட்டார் காவல் பொறுப்பிலும்  3 முதல் 10 கிராமங்கள் வரை இருந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான கிராமங்களின் காவல் பொறுப்பு கள்ளர் சமூகத்தினரிடமே இருந்துள்ளது.

• அனைவரிடம் ஒரே அளவில் காவல் வரியை  கள்ளர் காவல்காரர்கள் வசூலிக்கவில்லை.பணக்காரர்களிடம் கூட நியாமான அளவில் தான் காவல் வரி வசூலித்துள்ளனர்.பணக்காரர்களோடு ஒப்பிடும் போது ஏழைகளிடம் கம்மியாக தான் காவல் வரி வசூலித்துள்ளனர்.ஆங்கிலேயரை போல் ஏழை மக்களின் உழைப்பை வரி என்ற பெயரில் சுரண்ட கள்ளர் சமூக காவல்காரர்கள் விரும்பவில்லை.





ஆதார நூல்:- MADRAS DISTRICT GAZETTEERS - TRICHINOPOLY - VOLUME 1 - BOOK PAGE NUMBER 256.

பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர்கள் புதுக்கோட்டை மாவட்டம்   குளத்தூர், திருமயம்,   பெருங்களூர்  மற்றும்  வைத்தூர்  ஆகிய ஊர்களை தலைமையாக கொண்டு புதுக்கோட்டையின...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்