வியாழன், 23 செப்டம்பர், 2021

களப்பாளர்

" பச்சைத் தமிழன் "


பச்சைத் தமிழனாக இருந்தால் இச் செய்தியை பகிர்வான்..

இப்படியொரு வசனத்தை அடிக்கடி பார்த்திருப்போம்..


அதென்ன பச்சைத்தமிழன்...?


தமிழ்மொழியின் இளமையையும், பெருமையையும் குறிக்க பைந்தமிழ் என்ற சொல் இலக்கிய வழக்கில் உள்ளது..


ஆனால்...

பச்சைத் தமிழ் என்ற சொல் எங்குள்ளது..?


அட..

கல்வெட்டில் உள்ளது..

13 ஆம் நூற்றாண்டு காலக் கல்வெட்டில் உள்ளது.


திருநெல்வேலி.

நெல்லையப்பர் கோவில்.


அழகிய தமிழ் பாடல் வடிவக் கல்வெட்டு.


களப்பாளன் என்பவர்

நெல்லையப்பர் கோவிலுக்கு கற்களால் சுற்றுச்சுவர் எழுப்புகிறார். இச்செய்தியை கல்வெட்டு இவ்வாறு பதிவுசெய்கிறது..


" கல்வேலி செய்த களப்பாளன் சொல்வேலிப் பைச்சைத் தமிழீன்ற 

பாவலர் "



அட...

பச்சைத்தமிழ்...

 700 ஆண்டுகளுக்கு முன்பே..


அடுத்து...


"தமிழன்டா " என்ற சொல்லைக் கல்வெட்டில் தேடவேண்டும்...


கட்டுரை

ஐயா மா. மாரிராஜன் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியது.


மேலே உள்ள குறிப்பிடப்படும் களப்பாளர் வழியினர் கள்ளர் மரபை சேர்ந்த களப்பாளர்கள் , கள்ளர் நாட்டின் ஒன்றான தென்னமநாட்டில்





கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்