வியாழன், 23 செப்டம்பர், 2021

வேளுக்குடி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். இந்த கோவில் கள்ளர்களின் மாளுசுத்தியார், வாண்டையார் பட்டம் உடைய கள்ளர்களுக்கு குலதெய்வமாக இருக்கிறது.

தொன்மை சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று, 11 Dec 2022 கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால யாகசாலை பூஜையில் நிறைவாக மஹா பூர்ணாஹதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்த கடன்களை தலையில் சுமந்து ஆலயத்தினை வலம் வந்து ஆலயத்தின் கோபுர விமான கலசம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர விமான கலசத்தின் மீது புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்து வைத்து கோபுர கலசங்களுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். இதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் தருமைஆதினம் 27வது குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் அருளைபெற்றனர்.

















































































































































































































































































































































































கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்