வெள்ளி, 11 டிசம்பர், 2020

மாவீரர் இராமலிங்க ஓந்திரியர்




SS_Group_Hitler_intelligence_service


நேதாஜி அவர்கள் கிபி1942ல் பிரிட்டிஸின் ஒட்டுமொத்த சர்வாதிகாரத்தை எதிர்த்து வந்த, ஜெர்மனியின் நாசிக் தலைவரான அடால்ப் ஹிட்லரை சந்தித்தார்.

அன்றைய காலகட்டத்தில் உலகிலேயே நம்பர்:1 உளவுத்துறையாக கருதப்பட்டது, ஹிட்லரின் S.S Group intelligent service என்கிற அமைப்பாகும். நேதாஜி அவர்கள் ஹிட்லரிடம் இருந்து S.S Group செயல் திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து கொண்டு.

தன்னுடைய இந்திய தேசிய இராணுவத்தில் அதேபோல ஒரு Special bureau serviceஐ உருவாக்கினார். அதற்கு ஹிட்லரின் உளவுப்பிரிவு பெயரான S.S Group என்றே பெயருமிட்டார்.

இந்த S.S Group உளவுப்பிரிவில் தமிழ் நாட்டை சேர்ந்த அமரர் இராமலிங்க #ஓந்திரியர் அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இராமலிங்க ஓந்திரியர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் திருமங்கலகோட்டை  கிராமத்தை சேர்ந்தவர். ஓந்திரியர் முதலில் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஸ் இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்பு நேதாஜியின் INAவில் நேதாஜி முன்னிலையில் மலேசியாவில் இணைந்தார்.

மிகவும் அறிவுக்கூர்மையுள்ள ஓந்திரியரை, நேதாஜி அவர்கள் தன்னுடைய உளவுப்பிரிவான S.S Groupல் இனைத்துள்ளார். இந்த உளவுப்பிரிவானது பிரிட்டிஸ் இராணுவத்தின் படையின் போக்கு,ஆயுத கிடங்குகளின் பகுதிகள், போர் கப்பல்களின் நடவடிக்கை உள்ளிட்டவைகளை கண்காணித்து, அவைகளை அழிக்கும் செயல்களை #Mission மூலமாக திட்டம் தீட்டி செயல்படும்.

மலேசியாவில் இருந்து ஓந்திரியரை, நேதாஜி அவர்கள் ஒரு முக்கியமான உளவு சேவைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். பிரிட்டிஸ் உளவுப்பிரிவால் ஓந்தியரை அடையாளம் கண்டு அவரை மடக்கிபிடித்தது.

இறுதியாக ஓந்திரியருக்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தால், மரண தண்டனை அளிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

வீரமும்,விவேகமிக்க ஓந்திரியரின் உயிரானது தாய்நாட்டின் சுதந்திரத்தை கண்களால் பார்க்காமலே, விண்ணுலகத்திற்கு பிரிந்து சென்றது.




கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்