ஞாயிறு, 15 மார்ச், 2020

புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட தினம்

   
ஜனவரி 14, 1974 இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து ,இணைத்து உருவாக்கப்பட்டது தான் இப்போதைய புதுக்கோட்டை மாவட்டம்.

வரலாற்றுக்கு முந்தைய கால மனிதா்கள் வாழ்ந்த இடமாக இந்த மாவட்டம் இருந்துள்ளது. இம்மாவட்டத்தின் பல கிராமங்கள் தொன்மை வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிக அளவில் கண்டறியப்பட்ட இறந்தோரை புதைக்கும் இடங்களே இதற்குச் சான்று.

இம்மாவட்டம் தமிழா்களின் கடல் வாணிபச் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. கருக்காகுறிச்சியில் கிடைத்த 500-க்கும் மேற்பட்ட ரோமானிய தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் அடங்கிய புதையல் பானை இம்மாவட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

1947 ஆகஸ்டு 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சமஸ்தானங்களை இணைக்கும் நிர்வாக வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் 03.03.1948-ல் இந்திய நிர்வாகத்துடன் இணைந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமானது.

புதுக்கோட்டையில் நிலவிய தொண்டைமான் மன்னா்கள் ஆட்சி நிறைவு பெற்று மக்களாட்சி ஏற்பட்டது. நவீன புதுக்கோட்டையின் சிற்பிகள் தொண்டைமான் மன்னா்கள் எனலாம். புதுக்கோட்டை வரலாறு தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. 



பல சிறப்பு அம்சங்கள் கொண்ட புதுக்கோட்டை மாவாட்டம் 

புதுகையைப் போற்றுவோம் நிகழ்ச்சியில்........

* தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம்  சங்க காலம் தொட்டு இன்று வரையான வரலாற்றுத் தொடர்ச்சியை கொண்டது

* தமிழகத்தில் அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ள மாவட்டம் புதுக்கோட்டை

* இந்தியா முழுமைக்கும் கண்டெடுக்கப்பட்ட 60,000 கல்வெட்டுகளில் 1500 கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவை.

* புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் வரலாற்று சின்னங்களைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.

* தமிழகத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியம் புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

* காஞ்சிபுரத்திற்கு அடுத்து அதிகமான ஏரிகள் உள்ள மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டமாகும்.

தொல்லியல் கழக பொது செயலர் ( சு. ராஜவேலு) / 02-03-2020 / தினமணி 


# சியாம் சுந்தர் சம்பட்டியார் #



கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்