திங்கள், 3 ஜூன், 2019

ஆரியபட்டி மாவீரர் கருத்தனஞ்சித்தேவன்




போர்களத்தில் திருமலை நாயக்கரால் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட மாவீரர் கருத்தனஞ்சித்தேவன்.

கருத்தனஞ்சித்தேவன், சங்கராயி, அவர்களுக்காக நடுக்கல் ஆரியபட்டியில் உள்ளது. அதில் குறிப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளது. இதனை பற்றிய தகவல்களை திரு. மூவேந்திரன் பாண்டியன் குறிப்பிடும் போது, ஆரியபட்டி என் தாய் வழி முன்னோர்கள் தான் கருத்தனஞ்சித்தேவன், சங்கராயி என்றார். 

ஆரியபட்டி கள்ளர் நாடுகளில் ஒன்று, இங்கு நடந்த ஒரு நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கிழக்குசீமை.

"ஆரியபட்டி" கோயில் கும்பிடும் பெண்ணை "நல்லத்தம் பட்டி" கோயில் கும்பிடும் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். இவர்களுக்கு சுமார் பத்து வருடம் குழந்தை இல்லை. 

இதனால் அந்த பெண் தனது தந்தை வீட்டு தெய்வமான "ஆரியபட்டி கோயிலை" வணங்கி பிள்ளை வரம் கேட்கிறார்.அதற்கு நன்றி கடனாக தனது பரம்பரைக்கு "ஆரியபட்டி" கோயில் குலசாமியின் பெயரை வைப்பதாக வாக்கு கொடுக்கிறார்.

கள்ளர் நாட்டை பொறுத்த வரை அடுத்த நாட்டு குலசாமியின் பெயரை வைப்பது மிகப் பெரிய கௌரவ பிரச்சனை ஆகும்.

வேண்டுதலுக்கு பின் குழந்தை பிறந்து விடுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு "ஆரியபட்டி"குலசாமி பெயர் வைக்க மாப்பிள்ளையின் பங்காளி "போத்தம் பட்டி நாடு" கடும் எதிர்ப்பு தெரிவித்து சண்டை நடந்து அவர்களை தனியே பிரித்து விடுகிறார்கள். 

அதற்கு பின் "நல்லத்தம் பட்டி" வாரிசுகள் இன்று வரை "ஆரியபட்டி" தாய்மாமன் குலப் பெயரான கல்யாணி, நல்ல பெருமாள், வீரம்மாள், அங்கம்மாள், என்று பெயர் சூட்டுகின்றனர்.


மேலும் "ஆரியபட்டி கோவில்" கும்பிடும் பிரிவினர் மான் கறி சாப்பிட மாட்டார்கள். 

அதற்கு காரணம் ஆரியபட்டி குல தெய்வம் "கல்யாணி சாமி" சிறு வயதில் "மான்பால்" குடித்து வளர்ந்தாக உசிலை கள்ளர் புராணம் கூறுகிறது. இதனால் மானை தாயாக பாவித்து மான் கறி சாப்பிட மாட்டார்கள்.


ஆரியபட்டி A.இராமநாதபுரம் அருள்மிகு கலியானகருப்பு சாமி கோவில்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்