வியாழன், 23 மே, 2019

கள்ளர் கங்காணி




மலேசிய தோட்டங்களில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த கங்காணிகள் மிகுந்த ஆளுமை செலுத்தினர். ஆண்டுதோறும் நடந்த விழாக்களின் போது 'துரைமார்கள் என்று அழைக்கப்பட்ட ஐரோப்பிய தோட்ட மேலாளர்கள் கங்காணிகள் முன்னாடி செல்வதற்கு பின்னாடி சென்றார்கள்.



அதே போல் பர்மாவில் போய் வட்டிக் கடை வைப்பது, இரண்டு எஸ்டேட் தொடர்பான வேலைகள் செய்வதில், முதலாவதில் செட்டியார்களும், இரண்டாவதில் கள்ளர் இன மக்களும் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் கலந்தே இந்தத் தொழில்களைச் செய்தனர் என்றே சொல்லலாம். எப்படி என்றால், முதலில் போய் வட்டிக்குக்கொடுப்பது, பின் தொழிலைக் கற்றுக் கொண்டு தனியே கடை வைத்து, கணக்குத் தெரியாத  பர்மிய மக்களை ஏமாற்றி பொருள் சேர்த்து பின் அவர்களின் இடங்களை பெரும் அளவில் வாங்கிக் குவிப்பது/ ஆக்கிரமிப்பது. பின் அவர்களையே அடிமைகள் ஆக்கி வேலை செய்ய வைப்பது அல்லது இங்கே இருந்து அடிமைகளாக மக்களைக் (பெரும்பாலும் தலித்துகள்) கொண்டு சென்று வேலை வாங்குவது.  இந்த இடத்தில்தான் அடிமைகளை "மேய்க்கக்" கூடிய, சற்றும் இரக்கம் அற்ற, உடல் உரம் மிக்க கங்காணிகளின் தேவை ஏற்படுகிறது.  அதற்காக செட்டிநாட்டில் இருந்து பெரும் அளவில் ஆதிக்க சாதியினர் அனுப்பப்பட்டனர்.

எஸ்டேட் வைத்து இருந்தவர்கள் "முதலாளி வீடு" என்றும், இந்தக் கங்காணிகள் "சோக்ரா" என்றும் சொல்லப்பட்டனர். இந்தக் குடும்பங்கள் இன்றும் "சொக்கரா வீடு/ வகையறா" என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இதை தவிர கணக்கு வழக்குப் பார்ப்பதற்காக என்று சிலர் அனுப்பப்பட்டனர். அவர்கள் கணக்கு பிள்ளை வீடு என்று அழைக்கப்பட்டனர்.



பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்