வியாழன், 23 மே, 2019

காவல் தெய்வம் மாவீரர் வங்காருதேவர்



16 ஆம் நூற்றாண்டில் பிறமலை நாட்டில் இருக்கும் பாப்பாபட்டி நாட்டில் பத்துதேவர் வகையாறவின் ஒன்பதாவது தேவா் கீரிதேவா் வகையாறவில் முத்த மகன் வங்காருதேவர்.

இன்றும் கீரிப்பட்டியில் கோவில் கட்டி வணங்கி வருகிறார்கள் அவரது வகைறாக்கள். இவர் வளரி வீசுவதில் வல்லவராக திகழ்ந்தவர். இவர் கன்னிவாடி சண்டையில் வளரி வீசியதாக வழக்கு கதைகள் கூறுகின்றன.

உத்தப்ப நாயக்கனூர் ஜமினில் கன்னிவாடி ஜமீன்தார் சம்பந்தம் செய்திருந்தார். ஒரு நாள் விருந்தின் போது கன்னிவாடியார் உத்தப்ப நாயக்கனூர் ஜமினிடம் தங்கள் ஊரில் ஒரு நாவிதன் வாள் வீச்சில் கெட்டி காரனாக இருப்பதாகவும், கத்தியை காட்டி வரி வசூல் செய்வதாகவும் , அவனை அடக்க நல்ல வீரன் யாரும் உண்டா எனக் கேட்டார்.


வங்காரத்தேவருக்காக வரையப்பட்ட பிரத்தியேகமான படம்


உத்தப்பநாயக்கனூர் ஜமீந்தார் தர்பாரை கூட்டி விசாரித்ததில் வங்கார தேவரை பற்றி கேள்வி பட்டு அவனை வரச் சொல்லி பனங்காய்க்கு குறி வைத்து வீச சொல்லி சோதித்தார். ஆனால் வங்கார தேவரோ ஜமீந்தார் தலைக்கு குறி வைத்து தலை பாகையை வளரியால் தாக்கி சோதனையில் வெற்றி பெற்றார் பின் ஜமினில் வேலைக்கு சேர்த்து, கன்னிவாடிக்கு அனுப்புகிறார்.

கன்னிவாடி ஜமின்தாருக்காக ஒரு நாவிதனை வளரி வீசி தலையை துண்டாக்கினார். முடிவில் அந்த நாவிதனின் தாயார் இவர் மீது விஷ மருந்து தடவி விட, உடல் வெந்து இறந்தார்.

ஐயா சுந்தரவந்தியதேவன் எழுதிய "பிறமலைகள்ளர் வாழ்வும் வரலாறும் நூலில் இவர் வரலாறு இருக்கிறது.



இவர் நடுகல் கீரிபட்டியில் உள்ளது. 1980 களில் இவர் வாரிசுகளால் கோயில் எழுப்பபட்டுள்ளது.

எனதருமை முக்குலத்து உறவுகளே நமது முன்னோர்களின் வரலாறு தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நாமும் அவர்களை போல் வாழ வேண்டும் .உடல் வலிமை, போர் பயிற்சி , அறிவியல் சார்ந்த ஆயுத நுணுக்கம், நாட்டு மருத்துவம் , மாந்திரிகம் , ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் தான் நம் முன்னோர்களை மன்னவரும் , மற்றவரும் மதித்தனரே அன்றி அற்ப பணத்தால் அல்ல.
எனவே நாம் மேற்சொன்னவற்றை பயில முயல வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் கொடுத்து செல்ல வேண்டும். இது அடியேனின் வேண்டுகோள்.


மேலக்கால் சுளிமாயன், விராலிமாயன் கருவாட்டுப்பொட்டல் போரிலும், " ரெட்டை வீரத்தேவன்" என்பவரும் சிறந்த வளரி வீரர்கள் ஆவர்.
மன்னர் மருது பாண்டியர்கள் வளரி வீசுவதில் சிறந்தவர்கள் தான். ஆனால் மேற்சொன்னவர்கள் மருது பாண்டியர்களுக்கு 300 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர்கள்.

பதிவு

அன்புடன்
ரா. கார்த்திக் ராஜா MBA .பொது செயலாளர்அகில இந்திய தமிழர் வளரி சங்கம்மாமன்னர் சிலம்ப கூடம்சென்னை.Mob. 9840329669

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்