வியாழன், 23 மே, 2019

கௌரி வல்லபத்தேவரை அரியணையில் அமர்த்திய தொண்டைமான்




" மருதுபாண்டியரிடம் இருந்து தப்பி வந்த கௌரி வல்லபத்தேவருக்கு அடைக்கலம் கொடுத்து, மீண்டும் சிவகங்கை அரியணையில் ஏற்றியவர் தொண்டைமான்! கௌரி வல்லபத்தேவர், தொண்டைமான் பாதுகாப்பில் அறந்தாங்கியில் இருந்தபோது சின்ன சுப்ப ஐயர் என்பவர் கௌரிவல்லபத்தேவருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் கௌரி வல்லபத்தேவர் , மாணிக்காத்தாள் எனும் கள்ளரின பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.பிற்காலத்தில் சிவகங்கைக்கு திரும்பிய கௌரி வல்லபத்தேவர், சின்ன சுப்ப ஐயரை, தனது பிரதானியாக நியமித்தார்.கௌரி வல்லபத்தேவர்- மாணிக்காத்தாள் தம்பதிக்கு, குழந்தை பாண்டிய தேவர், நமச்சிவாய தேவர், ராமசாமித்தேவர் எனும் மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களுக்கு சிறுவயல், முடிகண்டம், குருந்தம்பேட்டை ஆகிய கிராமங்கள் அளிக்கப்பட்டது.


தற்ப்போதைய சிருவயல் ஜமீன்தார் இந்த குடும்பத்தினரே. 1801ல் தொண்டமான் பட்டம் உள்ள ஈசநாட்டுகள்ளர்கள் 200 குடும்பங்களை கொரிவல்லபரின் உதவிக்காக தொண்டமான் அனுப்பியுள்ளார். அவர்கள் பெரும்பாலும் அரண்மனை பணியில் இருந்தவர்கள். சிவகங்கை -இளையான்குடி சாலையில் கூத்தான்டன் என்ற ஊரில் வசித்துவருகிறார்கள். சிலர் தங்களது மானிப நிலங்களில் சில கிராயங்களில் வாழ்கிறார்கள். பெரும்பாலும் தற்போது உயர் அரசு அதிகாரிகளாக உள்ளார்கள். காவல்பணிகளிலும் சிலர் உள்ளார்கள். 1960களிலேயே அவர்களில் ஒருவர் நாசாவில் விஞ்ஞானியாக பணிபுரிந்துள்ளார்.




சிவகங்கை மேதகு ராணி சாஹிபா கௌரிவல்லப D.S.K.மதுராந்தகி நாச்சியார் 

------sivaganga zemindary its origin and litigations (1899)

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்