வெள்ளி, 22 மே, 2020

காட்டுப்பட்டி ராமையா சேப்ளார்





கரைபடியாத கரம்..
புதுக்கோட்டையின் புகழ்..
எளிமையின் சிகரம்..

காட்டுப்பட்டி ராமையா சேப்ளார்

மிகவும் செல்வச் செழிப்பான பெரிய குடும்பத்தில் பிறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தமிழக முதலமைச்சர் காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் 10 ஆண்டு காலம் முக்கியமான பல்துறை அமைச்சராக இருந்தவர்.

அரசின் திட்டக்குழு தலைவர் மத்திய அரசின் பல குழுக்களுக்கு தலைமை வகித்து இந்திரா காந்தியின் அன்புக்கு பாத்திரமானவராக இருந்து தனது சொந்த வாழ்க்கைக்காக தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். 

நலம் குன்றிய நிலையில் மிகவும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு மறைந்த பின்னர் நண்பர்கள் உதவியுடன் அவரது ஈமச்சடங்கு நடைபெற்றது.


  • சுதந்திர போராட்ட தியாகி
  • அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்
  • 1957 & 1962 திருமயம் சட்டமன்ற உறுப்பினர்
  • 1957 தமிழக மின்துறை அமைச்சர்
  • 1962 தமிழக பொதுப்பணி மற்றும் உணவுத்துறை அமைச்சர்.
  • 1972 தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்
  • 1975 மாநில திட்ட கமிஷன் தலைவர்.

தேவர் ஐயா இறந்த போது அமைச்சர் இராமையா அஞ்சலி செலுத்த பசும்பொன் சென்றார். சென்றவருக்கு பயங்கர அதிர்ச்சி. தேவர் வீட்டில் மின்சார கனெக்சன் இல்லை. மிகவும் வருந்தி, உடனே மின் இணைப்பு கொடுக்கச் செய்தார். தானாடா விட்டாலும் தன் தசையாடும் அல்லவா. இன்று கூட நீங்கள் பசும்பொன் வீட்டு மின்சார இணைப்பு எண்ணை செக் செய்து பாருங்கள். தேவர் இறந்த மறுநாள் தான் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பது தெரியும். அமைச்சர் இராமையா செய்த நல்ல காரியம் இது.














இவரைப் போன்ற காங்கிரஸ் கட்சியின் தியாக சீலர்களின் நூற்றாண்டு விழாவை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.
நமது அரசும் விழா எடுத்து போற்ற வேண்டும் .

எளிமையான அமைச்சர் காட்டுப்பட்டி திரு.வி. ராமையா சேப்பிளார் அவா்கள் நூற்றாண்டு விழா ஜீன் 1, 2020.


வாழ்க அமரர் காட்டுப்பட்டி வெ.ராமையா அவர்களின் புகழ்.

என்றும் என்றென்றும் போற்றுவோம். நினைவு கூறுவோம்.

ஐயா வெ.ராமையா சேப்பிளார் அவர்களின் மகன் ரா. நாராயணசாமி சேப்பிளார் அவர்கள். 

சேப்ளார் குடும்பத்தினர் 108 ஆண்டுகளுக்கு மேலாக புரட்டாசி விரதம் இருந்து ஸ்ரீராமாயணம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 1908 ஆம்  ஆண்டு இவர்களின் முப்பாட்டனார் திரு வெள்ளைசாமி சேப்ளார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 









Old Pic 1948 SRI CHINNAYA SEPULAR JP  hosted Delegates meeting with PRIME MINISTER OF INDIA -JAWAHARLAL NEHRU with BRITISH Delegates





நா. சுந்தர்ராஜ் சேப்பிளார்



நா. சுந்தர்ராஜ் சேப்பிளார் அவர்கள் மூன்றுமுறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். 

தமிழ்நாட்டில் நடந்த மூன்று தேர்தல்களிலும் அதிக வித்தியாசத்தில் வென்ற சாதனையை படைத்துள்ளார், மேலும் ராஜீவ்காந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 2 வது (இரண்டாவது) அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றார்

இவர் 
எட்டாவது மக்களவை (1984-89), 
ஒன்பதாவது மக்களவை (1989 - 91), 
பத்தாவது மக்களவை (1991 - 94) 

உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் திருமையம் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும் இருந்துள்ளார்.


இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 இல் திருமெய்யம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 இல் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



Spouse(s)Retinam
ChildrenRadha, RAJAH SUNDHARARAJ
ResidenceRajagopalapuram, Pudukkottai (Tamil Nadu).
He hold record of winning in high margin in all three Lok shabha election in Tamil Nadu and he won 2nd (second) highest vote difference in India next to Rajiv Ratna Gandhi.

Electoral victoriesEdit



Indian ParliamentEdit

YearVoters
In 1000
Voter Turnout (% age)Candidate NameParty
1991748.1971.4Sundararaj N.INC
1989787.8574.73Sundararaj N.INC
1984653.8781.05Sundararaj N.INC[3]

Tamil Nadu state assemblyEdit

YearWinning CandidateParty
1977N. SundarrajIndian National Congress
1980N. SundarrajIndian National Congress (Indira)


















ராஜா சுந்தராஜ் சேப்ளார்












கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil  பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்