ஞாயிறு, 10 மே, 2020

கல்விக்குடி சின்னதுரை மழவராயர்




திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது ஆலங்குடி. இங்கு சிவன், ஆபத்சகாயேஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு உரிய தலமாக இக்கோவில் வழிபடப்பட்டு வருகிறது. இங்கு குருபகவான், ரிஷிகளுடன் வீற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும். பொதுவாக சிவன் கோவில்களில் சிவனும், அம்மனும் மட்டுமே தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பார்கள்.

ஆனால் நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு பதிலாக குருபகவான் என அழைக்கப்படும் குருதெட்சிணாமூர்த்தியே தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.

சித்திரை திருவிழா நாட்களில் பல்வேறு விதமான அலங்காரத்தில் சாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.




அதைதொடர்ந்து உற்சவர் குருதெட்சிணாமூர்த்தி (குருபகவான்) தேரில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். தேரை கல்விக்குடி சின்னதுரை மழவராயர் குடும்பத்தினர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின்னர் தேர் 4 வீதிகளிலும் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்