வியாழன், 21 நவம்பர், 2019

கே.கந்தசாமி தேவர்



தேவர் திருத்தொண்டராக திகழ்ந்தவர் அய்யா கே.கந்தசாமி அவர்கள்.1971 ல் நடைபெற்ற உசிலம்பட்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர். அதன் பின்னர் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். அடிப்படை பார்வர்டுபிளாக்காரர். தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கு பிறகு கள்ளர் கல்வி கழகத் தலைவராக இருந்தவர். பார்வர்டுபிளாக் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் களத்தில் இறங்கி குரல் கொடுத்தவர். 



மதுரை மாவட்டத்தில் காமராஜர் பெயரில் பல்கலைக்கழகம் அமைவதற்கு கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்தவர்.வீரம் விளைந்த மதுரை மண்ணில் காமராஜர் பெயரில் பல்கலைக்கழகம் அமைவதை ஏற்கமுடியாது என போராடியவர்.

1977 ல் உசிலை சந்தை திடல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இடமிருந்து வலம் கந்தசாமி பி.ஏ.பி.எல். எம்எல்ஏ

முதலில் காமராஜர் பல்கலைக்கழகம் என பெயர் வைக்கப்பட்டது. பின்னர் உசிலம்பட்டி மக்களின் பலத்த எதிர்ப்பினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது. இதன் சம்பந்தமாக சட்டமன்றத்தில் அய்யா கே.கந்தசாமி அவர்கள் முதல்வர் எம்ஜிஆரை பார்த்து, கருவாட்டுக்காரி என்ற கதையினை கூறி நீ கூத்தாடி பய தானே உனக்கு பெயர் மாற்றுவதெல்லாம் சாதாரணமான ஒன்று. ஆனால் எங்களுக்கு அப்படியில்லை என்று பேசி முதல்வரையே அச்சமடைய செய்தவர்.

19 02 1973 முக்கையாத்தேவர் எம்பி.. கந்தசாமி எம்எல்ஏ.. சந்தனம் சேர்மன்..இவரது காலத்தில
சிந்துபட்டி யி‌ல் திறக்கப்பட்ட அரசு பள்ளி


உசிலம்பட்டியில் உள்ள அரசு மருதுவமனையை கட்டியவர், அதோடு உசிலம்பட்டி மேற்கு கணவாய் சாத்தா கோவிலை நிருவி அதற்க்கு குடமுழுக்கு வைத்தவரும் ஐயா கந்தசாமி M,L,A,அவர்கள்.

தேவரின் திருத்தொண்டர் அய்யா கே.கந்தசாமி அவர்களின் வரலாற்றினை போற்றுவோம். 


பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்