ஞாயிறு, 17 நவம்பர், 2019

தும்மக்குண்டு நாடு, உடையான்பட்டி கப்பட்டையத்தேவன் பெரியகருப்பத்தேவன், தவசிதேவன்




கருமாத்தூர் கரிசல்பட்டி சின்னுடையான் மகன் சின்னாங்கி (சின்னாங்கன்) உடையாத்தேவன் தங்கி இடத்தின் ஊர்தான் உடையான்பட்டி அது மறுவி உடையாம்பட்டி என்றானது.

தும்மக்குண்டு நாடு, உடையான்பட்டி சிந்துபட்டி பெருமாள் கோயில் காவலின் போது ராணி மங்கமா காலத்தில், இஸ்லாமியர்களுடன் சண்டையிட்டு இறந்த மாவீரர்கள் பெரியகருப்பத்தேவனும் அவரது அண்ணன் கப்பட்டையனும் அவரது தம்பி தவசிதேவனின் புடைப்பு சிற்பங்கள்.






இறந்தவர்களில் இருவர் திருமணமானவர்கள், இருவரின் மனைவிகளும் உடன்கட்டை ஏறியுள்ளனர். அதனால்தான் இரு பெண்களும் உள்ளனர். இரு பெண்களும் உடன்கட்டை ஏறி தீயில் மாண்டபோதும் அவர்களின் சுண்டு விரல் வேகவில்லை.

ஒருவருக்கு திருமணமாகாததால் தனியாகவும் வைத்து உடையான பட்டி கொப்புடையான் வகையறா வழிபடுகிறார்கள் . (தற்போது சிந்துபட்டியில் பெருமாள் கோவில் உள்ளது..தும்மக்குண்டு பஞ்சாயத்தில் .உள்ள T. பெருமாள் கோவில்பட்டியில் உள்ள பெருமாள் கோவில் ) தற்போது கோவில் இருப்பிடம் தும்மக்குண்டு.

கொப்புடையானாத்தான் கப்பட்டையன் வகையரா என்று சொல்லுகிறார்கள், கோவில் பெயர் பட்டாங்கோவில் என்பதால் கப்பட்டையான் என்பது சரியாகவும் இருக்கலாம். ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன, காலப்போக்கில் அழிந்துவிட்டன.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தாத்தாவின் பெயர் சின்னாங்கி உடையத்தேவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்