சனி, 11 ஜனவரி, 2025

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை


மாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. அரையன் < அரசன் என வருவது போலவும், அரசன் > ராசன் என வருவது போலவும் மா-அரையன் என்னும் சொல் மாராயன் என மருவும்.

"பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" எனபது கல்வெட்டில் வரும் தொடர். அரசன் பெறும் விருது. மாராயம் பெற்றவன் நெடுமொழி கூறுவான். சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர். வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது.

பண்டைய தமிழர் வரலாற்றில் தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இந்த விருதுகள் அரசவையில் வழங்கிப் போற்றப்பட்டன.


எட்டி – சிறந்த வணிகர்
காவிதி – சிறந்த உழவர்
கிழார் – ஊர்த்தலைவர், புலவர்
கிழான் – ஊர்த்தலைவன், சிற்றரசன்
தலைக்கோல் - சிறந்த அவைக்கூத்து நாட்டியக்காரி
தாமரை (விருது) – சிறந்த தெருக்கூத்து விறலி
மாசாத்துவன் –  தரைவணிகரின் தலைவன்
மாநாய்கன் – கடல்வணிகரின் தலைவன் 
மாராயம் – சிறந்த படைவீரன்


சங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச்சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.

செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாறாகும்.

சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. 


முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.


1) பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.


2) பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.


3) பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.


இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.


இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:-


அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.


கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.

4) பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன், தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.

கள்ளர் குல பட்டங்கள் ஏதோ 15 ஆம் நூற்றாண்டில் தான் கள்ளர்களுக்கு வந்தது போலவும் , கள்ளர்கள் பிற சாதியினர் பட்டங்களை திருடி விட்டார்கள் என்றும் பலர் புலம்புவதை காணமுடிகிறது. இவர்கள் இதற்கு ஆதாரமாக 1950 ஆம் ஆண்டுவாக்கில் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) எழுதிய, விஜய நகர வரலாறு என்ற நூலில் 15 ஆம் நூற்றாண்டில் தான் கள்ளர்களுக்கு பட்டங்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்கு அவர் எந்த ஆதாரமும் கொடுத்துள்ளாரா என்றால் அதில் எதுவும் இல்லை. 

150 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டீசார் குறிப்பிட்ட கள்ளர்களின் சில வம்சபட்டங்கள்:

தஞ்சை வாழ் கள்ளர்கள் பல்வேறு வம்சங்களை தங்களுள் கொண்டுள்ளனர்.  இத்தகைய வம்சங்கள் பல்வேறு பட்டங்களால் அழைக்கப்படுகின்றது "

தஞ்சை கள்ளர்களின் பிரபலமான பட்டங்களில் சில :-

தஞ்சிராயர்
வன்னியர் 
சேர்வைக்காரர்
மேனாட்டரையர்
சிறுநாட்டரையர்
சோழகர்
சோழங்கதேவர்
காலிங்கராயர்
வாண்டையார்
தென்கொண்டார்
அண்ணவிசாரர்
தொண்டைமான்
இராசாளியார்
பொன்னப்பூண்டார்
மழவராயர்
காடவராயர்
களாக்குடையார்
பல்லவராயர்
மாதுராயர்
பன்னிக்கொண்டார்" 



சோழ தேச கள்ளர்கள் பல்வேறு வம்சங்களாக தங்களது பட்டங்களை சுமந்து பழங்கால பெருமைகளுக்கு சான்றாக வாழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு பட்டமுடையவர்கள் திருமண முறையில் இணைவதை காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர்.  

கள்ளர்கள் பல்வேறு பட்டப்பெயர்களை சுமந்து வாழ்ந்து வருவதை 150 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களே தங்களது ஆவணங்களில் பதிவு செய்திருப்பது மிகச்சிறப்பிற்குரியது......

A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883


பல சாதியினருக்கும் பல பட்டங்கள் உள்ளன, அதில் ஒரே பட்டம் பல சாதியினர்க்கும் உள்ளது. ஆனால் கள்ளர்களுக்கு உள்ளது போல சங்க இலக்கியங்களிலும் , தொன்மையான தமிழ் வார்த்தைகளிலும் உள்ள பட்டங்கள் யாருக்கும் இருக்கிறதா  என்றால் கண்டிப்பாக இல்லை.

உதாரணமாக, இங்கே கீழே உள்ள சில பட்டங்கள் வேறு சாதியினருக்கு உண்டா என்றால் கண்டிப்பாக யாருக்கும் கிடையாது.  

1) அம்பர்த்தேவன்
2) அம்பராண்டான்
3) அருவாநாட்டான்
4) உறந்தைராயன்
5) காவிரிநாடன்
6) மண்வெட்டிக்கூழ்வாங்கி
7) புத்திகழிந்தான்
8) முனையதரையன்
9) ஆர்சுத்தியார்
10) சிவலிங்கதேவர்
11) விழுப்பரையர்
12) நாட்டார்
13) களரி
14) பார்புரட்டியார்
15) நாயக்கவாடியார் (நக்கன்வாடி)
16) குடைகிழார்
17) ஆழியான்


இதைப்போல பழமையான தமிழ் சொல்லில் உள்ள பட்டங்கள் இன்னும் பல உண்டு. இதற்கான விளக்கத்தையும், சொல்லின் பழமையும் கீழே காண்போம்.

கள்ளர்களில் உள்ள ஒவ்வொரு பட்டங்களிலும் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஒரே ஊரிலும் அல்லது அதே பட்டங்களில் 200 கிமீ அப்பாலும் உள்ளனர். கள்ளர் பட்டங்களின் பெயர்களால் பல ஊர்களே இன்று சிறந்து விளங்குகின்றன.

இவர்கள் சொல்வது போல கள்ளர்கள் 15 ஆம் நூற்றாண்டளவில் தான், இத்தனை பட்டங்களை அதாவது பழமையான தமிழ் சொல்லில் உள்ள பெயர்களை கூட, தங்கள் பட்டங்களாக தமக்கு தாமே சூட்டி கொண்டார்கள் என்றால் அது நகைப்புக்குரியது மட்டுமல்லாமல், அது அவர்களின் அறியாமை.

மூன்றாம் இராஜராஜ சோழன்
புதுக்குடியான ரா[ஜெ]ந்திர சொழமங்கலத்துக்‌ காணி உடைய கள்ளரில்‌ பெரும[£]ன்‌ அழகனான மணவாள முத்தரயன் 


கல்வெட்டில் பட்டங்கள் கள்ளன் என்பதற்கு - கல்லன் என்று எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறில் நெடில் என்று மாற்றி எழுதப்படும். அதைபோல் ‘ள’ கரம் ‘ல’ கரமாவது உண்டு . கல்லன் என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள் தீயவன் என்று மட்டுமே. தீயவன் என்பது கல்வெட்டில் பொருந்தாது. ற-ர, ந-ண, ல-ள தவறுதலாக ஒன்றிற்க்கு ஒன்றை மாற்றி இலக்கண பிழையோடு எழுதியே வந்துள்ளனர். அதற்க்கான ஆதாரம் கீழே உள்ளன.


மொழி ஒப்பியலும் வரலாறும் என்ற நூலில் 

தேவர் என்பதே தெவர்  என்று குறிக்கப்பட்டுள்ளது

கிபி 1226!! காஞ்சீபுரம்!! சுந்தரபாண்டியன் கால கல்வெட்டில் உள்ள நமது கள்ளர் இன பட்டங்கள், நேரடியாகவே கல்லன் என்றே குறிக்கின்றது.


இந்த கல்வெட்டில்

1) கிளிமங்களமுடையன் கல்லன்
2) கடம்பராயன் கல்லன்
3) காங்கேயன் கல்லன்
4) மாகதராயன் கல்லன்

என்று உள்ளது. கல்லன் பாடகம் என்று வருகிறது. பாடகம் என்பது நில அளவை குறிக்கும். இதற்கான உதாரணமாக ஒரு கல்வெட்டு 

குருவித்துறைக் கோவில் கல்வெட்டு 

1 சோழ குலாந்தகச்ச
2 (துர்வேதி) மங்கலத்(தி)ல் இ
3 ன்னாயனார் சிவநாமத்தா
4 ல் அனுபவித்து வருகிற
5 பாடகம் இருபதாலுள்ள
6 பாடிகாவல் ஸ்ரீ ஸுந்தர பா
7 ண்டிய தேவற்கு யாண்டு
8 20 ஆவது முதல் இன்னா
9 யனாற்கு அமுதுபடியாக
10 க்குடுத்தோம் இவ்வோ

பாடிகாவல் – ஊர், நாடு முதலியவற்றைக் காத்தல்; அதன்பொருட்டுத் தண்டும் வரி. அமுதுபடி – படையல் சோறு 

மேற்படி சதுர்வேதிமங்கலத்து நாயனார் பெயரில் உள்ள இருபது பாடகம் அளவுள்ள நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் வரிவருமானம் பாடிகாவல் செலவினங்களுக்குத் தற்போது பயன்பட்டு வருகிறது. அவ்வருமானம் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரின் இருபதாவது ஆட்சியாண்டிலிருந்து இக்கோயில் இறைவற்கு அமுதுபடிச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் எனக் கல்வெட்டு ஆணை கூறுகிறது. பாடகம் – ஒரு நில அளவு.

இது போல் காங்கேயன் கள்ளன் பாடகத்தில் (அளவுள்ள) நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் என்றே பொருள்.


விழுப்பரையர் (விழுப்பாதராயர்)


விழுப்பரையர் என்ற பெயரான போரில் பல விழுப்புண்களை பெற்ற அரையர் (சிற்றரசர்) என்று அர்த்தம். கோயிலிற் சுவாமி திருமுன்புகணக்கு வாசிக்கும் உரிமையுடைய மரபினன். பாண்டிபதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர் (திருவாலவா. அரும்.).

இந்த விழுப்பரையர் சோழர்களின் சிற்றரசாகவும், முதன்மை தளபதியாகவும் கல்வெட்டுகளில் வருகிறார். 

மேலும் கிபி973ல் ஆட்சி செய்ய உத்தம சோழ மன்னர், விழுப்பரையரின் மகளான “கிழானடியை” திருமணம் செய்து கொண்டார், கிழானடியாரே சோழ நாட்டின் பட்டத்தரசியாக இருந்துள்ளார். இதன்மூலமாக சோழர்களின் வரலாற்றில் விழுப்பரையரின் முக்கியத்துவம் எவ்வளவு அளப்பரியது என அனைவரும் அறியலாம்.

சோழர் காலக் கல்வெட்டுகளில் விழுப்பரையரின் போர் வெற்றிகளையும், கொடைகளையும் பல இடங்களில் நாம் அறியலாம். அப்படிப் பட்ட விழுப்பரையரின் கல்வெட்டில் தன்னை கள்ளர் என்றே குறித்துள்ளார்.

ஆம் கிபி 1222 ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு,

கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள். இதில் தெளிவாக விழுப்பரையரை கள்ளர் என்றே குறிப்பிடுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக 

“கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.






அவரை தொடர்ந்து அவருடன் கையெழுத்திட்ட மற்ற அதிகாரிகளும் தங்களை கள்ளன் என்றே கையொப்பம் இட்டுள்ளனர்.

“கள்ளன் பெரிய தேவன்”
“கள்ளன் பெருமாள்”
“கள்ளன் சீராளத் தேவன்”

இதில் இருவர் தேவர் பட்டம் தாங்கி நிற்பது மற்றொரு சிறப்பு.





கிபி 1043 ல் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் திருக்கோயிலூரில் கிடைத்த கல்வெட்டில் " கிழக்கடையான் கல்லன்" எனும் பெயரில் ஒரு நில அளவு முறை இருந்துள்ளது. 

சான்றோர்களின் பெயரில் நில அளவுமுறைகளை வைப்பது அக்கால நடைமுறை. இந்த காலத்தில் ஒருவரது பெயரில் நாணயம், ஸ்டாம்ப் போன்றவை வெளியிடுவது போல. இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டையில் பல்லவராயர்கள் பெயரில், பல்லவராயர் படி எனும் அளவுமுறை கிபி 16-18 ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்துள்ளது. 


கிழக்கிடையான் என்பது கள்ளர் பட்டமாகும். கிழக்கடையான் எனும் பட்டமானது இன்று திரிந்து கிளக்கடையார், கிளாக்குடையார் என கள்ளர் இன மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற நடிகை மனோரமா கிளாக்குடையார் வம்சத்தில் உதித்தவர். இப்பட்டமுடையவர்கள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வடக்குக்கோட்டை எனும் பகுதியிலும், பாபநாசம் வட்டத்தில் புலவர் நத்தம் எனும் பகுதியிலும் வாழ்கின்றனர்.


கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் "'வன்னியர் மிசிரிகண்டன் பொன்னம்பலநாத தொண்டைமான்என்று கல்வெட்டு ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-845,ஆலங்குடி ) கூறுகிறது .

“ இந்த நாடுகளையும் அறியாமல் செங்கீரையில் பிள்ளன் விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே ...'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-818, திருமெய்யம் )

மேலும் கள்ளர்களுக்கு "நாயக்கர்" என்ற பட்டமும் இருக்கிறது. கள்ளர் பாளையகாரர்களில் நாயக்கர்பாளையம் (அய்யம்பேட்டை) சாவடி நாயக்கர் புகழ்பெற்றவர்கள். இடங்கை வலங்கை வரலாறு என்ற நூலில், பக்கம் - 86 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


"அய்யம்பேட்டை அப்பு நாயக்க னென்கிற கள்ளனும், பெருமாக்கூர் அப்பு நாயக்க னென்கிற கள்ளனும், மேல்மாந்தை அப்பு நாயக்க னென்கிற கள்ளனும்".

நாவாய் மூலம் வணிகம் செய்யும் கடல் வணிகருக்கு நாவிகன், நாயகன் போன்ற பெயர்களும். சாத்துகள் மூலம் தரைவழி வணிகம் செய்யும் வணிகருக்கு சாத்தன் அல்லது சாத்துவன் என்ற பெயர்.

நாயக்கர் பாளையம் சாவடி நாயக்கர்கள், நாயக்க மற்றும் மரட்டிய மன்னர்களுக்கு போர் உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று பல சாதிகள் வரலாற்றில் உயர்வான பட்டங்களை, அதாவது வன்னியன், உடையான், முதலியான், முத்தரையன்,  என்ற பட்டங்களை தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள். பள்ளி சாதியினர் வன்னியன் என்றும், வலையர், முத்துராஜா போன்ற 29 பிரிவுகள் முத்தரையன் என்றும் , இந்த நூற்றாண்டில் தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள்.


முக்குலோத்தோரை தேவர் என்ற ஒற்றை சாதியாக தமிழக அரசு மற்றம் செய்ய தஞ்சை கள்ளர்கள் மற்றும் சிவகங்கை அகமுடையார் எதிர்ப்பு தெரிவித்ததால் மாற்றவில்லை.

நஞ்சுண்டோன்‌” (திருவாலவா. 30:9), 2. கள்ளரில்‌ ஒரு பிரிவினர்‌



நட்டாழ்வார்




தமிழ் பல்கலைக்கழக இணைய தளத்தில் சில பட்டங்களுக்கு தரும் விளக்கம், கள்ளர் இனத்தை மட்டுமே குறிக்கும் என்கிறது. அவை

1) வாண்டையார்



2) இராசாளியர்



3) அண்ணூத்திப்பிரியர் / ஐநூற்றுவர் 



4) அங்கராயர்



5) நாட்டார் 




கீழே உள்ள பட்டம் கள்ளர்களுக்கும் மற்றும் பல சாதிகளுக்கு உள்ளதாக காட்டுகின்றது.

1) வன்னியன்



2) சோழகன்




3) தேவர்



4) பல்லவராயர்




5) தொண்டைமான்





6) மழவராயன்






7) காங்கேயன்




8) முத்தரையன்






9) கொங்கராயர்



கள்ளர்களின் பட்டங்கள் பழமையானது என்பதற்கு சில தரவுகள் 

அம்பர்த்தேவன்:

அம்பர் என்பது மிகவும் பழமையான சொல். 
அம்பர்த்தேவன் என்ற பட்டம் எதன் அடிப்படையில் கள்ளர்களுக்கு வந்தது என்று அறிய முடியவில்லை. ஆனால் இலக்கியங்களின் வரும் மிகவும் பழமையான சொல்லாகும்.

அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் பெயர் ஆகும். மேலும் அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், குறிக்கப்படுகின்றது. அம்பர் பெருந்திருக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவில் பெயராகும்.

அம்பர் கிழான் அருவந்தை என்பவன் மிகவும் புகழ்பெற்றவன்.


பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை.

புறநானூறு - 385. காவிரி அணையும் படப்பை!
"காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்.
நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே"

பொருள் : காவிரி பாய்ந்துநெல் விளையும் அம்பர் அருவந்தை அவன் பெயர். புலவர் அவனை வாழ்த்தினார். அவன் நீண்டநாள் வாழவேண்டும். கள்வர் கோமான் புல்லி அரசன் ஆளும் வேங்கட மலையில் பொழியும் மழைத்துளியின் எண்ணிக்கையை விட அதிக நாள் வாழவேண்டும். 

சம்மட்டி




சம்மட்டிமக்கள்‌ பெ, (1) உறவினரல்லாதாரோடு மணம்‌ புரிந்து: கொள்ளும்‌ கள்ளர்‌ இனம்‌ (சம்மட்டியைக்‌ கொண்டவர்‌)

அருவாநாட்டான் :

காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அதனை ஆண்டவர்கள் அருவாளர் எனப்பட்டனர். காலம் 2000 ஆண்டுகள் முந்திய பெயர். இன்றும் கள்ளர்களில் அருமைநாட்டார், அருவாநாட்டார் பட்டமுடையவர்கள் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.



உறந்தைராயன் :

உறையூர் (சோழருறந்தை யவையத்து (புறநா. 39).) உறையூரின் பழமையான பெயர். தஞ்சை உறந்தைராயன் குடிக்காடு : இவ்வூரில் மக்கள் தொகையில் கள்ளர் பிரிவினரே பெரும்பான்மையினர். அங்கு உறந்தைராயர் பட்டமுடையவரே முதன்மையானவர்கள்.







காவிரிநாடன் :

கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.

சிலப்பதிகாரம் பாடலில் "எல்லா நாம் காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்’-சிலம்பு-2915 




"காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்”-சிலம்பு-1-5,6

திருச்சியில் இன்றும் காவிரியார், காவிரிநாடான் பட்டம் உள்ளவர்கள் உள்ளனர்.


மண்வெட்டிக்கூழ்வாங்கி :

மிக பழமையான தமிழ் சொல், தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். கூழைமன் ஒரு சோழ அரசன் பெயர். கூழ்பான் தண்டலம் (திருக்கழுக்குன்றம்) ஓர் ஊர். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டியில் கூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் : பொன் (திவா.) )

பசும்படியார் :

பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும்வழங்கலாயிற்று. பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறு என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் அமைந்துள்ள இடம் கள்ளர் பசுபதிகோயில் என்றழைக்கப்படுகிறது.

கள்ளர்களின் பட்டங்களான பசும்படியார் என்பது சிவனின் மற்றொரு பெயர் ஆகும் மேலும் சங்க இலக்கியங்கள் "பசும்படி " என்பது மனங்கொண்ட ஒரு "இலை" என்று போற்றுகிறது. 

பசும் (பொன்) + படி (உலகம்) + உடையார் = பசும்படியுடையார் (அ)  பசும்படியார்.

திருக்குறளில்  "படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும்"  என்பதன் விளக்கமாக நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்





பசும்படியார் இன்றும் சோழமண்டலத்தில் சிறப்புடன் வாழ்கின்றனர். தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முதல்வர் அன்பு பசும்படியார் ஆவார். இவரது தலைமையில் தமிழக அரசின் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியும் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். 

பாப்புரெட்டி & பாப்பரையன் :

மிக பழமையான தமிழ் சொல்

இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். மண்ணுக்காக நடந்த மிகப் பெரிய யுத்தத்தின் கதைதான் மகாபாரதம் : மகா பார் அதம். மகா என்றால் பெரிய, பார் என்றால் நிலம் அல்லது பூமி, அதம் என்றால் போர்.

புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்:

மிக பழமையான தமிழ் சொல்

பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன் ( அறிவு மிகுந்தசோழன்) . புத்திகழிச்ச : அறிவு மிகுந்தபுத்தி என்பது மருவி என்று புற்றி என்றாகிவிட்டது.  கழி என்பதற்கு மிகுந்த என்றும் கழிந்தோர் என்பதற்கு வலிமையானவர் என்றும் அகராதி விளக்கம் தருகிறது 




முனையதரையன், முனையதிரியர் :


சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:
“புனையும் குழலாள் பரிந்தளித்த
பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே
ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் “

திருக்கண்ணபுரம், இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.

மக்கள் செல்வர் T.T.V. தினகரன் முனையதரையர் அவர்கள், இன்று புகழ்பெற்ற அரசியல் தலைவர் ஆவார் 

ஆர்சுத்தியார் :

சோழர் அணிந்து கொள்ளும் பூ ‘ஆர்’. இந்த ஆர் என்னும் பூ ‘ஆத்திப் பூ

“நெடுந்தண் “ஆர”த்து அலங்கு சினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும். நற்றிணை 292-௨
ஆர் மரத்தில் தொடுத்திருந்த தேனை எடுப்பதற்காக ஆர் மரத்தை வளைத்தனர். அப்போது ஆர் மரத்தைப் பற்றியிருந்த தமாலக்கொடி நழுமுத்தரையன்விட்டது.

ஆர் (ஆத்திப்பூ) 

புறப்பொருள் வெண்பா மாலை, மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்கள் சூடுதலைப் பற்றிக் கூறுகிறது. அதில் "அலங்கல் அமர்அழுவத் தார் " காவிரி நாடனான சோழன் ஆத்திமாலை சூடுவான்.

ஆர் என்பது ஆத்திப்பூவைக் குறிக்கும். சோழனுக்குரிய அடையாளப் பூ ஆத்தி. இதனைப் போர்க்காலத்தில் சூடுதல்.

சுற்றியார் :  சூடிக் கொள்வது



குடர் நெடுமாலை சுற்றி - குடல்களாகிய நெடிய மாலையைச் சுற்றி


சோழனின் போர்மறவர்கள் ஆர் (ஆத்திப்பூவை) சுற்றி ( சூடி) போர்க்களத்திற்கு போவார்கள். அந்த போர்மரபினரின் வழிவந்தவர்கள் ஆர்சுத்தியார்கள்.

நரசிங்கதேவர், நரங்கியதேவர் :

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில் கல்வெட்டு:

அரசு: வாணாதிராயர், ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி : செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........

மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.......

புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான விராலிமலையில் உள்ள ஊர்களான கட்டலூர், பெரம்பூர் ஊரை மையமாக கொண்டு அந்த ஊரில் உள்ள முதல் கல்வெட்டில் சிவன்கோவில் தெற்கே பொரித்துள்ள வாசகப்படி பெரம்பூர் அரசு நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.


இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.


ள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார்.





பண்டாரத்தார் :

நூலகத்தைச் சோழர் காலத்தில் 'பண்டாரம்' என்று அழைத்தனர். பண்டாரம் என்றால் கருவூலம் என்று பொருள். சரஸ்வதி, கல்விக்கான கடவுளாகக் கருதப்படுவதால், நூல்கள் நிறைந்த இடம் 'சரசுவதி பண்டாரம்'. பண்டார வீதி என்றால் அரச வீதி என்று பெயர்.  பாளையவனம் மற்றும் கந்தர்வகோட்டை கள்ளர் குல அரையர்கள் பட்டமாக இன்றும் பண்டாரத்தார் பட்டமாக உள்ளது. 'கொற்றச் சோழர்' எனப் போற்றப்பட்டவர்கள் குடந்தை நகரில் அரசுச் செல்வத்தைப் பாதுகாத்தனர். இது பண்டைய கருவூலம் அதிகாரிகளின் பட்டமாக இருந்துள்ளது.  




தமிழ் பல்கலைக்கழக இணைய தளத்தில் சில பட்டங்களுக்கு தரும் விளக்கம் :

அம்பலகாரன் : 

கிராமத் தலைவன், கள்ளர் மற்றும் வலையர் பட்டப் பெயர்.


கொங்கராயர்: 

கொங்கராயபாளையத்திலுள்ள உடையார் சாதியைச் சார்ந்த பாளையக்காரர்களின் பட்டப் பெயர் மற்றும் கள்ளர் சாதிவகையினரின் பட்டப்பெயர்.




செம்புலி : 


பழுப்புநிறமுள்ள புலிவகை மற்றும் கள்ளர் சாதியில் ஓர் உட்பிரிவு



சேதிராயர் : 

தமிழகத்தின் நடுநாட்டரசர், திருவிசைப்பாவாசிரியருள் ஒருவரான சிவனடியார் மற்றும் கள்ளர் பட்டங்களிலொன்று


சேர்வை : 

அகம்படியர்க்கும், மறவர் கள்ளர் மற்றும் வன்னிய சாதி உள்வகுப்பினர்க்கும் வழங்கும் பட்டப்பெயர்.


சோழகன் : 

கோயம்புத்தூர்க் காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான் மற்றும் கள்ளர் பட்டப் பெயர்களுள் ஒன்று.


தொண்டைமான் : 

புதுக்கோட்டையரசர் பட்டப்பெயர், கள்ளர் மறவர் முதலிய சிலசாதியாரின் பட்டப்பெயர்.


நாட்டார் : 

நகைசெய்ய (திருவாச), நாட்டு மகாசனம், நாட்டாண்மைக்காரர், கள்ளர் மற்றும் செம்படவர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்.


பல்லவராயன் : சோழர் தம் சேனாபதிகளுக்கு அளித்துவந்த பட்டங்களுள் ஒன்று, கள்ளர் மற்றும் ஓச்சர் முதலிய சிலசாதிகளின் பட்டப் பெயர்.

ராயர் : இராயர் மற்றும் கள்ளர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்.


பகவராயர் : 




வன்னியன் : 

ஒரு சாதி, கள்ளர் மற்றும் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப் பெயர்.

நாயக்கவாடியார்



அங்கராயர் : 

பெருங்குறிஞ்சா. (சித். அக.), கள்ளர் பட்டங்களுளொன்று.


அச்சுதப்பண்டாரம் :

கள்ளர் பட்டங்களுளொன்று.

அச்சுதப்பண்டாரம் : அரிசி  கருவூல தலைவர் 

அச்சுதம் - அரிசி

பண்டாரம் - கருவூலம்

சொல்
அருஞ்சொற்பொருள்
அச்சுதம்கெடுதலின்மை ; அழிவற்றது ; அறுகும் அரிசியும் கூட்டி அணிவது ; அட்சதை .

மழவராயன் : 

கள்ளர்முதலிய ஒரு சார் சாதியினரின் பட்டப் பெயர்.


🎆

முதலியான் :

சோழர் ஆட்சியில் தலைவர்களையும், உயரதிகாரிகளியும் முதலி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. முதலி என்ற சொல்லுக்கு முதன்மையானவர் என்று பொருளாகும். இவர்களுள் சேனைமுதலி, படைமுதலி, அகம்படிமுதலி என் மூவகை முதலிகள் உண்டு. தேவார ஆசிரியர்களை மூவர் முதலிகள் என்று அழைப்பதுமுண்டு. முதலியான் காலப்போக்கில் திரிந்து முதலியார் என்று வழங்கலாயிற்று. இப்பட்டம் சோழர் படையுடன் தொடர்பு கொண்டதாக அறியப்படுகிறது. இப்பட்டமுடைய கள்ளர் இனத்தவர் தஞ்சை குருங்குலம், சுந்தராம்பட்டி, குளிச்சப்பட்டு, வாகரைகோட்டை,ஒரத்தநாடு ஈச்சங்கோட்டை, மன்னார்குடி மூவரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், கீழ்க்கரம்பையம், நீடாமங்கலம்,திருவரங்கநல்லூர், பட்டுக்கோட்டை கிளாமங்கலம் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். ஒரத்தநாடு முதலிப்பட்டி என்னும் ஊரில் முதலியார் பட்டமுடையோர் முத்ன்மையானவர்களாகவுமதிகமாகவும் வாழுகின்றனர்.


கள்ளரின பட்டங்கள் .(Trichy gazetteer --1907)



பூனையர்

திருமெய்யம் பகுதியில் பூவனைக்குடியில் பூதி களறி அமருன்றி என்னும் முத் தரையன் குடைவித்த புஷ்பவனேசுவரர் கோயிலுண்டு . பூனையர் என்ற பட்டப் பெயர் மேலும் சான்றாக அமையும். பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது.

பூலுவர் / பாலுவர் 




சானையர்




காலிங்கராயர்




ஆய்வு : 

சியாம் சுந்தர் சம்பட்டியார், 

சிவம் சோழங்கராயர்,  
பரத் கூழாக்கியார்

நன்றி : உயர்திரு. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.

சர்வதேச கள்ளர் பேரவை.

சனி, 4 ஜனவரி, 2025

கள்ளர் மரபினரின் வரலாற்று குறிப்புக்கள் உள்ள புத்தகங்கள்




Please Click Here / தயவுசெய்து இங்கே சொடுக்கவும்👇




வியாழன், 2 ஜனவரி, 2025

Mackenzie Manuscript Vol 1

 


Sadāšiva Kurraladéva, one of the descendants, refused to give a girl of his family in marriage to the Pandya king and so was forced to leave the country along with Jayapratāpa Marudappadēva and take shelter at Sundarapāņdyapuram. Here they exterminated the Kallars of Kodakkainàdu and obtained as reward from the Raya, the pāļaiyam of Sundararājapuram to be enjoyed by them equally, while Sadāšiva was renamed by Raya as Varaguna Raya Perumpulikkurrala déva.

(சதாசிவ குற்றாலதேவர், பாண்டிய மன்னருக்கு தனது குடும்பத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார், எனவே ஜெயபிரதாப மருதப்பதேவருடன் நாட்டை விட்டு வெளியேறி சுந்தரபாண்டியபுரத்தில் தஞ்சம் புகுந்தார். இங்கு அவர்கள் கோடக்கைநாட்டின் கள்ளர்களை அழித்து, ராயரிடமிருந்து வெகுமதியாக, சுந்தரராஜபுரத்தின் பாலையத்தைப் பெற்று, அவர்களால் சமமாக அனுபவிக்க முடிந்தது, அதே நேரத்தில் ராயர் சதாசிவத்தை வரகுண ராயர் பெரும்புலிக்குற்றால தேவர் என்று மறுபெயரிட்டார்.)



When the Padusha invaded the territory of the Poligars they left the place for the south and settled in Vīrašinganādu after destroying the Kaļļars ofthe locality. The Pāņdya king Kāšikuņda Parākrama Rāja of Tenkāši approving of their occupation permitted Sti Vallabha raja Kugrala déva to enjoy Vīrašinganādu as pāļaiyam and also made a grant of Naduvakuricci with the adjoining villages as reward for wiping out the Kaļļars (of Kaļakkādu) and the Kurumbas, besides honouring him with the title Parákrama Pāņģya Kuttāla déva. Krsnarāya Marudappa déva drove out the Kaļļars of Neccür Karumarai nadu and got the country as Pāļaiyam from king Ugra Pandya.
பாதுஷாக்கள் பாளையக்காரர்களின் பிரதேசத்தை ஆக்கிரமித்தபோது, ​​அவர்கள் அந்த இடத்தை விட்டு தெற்கே சென்று வீரசிங்கநாட்டில் குடியேறினர். தென்காசியைச் சேர்ந்த பாண்டிய மன்னர் காசிகுண்ட பராக்கிரம ராஜா அவர்களின் ஆக்கிரமிப்பை அங்கீகரித்து, ஸ்தி வல்லப ராஜா குக்ரல தேவரை வீரசிங்கநாட்டை பாலையமாக அனுபவிக்க அனுமதித்தார், மேலும் கள்ளர்கள் (களக்காடு) மற்றும் குரும்பர்களை அழித்ததற்கு வெகுமதியாக நடுவக்குறிச்சியை அருகிலுள்ள கிராமங்களுடன் மானியமாகவும் வழங்கினார், மேலும் அவருக்கு பராக்கிரம பாண்ய குத்தல தேவர் என்ற பட்டத்தையும் வழங்கினார். கிருஷ்ணராய மருதப்ப தேவர் நெச்சூர் கருமரை நாட்டின் காலியர்களை விரட்டியடித்து, உக்ர பாண்டிய மன்னரிடமிருந்து பாலையம் என்ற நாட்டைப் பெற்றார்.




Pallavola in the Nellore district assisted Krsna Raya of Madura Samasthānam in destroying the Kaļļars who plundered the villages in the districts of Maļava nadu and Tirthagiri in Trichinopoly and in subduing Patcāyi (?) and others who had taken arms against the kind, and obtained from him the grant of Maļavanāģu alias Turaiyur Sīmai as sarvamānya. Recognising the king even in the guise ofa courtesan in the course of spying the city (Sodanai) they got from him the title Raya vé sya Cujanga.

நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லவோலா, மதுரா சமஸ்தானத்தைச் சேர்ந்த கிருஷ்ண ராயர், மழவ நாடு மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள தீர்த்தகிரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சூறையாடிய கள்ளர்களை அழிக்கவும், பட்சாயி (?) மற்றும் அந்த இனத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மற்றவர்களை அடக்கவும் உதவினார், மேலும் அவரிடமிருந்து மழவநாகு என்ற துரையூர் சீமை என்ற சர்வமான்ய பட்டத்தைப் பெற்றார். நகரத்தை (சோடனை) உளவு பார்க்கும் போது ஒரு வேசியின் வேடத்தில் கூட ராஜாவை அங்கீகரித்ததால், அவர்கள் அவரிடமிருந்து ராயர் வே சியா சுஜங்க என்ற பட்டத்தைப் பெற்றனர்.


Kumara Errama Reddi was a contemporary of Tirumalai Nāyaka, ruled for 35 years. One of his descendants was Linga Reddi a contemporary of Muttala Kadir Nayaka. He constructed a golumantapa at Tiruvidaimarudūr (Madhyārjuna) and granted provisions for the pusya festival. He suppressed the Kallars and got as reward Padi-kaval lands fetching 3000 kalams of paddy gardens, 1000 var@has. of which a portion was set apart for worship in the Srirangam temple. He made a mantapa in the Saptarsišvara temple in Lalgudi and ruled for 35 years.

குமார எர்ரம ரெட்டி திருமலை நாயக்கரின் சமகாலத்தவர், 35 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது வழித்தோன்றல்களில் ஒருவரான லிங்க ரெட்டி முத்தால கதிர் நாயக்கரின் சமகாலத்தவர். அவர் திருவிடைமருதூரில் (மத்யார்ஜுனன்) ஒரு கோலுமண்டபத்தைக் கட்டினார், மேலும் புஷ்ய விழாவிற்கு ஏற்பாடுகளை வழங்கினார். அவர் கள்ளர்களை அடக்கி, 3000 கலம் நெல் தோட்டங்கள், 1000 var@has விளையும் படி-காவல் நிலங்களைப் பரிசாகப் பெற்றார். அதில் ஒரு பகுதி ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. லால்குடியில் உள்ள சப்தர்ஷீஸ்வரர் கோயிலில் ஒரு மண்டபத்தை உருவாக்கி 35 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.





attached to Mathura in the north. Refusing to contract marital relations with the Padsha of Delhi he migrated to Ānegondi. He cured the daughter of Vira Narasimha Ràya of her disease and was appointed Commander of the forces of Raichur and Anegondi. He also received the honour of Kumāravargam. His great grandson Nāgama Nāyaka suppressed ihe rebellious Kaļļars in Kongu Dhārāpuram and Kolumam and constructed Periyapatti, Elamuttür and other villages and a fort in Talaficimalai which were permitted by Tirumalai Raya to be enjoyed by him as Pāļaiyappattu.


வடக்கில் மதுராவுடன் இணைந்தார். டெல்லியின் பாட்ஷாவுடன் திருமண உறவுகளை ஒப்பந்தம் செய்ய மறுத்து, அவர் ஆனேகொண்டிக்கு குடிபெயர்ந்தார். வீர நரசிம்ம ராயரின் மகளின் நோயைக் குணப்படுத்தினார், மேலும் ராய்ச்சூர் மற்றும் ஆனேகொண்டி படைகளுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். குமாரவர்கம் என்ற கௌரவத்தையும் பெற்றார். அவரது கொள்ளுப் பேரன் நாகம நாயக்கர் கொங்கு தாராபுரம் மற்றும் கொழுமத்தில் கலகக்கார கள்ளர்களை அடக்கினார், பெரியபட்டி, எலமுத்தூர் மற்றும் பிற கிராமங்களையும், தலஃபிசிமலையில் ஒரு கோட்டையையும் கட்டினார், இவற்றை திருமலை ராயரால் பாலையாப்பட்டு அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார்.




T Maravas are said to have sprung from one side ofthe body of the Goddess of Madurai and named by her as Dēvar. In the line of Dēvars were born the illustrious devotees Tiņņan alias Kannappan and Kāliyarāyan alias Kalla Tirumangai Alvar. The legendary accounts of these devotees are given in detail. One Marudappa Déva, of the Marava line residing at Kiļavai Kundayan Kottai annihilated the Kaļļar tribes’ of Tiruccali and. Pallimadam 4imai and was rewarded by the Pandya king with the grant of his simai as Pàlaiyam besides the title Vijayavaraguņarāma Pandya Marudappa Dēva. His descendents in succession ruled the estate, all bearing the name Marudappa Déva. The 9th Poligat Jayapratāpa Marudappa Dēva declined the offer of the Pandya king, his overlord, to marry his daughter and this event, is described in a number of stanzas said to be quoted from Madurai Kalambakam, Kàyil Kalambakam and other works. He suppressed the Kodagai people who invaded the Sundararājapuram simai and was rewarded with the grant of the simaias a Palaiyam. The 17th Poligar Krsņarāya Marudappa Dēva migrated to the south on account of the troubles of the Muslims, destroyed the Kaļļars of Visinganadu and the Kurumbars of Neccir, Kurumarai, and Tadatagai. The king Ugrapandya having heard of the achievements of the Poligar bestowed on him the last three places as Pa laiyam called Ūttumalai besides the title Tennāttu Raya. The 25th Poligar was appointed guard of the Madurai fort with the grant of tisaikāval of the tract of the country bounded by Tovalai (S), Sankara Nayinarkoyil (N), Gangai Koņdān (E) and Tenkāši (W). Navanitakrsna Marudappā Dēva, the 33rd successor helped Muhammad Yusuf Khān sent by


மறவர்கள் மதுரை தேவியின் உடலின் ஒரு பக்கத்திலிருந்து தோன்றியதாகவும், அவளால் தேவர் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேவர் வரிசையில் கண்ணப்பன் என்கிற திசானும் கள்ள திருமங்கை ஆழ்வார் என்கிற காளிராயனும் பிறந்தனர். இந்த பக்தர்களின் புராணக் கணக்குகள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. கிழவாய் குண்டையன் கோட்டையில் வசித்த மறவா வரிசையைச் சேர்ந்த மருதப்ப தேவன் ஒருவன் திருச்சாளி காகர் பழங்குடியினரை அழித்தொழித்தார். பள்ளிமடம் 4இமை மற்றும் விஜயவரகுசராம பாண்டிய மருதப்ப தேவன் என்ற பட்டத்துடன் பாண்டிய மன்னனால் பாண்டிய மன்னனால் பாளையம் என்ற சிமையும் வழங்கப்பட்டது. அவரது வழித்தோன்றல்கள் மருதப்ப தேவா என்ற பெயரைக் கொண்ட தோட்டத்தை ஆண்டனர். 9வது பொலிகட் ஜெயபிரதாப மருதப்ப தேவர், தனது மகளை மணக்க தனது தலைவனான பாண்டிய மன்னனின் வாய்ப்பை மறுத்துவிட்டார், இந்த நிகழ்வு மதுரை கலம்பகம், கைல் கலம்பகம் மற்றும் பிற படைப்புகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டதாகக் கூறப்படும் பல சரணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அவர் கோடகையை அடக்கினார். சுந்தரராஜபுரம் சிமையின் மீது படையெடுத்த மக்கள், பாளையத்தைச் சேர்ந்த சிமையர்களின் மானியத்தைப் பெற்றனர். 17வது பாளையக்காரர் கிருஸ்ணாராய மருதப்ப தேவர் முஸ்லிம்களின் தொல்லைகள் காரணமாக தெற்கே குடிபெயர்ந்தார், விசிங்கநாட்டின் கள்ளர்களையும், நெச்சீரின் குரும்பர்களையும், குருமரையையும் அழித்தார். மற்றும் தடாடகை. பாளையக்காரரின் சாதனைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னர் உக்ரபாண்டியன், தென்னாட்டு ராயன் என்ற பட்டத்தைத் தவிர, பாளையம் ஊட்டுமலை என்று அழைக்கப்பட்ட கடைசி மூன்று இடங்களையும் அவருக்கு வழங்கினார். தோவாளை (எஸ்), சங்கர நயினார்கோயில் (நி), கங்கை கோட்டான் (இ) மற்றும் தென்காசி (வ) எல்லைகளுக்கு உட்பட்ட நாட்டின் திசைகாவல் மானியத்துடன் மதுரைக் கோட்டையின் காவலராக 25 வது பொலிகர் நியமிக்கப்பட்டார். 33 வது வாரிசு நவனிதாகிருஷ்ண மருதப்பா தேவா அனுப்பிய முகமது யூசுப் கானுக்கு உதவினார்.




Madiyaralagattévan put an end to the Kallars by a strong hand - + and ruled over the Nālukēttai $imai in peace. He installed his brother Poyyaraļagattēvan over Arungulam and the surrounding territory.

மதியரளகத்தேவன் ஒரு வலிமையான கையால் கள்ளர்களை முடிவுக்குக் கொண்டு வந்து - + நாலுகேட்டை $இமை மீது அமைதியான ஆட்சி செய்தார். அவர் தனது சகோதரர் பொய்யரளகத்தேவனை அருங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் மீது நியமித்தார்.





some stigma is attached to the children born of such parents. If the husband dies before performing the second ceremony, the body of the dead man and also the woman are placed upon a seat. and Sikku and other ceremonies are performed.as in the formal marriage. Then the *jēli being removed from the woman, she is considered a widow and allowed to take another husband. The custom of tying tāli and the celebrations of the marriage at a later period obtains among all sects of Maravas, and also among the people called Agambadiyars. Tt is also common to the Kaļļar castes throughout the Madurai area but the Kallars of Tondaminar country, Visanga Nadu and of the 18 pālayams attached to the Tanjore country do not observe the custom.

அத்தகைய பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில களங்கங்கள் ஏற்படுகின்றன. இரண்டாவது சடங்கைச் செய்வதற்கு முன்பு கணவர் இறந்துவிட்டால், இறந்த ஆணின் உடலும் பெண்ணும் ஒரு இருக்கையில் வைக்கப்படுவார்கள். சிக்கு மற்றும் பிற சடங்குகள் செய்யப்படுகின்றன. முறையான திருமணத்தைப் போலவே. பின்னர் பெண்ணிடமிருந்து *ஜெலி அகற்றப்பட்டால், அவள் விதவையாகக் கருதப்பட்டு வேறொரு கணவரை மணக்க அனுமதிக்கப்படுவாள். தாலி கட்டும் வழக்கம் மற்றும் பிற்காலத்தில் திருமணத்தைக் கொண்டாடுவது மறவர்களின் அனைத்துப் பிரிவுகளிலும், அகம்படியர்கள் என்று அழைக்கப்படும் மக்களிடையேயும் உள்ளது. மதுரைப் பகுதி முழுவதும் கள்ளர் சாதியினருக்கும் இது பொதுவானது, ஆனால் தொண்டமீனர் நாடு, விசாக நாடு மற்றும் தஞ்சை நாட்டைச் சேர்ந்த 18 பாளையங்களின் கள்ளர் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை.



Maravas are surnamed as ‘Tevar’, Agambaģiyārs as ‘Sevukkaran’ and Kallars as Ambalakkaran. The 18 Poligars attached to the Tanjore country, Udaiyattēvar, chief of Sivagangai and the Tondaiman of Pudukkottai pay obeisance to the Sétupati when they see the latter; for the reason that Tirumalai Nayaka, Raja of Madura and Trigirapuram gave him the title of Tirumalai Sētupati, bestowed on him the requisite insignia of royalty; presented him with a lion-headed palanquin, in which he used to be carried and treated him as one of the Kumāras (Kumāravarga), fed him with rice which he himself had taken first and gave him the title Sētupati. Of the 72 Poligars attached to Madurai and Trigirapura country, Kattabomma Nāyaka of Paficalamkuricci and Cerumalai Nayaka of Kadalakkudi, who are of such inferior castes as Tokkalavar and Tottiyar, fall prostrate before the Sétupati and stand with folded arms without taking their seat in his court. The Sillavar and Tottiyar Poligars of Ettiyapuram and other places, Kondaiyankottai Marava Poligars of Vadakarai, Sokkampatti, Uttumalai, Settur Surandai and Vanniya Poligars of Elayirampaņņai of Sivagiri, Eļāyirampaņņai Talavan kottai and other places do not pay homage to Sētupati. If they come to the Sētupati, he rises in token of courtesy and gives them seat. When the Sētupati goes out in public, the heralds proclaim his panegyrics in which he is referred to as the chief of 72 Poligars and the servant of Tirumalai Nāyaka. So much about the Sētupati and other Sembanāttu Maravar.


மறவர்கள் 'தேவர்' என்றும், அகம்பகியர்கள் 'சேவுக்காரன்' என்றும், கள்ளர்கள் அம்பலக்காரன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். தஞ்சை நாட்டைச் சேர்ந்த 18 பாளையக்காரர்கள், சிவகங்கையின் தலைவரான உடையத்தேவர் மற்றும் புதுக்கோட்டையின் தொண்டைமான் ஆகியோர் சேதுபதியைக் காணும்போது அவருக்கு மரியாதை செலுத்துகிறார்கள்; ஏனெனில் மதுரை மற்றும் திரிகிரபுரத்தின் ராஜாவான திருமலை நாயக்கர் அவருக்கு திருமலை சேதுபதி என்ற பட்டத்தை வழங்கி, அவருக்கு அரச பதவிக்கான தேவையான சின்னத்தை வழங்கினார்; அவருக்கு ஒரு சிங்கத் தலை பல்லக்கை வழங்கினார், அதில் அவர் வழக்கமாக எடுத்துச் செல்லப்பட்டு, குமாரர்களில் ஒருவராக (குமாரவர்கர்) நடத்தப்பட்டார், அவர் முதலில் எடுத்துக் கொண்ட அரிசியை அவருக்கு உணவளித்து சேதுபதி என்ற பட்டத்தை வழங்கினார். மதுரை மற்றும் திரிகிரபுர நாட்டிற்குச் சொந்தமான 72 பொலிகர்களில், தொக்கலவர், தொட்டியார் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பாபிச்சலம்குறிச்சி கட்டபொம்ம நாயக்கரும், கடலக்குடியைச் சேர்ந்த செருமலை நாயக்கரும் சேதுபதியின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து, அவரது அவையில் இருக்கையில் அமராமல் கைகளைக் கட்டி நிற்கின்றனர். எட்டியபுரத்தைச் சேர்ந்த சிலவர் மற்றும் தொட்டியர் பொலிகர்கள், வடகரையைச் சேர்ந்த கொண்டையன்கோட்டை மறவப் பொலிகர்கள், சொக்கம்பட்டி, ஊட்டுமலை, சேத்தூர் சுரண்டை, சிவகிரியின் ஏழாயிரம்பாசையைச் சேர்ந்த வன்னியப் பொலிகர்கள், ஏழாயிரம்பாசாசை மற்றும் பிற இடங்களுக்குச் சயீரம்பசாசை மற்றும் பிற இடங்களுக்குச் சயீரம்பாணிகள் அவர்கள் சேதுபதியிடம் வந்தால், அவர் மரியாதை நிமித்தமாக எழுந்து அவர்களுக்கு இருக்கை வழங்குகிறார். சேதுபதி பொதுவெளிக்குச் செல்லும்போது, ​​அறிவிப்பாளர்கள் அவரது 72 பாளையக்காரர்களின் தலைவன் என்றும் திருமலை நாயக்கரின் வேலைக்காரன் என்றும் குறிப்பிடப்படும் அவரது பாடல் வரிகளை அறிவிக்கிறார்கள். சேதுபதி மற்றும் பிற செம்பநாட்டு மறவர் பற்றி இவ்வளவு.



புதன், 1 ஜனவரி, 2025

தஞ்சிராயர்கள் நடத்தும் - விழித்திருக்க நாடகம்



தஞ்சாவூர்அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் வைகுந்தந் ஏகாதசி நாளில் தூங்காமல் கண் விழித்துத் இருப்பதற்காக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் நடத்தப்படுகிறது. இருநூறு ஆண்டுகளுக்குக் முன்பு, இந்தக்கிராமத்தைச் சேர்ந்தந் நாடகக் கலைஞரான நரசிம்மதாசர் தஞ்சாவூர் அரண்மனையில் நடத்தத்ப்படும் நாடகங்களில் நடித்துத் வந்தார். அப்போது, தனது கிராமத்தில் நடத்துவதற்காக, ஏகாதசி விரதமகிமையை விளக்கும் ருக்மாங்கதன் நாடகக் கதைக்குறிப்புகளை ராணியிடம் நரசிம்மதாசர் கேட்டார். அதற்கு ராணி, 'உங்களால் இதையெல்லாம நடத்தத் முடியாது' எனக் கூறி தர மறுத்துத் விட்டார். இதனால், நரசிம்மதாசர் பால் வாங்கிக் கொண்டுபோய் சத்தியம் செய்தார். இதை நம்பிய ராணியும் அக்கதையை நரசிம்மதாசரிடம் வழங்கினார். அப்போது முதல் காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்குக் மேலாக ஆண்டுதோறும் வைகுந்தந் ஏகாதசி நாளில் ருக்மாங்கதன் சரித்திர நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தந் நாடகத்தில் தொழில்முறை கலைஞர்கள் அல்லாத கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏறத்தாழ இருபது பேர் நடிக்கின்றனர்.  பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே வேடமேற்றுற் நடிக்கின்றனர்.  இதற்காக ஆண்டுதோறும் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையில் சுவடி எடுத்து, ரங்கநாத சுவாமி படத்தின் முன் வைத்துத் வழிபாடு செய்கின்றனர். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குக் நாள்தோறும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நாடக ஒத்திகை, பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

இதில், பங்கேற்கும் அனைவரும் விரதம் இருந்து உணர்வு பூர்வமாகவும், பக்தியுடனும் நடிப்பதால், நாடகமும் தத்ரூபமாகவே இருக்கிக்றது. இதுகுறித்துத் காசவளநாடு கொல்லாங்கரை கிராம நாடக ஒருங்கிணைப்பாளர்கர்ளில் ஒருவரான ரெ.தர்மராஜ், கோ. செல்வக்குமார் ஆகியோர் கூறியதாவது:


''வைகுந்தந் ஏகாதசிக்குக் முந்தையநாளன்று ஒரு வேளை விரதம் கடைப்பிடிக்கப்படும் தசமி நாளில் 'சத்தியவான் சாவித்திரி' நாடகம் நடத்தப்படும். இரண்டாம் நாளான ஏகாதசி நாளில் கிராம மக்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு நேரத்திலும் கண் விழிப்பது வழக்கம். அப்போது, கிராமத்தில் யாரும் தூங்காமல் இருப்பதற்காக 'ருக்மாங்கதன் நாடகம்' அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இரவில் தொடங்கும் இந்தந் நாடகம் தொடர்ந்து விடிய, விடிய நடைபெறும். இந்தந் நாடகத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, மறு நாளான துவாதசி நாளில் விரதத்தைத் முடிப்போம். இதுபோல, தமிழ்நாட்டில் ஏகாதசி நாளில் ருக்மாங்கதன் நாடகம் நடத்துத் கிராமம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. மூன்றாம் நாளான துவாதசி நாள் இரவும் 'சம்பூர்ணர் ராமாயணம்' நாடகம் நடத்தப்படும். இதில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு காண்டத்தில் நாடகம் அரங்கேற்றப்படும். ஒரு ஆண்டு பால காண்டம் நடத்தப்பட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், யுத்தத்காண்டம் என வரிசையாக நடத்தப்படும். தெலுங்கு கலந்த கர்நாடக இசையில் இருந்த இந்தந் நாடகத்தின் படல்களை 75 ஆண்டுகளுக்குக் முன்பு இந்தந் ஊரில் வாழ்ந்த நாடகக் கலைஞரான கோவிந்தசாமி தஞ்சிராயர் தான் தூய தமிழில் மாற்றினார். பாடல்களை தமிழில் மாற்றிய அவர் அக்காலத்தில் இருந்த பிரபல திரையிசைப் பாடல் வடிவில் நாடகத்துக்குக் தகுந்தவாறு பக்திக் பூர்வமான வரிகளைப் போட்டு, புதுமையைப் புகுத்தினார். அதிலிருந்துந் தான் இந்தந் நாடகம் எளிதில் தெளிவாகப் புரியத் தொடங்கியது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவும் பெருகியது.

இவரைப் போன்று கலியபெருமாள் தஞ்சிராயர், வடிவேல் தஞ்சிராயர், வேலாயுத தஞ்சிராயர், தங்கவேல் தஞ்சிராயர், ர் சைவராஜ் தஞ்சிராயர், பெரியதம்பி தஞ்சிராயர், நடராஜன் தஞ்சிராயர போன்றோர் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இப்போது, சுந்தரராஜ் தஞ்சிராயர் முன்னின்று நடத்தித் வருகிறார். எங்களது முன்னோர்களைப்போன்று அடுத்தத் தலைமுறையினரையும் நாடகத்துக்குக் தயார்படுத்தித் வருகிறோம். எனவே, இந்த நாடகம் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், உயிர்ப்புடன் இருக்கும். நாடகத்தில் பாடல்கள் அனைத்தையும் நாங்களே பாடிவிடுவோம். கலைஞர்கள் வசனம் பேசி நடிப்பர். நாடகத்துக்குக் தேவையான மிருதங்கம், ஆர்மோனியம், ஒளி - ஒலி போன்றவை வாடகைக்குக் எடுத்துக் கொள்வோம்.

நாடகத்தில் பயன்படுத்தப்படும் காட்சி அரங்குகள், உடைகள் போன்றவற்றை நாங்களே வைத்துள்ளோம். கிராமத்தில் நாடகம் நடத்துவதற்காக அரசு மேடை அமைத்துத் கொடுத்துள்ளது.

நாடகத்துக்கான செலவையும் கிராம மக்களே செய்து வருகின்றனர். இதற்கான வரவு - செலவு அறிக்கையை ஆண்டுதோறும் துண்டறிக்கைகளில் அச்சிட்டு, வீடு, வீடாகக் கொடுத்து விடுவதால், நாடகத்துக்குக் தேவையான நிதியுதவியும் தொய்வின்றி கிடைத்துத் வருகிறது.

ஏகாதசி நாளில் இரவு கண்விழித்துத் பார்த்தால், மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால், இந்த நாடகத்தைக் காண 500-க்கும் அதிகமானோர் திரள்வது இப்போதும் தொடர்கிறது'' என்றார்.

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்