செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

கள்ளர் பட்டங்கள் - நினைவஞ்சலி பத்திரிக்கையில்



பாச்சுண்டார்

வடகரை ராசராச வளநாட்டை சேர்ந்த பாச்சில் கூற்றம் [லால்குடி] பகுதியை ஆட்சி செய்தவர்களான பாச்சில் ஆண்டார்,  பாச்சிண்டார் பாச்சுண்டார் என பெயரில் புதுக்கோட்டை மாவட்டம் வாரைவளர் வாராப்பூர் நாடு - மாங்கோட்டை கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்...



ஓனையர்


வாண்டையார்

கங்கர்


தென்மலைநாடு பெரம்பூர் மிராசுதார் கண்ணப்பட்டார்



 கோபாலர்

கட்டியார் பட்டம்


பாண்டியர் 


உலங்காத்தார்


பாண்டுராயர்

நல்லிபிரியர்

தஞ்சிராயர்

#காளிங்கராயர்


#மண்கொண்டார்

#நாட்டரையர்

#சோழகர்
#காங்கேயர்
#பாப்புரெட்டியார்
#சனவராயர்



#சேனாபதி 

கண்டபிள்ளை

மூவரையர்

சோழகர்

காடவராயர்

கரைமீண்டர்


துரைக்கொண்டார்

கதைப்பாடியார்






கோதாண்டபிரியர்






ஊர்த்தியார்



#மங்காத்தேவர்










#படியர்

#வாண்டார்






கச்சிராயர்






மூரியர்





மண்டலார்





மூவரையர்








மானமுத்திரியர்
















சோணாடுகொண்டார்

அசையாவீரர்










உறந்தைராயர்







ஓணையர்

சனவராயர்


சேனைக்கொண்டார்

மாதையுண்டார்
















ஆதித்த உடையார்

காடுரார்
மேனாட்டரையர்

பல்லவராயர்


அத்தானியார்


சேனாபதி



காங்கேயர்












கடம்புரார்



ஈழங்கொண்டார்



பூலார்





































































சீர்காழி கள்ளர்படைப்பற்று

 



சோழ மண்ணின் நுழைவாயில் சீர்காழி. பசுமை தொடங்குகிற இடம் அது. ஒருபுறம் காவிரியில் இருந்து கிளை நதியாகப் பிரிந்து வாய்க்காலாகப் பாய்கிற கொள்ளிடம் கொடுக்கும் வளம் மறுபுறம் திருமுல்லைவாயல் கடற்கரை, பச்சைப் பசேல் விவசாயம், அபிராமி அந்தாதி வழிந்தோடும் ஒலிப்பெருக்கிகள் சூழ்ந்த கோயில் கோபுரங்கள் என சீர்காழி  அழகு.

சோழர்கள் சைவம் வளர்த்தவர்கள் என்பதால் அவர்கள் சிவனுக்கென்றே கோயில் நிறுவினர். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதில் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரர் கோயில்கள் சிறந்த சான்றுகள் ஆகும்.

சீர்காழி அருகில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் திருமங்கையாழ்வார் பிறந்தார்.

"ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.

கிபி பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தஞ்சையில் மராத்தியர்களின் ஆட்சி உதித்தது.  கிபி 1684ல் தஞ்சை தஞ்சையில் பட்டுக்கோட்டை கள்ளர் சீமை மீது படையெடுத்து திருபுவனம் வரை அறந்தாங்கி உள்ளிட்ட கள்ளர் சீமையை மராத்தியர் கைப்பற்றியதாக பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தஞ்சையில் பட்டுக்கோட்டை சீமையில் கள்ளர்கள் வரி கொடுக்க மறுத்து கலகங்கள் செய்ததாகவும் கள்ளர்களை அடக்க பட்டுக்கோட்டையில் படை ஒன்றை நிரந்தரமாக நிறுத்தியும் பலன் அளிக்கவில்லை என தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.  தஞ்சையில் இருந்த பதிமூன்று ஜமீன்தார்களும் கள்ளர் மரபினர் என மராத்திய மோடி ஆவணம் குறிப்பிடுகிறது.  தஞ்சையில் இருந்த வளமான விவசாய நிலங்கள் கள்ளர்களின் வசமே இருந்துள்ளதை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.



பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு மோடி ஆவணம் தஞ்சை சமஸ்தானம் வாங்கிய கடன் பற்றிய தகவலை தருகிறது.  அதாவது  அரண்மனைக்கு கடன் கொடுத்தவர்களாக கோதண்டராமய்யங்கார், ஆனந்தய்யா,  கோபால ராவ்,  சின்னையாமுதலி, பச்சையாமுதலி, முத்துமுதலி, வெங்கடாசலமுதலி, ரங்கசாமி நாயக், ரகுமத்கான், மேஸ்தர் கேபர் டானர் முதலோனோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாங்கிய கடனுக்கு கொடுக்க வேண்டிய தொகை  சீர்காழி கள்ளர்பற்று மகசூல் ஐவேஜி "   என மோடி ஆவணம் குறிப்பிடுகிறது.

தஞ்சை சமஸ்தானம் வாங்கிய கடனை அடைப்பதற்கு சீர்காழியில் இருந்த கள்ளர்களின் விவசாய நிலங்களின் மகசூல் மூலம் வரும் தொகையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டதை இது குறிப்பிடுகிறது.

இதன் மூலம் கள்ளர்கள் வசம் பெருமளவான விவசாய நிலங்கள் இருந்ததையும் , அதன் மூலம் அரசுக்கு பெருமளவிலான வருமானம் வந்ததையும்,   அந்த வருமானம் சமஸ்தானத்தின் கடனை அடைக்கும் அளவுக்கு இருந்ததையும் ஆவணங்கள் உணர்த்துகின்றன.

காவல் உரிமைக்காக தஞ்சை கள்ளர்கள் சீர்காழியில் உள்ள பிரிட்டிஸ் அரசின் சிப்பாய்களை கொன்று குவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்தப்பகுதியில் உள்ள கள்ளர்களுக்கு சோழ கடற்படையில் முக்கிய பங்கு வகித்தனர். இங்கு உள்ள கள்ளர்களுக்கு பட்டங்கட்டியார் என்ற பட்டமுடையவர்களாக உள்ளனர்.

கள்ளரின் கடற்படை

 

அருமொழிதேவ பரிவாரத்தார் வீரகள்ளர் ( கல்வெட்டு எண் ARE 41900 of 1929-30 ) சோழ கப்பற்படை


தென் கடல்கடந்து தெற்க்காசிய நாடுகளை வென்றவர்கள் மும்முடிச் சோழமன்னர்கள் கப்பற்படை பிரிவில் கள்ளர்கள் உண்டா என்றால், அதற்கு ஆதாரமாக களப்படையும், கப்பற்படையுமாக போரிட்டு பல்வேறு நாடுகளை வென்ற கள்ளர் படைபற்றின் தலைவர்களின் விருது பெயர்களுடன் இன்றும் விளங்கி வருகிறது. கள்ளர்களுக்கும் கடலுக்கும் தொடர்பு 2000  ஆண்டுக்கு முன்பே உள்ளன.

கள்ளர்களின் வங்கார், நாயக்கர், செட்டி, பட்டங்கட்டியார், சீனத்தரையர் போன்ற பட்டங்கள் கடலின் தொடர்பால் ஏற்பட்ட பட்டங்கள் ஆகும்.

பாண்டிய மன்னர்களின் வணிகத்தைப் பற்றி பண்டைய யாழ்பாண புத்தகத்தில் கிபி 1   ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 2000  ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கும், கிரேக்கர்கள், சீனர்களுக்கும் இடையேயான வணிகம் குறித்து தாலமி அவர்கள் சற்று விரிவாக குறிப்புகள் கொடுத்துள்ளார்.


அதில் பாண்டிய மன்னன் கள்ளர் பெருக்குடி மக்களுடன் முத்து எடுத்தல், மீன் பிடி தொழில் செய்ததாக நேரில் பார்த்த periplus புத்தகத்தின் ஆசிரியரும், கிரேக்க தாலமியும் குறித்துள்ளார்கள். இந்த கருத்துக்கு வழுசேர்க்கும் விதமாக ஏழுகோட்டை நாட்டில் உள்ள அனுமந்தகுடியில் முத்து வணிகம் நடைபெற்றதற்கன ஆதாரம் கிடைத்ததாக மானுட மற்றும் வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணசாமி ஐய்யங்கார் தனது நூலில் விளக்கியுள்ளார்.

மேலும் முத்தூற்றுகூற்றம் தான் பாண்டியர்களின் முத்து தொழில் மற்றும் வாணிகத்திற்குகான நகராக இருந்துள்ளது. இந்த முத்தூற்கூற்றம் என்பது இன்று முத்து நாடு, கப்பலூர் நாடு என்ற கள்ளர் நாடுகளாக உள்ளது, மேலும் இந்த கள்ளர் நாடுகள் கடற்கரை வரை பரவியுள்ளது. இந்த முத்தூற்றுகூற்றத்தின் கடல் பகுதிகள் முழுவதும் பாண்டிய மன்னர்கள் அழியும் வரை, பாண்டிய தளபதி கப்பலூர் அம்பலம் கருமாணிக்க தொண்டைமானிடம் தான் இருந்தது. பிற்காலத்தில் அன்னிய படையெடுப்பில் பாண்டியர் அழிவிற்கு பின்பு கை நழுவிபோனது. மேலும் இன்றும் இராமேஸ்வரம், இராமநாதபுரம் உள்ள மீனவர்கள் தங்களது மீனவ தலைவர்களை பட்டங்கட்டியார் என்று அழைக்கின்றனர்.

அதேபோல் நாகப்பட்டின கடற்கரை மாவட்டத்தில் பட்டங்கட்டியார் என்ற பட்டத்துடன் இன்றும் கள்ளர் பெருங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள் என்று குறிப்பிடத்தக்கது.  திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா குமிளங்காடு, வளவம்பட்டி, புத்தூர் பகுதியில் பட்டங்கட்டியார் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பாவூர்சத்திரம் வெள்ளி மலை கோயிலில், பட்டு பரிவட்டம் மரியாதை இன்றும் நடைபெற்று வருகிறது. 

கள்ளர் நெல்லையில் இன்றும் பட்டங்கட்டியார் என்ற ஜாதியாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தாய்வழி மரபை போற்றுகிறார்கள். பிறமலைக்கள்ளர்கள் உப்பை சாட்சியாக வைத்தே திருமணம் செய்கிறார்கள்.  உப்பு பிறமலை கள்ளர் சடங்குகளில் முக்கியமான ஒன்று. புதுமனை புகும் போதும் உறவுகள் உப்பும் மஞ்சள் இவற்றை முக்கியமாகத் தருகின்றனர். உப்பை சாட்சியாக மேல் நின்று திருமணம் செய்யும் முறை புதுக்கோட்டை கள்ளரும் கடைபிடித்துள்ளனர்.

கிபி 1881ல் மக்கட்தொகை கணக்கெடுப்பில் இடுவகயல் கள்ளர்கள் என்ற பரதவ சாயல் கொண்ட கள்ளர் பிரிவு இருந்துள்ளது.


சனி, 12 டிசம்பர், 2020

ஐஎன்ஏ வில் கள்ளர்கள்

ஐஎன்ஏவின்_கதாநாயகர்கள்




ராஜ் பிஹாரி போஸ் என்பவரால் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட மக்கள் படையானது, கிபி1943ல் வெள்ளையர்களை அவர்கள் போக்கிலே எதிர்த்து நின்று வெல்ல வேண்டும் என்ற தீவிர சிந்தாந்தத்தில் இருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் இந்த மக்கள் படை முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.

இந்த படையில் பெரும்பான்மையாக சேவை புரிந்தவர்கள் சீக்கியர்கள்,தமிழர்கள்,கூர்க்கர்கள்,இஸ்லாமியர்கள்

இந்த தமிழர்களில் பெரும்பாலானோர் தஞ்சை,மதுரை,சிவகங்கை,இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிபி1920களில் சிங்கப்பூர்,மலேசியா,பர்மா,இலங்கை புலம் பெயர்ந்த சென்ற தமிழர்கள். நாட்டின் விடுதலைக்காக, நேதாஜியின் சிந்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு INAவில் சேவையில் இறங்கினர்.

இந்த INAவில் சிறப்பு படைப்பிரிவும், நேதாஜி அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் SS Group எனப்படும் "intelligent bureu"வில் நிறைய தமிழர்களே பணியாற்றினர்.

10க்கும் மேற்பட்ட தேசிய மொழிகள்,5க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும், களரி,வர்மம் உள்ளிட்ட போர் கலைகள், வலியை தாங்கி ரகசியங்களை பாதுகாத்தல், நவீன ஆயுதங்களை கையாளுதல், உளவியல், நடத்தை உளவியல், குழு உளவியல், என கை தேர்ந்தவர்கள் மட்டுமே பணிபுரிய முடியும்.

INAவில் இருந்து பல ஆயிரம் வீரர்களின் தியாகத்தின் மத்தியில் "INAவாளும்,உலக இராணுவம்,இந்திய அரசாங்கத்தால்"

Battles and operations of the Indian National Army என்கிற வெள்ளையர்களுக்கு எதிரான ஆயுத போரட்டத்தில் "22வீரர்களின் உயிர் தியாகம் மற்றும் சேவைகளை போற்றி" அவர்களை இந்திய இராணுவத்தின் கதாநாயகர்கள் என்று பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் தஞ்சை மாவட்டம் திருமங்கலகோட்டையை சேர்ந்த இராமசாமி ஓந்திரியர் அவர்கள் " 
ஆரம்ப காலத்தில் மலேசியாவில் பிரிட்டிஸ் ஆர்மியில் பணிபுரிந்து பின்பு, INAவில் சேர்ந்து நேதாஜியின் உளவுத்துறையான S.S group intelligent wingல் உளவாளியாக சேவைபுரிந்து வந்தார். பின்பு ஒரு முக்கியமான special intelligent assignmentக்காக மையப்புள்ளியாக செயல்பட , இந்தியாவிற்கு வருகை புரிந்து assignment செயல்படுத்திய போது, பிரிட்டிஸ் ஆர்மியால் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

அதேபோல இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமு தேவர் அவர்கள் பினாங்கில் ஜுனியர் கேம்பிரிட்ஸ் பள்ளியில் படித்து பிரிட்டிஸ் ஆர்மியில் பணியாற்றி, பின்பு INAவில் சேர்ந்து நேதாஜியின் S.S group intelligent wingல் உளவாளியாக பணியாற்றி வந்தார். இதனை அறிந்த பிரிட்டிஸார் "பிரிட்டிஸ் மன்னருக்கு எதிராக போரை தூண்ட முயற்சித்த குற்றத்திற்காக தூக்கிலிப்பட்டார்.

நாட்டை நேசிக்கும் இன்றைய இந்திய இளைஞர்களின் நெஞ்சில் குடியிருக்கும் INAவும்,நேதாஜியும் அவர்தம் சிந்தாந்தத்தில் கதாநாயகர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 22வீரர்களில் இரு தமிழர்கள் இருப்பது இவ்வினத்தின் அழியா பெருமையே.

Every Indian should  stand and royal salute to those intelligent shadow gosts, who were served  for INA SS group intelligent wing 🙏

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு





கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்