சனி, 21 மே, 2022

எஸ். முத்துமாயத்தேவர்


அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் 1968ல் மதுரை மாநகர் தலைவராக இருந்தவர். படிப்படியாக மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர் எஸ்.முத்துமாயத்தேவர் .


1980 மதுரை மீனாம்பாள்புரம் பசும்பொன்தேவர் வாசக சாலை நிர்வாகிகளுடன்
எஸ்.முத்துமாயத்தேவர்
யோகானந்தகிரி  ஆகியோர்

மதுரை நகரசபைத்தேர்தலில் 9 வார்டுகளில் போட்டியிட்டு 2 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் எஸ்.முத்துமாயத்தேவர்

செல்லூர் மா.பரமத்தேவர் இரண்டே இரண்டு ஓட்டுகளில் தோற்றார். மற்றவர்களும் அது போல 5,6,8,9, களில் தான் தோற்றிருந்தனர்.

1970 மதுரை கல்பாலம் அகலப்படுத்தப்பட்டது. அப்போது வடக்கு நோக்கி இருந்த யானைக்கல்  யானையை தெற்கு நோக்கி வைத்துவிட்டனர். இதை பழையபடி திருப்பி வைக்க வேண்டும் என்று மேயராக இருந்த  திமுக எஸ்.முத்துவிடம்  கூட்டங்கள் தோறும் சொல்லிப்பார்த்தார்.

அவர்கள் கேட்பதாக இல்லை.
தற்போது மீனாட்சிக்கல்லூரி விரிவாக்கப்பகுதியாகவும்
மாநகராட்சி ஒர்க் ஷாப்பாகவும்  இருக்கும் இடம் சிவகங்கை சமஸ்தானத்திற்கு சொந்தமாக இருந்த இடம். அதில் மாநகராட்சி அலுவலகம் இயங்கியது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மாலை 3,4 மணியளவில் மழைமேகம் ஏதும் இன்றி வெள்ளிடியாக  இடிவிழுந்தது. அபசகுனம் இது என இதை எடுத்துக்கூறி யானையை திருப்பிவைக்கவேண்டும் என்றார் முத்துமாயத்தேவர்.
    
எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார் மேயர் முத்து. உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்  ஆனால் எங்களுக்கு பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார். விவாதம் சூடாகி  மேயர் முத்து  முத்துமாயத்தேவர் உங்களால் முடிந்தால் யானையை திருப்புங்கள் பார்ப்போம் என்றார். மேயரே வார்த்தை மாறக்கூடாது  என்றார். திருப்பிப்பாருங்கள்  சவால் என்றார்.  சரியாக ஒரு வாரத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நகர் ஃபார்வர்டுபிளாக் தோழர்கள் திரண்டனர்.  இரவோடு இரவாக யானை முறையாக திருப்பிவைக்கப்பட்டது. பூஜைகள் செய்யப்பட்டன. மறுநாள் செய்தித்தாள்களில் "யானை திரும்பியது" என்று தலைப்புச் செய்தி இடம் பெற்றது.

சில நாட்களில் பெருமழை பெய்தது.
வைகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு பெருவெள்ளம் வந்தது வறட்சி நீங்கியது.

இந்த முத்துமாயத்தேவர் தான் தேவர்சிலை அமைப்புகளை முன்னின்று நடத்தி சாதித்தவர்.

தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் சென்னையில் இறந்துவிட்டபோது
அவரது சடலத்தை உசிலை கொண்டுவந்து சேர்த்தவர். அன்றைய கல்லூரி நிர்வாகம் தலைவரை தற்போது இருக்கும் இடத்தில் அடக்கம் செய்யவிரும்பவில்லை. மாணவர்களை தூண்டிவிட்டு எதிர்ப்புக்காட்டியது.
சிவன் கோவில் என்றால் நந்தி இருக்கும், பெருமாள் கோவில் என்றால் கருடன் இருக்கும், முருகன் கோவில் என்றால் மயில் இருக்கும்
இந்தக் கல்லூரியை தெய்வமாகக் கருதிய தலைவரை இந்த இடத்தில் தான் அடக்கம் செய்யவேண்டும் என்றார்.

அன்று முத்துமாயத்தேவருக்கு ஆதரவாக நின்ற பெரியோர்களில்
தோழர் யு.பி.பால்சாமி
கீரீபட்டி அன்னக்கொடித்தேவர்  பசுக்காரன்பட்டி  டிஎஸ் பி. மாயாண்டித்தேவர் போன்றவர்களை மறக்க முடியாது.

தலைவர் நூற்றாண்டுவிழாவில்
அவரது நிழலாக வாழ்ந்த  தொண்டர்
திரு.எஸ்.முத்துமாயத்தேவர்.


மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு  மதுரை பல்கலைக்கழகம்  என்றே பெயர் சூட்டப்பட்டது. பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதிக்கு பசும்பொன் தேவர் நகர் என்று பெயர் வைக்கவேண்டும்என்று திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில்உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.

1977 ல் தமிழ் நாட்டு முதல்வர் ஆனார் எம.ஜி.ஆர்.  மதுரை மாநகராட்சித் தேர்தலை ஒட்டி  மதுரை பல்கலைக்கழகத்திற்கு  காமராஜ் பல்கலைக்கழகம்  என்று பெயர் மாற்றினார்.  அகில இந்தியபார்வர்டுபிளாக் மாநிலத் தலைவராகஇருந்த எஸ்.ஆண்டித்தேவர் பொதுச்செயலாளர் கரு.காராளன் . கடலாடி சிவத்தவல்லித்தேவர்  மதுரை முத்து மாயத்தேவர் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது .

எம.ஜி.ஆர்  சுருளியில் நீர் மின்சக்தி நிலையத்தை தொடங்கி வைக்க வந்தார்.  அஇபாபி  கருப்புக் கொடி காட்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது . ஆண்டித்தேவர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்து மதுரை புதுஜெயில் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். மதுரை சர்க்யூட் ஹவுஸில் இருந்து சுருளி புறப்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். ஐந்து கார் மாறி மாறி போக வேண்டிய நிலை இருந்தது. வழியெல்லாம் கருப்புக்கொடி  சாணியைக் கரைத்து ஊற்றினர். எம்.ஜி.ஆர். அதிர்ந்து போனார்.  காமராஜ் பெயரை எதிர்ப்பவர்கள்  விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலானவர்கள் என்று அறிக்கை விட்ட பழ.நெடுமாறனுக்கு  மதுரை முத்துமாயத்தேவர் கடும் கண்டன அறிக்கை தந்தார். வாயடைத்துப்போனார் பழ.நெடுமாறன்.

சட்டமன்றக்கூட்டம் கூடியது  அதிமுககூட்டணியில் ஆண்டிபட்டித்தொகுதியில் இந்திய தேசிய பார்வர்டுபிளாக்  எம்எல்ஏ வாக  இருந்த  கே.கந்தசாமி  எம்ஜிஆரை சட்டமன்றத்தில் நேரடியாக எதிர்த்துப் பேசினார் . கருவாட்டுக்காரி கதையைக் கூறினார். ஆட்சிக்கு வந்த பிறகும் சினிமாக்காரர் புத்தியிலேயே இருக்கிறார். அதனால் தான்  புராண வரலாற்றுப் புகழ் பெற்ற மதுரை என்ற பெயரை எடுத்துவிட்டு வேறு பெயர் வைக்கிறார். இதை ஏற்க முடியாது என்றார்.

தம்பி கந்தசாமி  மதுரை என்ற பெயர் வேண்டும் என்று தானே கேட்கிறார். 
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்  என்று மாற்றப்படும் என்றார்.


நன்றி : ஐயா நவமணி தேவர்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்