வெள்ளி, 13 மே, 2022

கருமாத்தூர் தேவமார் செப்பேடு •



                      

                         1.     ௳

                                        

                        

                  2.     சிவமயம் 


3.ஸ்ரீ மது மஹாகணம் பொருந்திய கருமாத்தூர் தொட்டையன்கோட்டை கலியுக சிதம்பரேஸ்


4.வரர் வகையறா மும்மூர்த்திகளுடைய சன்னதி முன்பாக கூடிய மேற்படி சன்னதி தனங்


5.களுக்கு ஸ்தானிகராகிய இருபத்தோராவது பட்டக்காரர் தெய்வப் பெருமாள் பூசாரியார் காமத்தேவன் வகையறா இராமனாததேவன் ஆண்டித்தேவன் எழும்பத்தேவன் வகை


6.யறா கழுவத்தேவன் குப்பனத்தேவன் சிளுக்கத்தேவன் கருத்தஞ்செட்டித்தேவன் கொல்லுத்தச்சு வகைக்கு தேவாங்கப் பெருமாள் ஆசாரி இந்த ஒன்பது பேர்களும் கூடி இதற்கு


7.முன் கட்டியிருக்கிற மூலஸ்தான மண்டபம் இரண்டும் போக இப்போது முன் மண் [ட] பம் கட்டுவதற்காகவும் 


8.மேற்படி சன்னதி தனங்களுக்கு முதன்மை தீர்த்தம் திருனூறு நடக்க வேண்டியதற்காகவும் தீர்மானம் எழுதிய ஒப்பந்த கருவேலத்தளை வாசகம் கண்ணனூர் கிராமத்துக்கு கீழ் நாட்டிலிருந்து காவ


9.லுக்கு வந்த காமத்தேவன் எழும்பத்தேவன் இரண்டு பேர்களில் காமத்தேவனுக்கு மூத்த பிள்ளை பரட்டை


10.யாண்டித்தேவனுக்கும் இளையவன் பொத்தையாண்டித்தேவனும் பிறந்திருந்தார்கள் எழும்பத்தேவ


11.னுக்கு கழுவத்தேவன் மூத்த பிள்ளையாகவும் இரண்டாவது குப்பணத்தேவனு மூனாவது சிளுக்கத்தேவனும் பிறந்திருந்தார்கள் கருமாத்தூர் வடக்கம்பட்டி கிராமத்துக்கும் கோவிலுக்கும் பரட்டையாண்டித்தேவன் கா


12.வலாண்டு வந்தான் பொத்தையாண்டித்தேவன் விக்கிரமங்கலம் தொட்டையன் கோட்டை காவலாண்டு வந்தான் கழுவத்தேவன் குப்பனத்தேவன் சிளுக்கத்தேவன் மூணு பேர்களுக்கும் பெருமாள் கோவில் பட்டி கண்ண


13.னூர் புள்ளைநாடி யிந்த மூணுகிராமமும் காவலாண்டு வந்தார்கள் கருமாத்தூருக்கு கீழ் நாட்டிலிருந்து காவலுக்கு வந்த துங்கத்தேவன் தகாத்தேவன் மண்ணுலகந் தேவன் மூணு பேர்களும் காவலாண்டு வரும்போது கிராம


14.னி அய்யர் கட்டுக்கஞ்சி நாயக்கர் பெத்தலை நாயக்கர் மூணுபேரையும் காவல்காரர்கள் கொலை செய்து போ


15.ட்டார்கள் அதற்கா [க] சர்க்காரில் 900 பொன் தெண்டம் போட்டு சர்க்காரிலடைபட்டிருந்தார்கள் சோ


16.லைத்தேவன் பிணைக்கு துட்டு விலக்கி வந்து துங்கத்தேவன் பங்குக்கு சோலைத்தேவ


17.னும் தகாத்தேவன் பங்


18.குக்கு ஆண்டாருத்தேவனும் மண்ணுலகன் பங்குக்கு பரிச்சபுலித்தேவனும் தெண்டம் கட்டி ஆறுபங்


19.காக ஆண்டு வருகிறார்கள் பரட்டையாண்டித்தேவன் வகையறா ஒண்டத்தேவனுக்கும் துங்கத்தேவன் வகையறா ஒய்யாத்தேவனுக்கும் மாட்டுக்காரப்பிள்ளை நிமித்தியம் சண்டையான விரோதத்தால் ஒண்டத்தேவனை ஒய்யாத்தேவன் வகையறா வெட்டிப்போட்டார்கள் ஒண்டத்தேவன் வகையறா இராமனாததேவன் பாப்


20.பாப்பட்டிக்கு பெண் அழைக்கப் போயிருந்தவன் கண்ணனூரில் வந்துருந்தான் பொத்தையாண்டித்தேவன் வகையாரில் 


21.நாயக்கரும் ஆண்டித்தேவனும் மேற்படி சண்டையுள் இறந்துபோனார்கள் மேற்படி குப்பளநாயக்கர் பெண்


22.ஜாதி பொம்மம்மாள் தீக்குழி பாயும்போது ஆண்டித்தேவன் பெண்ஜாதி பாஞ்சாயி கூட விழுந்


23.து விட்டாள் மேற்படி சன்னதி தனங்களுக்கு நடக்க வேண்டிய முதமைத்தீர்த்தம் திருனூறு முந்தி காமத்தே


24.வன் வகையறாவுக்கும் இரண்டாவது எழும்பத்தேவன் வகையறாவுக்கும் மூணாவது கருத்தஞ்செ


25.ட்டிக்கும் நாலாவது சோலைத்தேவனுக்கும் அஞ்சாவது தேவாங்கப் பெருமாள் ஆசாரி வகையறாவுக்கும் த


26.டந்து வர வேண்டியது மேற்படி மகாமண்டபம் வலதுபக்க தூணில் இருபத்தி ஒண்ணாவது பட்டக்காரர் திவ்யப் பெருமாள் பூசாரியையும் இராமனாதத்தேவனையும் வைக்குண்[டு]திருக்கிறது யிடப்புறந்தூ


27.ணில் ஆண்டித்தேவன் குப்பணத்தேவன் கருத்தஞ்செட்டி மூணுபேரையும் வைக்குண்டுதிருக்கிறது மேற்படி வாசல் முகப்பு வலதுபக்கம் முன் தூணில் சிளுக்கத்தேவன் தேவாங்கப்பெருமாள் ஆசாரியையும் வைக்குண்


28.டுருக்கிறது முன்னாடி இடதுபுறந்தூணில் வடிவேல்கரை நல்லாண்டித்தேவன் வகையறாவை வக்குண்டிருக்கிறது வெகுதானிய வருஷம் மாசி மாதம் 27ம் தேதி ஆண்டவர் துணை யிந்தபடிக்கு தெய்வப்பெருமாள் பூசாரியார் ராமனாதத்தேவன் ஆண்டித்தேவன் கழுவத்தேவ


29.ன் குப்பணத்தேவன் சிளுக்கத்தேவன் கருத்த


30.ன் செட்டி சோலைத்தேவன் தேவாங்கப்பெ 


31.ருமாள் ஆசாரி யிது யெழுதினது மேற்படி தேவாங்கப் பெருமாள் ஆசாரி 


                           32.சிவமயம்


33.தொட்டையன் கோட்டையில் கூடியது 


விளக்கம்.


கருமாத்தூர் - தொட்டையன்கோட்டை தேவமார்களுக்குப் பாத்தியப்பட்ட ( பிரமலைக்கள்ளர்) கலியுக சிதம்பரேஸ்வரர் மும்மூர்த்தி கோயிலில் மேற்கண்ட ஊர்த் தேவர்களும், நாயக்கர்களும், ஆசாரிகளும் ஒன்றாகக் கூடி, அக் கோயிலின் ஏற்கனவே கட்டப்பட்ட மண்டபங்களை விடுத்து, புதிதாகக் கட்டவிருக்கும் மண்டபத்தின் பணிக்காகவும் அதில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், தேவமார்கள் தமக்குள் காவலுரிமை கொண்டும், பிரிட்டிஷ் சர்க்காரின் சிறையில் அடைபட்டும், தண்டம் கட்டியும் வாழ்ந்த நிகழ்வுகளைக் கூறி, கருமாத்தூர் காவல்காரர்களாக மண்ணுலகந்தேவர், தூங்கத்தேவர், தக்கத்தேவர் ஆகியோர் இருந்த போது, தம்முள் இரண்டு தரப்பில் நடந்த சண்டையில், தம்மில் ஒரு தரப்பினருக்காக கிராமனி ஐயர்- கட்டுக்கஞ்சி நாயக்கர்-  பெத்தலை நாயக்கர் ஆகியோர் கொலை செய்யப்பட்டதை நினைத்தும், 


கருமாத்தூர், வடக்கம்பட்டி கிராமங்களுக்கும் கோவில்களுக்கும் காவல் அதிகாரம் பெற்றிருந்த பரட்டையாண்டித்தேவன் வகையறா மற்றும் விக்கிரமங்கலம்- தொட்டையன் கோட்டை கிராமங்களுக்கும் கோவில்களுக்கும் காவல் அதிகாரம் பெற்றிருந்த பொத்தையாண்டித்தேவன் வகையறாக்களுக்கும் எழுந்த தகறாறில், பரட்டையாண்டித் தேவன் வகையறாக்களில் ஒய்யாத்தேவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான், இதற்குப் பழிவாங்கும் வகையாக, நடந்த சண்டையில் பொத்தையாண்டித் தேவனின் வகை ஆதரவாளர்களில் குப்பள நாயக்கரும், ஆண்டித்தேவனும் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.  இதனால் குப்பள நாயக்கர் மனைவி பொம்மம்மாளும்  அவளுடன் ஆண்டித்தேவன் மனைவி, பாஞ்சாயி யும் ஆகிய இருவரும் ஒன்றாகத் தீக்குளிக்கின்றனர். ( சதி அல்லது உடன்கட்டை ஏறுதல்) அதையும் நினைத்து,  


மேற்கண்ட அனைத்து தியாகச் சீலர்களுக்கும் புதிதாகக் கட்டும் மண்டபத்தில் தூணுக்கொரு சிலை எடுக்கத் தீர்மானித்தும், அதைப் பராமரிக்கும் பணிகளை வகையறாக்களுக்கு ஒன்றாகக் கொடுத்தும் ஒப்பந்தம் போடப்பட்ட செப்புப்பட்டயம் இது. 


இந்த செப்பேடு, பிரமலைக் கள்ளர்களின் காவலுரிமை, அவர்களுக்குள் காவல் அதிகாரம் தொடர்பாக எழுந்த பிணக்குகள், பிரமலைத் தேவமார்களுக்கும் நாயக்கர் -ஐயர் -ஆசாரி ஆகியோருக்குமிடையே இருந்த நெருக்கமான உறவுகள், ஆகியவைகள் வெளிச்சமாகின்றன. தேவமார்களுக்காக ஐயரும் நாயக்கரும் சண்டையிட்டு மடிந்த நிகழ்வு - நாயக்கர் மற்றும் தேவமார் பெண்கள் இருவரும் தங்கள் கணவர்கள் இறந்த நேரத்தில் ஒரே தீக்குழியில் ஒன்றாகப் பாய்ந்தது ஆகிய நிகழ்வு இரண்டும் உருக்கம் கொள்ளச் செய்வனவாக உள்ளன. இந்த செயல்பாடுகளைக் கௌரவிக்கும் வண்ணம் மேற்படி தேவமார்கள் அனைவருக்கும் சிறப்புகளும் - முதல் மரியாதைகளும் அளித்து  மண்டபமும் சிலைகளும் அமைத்த பாங்கு பாராட்டிற்குரியது. 


மேற்கண்ட பட்டயம் விருமாண்டி என்பவரால் சேகரிக்கப்பட்டு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 


வாசிப்பு: 


கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.


குறிப்பு : வெகுதானிய வருஷம் மாசி மாதம் 27 ம்தேதி மட்டுமே குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் இதன் காலம் 18 ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்