சனி, 21 மே, 2022

ஆம்பலாபட்டு தந்தை வெ.அ.சுப்பையன் முடிபூண்டார்

ஆம்பல் தந்தை வெ.அ.



1962 தமிழ்க சட்டமன்றத் தேர்தல். தஞ்சை -மு கருனாநிதி DMK, பரிசுத்தம் நாடார் INC. மன்னார்குடி -T S சாமிநாத ஒடையார் INC, P நாராயணசாமி ஓந்திரியர் DMK, R தங்கராசு CPI. பட்டுக்கோட்டை– அருனாசல தேவர் DMK, சீனிவாச அய்யர் INC, மாசிலாமணி CPI. அதிராம்பட்டினம்-பாலதண்டாயுதம் INC, AR மாரிமுத்து(sitting MLA) PSP, வெ.அ.சுப்பையா முடிபூண்டார் CPI. இந்த தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் 68 பேர் CPI சார்பில் களத்தில் இருந்தனர், அதில் வெ.அ வும் ஒருவர். 68பேரில், 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர் கல்யாணசுந்தரம் திருச்சி தொகுதி II, AK சுப்பையா திருத்துரைபூண்டி தொகுதி. DMK 50 இடங்களில் வெற்றிபெற்று எதிர் கட்சியானது. கருணாநிதி வெற்றி அண்ணாதுரை தோல்வி.


62ல் வெ.அ. அவர்களை கட்சியே வழிய வந்து முன்மொழிந்து தேர்தல் களத்தில் 68 ஒருவராக வெ.அ.வை நிருத்தியது என்றால், தமிழ்நாடு முழுவதும் இருந்த மிகமுக்கியமான CPI தலைவர்களில் வெ அ வும் ஒருவராக இருந்திருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த தலைவனை பற்றி யாம் அறிவோமாக. 


ஆம்பலாபட்டு, மதுக்கூர் ஜெமின் அதிகார வரம்புகுட்பட்ட மேல கோடி கிராமம். மதுக்கூர் ஜெமின் எல்லை முடிவிலிருந்து ஒரு பர்லாங் தொலைவில் பாப்பநாடு ஜெமினின் அரண்மனை.  ஆம்பலாபட்டு மணியாராக வெ.அண்ணாமலை முடிபூண்டார் இருந்தார். இவருடைய மூத்த மகன்தான் வெ.அ.சுப்பையன் முடிபூண்டார் (மணியார் குடும்பத்தார்). இவர் 24.12.1924 ல் இலங்கையில்( அம்மாயி வீடு தொண்டமான் குடும்பம் கொழும்பில் இருந்தது) பிறந்து ஆறு மாத குழந்தையாக ஆம்பல் மண்ணில் வந்து இறங்கினார்.


1940-41ல் தோழர்கள் பி முத்துகாமாட்சி, வெ.அ.சுப்பையன், அல்லாடி அண்ணாமலை மாதுரார், மு அ குழந்தையன் சேனாபதி, புண்ணிய கதிரேச மாதுரார் இவர்கள் தான் முதன் முதலில் கம்னியூஸ்ட் கடசியை ஆம்பலாப்பட்டில் துவக்கியது. கதிரேசன் மாதுரார் முதல் கிளை செயலாளர்.

வெ.அ.தனது 19 வது வயதில்-1944ல் கிராம நீதிபதிக்கான தேர்தலில், ஜமின் சார்பாக நிருத்தபட்ட அவரது தந்தை அண்ணாமலை முடிபூண்டாரை  தோற்கடித்து வெற்றி பெற்றார். தனது 19 வயதில் தொடங்கிய பஞ்சாயத்து பணி சுமார் 60 ஆண்டு காலம் ஊரு ஊராக கூட்டம், பஞ்சாயத்து, கட்சி, என்றே வாழ்ந்த  ஒரு மாமனிதன்.


ஜெமின் ஒழிப்பு வலுப்பதை உணர்ந்த மதுக்கூர் ஜெமின், ஆம்பலில் தனது வசம் இருந்த 700 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்து விற்றபோது சுமார்  200ஏக்கர் நிலத்தை மணியார் அண்ணாமலை முடிபூண்டார் வாங்குகிறார், இதனை சொந்த மகனான வெ.அ அவர்கள்  தந்தையை எதிர்த்து சண்டையிட்டு, போராடி, வாங்கிய நிலத்தை வேண்ணடாமென்று திரும்ப  ஒப்படைத்துவிடுகிறார். இந்த செயலை பார்த்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த ஜமீன்தார்கள், யார் இந்த இளைஞன், புரட்சியாளன் என்று எண்ணி வியந்தாரகள். ஒரு வேலை வெ.அ. அப்படி தடுத்து நிறுத்தி 200 ஏக்கர் நிலத்தை திருப்பி கொடுக்காமல் இருந்திருந்தால், தான் ஒரு குட்டி ஜமீனாக வாழ்ந்திருக்ககூடும்.  ஆனால் அவர் எளிமையாகவே வாழ்ந்தார்.


1950-ல் செம்பாளூர் சாம்பசிவ அய்யர் வீட்டு கொள்ளை சம்பவம், அதன் விளைவாக ஆம்பலை சுற்றி மைல் கல்லுக்கு நான்கு போலீஸ் என்று குவிக்கப்பட்ட போலீஸ் படை அவர்களின் கட்டுக்கடங்கா நெருக்கடி அதனை தொடர்ந்து முக்கிய முன்னோடிகளின் தலைமறைவு வாழ்க்கை என ஆம்பலாப்பட்டையே உலுக்கிய கொடூர சம்பவம் ஊரறிந்த ஒன்று. இந்த சமயத்தில் தான் பண்ணையார்களின் கொடூரங்களை எதிர்த்து போராடி, தலைமறைவாக இருந்த  சாம்பவான் ஓடை சிவராமன், வாட்டாகுடி இரனியன், ஆம்பலாபட்டு  ஆறுமுகம் ஆகியோர் போலிஸால் சுட்டுகொல்லபட்டனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஆம்பலின் முக்கிய நபர்களுக்கும் சூட்டிங் ஆடர் வரபோகிறது என்ற தகவல் பரவ தொடங்கியது. இதனையடுத்து ஊராரும், உறவினர்களும், கட்சியும் வற்புறுத்தி பலரை போலிஸில் சரண்டைய செய்கிறார்கள். இதில் தலைமறைவாக இருந்த வெ.அ அவர்களையும் சரண்டைய செய்தனர்.  சரண்டையாமல் இருந்திருந்தால் ஆம்பலாபட்டை சார்ந்த 2-3 தோழர்கள் வெ.அ.உட்பட சுட்டு கொல்லபட்டிருப்பார்கள். விசாரனை கைதி காலம் போக சுமார் ஓர் ஆண்டு காலம் சிறைதண்டனை வழங்கப்பட்டது. இது போன்று கட்சி போராட்டங்களில், மறியல்களில் கலந்து கொண்டு எத்தனையோ முறைகள் அய்யா சிறைசென்றிருக்கிறார் என்பதை கட்சி தோழர்கள் அறிவார்கள்.


1954 ஆம் ஆண்டு (ஜில்லா போர்டு) மாவட்ட ஆட்சி மன்ற உறுப்பினருக்கான தேர்தலில் கட்சியின் சார்பாக வெ.அ. தொண்டாராம்பட்டு தொகுதில் போட்டியிட்டார். வெ.அ.அவர்களின் செயல்பாடுகளையும், சமூக உணர்வையும் பார்த்த அன்றைய ஜில்லா போர்டு மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் (இன்றைய கிருட்டிணசாமி வாண்டையாரின் தாத்தா) மணியாரை அழைத்து, பையன நம்ம கட்சியில சேர்த்துவிடுங்க, MLA வா ஆக்கி சட்ட சபைக்கு அன்னுப்பி வைப்போம் என்று கூறியுள்ளார். மணியார் காங்கிரஸ்காரர், அவரும் மகனை காங்கிரஸில் சேர்த்துவிடலாம் என முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார். ஆனால் வெ.அ அவர்கள் மசியவில்லை. தான் கொண்ட கட்சியையும் கொள்கையையும்  உயிர் மூச்சு என கடைசி வரை உறுதியாக இருந்த ஒரு உத்தம தலைவன். ஒரு வேலை கட்சி மாறி காங்கிரஸில் சேர்ந்திருந்தால், நாடிமுத்து பிள்ளை, AR மாரிமுத்து, பாலதண்டாயுதம்  R வெங்கட்ராமன் இந்த வரிசையில் வெ.அ. அவர்களும் நிச்சயமாக ஒரு MLA/MLC வாக தமிழக சட்டமன்றத்தில்  இடம் பெற்றிருப்பார். 


அய்யா அவர்கள், ஊரின் வளர்ச்சிக்கும், மேன்பாட்டிற்கும் தன்னை முழுமையாக அற்பணித்தவர். முதல் ஊராட்சி மன்ற தேர்தலில் ஊர் கூடி அய்யாவை முன்மொழிகிறது, யாரும் எதிர்த்து போடியிடவில்லை போட்டியின்றி (unopposed) தேர்ந்தெடுக்கபட்டார். இவர்தான் எங்கள் தலைவர் என்று தேர்தல் அதிகாரிடம் எழுதி தூக்கிபோட்டுவிட்டு, பாப்பநாட்டிலிருந்து ஆம்பல் வரை அய்யாவை தோலில் தூக்கி கொண்டாடினர்.


ஒரத்தநாடு ஒன்றியத்தின் கீழ் உள்ள 63 ஊராட்சிகளில், வெ.அ.மிக முக்கியமான ஊராட்சிமன்ற தலைவராக திகழ்ந்தார். ஒன்றியத்தின் கீழுள்ள ஊராட்சிகள் எதோ ஒரு வகையில் மாநிலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளின் ஆதரவு பெற்ற ஊராட்சிகளாக இருந்தன. ஆனால் அந்த ஊர்களில் இல்லாத அளவுக்கு ஆம்பல் பல வளர்ச்சி திட்டங்களையும், சலுகைகளையும் பெற்று ஒரு நல்ல வளர்ச்சியடைந்த கிராமமாக உருவாக்க முடிந்தது என்றால் அது வெ.அ.அவர்களின் தனிமனித செல்வாக்கும் அவருக்கு ஒன்றியத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும்தான் காரணம். அடுத்து வந்த ஊராட்சி மன்ற தேர்தலில் வெ.அ. CPI சார்பிலும், கதிரேசன் மாதுரார் CPM சார்பிலும் போட்டியிட்டனர் பலர் CPI-CPM, CPM-CPI என மாறி மாறி இருந்திருக்கிறார்கள். ஆனால் வெ.அ கொண்ட கொள்கையில் உறுதியாக இறுதி வரை இருந்த ஒரு உன்னத தலைவன்.  கதிரேசன் மாதுரார், வெ.அ. வின் உடன்பிறந்த அக்காவின் கணவர், மைத்துனர். அய்யா கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை செய்வார். கட்சிக்கு பிறகுதான், மனைவி, மக்கள், சொந்தம், பந்தம், பாசம் எல்லாம். பொது வாழ்வில் அந்தளவுக்கு கொள்கை பிடிப்போடு வாழ்ந்தவர். இந்த தேர்தலினால் அக்கா வாழ்க்கை பாதிக்கபடுமோ என்றெல்லாம் யோசிக்கவில்லை.  மைத்துனரை வென்று மீண்டும் ஊராட்சி தலைவரானார். 


காமராசர் ஆட்சி காலத்தில் தான் தமிழகம் முழுவதும் ஊரெல்லாம் பள்ளிக்கூடங்கள் நிறுவபட்டன எனபது வரலாற்று. ஆனால் ஆம்பலாபட்டிற்கு உயர்நிலை பள்ளி பெறுவதில் பெரும் சிக்கல், செம்பாளூர் சம்பவம், பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை வீடு முற்றுகை, காமராசரை வழிமறித்து கோசம் போன்ற சம்பவங்களால் தஞ்சையை சார்ந்த மிக முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வாண்டையார் உட்பட ஆம்பலாப்பட்டை நசுக்கி ஒடுக்க முடிவு செய்து ஆம்பலுக்கு எந்த ஒரு சலுகையும், வளர்ச்சி திட்டத்தையும் அளிக்க காங்கிரஸ் ஆட்சி மறுத்துவிட்டது. ஆம்பலாபட்டிற்கு பள்ளி இல்லை என்றும் ஆகிவிட்டது. அனைத்தையும் போரடியே பெற வேண்டிய நிலை ஆம்பலாப்பட்டிற்கு இருந்தது. வெ.அ அவர்கள் விடாமுயற்சியில் இறங்குகினார். கல்வி துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களை பார்த்து  ஆம்பலாபட்டிற்கு உயர்நிலை பள்ளி அவசியம் தேவை என்பதை வலியுறுத்தி துறைரீதியாக கோரிக்கை வைத்தார். அன்று 6,7,8வகுப்பு படிக்க பாப்பநாடு செல்லவேண்டும் 9,10,11க்கு பட்டுக்கோட்டை செல்லவேண்டும். ரோடு வசதி வாகன வசதி எதுவும் கிடையாது நடந்துதான் செல்லவேண்டும்.  பத்து பன்னன்டு வயது பையனுக்கு பாப்பநாடு நடந்து போய் வருவது என்பது நாடு விட்டு நாடு போவது போன்றது. இதனால்தான் ஊரில் பெரும்பாலானோர் பாப்பநாடுக்கு நடந்து போய் 6வது 7வது வரை படித்துவிட்டு அதற்கு மேல் நட்டக்க சிறம்பட்டு என்னத்த படிச்சி கிழிச்சி என்று படிப்பை தூக்கி போட்டுவிட்டு 🐐 ஆடு 🐮 மாடு மேய்க்கவும் வயல் காட்டில் வேலை செய்யவும் இறங்கிவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே 1950-60களில் கல்லூரி வரை சென்று படித்தாரகள். ஆக இந்த அவல நிலைய போக்க உயர்நிலை பள்ளி அவசியம் தேவை எனபதை உணர்ந்து, விடாமுயற்சியாக  கல்வி துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனை சமாளிக்க நெ.து சுந்தரவடிவேலு  ஆம்பலாபட்டிற்குத்தானே பள்ளி கிடையாது. வேறொரு பெயரில் வேண்டுமால் முயற்சி செய்து பாருங்கள் என்று ஒரு யோசனை சொல்ல, பிறகு  இலுப்பைதோப்பு என்ற பெயரில் 1964ல் ஆம்பலாப்படிற்கு உயர்நிலைப்பள்ளி பெறபட்டது. 1978ல் பள்ளியில் இருந்த SSLCயையும், கல்லூரியில் இருந்த PUCயையும் ஒன்று சேர்ந்து +1& +2 என உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக மாற்றி அமைத்தனர். கிழக்கு வழிசாலையில் வடசேரி, ஆலத்தூர், பட்டுக்கோட்டை மேற்கு வழிச்சாலையில் ஒரத்தநாடு, உரந்தராயன்குடிகாடு, பட்டுக்கோட்டை, இதற்க்கு இடையில் மேல்நிலை பள்ளி கிடையாது. இலுப்பைத்தோப்பில் 78, 79 ல் 10th முடித்தவர்கள் பெரும்பாலோர் ஆலத்தூர் ஒரு சிலர் ப.கோட்டை, உ.காடு, சென்று +2படிக்க நேரிட்டது. இந்த இன்னலை போக்க, அய்யா முயற்சியில் இறங்குகிறார். இப்போது அவர் ஊராட்சி தலைவர் கிடையாது, எந்த பொருப்பும் கிடையாது. இருந்தாலும் அவருடைய ஊரின் வளர்ச்சியை பற்றிய எண்ணம், எப்படியாவது  ஊருக்கு மேல்நிலை பள்ளி பெற்றாக வேண்டும் என்ற உணர்வை தூண்டிவிட்டது. (1960 லிருந்து 1996 வரை, 36 ஆண்டுகளில் 3 அல்லது 4 முறைதான் ஊராட்சி தேர்தல் நடந்தது அனைத்திலும் அய்யா தான் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார், பல ஆண்டுகள் பஞ்சாயத்து தேர்தலே நடக்கவில்லை இருந்தாலும் அய்யாவே இயல்பாக (by default) ஊராட்சி தலைவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)அந்தவகையில் உயர்நிலை பள்ளியை மேல்நிலைபள்ளியாக்க, அன்றைய வருவாய் துறை அமைச்சராக இருந்த SDSயை போய் பார்த்து இரண்டே நாளில் இலுப்பைத்தோப்பு மேல்நிலை பள்ளிகான அரசாணையை பெற்று வந்தார். இலுப்பைத்தோப்பு 1980லிருந்து மேல்நிலை பள்ளி.( SDS அவர்கள் வெ. அ வை தனது  அரசியல் முன்னோடியாக வைத்து மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார்) ஆம்பலுக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து தான் கரம்பயம், பாப்பநாடு,  மேல்நிலை பள்ளிகளானது. இதே போன்று SSLC/10th தேர்வு மையம் இலுப்பைதோப்புக்கு ஆலத்தூர் தான், நமது ஊர் மாணவ மாணவிகள் ஆலத்தூரில் தெரிந்த வீடுகளில் 2 வாரங்கள் தங்கி தேர்வு எழுத வேண்டி நிலை. இதனை மாற்ற 1986ல் இலுப்பைதோப்புக்கு தேர்வுமையம் பெறப்பட்டது. ஆனால் 1990-91ல் தேர்வு மையத்தை நம் ஊருக்கே தெரியாமல் பாப்பநாட்டுக்கு மாற்றி அரசானை போட்டுவிட்டனர். இதனையும் மீட்டெடுக்க அய்யா சென்னை வந்து நாங்கள் இருந்த ரூமில் தங்கி கல்வி இயக்குரகத்துக்கு நடையாய் நடந்தார், நடக்கவில்லை காரியம். போட்ட ஆணையை மாற்ற அரசு மறுத்துவிட்டது. (பாப்பநாட்டுக்கு ஆம்பலினால் பல நன்மைகள் உதாரணம் பேங் ஆஃப் இந்தியா ஆம்பலாப்பட்டு கிளை பாப்பநாட்டில் இருந்தது பிறகு அது பாப்பநாடு கிளையாகவே மாறிவிட்டது.)


கல்விகமிட்டி வைத்து பள்ளியின் வளர்ச்சி மேன்படுத்த பட்டது.  ஆம்பல் பெரிய கோயில் நிலத்தில் ஒரு சிரு பகுதியை கல்விகமிட்டி விவசாயம் செய்தது. அதில் வந்த வருமானத்தை பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்தியது. சுமார் 1500 மாணவ மாணவிகள் படித்த பள்ளி எந்தவித அச்சம்பாவிதமும் இல்லாமல் கட்டுப்பாட்டுடன் மிகசிறப்பாக நிருவாகிக்கபட்டது. உதாரணமாக, விளையாட்டு மைதானம் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாட்டு விழாவே நடத்தாமல் புல்லும் புதருமாக கிடந்ததை புல்டோசர், பொக்ளின் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்து சீர்செய்யபட்டது என்று சொல்லபடுகிறது. ஆனால், கல்வி கமிட்டி இருந்தபோது மாட்டுபொங்கல்தோறும் திடல் முழுவதும் இருந்த புல் ஏலம் விடபட்டு அதில் கிடைத்த பணத்தில் பள்ளி கூரைக்கு கீற்று, உபகரணங்கள் வாங்க பயன்படுத்தபட்டது என்பதை குறிப்பிடலாம்.


ஒரத்தநாடு ஒன்றியத்தின் கீழ் இருந்த 63 ஊரட்சிகளில் முதல் கிளை நூலகம் பெற்ற ஊர் ஆம்பலாப்பட்டு என்பதை பெருமிதத்தோடு சொல்லாம். அய்யா தலைவராக இருந்த போது அவரிடம் நுலகமா, சுகாதார நிலையமா எது வேண்டும் விருப்பபடி தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று முன்வைகபட்டபோது அய்யா நூகத்தை பெற்று வந்தார். சுகாதார நிலையம் தொண்டாராம்பட்டுக்கு ஒதுக்கபட்டது. பிறகு 72-73ல் நம்ம ஊருக்கு சுகாதார நிலையமும் பெறபட்டது. 


இதே காலகட்டத்தில்(1970-75) மாட்டுவண்டி உழங்கைகளும் ஒத்தையடி பாதைகளும் பஞ்சாயத்து ரோடுகளானது. மின்சார கம்பங்கள் நடபட்டு மின்வசதி பெறபட்டது. அரசு பேருந்து ஆம்பலாபட்டிற்கு அனுப்ப தயங்கிய போது, அய்யாவின் சொந்த முயற்சியில் தனியார் பஸ் திருமுருகன்  3 நம்பர் ஊருக்குள் கொண்டுவரப்பட்டது. பிறகுதான் அரசு பேருந்து 19 ஆம்பலை அன்னாந்து பார்த்தது. ஞாயிறன்று வார சந்தை கூடியது.   தேதாடிக்கொல்லைக்கு ஊ.ஒ.தொ.பள்ளி, ஆற்று பாலமும் பெறபட்டது, சோமன் தெருவில் ஊ.ஓ.தொ.பள்ளி என பல வளர்ச்சிகள்.  இப்படி ஊரை சிறிது சிறிதாக செதுக்கி செப்பனிட்ட சிற்பி வெ.அ.அவர்கள்.


ஊரில் 1960,70,80,களில் திருமணம் என்பது இரவு நேரங்களில் அதுவும் பெரும்பாலும் பள்ளிகூடங்களில் தான் நடந்தன. ஊரில் நடைபெற்ற அனைத்து திருமணங்களும் அய்யா தலைமையில் தான் நடைபெறும். ஒரே இரவில் நான்கு ஐந்து திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். முதல் திருமணம் இரவு எட்டு மணிக்கு குடிக்காடு/ கீழக்கோட்டையில் ஆரம்பித்து, ஒவ்வொன்றாக முடித்துகொண்டு இறுதியாக இலுப்பைதோப்பு  வரும்வேலையில் மணமக்கள் உட்பட மண வீட்டார்கள் தூங்கிகொண்டிருப்பாரகள், அவர்களை எழுப்பி மணமக்களை முகம் கழுவ வைத்து  மாலையையும் , மாங்கல்ய்யத்தையும்  அய்யா கையால் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறபொழுது மறுநாள் அதிகாலை மணி இரண்டு/ மூன்றை நெருங்கியிரிக்கும். அப்போது ரோடு வசதி 🚗 வாகன வசதி இல்லை சைக்கிள்தான். திருமணம் முடிந்து எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுவார்கள். அய்யா தலையில் முன்டாசுடன் பைந்தாமரை கரையில் உக்கார்ந்து கல்விகமிட்டி விவசாயநிலத்தில் தண்ணீர் பாய்துகொண்டிருப்பார். இப்படி எத்தனை இரவுகள் இந்த ஊருக்காக தூங்காமல் ஒடி ஒடி உழைத்திருப்பார். வெ.அ.தலமையில் நடந்த திருமண எண்ணிக்கை புள்ளி விவரம் இல்லை, இருந்தால் நிச்சயம் சாதனை புத்தகத்தில் இடம் பெறும். உலகத்தில் எந்த ஒரு தலைவனும் இத்தனை திருமணங்களை நட்டத்தி வைத்திருக்க வாய்ப்பு இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அல்லது ஒருவரக்காவது அவர் கையால் மாலை, மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணம் நடைபெற்றிருக்கும். இன்றைக்கு அந்த குடும்பத்தின் விழுதுகள் உலகம் முழுவதும் விரிந்து பரவி கிடக்கிறது. அந்த வகையில் நாம் அவருக்கு நன்றிகடன் பட்டிருக்குக்கிறோம். இதை தவிர பக்கத்து கிராமங்கள் குறிப்பாக பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள பல ஊர்களில் அய்யா தலமையில் பல திருமணங்கள் நடந்துள்ளன. 


ஒரு காலத்தில் ஆம்பலாப்பட்டில் வீடுகள் தோரும் ஈட்டி, சுளுக்கி, வேல்கம்பு, பிச்சுவா கத்தி, வீச்சறுவாள் போன்ற ஆயுதங்கள் இருக்கும். தினமும் எங்காவது ஒரு மூலையில் அடிதடி வெட்டு குத்து விழுந்து கொண்டேயிருக்கும்,  ஓலமும், ஒப்பாரி சத்தமும் கேட்டுகோண்டே இருக்கும் என்று சொல்லலாம். ஒவ்வொரு தெருவும் ஒரு ஊராகவும் மொத்த ஊரும் ஒரு நாடாகவும் இருந்திருக்கிறது. தெருக்களுக்கு இடையே போர் புரிந்துள்ளனர். நாட்டுக்கு படை அவசியம், ஆகவே வீடுதோரும் ஆயுதங்கள். (இதுபற்றி பல பக்கங்கள் எழுதலாம் முகநூலின் இடம் கருதி இத்துடன் நிறுத்துகிறேன்)  வெளியூரிலிருந்து பிரச்சனை வந்தாலும் படையெடுத்து அடித்து நொறுக்கிவிட்டு வருவது.  அப்படிப்பட்ட வீர தீர போர்குணம் கொண்ட ஊரு. (கொழாய திருப்புன தண்ணி வராது ரத்தம் தான் வரும் ஒரு கலவர பூமி) ஆம்பலாப்பட்டு நாலு நாடோ, ஏழு நாடோ  இல்லை. அது மட்டும் ஒரு தனி நாடு காரணம் பெண் எடுப்பு கொடுப்பு உறவு முறையை பார்த்தால் கிட்டத்தட்ட 90-95%உள்ளூர்குளேயேதான். கிழக்கே பல மைல் தூரம் உள்ள ஆவிகோட்டைக்கு பெண் கொடுத்து எடுத்தவன். பக்கத்தில் ஒரு மையில் தொலைவில் உள்ள கன்னுகுடி,ஒரே வாய்க்கால் நீர் பாசனம், ஒரே வரப்பில் குந்தி காலை மாலை கஞ்சி குடிப்போம், (குடிப்போம்). ஆனால் உறவு முறை வைத்திருக்கவில்லை.அதைபோல் மேற்கு கிராமங்களில் உறவு கொண்டாடியதில்லை. காரணம் அவர்கள் வேறு நாடு நாம் வேறு நாடு.(இதே போன்று சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கள்ளர் பகுதிகள் 4, 5 ஊர்கள் சேர்ந்து ஒவ்வொரு நாடாக வைத்துள்ளார்கள் அதற்குள் தான் பெண் எடுத்தல் கொடுத்தல் வழக்கம்). இன்றையதினம், போக்குவரத்து, 🚗 வாகன வசதி, தகவல் தொழில் நுட்பம், கல்வி வளர்ச்சி ஆகியவற்றால் இந்த நாடு என்ற கட்டமைப்பு தகர்க்க பட்டுவிட்டது. 


1940 க்கு பிறகு கட்சி வந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊர் கட்டுகோப்பாக்கபடுகிறது தெருக்கள் தோரும் சங்கக் கொட்டகைகள் அமைத்து, வெளியிலிருந்து ஆசிரியர்கள் அழைத்து வந்து, ஊரில் உள்ள அனைவருக்கும் எழுத படிக கற்றுகொக்கபட்டது. எல்லோருக்கும் எழுத படிக்க தெரியும் என்ற நிலை உருவானது. தொண்டர் படை வைத்து சமுதாய சேவை மனப்பான்மை ஊட்டபட்டது. ஊர் முற்போக்கு சிந்தனையின் இருப்பிடமானது.


வெ.அ. அவர்களால் தீர்த்து வைக்கபடாத பஞ்சாயத்து வழக்குகளே கிடையாது என சொல்லலாம். கொலை குற்றங்கள் வரை பல நூறு வழக்குகள் காவல் நிலையத்திற்கோ, நீதி மன்றங்களுக்கோ செல்லாமல்  தீர்த்து வைக்கபட்டுள்ளன. இன்றைக்கு அப்படி ஒரு தலைவனை பார்க்க முடியுமா. பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள முதலாளிகளின் தீர்க்கபடாத பெரும் சொத்து வழக்குகள், பெரும் பண்ணையார்களின் குடும்ப பிரச்சனை இரு ஊர்களுக்கு இடையே இருந்த ஊர் பிரச்சினை, ஜாதி கலவரங்கள் என்று பல பஞ்சாயத்துக்கள் அய்யா அவர்களின் தலமையில் தீர்த்து வைக்க பட்டுள்ளன. பெரும் பண்ணையார்கள் முதல் ஏழை எளியவர்கள் வரை அய்யாவை நாடிவர காரணம். அவருடைய நேர்மை, வாய்மை. விலைபோகா தூய்மை. இவருடைய  நீதியையும் நேர்மையையும் கண்டு மனுநீதி சோழன் மாலையிட்டு மரியாதை செய்வான், நீதி தேவதை கருப்பு துணியை கழடிவிட்டு புருவம் உயர்த்தி பொறாமைபடுவாள். ஞயாத்திற்கு பெயர்பெற்ற நீதிமான். பட்டுக்கோட்டை வட்டாரத்தில்  ஆபலுகென்று ஒரு அடையாளம் உண்டு. ப.கோட்டையில் கலவரம் என்றால் வெ.அ. தன் கடை கண்ணை உருட்டினால் கலவரம் கப் சிப். நான் ஆம்பலாப்பட்டு என்று சொல்லும் போது நமக்குள் ஒரு பெறுமிதம் ஏற்படுகிறதே அதில் ஒரு சிறு பங்கேனும் வெ.அ. வுக்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


1986 ஊராட்சி மன்ற தேர்தல், 1971-72 க்கு பிறகு நடக்கின்ற தேர்தல், இதில்.அ.தி.மு.க, CPIயை எதிர்த்து களத்தில் பூசைக்கண்ணு சேனாபதி அவர்களை நிறுத்தியது. நான்காவது முறையாக அய்யா வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார். இந்த வெற்றிக்கான பாராட்டு விழாவில், ஞானபிரகாசம் முடிபூண்டார் (இன்றைய ஒரத்தநாடு ஒன்றிய  குழு உறுப்பினரின் கனவர்)   வெ.அ.அவர்களுக்கு உருவ சிலை வைக்கவேண்டும் என்று பாராட்டுரை வழங்கினார். 87ல் MGR மறைவு, அ.தி.மு.க இரண்டாக, கவர்னர் ஆட்சி ஊராட்சி போனது. பிறகு 1996ல் ஊராட்சி தேர்தல், ஆம்பலாபட்டில் நடந்த வியத்தகு தேர்தல். கட்சி வெ.அ. அவர்களை தனது சொந்த மருமகனை எதிர்த்து களத்தில் இறக்கியது. கட்சி மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ, அதை ஏற்று நடப்பவர். அந்த வகையில் தந்தையை எதிர்த்து, மைத்துனரை எதிர்த்து, கடைசியாக மருமகனையும் எதிர்த்து தான் கொண்ட கொள்கைக்கா, கட்சிக்கா, அத்தனை உறவுகளையும் பகைத்துக் கொண்டவர். இந்த தேர்தலில் கட்சியை சார்ந்த முக்கிய நபர்கள் கட்சியின் வேட்பாளர் வெ.அ.வுக்கு எதிராக வேலை செய்தனர். கடசி தோற்றது. 1996 லிருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி கடுமையாக முயற்சி செய்கிறது விட்ட இடத்தை பிடிப்பதற்கு. மாற்றம் ஒன்றே மாறாதது. 1996லிருந்து ஒரு 10 ஆண்டு காலம், அதே நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, முறுக்கிய மீசை என தொடர்ந்து தன்னால் முடிந்த தொண்டினை வெ.அ செய்து வந்தார். 2006க்கு பிறகு வயது முதுமையினால் செயலில் வேகம் குறைந்தது (83வயது)இளைப்பாற ஒதுக்கினார். கட்சி ஒரேயடியாக ஓரம் கட்டி ஒதுக்கியது.


இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ் இருந்தபோது, இந்தியாவில் இந்தமாதம்  விடுதலைபோராட்டத்தில் குண்டடிப்பட்டு இறந்தவர்கள், சிறையில் அடைக்கபட்டவர்கள் இத்தனை பேர், என்று லண்டனுக்கு அறிக்கை அனுப்புவார்களாம்,  அதற்கு சர்ச்சில், மாதா மாதம் இத்தனை பேர் இறந்தனர் என்று சொல்கிறார்கள் ஆனால் இந்த கிழவன் காந்தி மட்டும் எப்படி உயிரோடு இருக்கிறான் என்று ஏலனமாக கேட்பானாம். அறப்போர் நடத்திய வெற்று உடம்பு காரனை பார்த்து வெள்ளை காரன் துப்பாக்கி அஞ்சி நடுங்கியது. “200 வருஷங்கள் கழித்து சமுதாயம் இப்படி ஒரு மனிதன் இந்த பூமியில் எலும்பும் தசையுமாய் நடமாடினான் என்று நிச்சயம் நம்பாது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறான். MGR ருக்காக “புத்தன், ஏசு, காந்தி பிறந்தான்” என்று வாலி காந்தியை கடவுளுக்கு சமமாக வைத்து எழுதினார். அப்பேர்பட்ட காந்தியை இந்தியா சுதந்திரம் பெற்று 168ம் நாள் சுட்டு கொன்றது.  இந்தியாவின் தந்தைக்கே இந்த கதி என்றால் ஆம்பல் தந்தை ….? 


“ஒருமனிதனுக்கு, தான் செய்த தியாகங்களுக்கு பிறதிபலனாக கடைசியில் எஞ்சிநிற்பது வேதனையாகத்தான் இருக்கும்” என்று கீதையில் சொல்லப்படுகிறது. இந்த ஊருக்காக, கட்சிக்கா தனது மனைவி மக்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அல்லும் பகலும் எத்தனையோ இரவுகள் தூங்காமல், ஓடிய ஓட்டங்கள், அலைந்த அலைச்சல், பட்ட பாடு  இவைகளை எண்ணி எண்ணி மனதில் ஒரு இனம்புரியாத வேதனை. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாறல் குன்றியது, உடல் நலிவினம், படுத்த படுக்கை, ஆயிரம் எண்ணங்கள் வந்தது போக,  மெதுவாக ஓடிகொண்டிருந்த மூச்சு காற்று 30.11.2011 அன்று நின்றது. ஊரும், கட்சியும் தனது இரண்டு கண்கள் என வாழ்ந்த மாமனிதனின் கண்கள்  இரண்டும் மூடியது.


ஒரு செல்வந்தனாக பிறந்து, தனது 16 வயதில் சமுதாயத்தில் உள்ள ஏழை எளியோரின் பசி பட்டினியை போக்க, தனது தகபனை எதிர்த்து, கையில் செங்கொடியை தூக்கிக்கொண்டு, தெருத்தெருவாக, ஊர்ஊராக,  நடையா நடந்த தலைவன். கிராமங்கள் தோரும் தன் கையால் செங்கொடி ஏற்றி, வீதி வீதியாக, வீடு வீடாக காலனா, எட்டணா என நிதி திரட்டி கட்சியை வளர்த்த தோழன். ஆம்பலாப்பட்டை முற்போக்கு சிந்தனை களமாக, நிய்யங்களுக்கா போராடும் வீர பூமியாக உருவாக்கிய மாமனிதன். அனைவரையும் படிப்பாளி ஆக்கிய கல்விமான். கொண்ட கொள்கைக்கா தனது சொந்த பந்தங்களையும், சுகபோகங்களையும் துறந்த தியாகி. ஒதுக்கப்பட சமுதாய விடியலுக்கும், ஏழை எளிய மக்களின் வளச்சிக்கும் பாடுபட்ட ஏழை பங்காளன். ஊரையும் சமூகத்தையும் அந்த மண்ணுக்கே உரிய வீரத்தையும் யாருக்கும் எட்டமுடியாத உயரத்தில் தூக்கி வைத்த உத்தமன். ஆம்பலாப்பட்டு என்றால் “கம்யூனிஸ்ட்” என்று அர்த்தம், என நாடல்லாம் உணர வைத்த புரட்சியாளன்.


இப்படி ஒரு தன்னலமற்ற தலைவனை ஆம்பல் இனி என்று பெரும். வாழ்க அய்யாவின் பேரும் புகழும்.

நன்றி

இப்படிக்கு

A S ஜெயபாரதி (என்னும்)

சு.தட்சிணாமூர்த்தி 

தேத்தாடிக்கொல்லை

ஆம்பலாப்பட்டு.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்