புதன், 3 ஏப்ரல், 2019

கள்ளர்களால் நடத்தப்படும் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழா.




மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் 2019 ஆம் ஆண்டு 120-வது அசைவ அன்னதான விழா  நடைபெற்றது. இதனை கரும்பாறை பூசை என்று அழைப்பார்கள். மதுரை மாவட்டத்தில் நன்கு ஐந்து ஊரில் இதுபோல் நடைபெறும்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் மார்கழி மாத அன்னதான விழா ஆண்டுதோறும் நடைபெறும். இவ்விழாவில் பக்தர்கள் காணிக்கையாக கடந்த ஆண்டு வழங்கிய ஆடுகளை வெட்டி சாமிக்கு படைத்து அன்னதான விழா நடைபெறும்.

சமைத்த சாதத்தை மலைபோல் குவித்து, சமைத்த கறியை அன்னத்தில் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன் பிறகு 10 க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சமைக்கப்பட்ட கறிகளை எல்லாம் மொத்தமாக இலைகளில் கொட்டி அவற்றை ஒன்றாக்கி அதன் பிறகு கோவிலுக்கு வந்த ஆண் பக்தர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிமாறப்பட்டு அன்னதான விழா நடைபெறும்.

இந்த விழாவிற்கு 1 வயது பெண் குழந்தைகள் கூட பங்கேற்க கூடாது என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் இந்த விழாவில் சாப்பிட்டு கீழே போடப்பட்ட இலைகள் வாடும்வரை இந்த பகுதிக்கே பெண்கள்வரக்கூடாது என்பது அப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது.












2016 இல் நடந்த 


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்