ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

விஜயநகர மற்றும் நாயக்கர் ஆட்சி அமைவதை எதிர்த்த கள்ளர்கள்


கள்ளர் மரபினர் படை வீரர்கள் விசயநகரத் தரப்புக்குப் பெருந்தொல்லையும் அழிவும் தந்தனர். கள்ளர் படைகள் கிருட்டிணையாறு கடந்து விசயநகர எல்லைப்புறங்களைச் சூறையாடி அழிவு பரப்பின. 


மதுரை வீரன் கள்ளர்களை யடக்க வேண்டு மெனக் விசயரங்க சொக்கலிங்கருக்கு ஒரு கடிதம் எழுதி திருமலைநாயக்கர் அனுப்பினார் என்ற கதைகளும் உண்டு. 


திருமலை நாயக்கர்‌ காலம்‌ வரையிலும்‌ மேலூர்க்‌ கள்ளர்‌ நாடு எந்த ஆட்சிக்கும்‌ உட்படாதது.'இராமப்பய்யன்‌ அம்மானை' இதனைக்‌ கள்ளர்‌ பத்துநாடு என்று கனமாய்‌ இருக்கட்டும்‌ காண்‌' என்று கூறும்‌. திருமலை நாயக்கர்‌, இராமப்பய்யனுக்கு இவ்வாறு ஓலை கொடுக்கிறார்‌. ஏனெனில்‌, மேலார்க்‌ கள்ளர்கள்‌ இந்த அரசுக்குள்‌ வரமாட்டார்கள்‌ என்கிறார் முனைவா்‌ தொ.பரமசிவன் .







16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்மாவட்டங்களுள் ஒன்றான மதுரைக்கு அரசப்பிரதிநிதியாக இருந்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மதுரையில் நாயக்கர் வம்சத்தினை நிறுவியவர் இவரே ஆவார். விசுவநாத நாயக்கர், தமிழகத்தில் தனி நாயக்கர் ஆட்சியை ஏற்படுத்த, தன்னுடைய இராணுவத்தினை வழிநடத்திய ஜெனரல் ஆரியநாத முதலி என்பவரை நியமித்தார். விசுவநாத நாயக்கரின் படையை வழிநடத்தியதோடு, தமிழக சிற்றரசுகள் ஒன்றிணையாமல் இருப்பதற்காக, தந்திரமான முறையில்,  பிரித்தாலும் சூழ்ச்சியால், தமிழகத்தை பாளையங்களாக பிரித்தார்.

அப்போது, கிபி 1529 ல் மதுரையின் அரசராக பொறுப்பேற்ற விசுவநாத நாயக்கரை எதிர்த்து விசங்கி நாட்டு கள்ளர்கள் கலகங்கள் செய்துள்ளனர்.  இதையடுத்து படை ஒன்றை அனுப்பி விசங்கி நாட்டு கள்ளர்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தி உள்ளனர். இதுபற்றி பழமையான ஒலைச்சுவடிகள் பின்வருமாறு விவரிக்கின்றன.

” காவேரி தீரமுழுதும் கிராமங்கள் கட்டி அக்கரகாரங்கள் கோயிலும் கட்டி வைத்து வீசங்கிநாட்டு கள்ளரையும் பாளையக்காரரையும் அடக்கி வச்சி சீமையை பிரபலப்படுத்தி”

என ஒலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சையில் இருந்த விசங்கி நாட்டு கள்ளர்களும் மற்ற தலைவர்களும் விசுவ நாத நாயக்கனின் மேலாண்மையை ஏற்காமல் சண்டையிட்டு வந்ததை இவ்வரிகள் நமக்கு உரைக்கின்றன.

இங்கனம் மூவேந்தர்களின் சுதந்திர ஆட்சி மறைந்தபின் அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து கள்ளர் பழங்குடிகள் தொடர்ந்து போரிட்டு வந்துள்ளதை வரலாற்று ஆவணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.



16 ஆம் நூற்றாண்டில் ‘அக்கல் ராஜா’ என்ற விஜய நகர பிரதிநிதி (இவர் சத்திரிய ராஜாஎனப்படும் ராஜூ வகுப்பை சேர்த்தவர்) இராமேஸ்வரம் செல்லும்பொழுது தெலுங்குக் குல காலபுரம் என்ற நார்த்தாமலை பகுதியில் ‘விசெங்கி நாட்டுக் கள்ளர்’களை கட்டுப்படுத்துமாறு நாயக்கனால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களை வெற்றிகொண்டு நார்த்தாமலை கோட்டையில் தாங்கினார். பிறகு நார்த்தாமலை தெலுங்குபுரம் ஆனது.


பல்லவராய சீமை என்ற அந்த பகுதியின் பல்லவராயர் இளவரசியான 'அக்கச்சி' என்பவர், கச்சிராய பட்டம் உடைய கள்ளர் வீரனிடம் 'அக்கல் ராஜாவின்' தலையைக் கொய்து வருமாறு பணித்துள்ளார்.


நார்த்தாமலையில் தங்கியிருந்த 'அக்கல் ராஜாவின்' தலையை வெட்டி மீண்டும் நார்த்தாமலை "தெலுங்குக் குல காலபுரம்" என்பதை நிருபித்தார்.

சிறுவயல் நாட்டு கள்ளர்கள், கீரனூர் மற்றும் நாரத்தாமலை, சிவன் கோயில்களில் கூடுவது வழக்கம். இந்த சிறுவயல் நாட்டு, விசெங்கி நாட்டு கள்ளர்கள் வாழும் பகுதியின் ஒரு பிரிவாகும். விசங்கி நாட்டுக் கள்ளர்கள் புதுக்கோட்டை யின் வடக்கு பகுதியில் மிகுந்து வாழ்கின்றனர். இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தன்னாட்சி முறையில் வாழ்ந்து வந்தனர்



வரி கேட்டு வரும் நாயக்கர்களின் தலையை வெட்டி அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்தனர்



விசங்கிநாட்டுக்கள்ளர்களை ஆங்கிலேயர்கள் தங்கள் ஏடுகளில் "A Perfect Pest" என குறித்துள்ளனர், (பிரிட்டிஷ் ஆளுமைக்கு கட்டுப்படாமல் மூன்று மாவட்டங்களில் கோலோச்சியுள்ளனர் விசங்கிநாட்டுக்கள்ளர்கள்)



நாயக்கர்கள் குளத்தூர் நமண தொண்டைமானிடம் மூர்க்கத்தனமான விசங்கி நாட்டுக்கள்ளர்களை கட்டுப்படுத்த உதவி கேட்டகின்றனர். நமணதொண்டைமான் நேரிடையாக அவர்களை களத்தில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்திருந்தார். புலியூரில் திருவிழாவிற்காக அவர்கள் அனைவரும் கூடியபொழுது அவர்களை வென்று கள்ளர்நாட்டு தலைவர்களையும் சிறைபிடிக்கிறார்.

அப்போது அவர்களின் தலையை வெட்டி சாக்கில் போடுகின்றார். ஒரு சாக்கில் "ஒன்பது" தலைகள் இடப்பட்டு அதனை விசங்கிநாட்டு கள்ளன் மூலமாகவே நாயக்கனிடம் ஓர் செய்தியோடு எடுத்துச்செல்ல வைக்கிறார்.


மதுரையில் நாயக்கர் ஆட்சி உருவான காலத்தில் இருந்தே மதுரையை சுற்றியுள்ள கள்ளர் நாடுகள் யாருக்கும் கட்டுப்படாத தன்னரசாக செயல்பட்டு வந்தனர். மேலும் நாயக்கர்களின் அதிகாரத்தை எதிர்த்து போரிட்டும் வந்துள்ளனர்.

இதில் சிறுகுடி நாட்டு கள்ளர்களின் எதிர்ப்பும் திருமலை நாயக்கருக்கு இருந்துள்ளது என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. சேருங்குடி நாடு என்ற பெயரே நாளடைவில் சிறுகுடி என்று மாற்றம் அடைகிறது.

கிபி 1639ல் திருமலை நாயக்கருக்கு எதிராக செயல்பட்ட சடைக்கன் சேதுபதியை அடக்க ஒரு மிகப்பெரும் படையானது இராமப்பய்யன் என்ற படைத்தலைவன் மூலமாக அனுப்பப்பட்டது.

இராமப்பய்யன் மிகப்பெரிய படைதலைவன், அனைத்து விதமான போரில் திருமலை நாயக்கருக்கு வெற்றி வாங்கி கொடுத்தவன். அப்படி பட்ட தளபதி படையெடுத்து சிவகங்கை நோக்கி செல்கின்றான். திருப்புவனம் அருகே தனது படைத்தளங்களுடன் கூடாரம் அமைக்கிறான்.

மடப்புரம் மக்கள் அவரை ஒரு பிரதிநிதியாக எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் தங்கள் வாழ்க்கையையும் சொத்துக்களையும் பாதுகாப்பற்றதாக மாற்றிய கள்ளர்களுக்கு எதிரான தங்கள் குறைகளை இராமப்பையனுக்கு தெரியப்படுத்துகின்றனர்.
(The people of Madappuram waited on him in a deputation and represented to him their grievances against the Kallars who made their lives and properties insecure.)

கள்ளர்களுக்கு எதிராக கோபமடைந்த இராமப்பையன், கள்ளர் குடியிருக்கும் பகுதியான மத்தம் சிறுகுடிக்குச் சென்று அங்குள்ள கள்ளர்களை அழித்தார். (Indignant against the Kallars, Ramappaiyan went to Mattam Cirukudi, a Kallar settlement, and destroyed it.)

கள்ளர்கள் அந்த இடத்தில் அனுபவித்ததை நாயக்க மன்னருக்கு கொடுத்து விடுகிறான். மேலும் அரசு பரிந்துரையின் பேரில், கள்ளர் பழங்குடியினருக்கு எதிரான தனது செயற்பாடுகளுக்கு இராமப்பையன் முற்றுப்புள்ளி வைத்தான்.
(Kallars of the place represented to the Naick king what they had suffered and on royal intercession, Ramappaiyan put an end to his activitics against the Kallar tribe.)


அதன் பிறகு இராமப்பையன் திருப்புவனத்திற்கு திரும்பி ராம்நாடு செல்லும் வழியில் படைகளுடன் முன்னேறினான். சேதுநாடு மீது கொண்ட யுத்தத்தில் இராமப்பையன் வெற்றி கொண்டு சடைக்கன் சேதுபதியை கைது செய்வதாக வரலாறு விரிவடைகிறது.

திருமலை நாயக்கருக்கு எதிரான கள்ளர்களின் யுத்தம் மிகவும் தீவிரமாக அன்றைய காலத்தில் இருந்தது.

கிபி 1639ல் சிறுநாட்டு கள்ளர்களின் யுத்தத்திற்கு பிறகு மேல்நாட்டு கள்ளர்கள் என்று அழைக்கப்படும் பிறமலை நாட்டு கள்ளர்களுடன் மோத வேண்டிய சூழ்நிலை திருமலை நாயக்கருக்கு இருந்தது.

மதுரை நாயக்கர் அரசுகளுடனான கள்ளர்களின் யுத்தம் ராணி மங்கம்மா காலம் வரையிலும் தொடர்ந்தை வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆய்வு : அஜித் தேவர்

Reference book : Annals Of Oriental Research, vol.6 (1941-42)

அந்த செய்தி என்னவெனில் பத்து தலைகள் உள்ளன இதனை "சுமந்துவருபவரையும் சேர்த்து". இதற்கெல்லாம் அஞ்சாத விசங்கிநாட்டுக்கள்ளர்கள் மீண்டும் நாயக்கர்களுக்கு கட்டுப்படாமல் உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில்‌ நாயக்கர்‌ காலத்தில்‌ வாழ்ந்த கள்ளர்‌ குடியினர்க்குத்‌ திருமலைநாயக்கர்‌ மதிப்பளித்து கள்ளர் சமூகத்தலைவர்களுக்கு அதிகாரமும்‌ அளித்துள்ளார்‌.கள்ளர்‌ நாட்டின்‌ நிர்வாகத்தினை தமக்கு ஆதரவாக இருக்கும்படிப்‌ பார்த்துக்கொண்டார்‌.இதுவே அவரது நாட்டு அரசியல்‌ நெறியாக இருந்தது. நாயக்கர்குடித்‌ தலைவர்களுக்குவழங்கும்‌ கம்பளி அதிகாரம்‌ போன்றவற்றைப்‌ புன்னைத்தேவன்‌ வழியினர்க்குத்‌ திருமலைநாயக்கர்‌ அளித்துள்ளதைத்‌ தருமத்துப்பட்டிச்‌ செப்பேடுகள்‌ தெரிவிக்கின்றன.





தொகுப்பு : அரவிந்த் தொண்டைமான்
நன்றி: சியாம் சுந்தர் சம்பட்டியார்

ஆதாரம்: ORIENTAL HISTORICAL MANUSCRIPTS by WILLIAM TAYLOR - VOLUME 2 புத்தகம் பக்கம் எண் 16.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்