புதன், 24 ஜூலை, 2019

சிங்களப் படையெடுப்பும் கள்ளர் தலைவர்களும்



சிங்களர்களின் புனித நூல்களான மகாவம்சம், குலவம்சம் நூல்களில் தாங்கள் யார் யாரிடம் போர்புரிந்தோம், யார் எங்களை எதிர்த்தவர்கள் என்பதை மிகவும் தெளிவாக குறித்துள்ளார்கள். இதில் வரும் ஊர் பெயர்களும், தளபதிகளின் பெயர்களும் சிங்களர்களின் உச்சரிப்பில் இருப்பினும், அதனை முதுபெரும் வரலாற்று நாயகர் கிருஷ்ணசாமி அய்யங்கார் உதவியுடன் குறிப்பிட்டுள்ளேன்.

முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1111–1132)

பொதுயுகம் 1170-71 காலகட்டத்தில் இருவேறு பாண்டியர்கள் மதுரையின் அரியணைக்காக மோதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தநேரத்தில் ஆண்டுகொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கு எதிராக குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டிருந்தார். இந்த முற்றுகையில் குலசேகர பாண்டியன் வலிமையுடன் இருந்தததால் எந்தேநேரத்திலும் தான் ஆட்சியை இழக்க நேரிடலாம் என்று அஞ்சிய பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யுமாறு இலங்கையின் அரசனான பராக்கிரமபாகுவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கைத் தீவானது சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. முதலாம் விஜயபாகு (1055–1100) தன்னுடைய படையெடுப்பாலும் சோழர்களை வெற்றிபெற்று இலங்கையை கைப்பற்றினார். முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1153–1186) தலைநநகரமான அனுராதபுரத்தை கைவிட்டு திட்டமிடப்பட்ட புதிய நகரமான பொலன்னறுவைக்கு தலைநகரை மாற்றிக்கொண்டார்.

இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்தின்படி, அரியணை ஏறுவதற்காக பராக்கிரமபாகு ஏறத்தாழ பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு எதிரிகளுடன் போரிட்டதாகக் கூறுகிறது. இந்த நேரத்தில் பாண்டிய நாட்டிலிருந்து உதவி கேட்டுவந்த தூதுவர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக சிங்களப்படைகளை பராக்கிரம் பாண்டியனுக்கு உதவ அனுப்ப முடிவெடுத்தார் பராக்கிரமபாகு.

இந்த உதவி மதுரையை அடைவதற்கு முன்னர் பராக்கிரம பாண்டியன் போரில் தோற்கடிக்கப்பட்டார். அவரும், அவனது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். பின்னர் குலசேகர பாண்டியன் மதுரையில் பாண்டிய அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.


குலசேகர பாண்டியன் முடிசூடியதை அறியாத பராக்கிரமபாகு, புகழ்பெற்ற தனது தளபதியான லங்கபுர தண்டநாதவின் தலைமையில் ஒரு படையை அனுப்ப முடிவெடுக்கிறார். லங்கபுர தலைமையில் தலைநகரிலிருந்து புறப்படும் சிங்களப்படை இலங்கையின் மஹாதிட்ட (மாந்தோட்டம்) என்கிற இடத்தை வந்தடைகையில் குலசேகர பாண்டியன் மதுரையை வென்றதும் பின்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவனது மனைவி, பிள்ளைகள் கொலையுண்டதுமான செய்து வந்தடைகிறது. இருப்பினும் பராக்கிரமபாகு சிங்களைப்படைகளை மதுரையை நோக்கிச் செல்ல உத்தரவிடுகிறார்.

மஹாதிட்டவிலிருந்து புறப்படும் சிங்களப்படை தலபில்ல என்னும் துறைமுக நகரை வந்தடைந்து அங்கிருந்து கப்பல்களில் ஏறி ஒரு இரவும், ஒரு நாளும் பயணம் செய்து பாண்டியப்பகுதில் இருக்கும் தலபில்ல (புலியடிசாலை) என்னும் இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் குலசேகர பாண்டியன் படைகளுடன் படையெடுத்து வருகிறார் என அறியும் பராக்கிரமபாகு அவனை எதிர்க்க ஜகத் விஜய என்பவனின் தலைமையில் இன்னொரு படையை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அந்தப் படையும் சிங்களத் தளபதி லங்கபுர இருக்கும் ஆனைவிலக்கிற்கு வந்து சேருகிறது. இருவரும் நெட்டூர் மற்றும் ஆனைவிலக்கியில் தங்கள் முகாம்களைத் தனித்தனியாக அமைத்துக் கொள்கிறார்கள்.

தரைவழியாகச் சென்ற படைகளுக்குத் தானே தலைமை தாங்கிச் சென்ற குலசேகரபாண்டியனுக்கும் லங்கபுரவின் படைகளுக்கும் பெரும்போர் நிகழ்கிறது. குலசேகரனின் குதிரை கொல்லப்பட்டதால் அவன் பின்வாங்கிச் செல்கிறான். தோல்வியடைந்த பாண்டியப்படைகளின் நிலைகளைக் கைப்பற்றும் சிங்களப்படை அவற்றைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து ஏற்கனவே கைப்பற்றிய வடலை என்னும் நகரில் நிலைகொள்ளுகிறது சிங்களப்படை.

மாலவச் சக்கரவர்த்தி என்பவர் சிங்களப்படைகளுக்குச் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் செம்பொன்மாரி என்கிற இடத்திலிருக்கும் கோட்டையில் சென்று பதுங்கிக் கொள்கிறார். வெல்லவே முடியாததாகக் கருதப்பட்ட அந்தக் கோட்டையைச் சோழர்கள் இரண்டு ஆண்டுகாலம் முற்றுகையிட்டும் வெல்ல இயலவில்லை என லங்கபுரவிற்குத் தெரியவருகிறது. எனவே அதனை நோக்கிச் செல்லும் சிங்களப்படைகள் வெறும் அரை நாட்களிலேயே அந்தக் கோட்டையைக் கைப்பற்றி உள்ளே நுழைகிறார்கள். எனினும் சிறிது நேரத்திலேயே பாண்டியப்படைகள் அந்தக் கோட்டையைச் சூழ்ந்து இலங்கைப்படையை முற்றுகையிடுகிறார்கள். பெரும் போருக்குப் பின்னர் அந்த முற்றுகையை உடைக்கின்றன சிங்களைப்படைகள்.

செம்பொன்மாரியை மீண்டும் மாளவச் சக்கரவர்த்திக்கு அளிக்கும் லங்கபுர, திருவேங்கம் மற்றும் கருத்தங்குடி வழியாக மீண்டும் ஆனைவிலக்கிக்குச் சென்று சேர்கிறார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் சிறுவயலுக்குச் சென்று ஊர்த்தலைவனான புண்கொண்ட நாடாள்வார் என்பவரையும் அவரது நட்புப் படைகளையும் வென்று, நாடாள்வாரின் இரண்டடுக்கு கொண்ட மாளிகையைத் தீக்கிரையாக்குகிறார். லங்கபுர பின்னர் அங்கிருந்து காளையார் கோவிலுக்குச் சென்றுவிட, இன்னொரு சிங்களத் தளபதியான ஜகத் விஜய மானாமதுரையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பிடித்துவிட்டு மீண்டும் நெட்டூருக்குத் திரும்புகிறார்.

பின்னர் ஒண்றிணைந்த சிங்களப்படைகள் குலசேகரப் பாண்டியனைத் தேடி திருப்பாலூருக்குச் செல்கின்றன. இந்த நேரத்தில் குலசேகரப் பாண்டியன் மற்றும் சிங்களப்படைகளுக்கு இடையே போர் நடக்கிறது. போரில் தோல்வியுறும் குலசேகரப்பாண்டியன் அங்கிருந்து தப்பி தொண்டமான் நாட்டிற்கு (புதுக்கோட்டை) தப்பிச் சென்று தொண்டைமானின் கோட்டைக்குள் அடைக்கலம் ஆனார். அங்கிருந்து சோழர்களின் உதவியைக் கோருகிறார்.

பின்பு சிங்கள தளபதி லங்கப்புராவிற்கு எதிராக தொண்டைமானையும் (அறந்தாங்கி தொண்டைமான்), தன்னுடன் கூட்டணியில் சேர்த்து எதிர்க்க தயாராகினார் குலசேகர பாண்டியனார்.


குலசேகர பாண்டியன் படையும், தொண்டைமானார் படையும் மற்றும் பயமறியாத வீரனான அஞ்சமாதித்தா என்பருடன் சேர்ந்து சிங்களர்கள் கைப்பற்றி வைத்திருந்த மங்கலம்மா என்கிற இடத்திற்கு படையுடன் செல்கின்றனர்.

ஏற்கனவே இந்த இடத்தை சிங்களர்களிடம் போரிட்டு இழந்து மீண்டும் கைப்பற்ற முனைப்புடன் இருந்த மன்னையர் ராயர், தென்கொண்ட ராயர் என்கிற இரு குறு நில மன்னர்களுடன் சேர்ந்து குலசேகர பாண்டியன் சிங்களபடையை விரட்டுகிறார்.

இதனை சற்றும் எதிர்பார சிங்கள தளபதி லங்கப்புரா மிகவும் கோபமுற்று மதுரையிலிருந்து ஒரு பெரும் வலிமைமிக்க படையுடன் மங்கலம் கோட்டைக்கு போரிட வருகிறார். (வல்லுடி வால்மங்கலம், காளையார் கோவிலுக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் இருப்பதாகத் தெரிகிறது)


ஆனால் லங்கப்புராவிற்கு அங்கு எளிதில் வெற்றி கிடைக்கவில்லை. ஏனென்றால் அந்த கோட்டையை தொண்டைமான் மனைவியின் மூன்று சகோததர்களானா (பங்காளிகள்) முனையத்திரியர், கள்ளர் வேலைக்காரர் , காலிங்கராயர் மூன்று பேரும் அரணாக கத்திபோல் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்.

லங்கப்புராவின் சிங்கப்படைக்கும், பாண்டிய தளபதிகளுக்கும் போர் மிகவும் மூர்க்கமாகவும், வீரமாகவும் நடந்தேரியது. இறுதியில் அதிக படையுடன் இருந்த லங்கப்புராவிற்கே வெற்றி கிடைத்தது. மங்கலம் கோட்டை மீண்டும் சிங்களர் வசம் சென்றது.

இந்த வெற்றிக்கு பின்பு ஶ்ரீவில்லிபுத்தூருக்கு சிங்களப்படை நகர்ந்து அங்கேயும் வெற்றி வாகை சூடியது. இந்த நேரத்தில் குலசேகரபாண்டியன் திருநெல்வேலியில் தன்னுடைய படையுடன் போருக்கு தயாராகுகிறார்.

குலசேகரபாண்டியன் தன்னுடைய வடகொங்கு மற்றும் தென்கொங்கு நாட்டில் உள்ள தம்பிகளிடம் படை உதவி கேட்கிறார். இந்த விசயத்தை கேள்வி பட்ட சிங்களத்தளபதி லங்கப்புரா தன்னுடைய பெரும் படையுடனும், ஜெகவிஜயா என்ற இன்னொரு தளபதியுடன் சேர்ந்து குலசேகர பாண்டிய மன்னனின் இன்னொரு மாபெரும் தளபதியான கள்ளர் வேலைக்காரர் முழுமையாக தரைமட்டாக்க திட்டமிடுகின்றனர்.

இந்த நேரத்தில் லங்கப்புரா மிகவும் நேர்த்தியாக குலசேகரபாண்டியன் தன்னுடைய தம்பிகளுடன் சேர்ந்துவிட்டால் தங்களால் சமாளிக்க முடியாது என்பதால், குலசேகரபாண்டியனின் தளபதியான கள்ளர் வேலைக்காரர், லங்கப்புரா வீழ்த்தி அவருடைய ஏராளமான குதிரைகளையும், தமிழர்களையும் போர் கைதிகளாக பிடித்து செல்கின்றனர்.

இரண்டு சிங்களத் தளபதிகளும், லங்கபுர மற்றும் ஜகத் விஜய, குலசேகரனின் இருப்பிடத்தைச் சூழ்ந்து அவனைத் தாக்குகிறார்கள். குலசேகரன் அங்கிருந்த ஒரு பெரிய ஏரியின் கரைகளை இடித்து அவர்களைத் தோற்கடிக்க முயல்கிறான். இருப்பினும் சிங்களத் தளபதிகள் அந்த ஏரியின் கரைகளை விரைவாகச் சரிசெய்து குலசேகரனை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்கள். சிரிமலக்கா மற்றும் குற்றாலம் பகுதிகள் அவர்களிடம் வீழ்கின்றன.

சிரிமலக்கா என்கிற இடத்தில் வைத்தே குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனையும் அவனது மனைவி, குழந்தைகளையும் கொன்றதால் அந்த ஊரில் இருந்த அரண்மனையைத் தீ வைத்து எரிக்க உத்தரவிடுகிறார் லங்கபுர. பின்னர் அங்கிருந்து சென்று சோழகுலந்தகம் என்னும் இடத்தைக் கைப்பற்றுகிறார்.


குலசேகர பாண்டியனுக்கு சோழ நாட்டிலிருந்து படையுதவி கிட்டுகிறது. பல்லவராயரின் கல்வெட்டுக்களின்படி இந்தப் படைகள் புதுக்கோட்டைக்குத் தெற்குப்பகுதியிலிருந்து வந்தவை எனத் தெரிகிறது. அவர்களுடன் இணையும் குலசேகர பாண்டியன் பாண்டு நடுக்கோட்டை மற்றும் உரியேரியைத் (எழுவன்கோட்டை மற்றும் இறகுசரி) தனது தலைமையிடமாகக் கொள்கிறார். இருப்பினும் அவரை அங்கும் தோற்கடிக்கும் இரண்டு சிங்களத்தளபதிகளும் பாளையைம்கோட்டையை அடைந்து அங்கு ஒளிந்திருந்த குலசேகரனை விரட்டுகிறார்கள்.

குலசேகர பாண்டியன் அங்கிருந்து மதுரையை நோக்கிப் படையெடுத்துச் செல்வதாகக் கேள்விப்படும் சிங்கள தளபதிகள் உடனடியாக மதுரையை நோக்கி வர, அங்கிருந்து தப்பும் குலசேகரன் சோழ நாட்டிற்குத் தப்பிச் சென்று சோழர்களின் உதவியை நாடுகிறார். பாடநல்லூரில் ஜகத் விஜயனை நிறுத்திவிட்டு லங்கபுர திருக்கண்ணப்பருக்குச் செல்கிறார். இதே வேளையில் சோழ நாட்டிலிருக்கும் குலசேகர பாண்டியனின் வேண்டுகோளை ஏற்கும் சோழ அரசர் அவருக்கு உதவியாக பல்லவராயரின் தலைமையிலும், பிற சோழ படைத்தளபதிகளின் தலைமையிலும் ஒரு படையைத் தரைவழியாகவும், தொண்டி துறைமுகம் வழியாகவும் அனுப்பி வைக்கிறார்.

இதனைக் கேள்விப்படும் லங்கபுர தனது படையணியில் ஒருபகுதியினரை மதுரையைப் பாதுகாப்பதற்காக வைத்துவிட்டு இன்றைய திருப்பத்தூர் தாலுக்காவிலிருக்கும் கீழாநிலை என்கிற இடத்திற்குச் செல்கிறார். இங்கு நடக்கும் போரில் சோழ, பாண்டிய கூட்டுப்படைகளைத் தோற்கடிக்கும் லங்கபுர, மணமேக்குடி மற்றும் வட மணமேக்குடி என்னும் ஊர்களைக் கைப்பற்றுகிறார். இந்த இடம் வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் இருகிறது. இந்த இரண்டு ஊர்களையும் தீக்கிரையாக்கிவிட்டு மஞ்சக்குடி என்கிற ஊரையும் எரித்து அழிக்கிறார் லங்கபுர.

குலசேகர பாண்டியனுக்கு உதவிய சோழர்களைப் பழிவாங்கும் பொருட்டு சோழப்பகுதிகளில் ஏழுகாததூரம் நுழையும் சிங்களப்படைகள் அந்தப்பகுதிகளைத் தாக்கி அழிக்கின்றன. பின்னர் குலசேகரனுக்கு உதவச் சென்ற நெடுந்தரையரின் ஊரான வேளாக்குடிக்குச் செல்கின்றன சிங்களப்படைகள். ஆனால் நெடுந்தரையர் வேறுபல தமிழ் சிற்றரசர்கள், தளபதிகளின் உதவிகளைப் பெறுவதில் வெற்றி பெறுகிறார். அவரது படைகளுடன் குலசேகரப்பாண்டியனுடன் வந்த திருநெல்வேலி, கொங்குப் படைகளும் ஒன்று சேர, பொன்னமராவதியில் லங்கபுரவை எதிர்த்து நிற்கிறான் குலசேகரபாண்டியன். அங்கும் அவனைத் தோற்கடித்து விரட்டுகிறார் லங்கபுர.

பாண்டிய நாட்டில் வீரபாண்டியனின் எதிரிகளை வீழ்த்தி விரட்டிவிட்டதாக எண்ணும் லங்கபுர பின்னர் தனது தலைமையகத்திற்குத் திரும்புகிறார். பின்னர் தனது அரசனான இலங்கையின் பராக்கிரமபாகுவை கவுரக்கும் வகையில் பராக்கிரமபாகுவின் படம் பொறித்த இலங்கைப் பணத்தை (கஹபண) பாண்டிய நாட்டில் தயாரிக்க உத்தரவிடுகிறார். வீரபாண்டியனுக்குப் பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர் பாண்டிய நாட்டில் கைப்பற்றிய கைதிகள், யானைகள், குதிரைகள் போன்றவற்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தானும் இலங்கை திரும்புகிறார் லங்கபுர.

லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். அவரது நினைவாக பண்டுவிஜயக என்கிற கிராமம் நிறுவப்பட்டு ஏராளமான பொன்னும், பொருளும் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்படுகிறது.

குறிப்பு :

இங்கு பாண்டியருக்கு துணை நின்ற தலைவர்கள் கள்ளர் மற்றும் மறவரே . இதில் வரும் பட்டங்களை உடைய கள்ளர்கள் மற்றும் மற்றவர்கள் இன்றும் அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

1) குலசேகர பாண்டிய மன்னனின் இராணுவ தலைமையிடம்:


சிங்களர்கள் தங்களது எதிரிகளான பாண்டிய மன்னனின் இராணுவ தலைமையிடமாக குறித்த இடம் தான் எழுவன்கோட்டை மற்றும் இறகுசரி. இந்த இரண்டு ஊர்களும் குலசேகர பாண்டியனின் உறுதியான கோட்டைகளுடன் மிகவும் வீரமிக்க படைகள் இங்கே இருந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த இரண்டு ஊர்களும் மிகவும் உயிர்ப்புடன் உள்ளது.

எழுவன் கோட்டை என்ற ஊர், ஏழுகிளை கள்ளர் நாடுகளில் வலிமைமிக்க நாடுகளில் ஒன்றான தென்னிலை நாட்டின் தலைமை அம்பலமாக 1000வருடங்களாக எழுவன் கோட்டை அம்பலம் திகழ்கிறார். மேலும் புகழ்பெற்ற கண்டதேவி தேரோட்டத்தில் முதல் மரியாதை இந்த தென்னிலை தலைமை அம்பலமான எழுவன் கோட்டை அம்பலமே பெறுகிறார்.

அதேபோல் இறகுசேரியும் எழுகிளை கள்ளர் நாடுகளில் ஒன்றாகும். கண்டதேவி தேரோட்டத்தில் உள்ள நான்கு வடத்தில் நான்காவது வடமும், முதல் மரியாதையும் இறகுசேரி அம்பலத்திற்கே கொடுக்கப்படுகிறது.

மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட செம்பொன்மாரி இன்றும் எழுகிளை கள்ளர் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. சொலையர்கள் என குறிப்பிடப்பட்ட சோலையன் கிளை கள்ளர்கள் இன்றும் வசித்து வருகின்றனர். செம்பொன்மாரி கள்ளர் நாடு: 22.5 கிராமங்கள் உடையது.

2) சிறுவயல் தலைவர் புண்கொண்ட நாடாள்வார் :

மறவர் சீமையின் தலைவர்கள் வடவால திருக்கை நாடாள்வார், குண்டைய முத்தரையர், அஞ்சுகோட்டை நாடாள்வார், அதளையூர் நாடாள்வார், தழை யூர் நாடாள்வார், என பல தலைவர்கள்.


சிவங்கங்கை மன்னர் கௌரி வல்லபத்தேவர் - மாணிக்காத்தாள் தம்பதிக்கு, குழந்தை பாண்டிய தேவர், நமச்சிவாய தேவர், ராமசாமித்தேவர் எனும் மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களுக்கு சிறுவயல், முடிகண்டம், குருந்தம்பேட்டை ஆகிய கிராமங்கள் அளிக்கப்பட்டது

3 ) மன்னையர்ராயர், தென்கொண்டராயர் :


இந்த நூற்றாண்டில் சிறப்பு பெற்று விளங்கியவர்கள் ஐயா. நடராசன் மன்னையர், மன்னார்குடி தியாகி. கோபால்சாமி தென்கொண்டார்

முனைவர் திரு. ம. நடராஜன்


(தியாகி. கோபால்சாமி தென்கொண்டார்)

4) தொண்டைமான் மனைவியின் மூன்று பங்காளிகள் முனையத்திரியர், கள்ளர் வேலைக்காரர் / களத்துவென்றார் , காலிங்கராயர் குறிப்பிடப்படுகிறார்கள்:



இந்த நூற்றாண்டில் சிறப்பு பெற்று விளங்கியவர்கள் மக்கள்செல்வார் TTV தினகரன் முனையத்திரியர். 1942ல் இலங்கை கண்டி கள்ளர் மகாசபை செலாளர் ராஜமுத்தையா காலிங்கராயர்(மடுல்களை).

கள்ளர் வேலைக்காரர் என்பதை நோக்கும் போது சோழர்களின் வேலைக்கார படை என்று ஒரு தனி படை இருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் முகமதியரிடம் இருந்தது காத்துக்கொள்ள மக்கள் கள்ளவேலைக்காரர்களிடம் சரணடைந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதை தவிர அதில்குறிப்பிட பெயர் களத்தில்வென்றார் என்பதாகவும் இருக்கலாம்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தில் ஐராவதீஸ்வரர் கோவிலில் அறங்காவலர் பொறுப்பும் மற்றும் முதல் மரியாதை களத்தில்வென்றார் பெறுகிறார்கள்.

5) வீரனான அஞ்சமாதித்தா ((அண்ணுண்டார் / அண்ணுத்திப்பிரியர்) என்ற பட்டமுடையவர்களாகவே இருக்கலாம்


6 ) வேளாக்குடி என்ற ஊர், தஞ்சையில் இருந்து 75 km தொலைவில் உள்ள பேராவூரணி பகுதியில் உள்ளது. மேலும் நெடுந்தரையர் பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.


7 ) கீழாநிலை கோட்டை:






கீழாநிலை முக்கிய கோட்டையாக திகழ்ந்தது. பல்வேறு மன்னர்களின் ஆளுகைக்கின் கீழ் சென்றிருந்தாலும் இறுதியாக தொண்டைமான்களிடம் வந்தது.

ஆய்வு : சோழபாண்டியன்

நன்றி: 
திரு. பி.எஸ். நரேந்திரன்
குலவம்சம் (சிங்கள புனித நூல்)

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்