புதன், 13 மார்ச், 2024

ஆண்டி கண்டியத்தேவர்‌ வழிபாடு

 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில்‌ கருக்காடிபட்டி என்ற கிராமம்‌ உள்ளது. இக்கிராமம்‌ பத்தை, காரப்‌பத்தை, கருக்காடிப்பத்தை என்றெல்லாம்‌ பெயர்‌ வழங்கிவந்து தற்போது கருக்காடிப்பட்டி என்றழைக்கப்படுகிறது. இங்கு மிகப்‌ பெரும்பான்மையாகக்‌ கள்ளரின மக்களின்‌ கண்டியர்‌ என்ற பட்டப்‌ பெயர்‌ கொண்டவர்களே உள்ளனர்‌. இவர்கள்‌ ஆண்டி கண்டியத்தேவர்‌, பெத்தாயி வளவாயி, தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்‌. ஊர்மக்கள்‌ கண்டியத்தேவர்‌, நரியாண்டி, பெத்தாயி, வனவாயி ஆகியோர்களின்‌ செயல்பாடுகளினால்‌ அவர்களைத்‌ தெய்வமாக ஏற்றுக்கொண்டு கண்டியத்தேவர்‌ர்‌ மாண்ட இடத்தில்‌ கோவில்‌ கட்டியிருக்கின்றனர்‌. தேவரை மய்யத்தில்‌ வைத்து அவருக்கு இருபுறமும்‌ பெத்தாயி, வளவாயியை வைத்திருக்கிறார்கள்‌. கோவிலுக்கு வெளியே நரியாண்டிக்கு வளைவு கட்டி வைத்திருக்‌ கிறார்கள்‌.









பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்