புதன், 24 ஜனவரி, 2018

விசங்குநாட்டுக்கள்ளர் / ஈசநாட்டுக்கள்ளர் / ஈசங்க நாட்டுக் கள்ளர் / ஈசநாட்டு கள்ளர்


ஈசநாட்டுக்கள்ளர் (கூத்தைப்பார் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்) என்போர் கள்ளரில் ஓரு பிரிவினர்.

இவர்கள் சோழ மண்டலமாகிய தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர். 

கள்ளர்களே இந்த சோழ மண்டலத்தின் பூர்வகுடிகள் என்பதற்கு ஆதாரமாக முல்லை நிலமான மன்னார்குடியின் இராஜகோபாலசுவாமி கோயிலின் இராஜாதிராஜ சோழங்கதேவரின் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கள்ளப்பற்றும், நாயக்க, மராட்டிய கல்வெட்டில் காணப்படும் கள்ளப்பத்தும் மற்றும் தஞ்சையில் உள்ள பழமையான கள்ளர் நாடுகளும், சோழர்கள் கள்ளர்களே என்பதற்கு ஏற்ப கள்ளர் பட்டங்களும் மற்றும் தஞ்சையில் உள்ள 12 பாளையக்காரர்களும் கள்ளர்களே ஆவார்கள். இதை தவிர ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களுடைய பூண்டி வாண்டையார்கள், உக்கடை தேவர்கள், அய்யம்பேட்டை சாவடி நாயக்கர், அரித்துவாரமங்கலம் ராசாளியார்கள்  கள்ளர்களே.

சோழமன்னர்களின் பங்காளிகள் எனவும் தமது முன்னோர்களாக கரிகாலனையும் கூறிக் கொள்கின்றனர் - என்று கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை நூலில் குறிப்பிடுகிறார்.


இவர்களில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், பல்லவராய மன்னர்களும் 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் வேங்கடத்திலிருந்து இருந்து சோழ மண்டலத்தில் குடியேறினர்.

அறந்தாங்கி தொண்டைமானாரின் முன்னோர் வாள்விட்ட பெருமாள் தொண்டைமானார் தன்னை விசங்க நாட்டு தொண்டைமானாக குறித்துள்ளார்.


ஈசநாட்டுக்கள்ளர்களுடைய குலப்பட்டம் -

தேவர்
விஜயதேவர்
சிவலிங்கதேவர்
தொண்டைமான் (புதுக்கோட்டை சமஸ்தானம்), 
சிங்கம்புலியார்
சோழங்கதேவர், 
கோபாலர்,
கடாரம்கொண்டார்
ஈழங்கொண்டர்
கொல்லத்தரையர்
இராசாளியார், 
பல்லவராயர், 
மழவராயர், 
நாட்டார், 
வன்னியர், 
அம்பலகாரர், 
வாண்டையார், 
சேர்வைகாரன், 
சோழகன், 
பழுவேட்டரையர், 
கொங்கரையர், 
முத்தரையர், 
ஒண்டிப்புலியார், , கொடும்பாளுர்ராயர், 
சேனைகொண்டார், 
சேதுராயர், 
சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர், 
தென்னவன், 
நரசிங்கதேவர்
நாடாவி 

என்று ஈராயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பட்டங்களை பெற்றுள்ளனர்..

உதாரணமாக ஒரு ஈசநாட்டு கள்ளர்கள் நிகழ்ச்சி பத்திரிகை



சம்பட்டியார் என்பது ஒரு சாராருக்கு பட்டமென்றால், அவர்கள அதே சம்பட்டியார் வீட்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய மாட்டார்கள். ஒரே பட்டம் உள்ளவர்கள் பங்காளிகள்.

குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும். அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன்), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:

பெயர் விளக்கம்:

விசங்கு  / ஈசங்க / ஈசநாட்டு கள்ளர்  என்றும், தஞ்சை கள்ளர்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இந்த பெயருக்கான சரியான விளக்கங்கள் , ஆதாரங்கள் தெளிவாக  இல்லை. 

கொடி விளங்கும் தேரினையுடையவன் பாண்டிய மன்னன் ஆவான். அவனுடைய மலையென்று உரிமையுடன் போற்றப்பெறுவது பொதியமலை ஆகும். அகத்தியனார் இருந்து தமிழ்வளர்த்த பெருமை உடையது அது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர். சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய், திதியன், ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர். 

இங்கு மலையில் தோன்றிய குறிஞ்சி நாகரிகமே குமரி நாகரிகம். இந்த பகுதியில் வாழ்ந்த  கள்ளர்கள், அங்கு மட்டுமே வாழ்ந்த அன்னத்தின் பெயரால் விகங்கம் / விசங்கம் மலை கள்ளர் என்றும் மருவி பின்  விசங்குநாடு, ஈசங்கநாடு, ஈசநாடு கள்ளர் என்று ஆனது என்ற கருத்தும், சோழமண்டலத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்ற ள்ளர்களின் பட்டங்களான பொதியர், அகத்தியர் என்பது அகத்தியரின் பொதியமலையின்,  பழைய எச்சங்களின் மிச்சமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். இவையெல்லாம் ஒரு செவி வழிச் செய்தியாகவே உள்ளன.

அரித்துவாரமங்கலம் தமிழ்ப்பேரறிஞரும், கொடை வள்ளலும், மூதறிஞருமான மதிப்பிற்குரிய திரு. V. கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் 1911ல் டிசம்பர் திங்களில் மேதகு ஐந்தாம் ஜியார்ஜ் மன்னர் இந்தியாவில் பேரரசராக புது டில்லியில் முடி சூட்டிக் கொள்ள வந்தபொழுது ஒரு மகஜரை அளித்து ஒன்றுபட்ட தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த கள்ளர்களுக்கு குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து நீக்கும் படி கேட்டுக்கொண்டார். இம்மாவட்டங்களில் இருந்த கள்ளர்களே குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து விடுபட்ட சீர் பழங்குடியினர் Denotified Kallar Tribe என்பதற்கு பதிலாக ஈசநாட்டுக் கள்ளர்கள் என்று (Esanattu Kallars) அழைக்கப்பட்டனர் என்கிறார்கள் ஆனால் S. Winfred - 1874 ல் எழுதிய சாண்றோர்குல மரபுகாத்தல் நூலில் 


"ஈந்து விருகூடித்துக்கு ஈச்ச விருகூடிம் என நூல்க ளில்ப் பெயர் ... ஈந்து மரத்தில் இருந்து மதுவிறக்கி குடிப்பதால் ஈந்த நாட்டு கள்ளர் மருவி ஈசநாட்டு கள்ளர் ஆனதாக 1874 ஈசநாட்டு கள்ளரை குறிப்பிடுகிறார்.

கருணாமிர்த சாகரம் என்பது தமிழிசையை ஆழமாக ஆய்ந்து, தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்த நூல், கி.பி. 1917 ஆம் ஆண்டு 1346 பக்கங்களுடன் வெளிவந்தது அதில் ஈசநாட்டுக்கள்ளர் பற்றி :



பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் காண்போம். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவேண்டு.





The Ancient Heroes Of South India Peninsula

தென்னிந்திய தீபகற்பத்தின் பண்டைய ஹீரோக்கள்

The title of “ Chola” is still borne by a section of the Kallars. Thus, if the real name of a member of that clan were Vira, his full name would be Vira chola. Persons of that clan can be found by scores in the Tanjore territory.



"சோழன்" என்ற பட்டம் கள்ளர்களில் ஒரு பிரிவினரால் இன்னும் சுமக்கப்படுகிறது. எனவே, அந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரின் உண்மையான பெயர் வீர என்றால், அவரது முழுப் பெயர் வீர சோழன். அந்த குலத்தை சேர்ந்தவர்களை தஞ்சை பிரதேசத்தில் மதிப்பெண்கள் மூலம் காணலாம்.









வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்