வியாழன், 16 அக்டோபர், 2025

சுஷாந்திகா விஜயதேவர்

 




பொய்யுண்டார்குடிக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சுஷாந்திகா விஜயதேவர்  ஓமானிய பெண்கள் கிரிக்கெட் அணியில் சாதனைப் படைத்து வருகிறார்.

அசோக் விஜயதேவர், இவரது குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு பொய்யுண்டார்குடிக்காடு கிராமத்தில் இருந்து மன்னார்குடிக்கு புலம்பெயர்ந்து சென்றுவிட்டது. அசோக் விஜயதேவர் தற்போது குடும்பத்துடன் ஓமானில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள். அவரது இளைய மகளான சுஷாந்திகா அவர்கள் தற்போது ஓமானிய மகளிர் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். சமீபத்தில் அரபு நாடுகளுக்கு இடையே நடந்த மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்த ஓமானிய பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தனது திறன் வாய்ந்த ஆட்டத்தால் அரபு உலகை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் சுஷாந்திகா. பொய்யுண்டார்குடிக்காடு கிராமத்தை விட்டு சென்றாலும் அசோக் அவர்களின் குடும்பத்தார் வருடா வருடம் இங்குள்ள குலதெய்வ கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வ கோவிலில் ஒரு குதிரை சிலை வைத்து அதனருகே உள்ள ஒரு சிலையின் கைகளில் கிரிக்கெட் பந்து இருப்பது போல அழகிய ஒரு கட்டுமானத்தை அவர்கள் சார்பாக எழுப்பி இருக்கிறார்கள். 

எமது மண்ணுக்கு பெருமை சேர்க்கும் அசோக் விஜயதேவர் மற்றும் சுஷாந்திகா விஜயதேவர் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர்கள் பல்லவராய சுதந்திர போராட்ட வீரர்கள்  பல்லவராயர் கள்ளர் சாதி  ( தமிழக அரசு) தமிழக வரலாறு [பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுக...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்