வியாழன், 26 செப்டம்பர், 2024

தஞ்சையின் தியாக சொத்து ஏ.வி.ஆர். என்கிற ஏ.வி. ராமசாமி ராசாளியார்



சுதந்திர தின சிறப்பு செய்தி: தஞ்சையின் தியாக சொத்து ஏ.வி.ஆர். என்கிற ஏ.வி. ராமசாமி


விடுதலைக்காகப் போராடிய எத்தனையோ வீரர்கள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே மறைந்துவிட்டனர். இவர்களில் ஏ.வி.ஆர். என்கிற ஏ.வி. ராமசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தஞ்சையின் தியாக சொத்து என்று கூறலாம்.


Independence Day 2023 Special AV Ramaswamy Freedom Fighter From Thanjavur All You Need to Know About Him TNN சுதந்திர தின சிறப்பு செய்தி: தஞ்சையின் தியாக சொத்து ஏ.வி.ஆர். என்கிற ஏ.வி. ராமசாமி
ஏ.வி. ராமசாமி

தஞ்சாவூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் கிராமத்தில் கடந்த 1923ம் ஆண்டு வீரையா ராசாளியார்- காத்தாயி அம்மாள் தம்பதிக்கு பிறந்தவர் ஏ.வி. ராமசாமி. தஞ்சை அருகே ஒரத்தநாடு முத்தம்பாள் சத்திர மாணவர் விடுதியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வலங்கைமான் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். அதன் தாக்கம் ஏ.வி. ராமசாமிக்கும் இருந்தது. சிறு வயது முதல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இக்காலம் போல் அப்போது தகவல் தொடர்பு சாதனம் கிடையாது.

இருப்பினும் அரித்துவாரமங்கலம் உட்பட வலங்கைமான் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளிடம் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் ராமசாமிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. சிறு வயது பையனாக இருந்த இவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழாததால் விறுவிறுவென தகவல்களைக் கொண்டு சேர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பெரும் பங்காற்றியுள்ளார். சைக்கிளிலும், நடந்தும் பல கிராமங்களுக்குச் சென்று போராட்டத்துக்கு ஆட்களை திரட்டினார். 1941 ம் ஆண்டில் சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமையில் அரித்துவாரமங்கலத்தில் நடந்த சத்தியாகிரக முகாமில் கலந்து கொண்டார். பின்னர் 1942ம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ராமசாமி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 18க்குள்தான் இருக்கும்.


வயதைக் குறைவாகச் சொன்னால் சிறையில் அடைப்பதைத் தவிர்த்துவிடுவார்கள் என்று கருதி தனக்கு 20 வயது என கூறி சிறைக்குச் சென்றார். ஆறு மாத கால சிறை தண்டனை பெற்ற இவருக்கு இடையில் அதிகாரிகளால் நடந்த கொடுமைகள் அதிகம். இதனால், பாதியிலேயே சிறையிலிருந்து குழுவாக இணைந்து சுவரில் துளையிட்டு தப்பித்தார்.  அப்போது சிறைக் காவலர்களிடம் சிக்கிக் கொண்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இவர் உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்று மீண்டு வந்தார்.

இக்கொடுமைகளை எல்லாம் அனுபவித்துவிட்டு, சிறையிலிருந்து வெளியே வந்த இவர் சுதந்திரப் போராட்டத்தில் முன்பை விட வீரியமாக ஈடுபட்டார். பல போராட்ட களங்கள் கண்டு காங்கிரஸ் இயக்கத்தில் காந்திய வழியில் போராடிய இவர் சுதந்திரத்துக்கு பிறகு 1950 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

1954 ஆம் ஆண்டில் மேடைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது மேடைத் திருமணம் பதிவு செய்யப்படாத ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சட்ட அங்கீகாரம் கிடையாது என்ற நிலையிலும் துணிச்சலாக செய்து கொண்டவர். கடந்த 1968 ஆம் ஆண்டில் மார்க்சியம் படிப்பதற்காக ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவுக்கு சென்றார். ஐந்து ஆண்டு காலத்தில் இரு முறை மாஸ்கோவில் தங்கிப் பயின்றார்.

ப்ராக்ரஸ் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை மேற்கொண்டு வந்தார். நியு செஞ்சுரி புக் ஹவுஸ்-ல் பணியாற்று உயர் பொறுப்புகளையும் வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர் கடைசிக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியத்தைப் பெற்று வந்தார். இவர் 1995ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உடல் நலக் குறைவால் தனது 72ம் வயதில் காலமானார்.

இவரைப் போன்றவர்களின் தியாகத்தால் சுதந்திரக் காற்றை எவ்வித தடையுமின்றி சுவாசிக்கிறோம். இவர் தஞ்சையின் சொத்து ஏன் ஸ்பெஷல்தானே.

திங்கள், 23 செப்டம்பர், 2024

கள்ளர்‌ வெட்டுத்‌ திருவிழாவின்‌ சமூகப்‌ பின்புலம்‌ - மூ. கண்ணான்‌

 









இங்கு அய்யனார்‌ முதன்மை தெய்வமாகவும் துனைத் தெய்வங்சளாக (பெயர்தெரியாத நிலையில்‌) 21 தெய்வங்களும் காவல் தெய்வங்சளாக துப்பாக்கிமாடன்‌:: பன்னீர்ராசா, வன்னியசாமியும்‌ விளங்குகின்‌றன. இத்தெய்வ்த்‌தினை வள்ளியூர்‌, தேனி, செய்துங்க்நல்லூர்‌,  வள்ளிவினை அகிய நான்கு ஊர்களில்‌ வாழும் கோனார்‌ சாதியினரும்‌: மாரநாட்டைச்சேர்ந்த கள்ளர்‌  சாதியினரும்‌. தேரிக்குடியிருப்பு, காயாமொழி, நாதன் கிணறு, வள்ளிவீனை;, சருப்பசாமிபுரம்‌ ஆகிய ஜத்து ஊர்களில்‌ வாழும்‌ நாடார்  சாதியின௫ம்‌, கரிசான்‌ விளை, தூயாமொழி ஊர்களில்‌. வாழும்‌ பறையர் சாதியினரும்‌ இணைத்துப்‌ வழிபட்டு -விழா-எடுத்துக் இந்நான்கு சாதியினரும்‌ முன்னொரு காலத்தில்‌ தேரிக்‌குடியிருப்பீலேயே குடியீருந்திருக்கின்றனர்‌. காலமாறுபாட்டின்‌  காரணமாகப்‌ பல்வேறு குடும்பங்களாகப்‌ பிரிந்து இன்று பல  ஊர்களிலும்‌ வாழ்ந்து வருகின்றனர்‌ என்பதனை தேரிக்குடியிருப்பைச்சேர்ந்த மந்திரநாடார்‌ என்பவரின்‌ பேட்டிச்செய்தியீன்‌ மூலம்‌ அறிந்து கொள்ள முடிந்தது. இத்தெய்வத்திற்குரிய 

வழிபாடு ஒவ்வொரு ஆண்டும்‌ கார்த்திகை மாதத்தின்‌ இறுதி நானில்‌ தொடங்கி மார்கழி மாதத்தின்‌ முதல்‌ இரண்டு நாட்கன்‌ முடிய மொத்தம்‌ மூன்று நாட்கள்‌ நடைபெறுகின்றன. நான்கு சமூகத்தார்‌ இணைந்து வணங்கும்‌ கற்கு வேல்‌ அய்யனார்‌ திருவிழாவில்‌ நாடார்‌ சாதியினர்‌ ஆதிக்கம்‌ செலுத்தி வந்தாலும்‌ உண்மையான வழிபாடு என்பது கோனார்‌ சாதியினருக்குரியதாகவே விளங்குகிறது என்‌பதனைக்‌ கன ஆய்வின்‌ மூலம்‌ அறிந்து கொள்ள முடிந்தது. ஏனைய மூன்று சாதியினரும்‌ பெயரளவில்‌ மட்டுமே கலந்து கொண்டாலும்‌ நாடார்‌ சாதியினர்‌ தங்களுடைய மக்கள்‌ தொகைப்‌ பெருக்கம்‌, பொருளாதார மேம்பாடு போன்ற காரணங்களால்‌ கோவிலின நிருவாகததைக்‌ கைப்பற்றியுள்ளனர்‌. ஆனால்‌ மருளாடியாக இருப்பவர்கள்‌, கோவிலின்‌ முக்கிய நிகழ்ச்சிகளை திகழ்த்துபவர்களாகக்‌ கோனார்‌ சாதியினரே விளங்குகின்றனர்‌. 

மூன்று நாட்கள்‌ இத்திருவிழாவின்‌ முதல்நாளில்‌ விளக்குப்‌பூசை மற்றும்‌ பொங்கல்‌ வைத்தல்‌ நிகழ்ச்சியும்‌ இரண்டாவது நான்‌ விழாவில்‌ கள்ளர்‌ வெட்டுத்‌ திருவிழாவும்‌ இடம்‌ பெறுகிறது. 

கள்ளர்‌ வெட்டுத்‌ திருவிழாவில்‌ கற்தவேல்‌ அய்யனார்‌ மருளாடியை அருன்‌ இறங்கிய திலையில்‌ ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்‌. மருனாடியைத்‌ தொடர்ந்து கள்ளர்‌ போல்‌ வேடமணிந்த (கோனார்‌) ஒருவரையும்‌ ஊர்மக்கள்‌ அழைத்து வருகின்றனர்‌. கள்ளராக வேடம்‌ புணைந்து வருபவர்‌ தன்‌ தலையில்‌ மட்டை உறிக்காத தேங்காய்‌ (இளநீர்‌) ஒன்றைச்‌ சுமந்து வருகிறார்‌. இத்துடன்‌ அய்யனார்‌ சுவாமியையும்‌ அலங்கரித்து ஊர்‌வலமாக எடுத்து வருகின்றனர்‌. ஊர்வலம்‌ ஊரிலிருந்து கிளம்பீக கோவிலைச்‌ சென்றடைந்தவுடன்‌ அய்யனார்‌ சுவாமிக்குத்‌ தீபா ராதனை செய்கின்றனர்‌. அப்போது கள்ளர்‌ வேடமணிந்து வருபவள்‌ தேங்காயைத்‌ தலையில்‌ வைத்த வண்ணம்‌ தரையில்‌ அமர்ந்து கொள்கிறார்‌. இந்நிலையில்‌ அய்யனர்‌ மருளாடி கோவில்‌ பூசாரிக்கு (வெள்ளாளர்‌) விபூதி வைத்துக்‌ கள்ளை வெட்டுவதற்கு அனுமதியளிக்கிறார்‌ இந்நேரம்‌ மேளதாளங்கள்‌ இசைக்காமல்‌ நிறுத்தப்பநிகின்றன. மக்களும்‌ சத்தமில்லாமல்‌ நிற்க்கும்‌ போது கள்ளனின்‌ தலையிலுள்ள இளதீரைப்‌ பெரிய அரிவாளாள்‌ ஒரே வெட்டில்‌ இரண்டாகப்‌ பிளக்கச்‌ செய்கிறார்‌ பூசாரி, இதனையே கள்ளர்‌ வெட்டுத்‌ தீருவீரா என்று அழைக்கின்றனர்‌. 


வெட்டப்பட்ட இளநீரிலிருந்து சிந்திய நீர்‌ தலையில்‌ விழுந்து தரை ஈரமானவுடன்‌ ஈரமண்‌ அனைத்தையும்‌ எடுத்துக்‌ கோவில்‌ பித்தளைத்‌ தட்டில்‌ கொ.ண்டுபோய்‌ ஆற்றில்‌ போட்டு விடு கிறார்‌ பூசாரி. இவ்வாறு மண்‌ எடிப்பதனையே புனித மண்‌ எடுத்தல்‌ என்றழைக்கிறார்கள்‌ . பூசாரி மண்‌ எடுத்துச்‌ சென்றவுடன்‌ திருவிழாக்காண வந்திருக்தம்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ கள்ளர்‌ வெட்டு நடந்த இடத்திலிருந்து மண்ணை எடுத்துக்‌ கொண்டு தங்கள்‌ வீடுகளுக்குச்‌ செல்கின்றனர்‌. இம்‌ மண்ணைத்‌ தங்கள்‌ வயல்களில்‌ போட்டாலோ அல்லது வீடுகளில்‌ வைத்திருந்தாலோ நன்மை கிடைக்கும்‌ என்றும்‌ நம்பிக்கை கொள்கின்றனர்‌. 

மூன்றாவது நாள்‌ திருவிழாவில்‌ அதாவது இறுதி நாளான மார்கழி இரண்டாம்‌ நாள்‌ அதிகாலையில்‌ விளக்குப்‌ பூசையுடன்‌ ஆடுவெட்டுத்‌ திருவிழா ஆரம்பமாகிறது. கோவில்‌ பணத்திலிருந்து வாங்கப்பட்ட பெரிய: ஆட்டுக்கடாவை மாலையணிவித்துக்‌ கோவி லுக்கு அழைத்து வருகிறார்கள்‌. கோவிலுக்குள்‌ வந்தவுடன்‌ அய்யனார்சாமி மருளாடி கடா வெட்டுவதற்குரிய நபரைத்‌ தேர்ந்‌ தெடுத்து அவர்‌ மேல்‌ விபூதிவைத்து ஆட்டை வெட்டுவதற்கு அனுமதியளித்தவுடன்‌, கடாவை மல்லாக்கப்படுக்கப்‌ வைத்து அதன்‌ நெஞ்சில்‌ கத்தியைக்‌ கொண்டு... கை உள்ளே செல்லக்‌ , கூடிய அளவிற்குக்‌ கிழித்து ஆட்டின்‌ இதயத்தைக்‌ கத்தியால்‌ அறுத்து எடுத்து வாழை இலையில்‌ வைத்துப்‌ படையலாகப்‌ படைக்கிறார்கள்‌, இதயம்‌ அறுத்தெடுக்கப்பட்ட ஆட்டின்‌ நெஞ்‌ சிற்தள்‌ தோல்‌ உறிந்கப்பட்ட வாழைப்பழத்தை வைந்து உயி ரோடு போட்டு விடுகிறார்கள்‌. ஆடு இறந்தபின்‌ அதனைக்‌ கறி யாக்கி வரிக்‌ கொடுத்தவர்‌ கள்‌ அனைவிருக்கும்‌ பகிர்ந்தளிக்கிறார்‌ கள்‌. இதனையே ஆடுவெட்டுத்‌ திருவிழா என்று குறிப்பிடு கிறார்கள்‌. இதனைத்‌ தொடர்த்து மஞ்சள்‌ நீராட்டுநடைபெறு இத்தெய்வ உருவாக்கம்‌ பற்றி அதிந்து கொள்ளும்‌ பொருட்டுத்‌ தேர்க்குடியிருப்பைக்‌ சேர்ந்த முனியாண்டி நாடார்‌ என்பவரிடம்‌ பேட்டி கண்டபோது பின்வருமாறு கூறினமர்‌. 

ஒரு காலத்தீல்‌ தேரிக்குடியிருப்புப்‌ பகுதியில்‌ கள்ளர்கள்‌ பயம்‌ மிகவும்‌ பயங்கரமாக இருந்திருக்கிறது. இங்குள்ள கோனார்‌ள்‌ தங்சருடைய அடுமாடுகளைக்‌ கள்ளர்களிடமிருந்த। காப்பாற்று வதற்காகப்‌ பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்‌. அப்போது ஒரு நாள்‌ கோனார்‌ ஓருவர்‌ தன்னுடைய ஆடுகளைக்‌ காட்டில்‌ கொண்டு மேயவிட்டு விட்டு ஊருக்தத்‌ திரும்பியிருக்கிறார்‌. வரும்வழியில்‌ இருத்த மரத்தின்‌ வேர்வுன்று கோனாரின்‌ காலைத்‌ தட்டி வீட்ட தால்‌ கோனார்‌ கீழேவிழுந்து வீட்டார்‌. தன்னுடைய காலைத்‌ கட்டிவிட்ட மாத்தின்‌ வேரை மண்வெட்டியால்‌ வெட்டி எடுக்க முற்பட்ட போது வேரிலிருந்து இரத்தம்‌ பீறிட்டு அடித்திருக்‌கிறது. இரத்தத்தைப்‌ பார்த்த கோனார்‌ படந்துபோய்‌ வீட்டிற்கு உந்து கோடாங்கிக்‌ காரனை வரவழைத்துக்‌ குறிகேட்டிருக்கிறார்‌. 

குதியில்‌ “நாண்‌ தான்‌ அய்யனார்‌ சாமி, என்னை நீங்கள்‌ வணங்கிவந்தால்‌ உங்கள்‌ குறையைப்‌ போக்க்க்‌ காலமெல்லாம்‌ காத்து வருவேன்‌” என்று கூறியதால்‌ அந்த இடத்தில்‌ கோவில்‌ கட்டிக்‌கும்பிட்டு வருவதாகக்‌ குறிப்பிட்டார்‌. இச்செய்தியே கற்கு வேல்‌ அய்யனார்‌ சுவாமியின்‌ உருவாக்கம்‌ குறித்த சான்றாக அமைகிறது .


கற்குவேல்‌ அய்யனார்‌ கோவில்‌ அமைந்திருப்பது மணல்‌ மேடு கள்‌ நிறைந்‌ தேரியப்‌ பகுதியாகும்‌. தொடக்கக்‌ காலத்தில்‌ மக்‌ கள்‌ அய்யனாரை வணங்க வந்த போது இம்மணல்‌ மேடு களுக்குப்‌ பின்னால்‌ மறைந்திருந்து வழிப்பறி செய்திருக்கிறார்‌ கள்‌. கள்ளர்களின்‌ வள்ப்பறித்‌ தொல்லையால்‌ மக்கள்‌ கோவில்‌ பக்கம்‌ வரவே பயப்பட்டிருக்கிறார்கள்‌. இச்‌ சமயத்தில்‌ கோவிலி லுள்ள பொருட்களைக்‌ கள்ளர்கள்‌ கொள்ளையடித்துச்‌ சென்று வீட்டார்கள்‌. கள்ளர்களின்‌ செயலைக்‌ கண்டு கோபமடைந்த அய்யனார்சாமி கள்ளனைப்‌ பிடித்து அவன்‌ தலையை வெட்டிக்‌ கொன்று விட்டது. அத்துடன்‌ கள்ளனின்‌ இதயத்தையும்‌ எடுத்‌துப்‌படையலாக வைத்துக்‌ கொண்டது. இது தான்‌ கள்ளர்‌ வெட்டுத்‌ திருவிழாவின்‌ பூர்வீகப்‌ என்று குறிப்பி பேராசிரியர்‌ ஆறுமுகக்கனி அவர்களின்‌ கூற்று தொடக்கக்‌ காலத்தில்‌ நிகழ்ந்த போராட்டத்தின்‌ சாரத்தை உள்ளடக்கிய : செய்தி எனலாம்‌, அதாவது கள்ளர்களின்‌ வழிப்பறித்‌ தொல்லையல்‌ அஞ்சிய மக்கள்‌ இதற்கு ஒரு முடிவு கொண்டு வரும்‌ பொருட்டுக்‌ கோவில்‌ திருடில கள்ளனைப்‌ பிடித்து வெட்டிக்‌ கொலை செய்து விட்டனர்‌, தாங்கள்‌ வெட்டிக்‌ கொன்ற செய்தி வெளியில்‌ தெரிந்தால்‌ சாதியச்‌ சண்டை நிகழலாம்‌ என்ற அச்‌சத்தில்‌ அய்யனாலே கள்ளனை வெட்டிக்‌ கொன்றதாக மாற்றிக்‌ கூறிவிட்டனர்‌ எனலாம்‌. அத்துடன்‌ கள்ளனை வெட்டிக்கொன்ற இடத்தில்‌ கிடந்த இரத்தம்‌ தோய்ந்த மண்ணையும்‌ அள்ளிக்‌ கொண்டு போய்‌ ஆற்றில்‌ போட்டுள்ளனர்‌ எனலாம்‌. காரணம்‌ இதனை எவரேனும கண்டாலும்‌ கூட பிரச்சனை உருவாகலாம்‌ என்ற அச்சத்திலே மண்ணையும்‌ அள்ளிக்‌ கொண்டு போய்‌ ஆற்றில்‌ போட்டுள்ளனர்‌ என்றே கூறத்‌ தோன்றுகிறது எனலாம்‌. தங்களின்‌ செயலை மறைப்பதற்காகவும்‌ அத்துடன்‌ நியாயப்‌ படுத்துவதற்காகவும்‌ வேண்டியலே அய்யனார்‌ திருவிழாவில்‌ கள்ளர்‌ போன்று வேடம்புறைச்‌ செய்து கள்ளர்வெட்டுத்‌ திரு விழாவையும்‌, புரிதமண்‌ எடுத்தல்‌ என்ற நிகழ்ச்சியையும்‌ உரு வாக்நியுள்ளனர்‌ எனலாம்‌.

பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்